Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் கைதிகளுக்கு கொடுத்த வாக்குறுதி போல மீள்குடியேற்ற வாக்குறுதி இருக்கக்கூடாது

Featured Replies

அரசியல் கைதிகளுக்கு கொடுத்த வாக்குறுதி போல மீள்குடியேற்ற வாக்குறுதி இருக்கக்கூடாது
 
அரசியல் கைதிகளுக்கு கொடுத்த வாக்குறுதி போல மீள்குடியேற்ற வாக்குறுதி இருக்கக்கூடாது
இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆறு மாத காலத்திற்குள் தீர்வு என்பது அரசியல் கைதிகளின் விடுதலையை போன்றதான உறுதியாக அல்லாது ஆறுமாத காலத்திற்குள் ஜனாதிபதி அந்த மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
 
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 
யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து உள்ளார்.  இடம்பெயர்ந்த மக்கள் அவரிடம் கேட்டதெல்லாம் நாம் சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டும். எமது சொந்த நிலங்களில் இராணுவம் இருகின்றார்கள் மயிலிட்டி இதுறைமுகத்தில்  சீமெந்து இறக்குகின்றார்கள். ஆனால் நாங்கள் எங்களுடைய சொந்த நிலங்களுக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கின்றோம் என பலாலி, மயிலிட்டி பிரதேச மக்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தத்துடன் தாங்கள் சொந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார்கள். 
 
அவர்களுடைய பிரச்சனைகளை ஆறு மாத காலத்திற்குள் தீர்த்து வைப்பேன் என ஜனாதிபதி உறுதி அளித்து இருந்தார்.  அதனடிப்படையில் அந்த மக்களை ஆறு மாத காலத்திற்குள் அவர்களுடைய சொந்த நிலங்களுக்கு அனுப்பி வைப்பார் என எதிர்பார்க்கின்றோம்.
 
அது மாத்திரமின்றி மயிலிட்டி பலாலியை சேர்ந்த மீன்பிடியாளர்களுக்கு கடற்கரையை விட்டு தூர இடத்தில் புதிய இடங்களை கொடுக்க முடியாது. என்பதும் அதேபோன்று மிக நீண்டகாலமாக செம் மண் பிரதேசமாக இருக்க கூடிய பிரதேசத்தில் விவசாயம் செய்து வழந்த மக்களை கொண்டே வேறு இடத்தில் குடியேற்ற முடியாது எனவே அந்த இடங்களையும் அவர்களிடமே கொடுக்க வேண்டும் 
 
ஜனாதிபதியாக இருக்க கூடியவர் இங்குள்ள ஒன்றரை லட்ச இராணுவத்தினரை ஏனைய மாகாணத்திற்கும் பிரித்து அளிப்பதன் மூலம் இந்த பிரச்சனையை ஆறு மாத காலத்திற்குள் அல்ல மூன்று மாத காலத்திற்குள்ளையே தீர்த்து வைக்க முடியும் 
 
ஒரு உத்தரவாதத்தை கொடுத்துள்ளார் இதுவும் ஏற்கனவே அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கூறப்பட்ட உத்தரவாதத்திற்கு என்ன நடந்தது என்பதும் தெரியும் அதே போலான உத்தரவாதமா அல்லது மக்கள் ஆறு மாத காலத்திற்குள் மீள் குடியேற்ற படுவார்களா அல்லது அந்த மக்கள் காடுகளில் கொண்டே குடியமர்த்த படுவார்களா ? என்பது தெளிவாக கூறப்படவில்லை.
 
எமது எதிர்பார்ப்பு அந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் அவர்களின் நிலங்கள் அவர்களிடமே கையளிக்கபடவேண்டும். இங்குள்ள இராணுவம் ஏனைய மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிக்க படவேண்டும் அதன் ஊடாகவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
 
குறைந்த பட்சம் ஜனாதிபதி அந்த மக்களை நேரில் சென்று பார்வையிட்டதே வரவேற்க வேண்டும் ஆறு மாத காலத்திற்குள் தீர்வு காண்பேன் என கூறியதும் வரவேற்க வேண்டும்.
 
அதேபோல சிங்கள பகுதியில் இருக்கும் பௌத்த சிங்கள தீவிரவாதிகள் இங்குள்ள மக்களின் நிலைமைகளை நேரில்வந்து பார்க்க வேண்டும் அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிய வேண்டும் என கூறியதில் இருந்து ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சனைகளை விளங்கி வைத்துள்ளார் என நாம் கருதுகின்றோம்.
 
விளங்கி வைத்து இருப்பதனால் பயனில்லை நிச்சயாமாக அடுத்த கட்டத்திற்கு சென்று இந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.