Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லைத்தீவு கடலில் இந்திய படகுகளின் ஆக்கிரமிப்பு; கடற்படையினர் நடவடிக்கை எடுப்பதில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு கடலில் இந்திய படகுகளின் ஆக்கிரமிப்பு; கடற்படையினர் நடவடிக்கை எடுப்பதில்லை

[ Wednesday,9 December 2015, 05:54:58 ]   
Mu-1.jpg

முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவைப் படகுகளின் ஆக்கிரமிப்பு கடற்படையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொருளாளர் ஏ. மரியதாஸ் தெரிவித்தார்.

வவுனியாவில் கொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடமாகாண கடற்தொழிலாளர் இணையம் ஆகியன இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டமானது போரினாலும் இயற்கை அனர்த்தமாகிய சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட மாவட்டம் எனவும் அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு கடல் வளங்களையே நம்பியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின் 2010 ஆம் ஆண்டு மீளக் குடியமர்ந்த முல்லைத்தீவு மக்கள் இந்திய இழுவைப் படகின் ஆக்கிரமிப்புக் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், இதுகுறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்று சில முடிவுகளும் எடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா எல்லைப் பரப்புக்குள் வரும் அனைத்து இந்திய இழுவைப் படகுகளையும் கடற்படையினர் உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர்,

ஆனால், கடந்த மூன்று தினங்களாக முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவைப் படகுகளின் ஆக்கிரமிப்பு அதிகளவில் கூடியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

டிசம்பர், ஜனவரி மாதங்களில் மீன்கள் அதிகமாக காணப்படும் பிரதேசமாக முல்லைத்தீவு கடற்பிரதேசம் காணப்படுவதாகவும், யுத்தத்தாலும் இயற்கை அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சி எடுக்கின்ற இந்த வேளையிலே முற்கூட்டியே இந்திய றோலர்கள் தமது கடற்பரப்பில் வளங்களை சூறையாடுகின்றதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இந்திய இழுவைப் படகுள் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, கடந்த மூன்று நாட்களாக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென தெரிவித்தார்.

கடற்படையினரும் இணைந்தே இந்திய இழுவைப் படகுகளுக்கு சார்பாக செயற்படுகிறார்கள் என குற்றஞ்சாட்டினார்.

72 தென்னிலங்கை படகுகளுக்கு அனுமதி வழங்கியிருந்த போதிலும் 300 க்கு அதிகமான தென்னிலங்கை மீனவப் படகுகள் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் திணைக்களகத்தின் அனுமதி இன்றி அத்துமீறி மீன்பிடித்து வருவதாககவும் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மக்கள் சுதந்திரமாக தொழில் செய்கிறார்கள், வாழ்வாதாரம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது என அரசு தெரிவித்து வருகிறது. ஆனால் எங்களது வாழ்வும் வளமும் சுறண்டப்படுவதாக அவர் தெரிவித்தார்.  

குறித்த சந்திப்பில் வட மாகாண இணையத்தின் தலைவர் எம். ஆலம், பொருளாளர் ஏ. மரியதாஸ், செயலாளர் என்.பி. சுப்பிரமணியம், உபதலைவர் யோசப் பிரான்சிஸ், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசுதாஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

http://ibctamil.com/news/index/14751

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.