Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்

பூண்டு - சின்ன வெங்காய புளிக்குழம்பு

சூடான சாதத்தில் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து செய்த புளிக்குழம்பை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
பூண்டு - சின்ன வெங்காய புளிக்குழம்பு
 
தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு  - 20
கறிவேப்பிலை - சிறிது
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையானது
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
வெல்லம் - சிறிது

தாளிக்க :

நல்லெண்ணெய் - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
க.பருப்பு - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு.

201708111515350115_1_Garlic-Onion._L_sty

செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை கரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயம் போட்டு வதங்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் சாம்பார்ப் பொடி, மஞ்சள் தூள் போடவும். பொடி வாசம் போக வேண்டும்.

அடுத்து அதில் கறிவேப்பிலை போடவும்.

அடுத்து புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு போடவும்.

குழம்பு நன்கு கொதித்து கெட்டியாக வரும் போது வெல்லம் சேர்க்கவும்.

குழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.

இதோ... சூப்பரான பூண்டு - சின்ன வெங்காய புளிக்குழம்பு தயாராகிவிட்டது.
  • Replies 782
  • Views 227.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழினி
    தமிழினி

  • இட்டலியையும் பார்பிகியூப் ரேஞ்சுக்கு கொண்டு வந்தாச்சா..., இட்டலிக்கு வந்த வாழ்வைப் பார்....! 

  • நான் கொத்தமல்லி இலையையும்,பச்சை மிளகாய்,சின்ன வெங்காயம்,இஞ்சி போன்றவற்றை தண்ணீர் விட்டு கிரைண்டரில் அரைத்துப் போட்டு அந்த தண்ணீரிலேயே அரிரியை அவிய விடுவேன். சுப்பராய் இருக்கும்.

  • தொடங்கியவர்

பிஸ்தா பர்ஃபி தேவையானவை:

பிஸ்தா பருப்பு(உப்பில்லாதது)- 1 டம்ளர்
சர்க்கரை- 2 1/2 டம்ளர்
நெய்- 1/4 டம்ளர்
நீர்- 3/4 டம்ளர்
ஏலக்காய்த்தூள்- 1/2 தேக்கரண்டி

செய்முறை:

1. ஒரு வாணலியில் நெய்யை விட்டுப் பிஸ்தா பருப்புகளை ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கவும்.
2. ஆற வைத்துப் பிஸ்தாவை மின்னரைப்பானில் தண்ணீர் விட்டு அரைக்கவும்.
3. சர்க்கரையைக் கொடுக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவைப் பயன்படுத்திப் பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
4. பாகில் அரைத்தப் பிஸ்தாக் கலவையைக் கொட்டிக் கிளறவும்.
5. ஒட்டாமல் கெட்டியான பதம் வந்ததும் ஏலக்காய்த்தூளைக் கலந்து நெய்யை விட்டுக் கிளறி வேறு நெய் தடவிய தாம்பாளத்திற்கு மாற்றி ஆற விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.
6. சுவையான பிஸ்தா பர்பி தயார்.

 
Bild könnte enthalten: Essen
  • தொடங்கியவர்

முளைகட்டிய பயறு உணவுகள்

 

 

p97a.jpg

த்துகள் நிறைந்த முளைகட்டிய பயறுகளில் செய்யக்கூடிய சுவையான பல்வேறு உணவு வகைகளை வழங்கும் சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர், முளைகட்டும் முறையைக் கூறுகிறார்...

 ``பயறு வகைகளைக் கழுவி முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் களைந்து தண்ணீரை வடிகட்டி, சுத்தமான துணியில் போட்டு மூட்டைகட்டித் தொங்கவிடவும். அடுத்த நாள்  மூட்டையைத் திறந்து பார்த்தால் பயறு நன்கு முளைவிட்டிருக்கும்.’’   

 

சுண்டல், சூப், கஞ்சி, தால், சாலட் என இங்கே வரிசைகாட்டி நிற்கும் ரெசிப்பிகளை செய்துபாருங்கள்... ருசியோடு ஆரோக்கியத்தையும் அள்ளுங்கள்.

பச்சைப் பயறு - மாதுளை சாலட்

தேவையானவை:

முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
(பொடியாக நறுக்கவும்)
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கேரட் துருவல் - கால் கப்
மாதுளை முத்துகள் - கால் கப்
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு    

p97c.jpg

செய்முறை:

முளைக்கட்டிய பச்சைப் பயறுடன் வெங்காயம், தக்காளி, கேரட், மாதுளை முத்துகள், உப்பு, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து காலை நேரச் சிற்றுண்டியாகப் பரிமாறலாம்.

நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது.

குறிப்பு: முளைகட்டிய பயறை வேகவைத்தும் சேர்க்கலாம்.


p97d.jpg

கறுப்பு உளுந்து தால்

தேவையானவை:

முளைகட்டிய கறுப்பு உளுந்து - ஒரு கப்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 4 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, சீரகம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, முளைகட்டிய கறுப்பு உளுந்து, மூன்று கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து, குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். ஆறிய பின் திறந்து, உப்பு சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கி மேலே கொத்தமல்லித்தழை, வெண்ணெய் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.


p97e.jpg

மிக்ஸ்டு ஸ்பிரவுட்ஸ் அடை

தேவையானவை:

இட்லி அரிசி - ஒரு கப்
முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப்
முளைகட்டிய
கொண்டைக்கடலை - கால் கப்
முளைகட்டிய கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன்
முளைகட்டிய கொள்ளு - 5 டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
(பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 3
தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கேரட் துருவல் - கால் கப்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அரிசி, முளைகட்டிய பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, கறுப்பு உளுந்து, கொள்ளு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கொரகொரவென  அரைத்து எடுக்கவும்.  இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, வெங்காயம், கேரட் துருவல் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை சற்று கனமான அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.


p97f.jpg

முளைகட்டிய சன்னா சாட்

தேவையானவை:

முளைகட்டிய கொண்டைக்கடலை (வெள்ளை) - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
உருளைக்கிழங்கு - ஒன்று
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு
ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து, சிறிய துண்டுகளாக நறுக்கவும். கொண்டைக்கடலையை வேகவைத்து, நீரை வடிக்கவும். கொண்டைக்கடலையுடன் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, புதினா, உப்பு சேர்த்துக் கலக்கவும். மேலே ஓமப்பொடி தூவிப் பரிமாறவும்.


p97g.jpg

கறுப்புக்கடலை சூப்

தேவையானவை:

முளைகட்டிய கொண்டைக்கடலை (கறுப்பு) - ஒரு கப்
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொண்டைக்கடலையை வேகவைக்கவும். சிறிதளவு கொண்டைக்கடலையைத் தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள கடலையை வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய்விட்டு உருக்கி சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே மிளகுத்தூள், தனியாக எடுத்துவைத்த கொண்டைக்கடலை சேர்த்துக் கலந்து பருகவும்.

குறிப்பு: இந்த சூப், வளரும் குழந்தைகளுக்கு நல்லது.


p97h.jpg

முளைகட்டிய கோதுமை சுண்டல்

தேவையானவை:

முளைகட்டிய கோதுமை -
ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
(பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 2
(பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோதுமையை வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு கோதுமை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே தேங்காய்த் துருவலைத் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: இந்தச் சுண்டல், நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் மாலை நேர உணவாகச் சாப்பிட ஏற்றது.


p97i.jpg

முளைகட்டிய கொள்ளு கஞ்சி

தேவையானவை:

முளைகட்டிய கொள்ளு - ஒரு கப்
புழுங்கல் அரிசி - கால் கப்
மோர் - 2 கப்
சின்ன வெங்காயம் - 5 (தோல் உரிக்கவும்)
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
(பொடியாக நறுக்கவும்)
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் கொள்ளு, அரிசி, நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து, வெந்த கொள்ளு - அரிசி கலவையுடன் சேர்க்கவும். ஆறிய பின் இதனுடன் மோர், உப்பு சேர்த்துக் கலந்து பருகலாம்.

குறிப்பு: இது, உடல் எடையைக் குறைக்க உதவும்.


p97j.jpg

முளைகட்டிய பயறு சத்து மாவு

தேவையானவை:

முளைகட்டிய கேழ்வரகு, கம்பு, சோளம் (வெள்ளை) - தலா ஒரு கப்
முளைகட்டிய கறுப்பு உளுந்து, கோதுமை, பச்சைப் பயறு - தலா கால் கப்
சிவப்பரிசி - ஒரு கப்
பொட்டுக்கடலை - 5 டீஸ்பூன்
பாதாம், முந்திரி - தலா 10
ஏலக்காய் - 3

செய்முறை:

முளைகட்டிய பயறு வகைகளை நன்கு வெயிலில் காயவைக்கவும். வெறும் வாணலியில் முளைகட்டிய பயறு வகைகள், சிவப்பரிசி, பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மெஷினில் கொடுத்து பவுடராக அரைக்கவும். இதுவே சத்து மாவு.

குறிப்பு: சிறிதளவு மாவுடன் தண்ணீர்விட்டுக் கரைத்து, கொதிக்கவைத்து இறக்கி பால், சர்க்கரை சேர்த்துப் பருகலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.


p97k.jpg

மிக்ஸ்டு ஸ்பிரவுட்ஸ் போஹா

தேவையானவை:

கெட்டி அவல் - ஒரு கப்
முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப்
முளைகட்டிய கொண்டைக்கடலை - கால் கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
கேரட் துருவல் - 5 டீஸ்பூன்
பச்சைப் பட்டாணி - சிறிதளவு
கடுகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அவலைக் கழுவி, தண்ணீர் தெளித்து சிறிது நேரம் வைக்கவும். பச்சைப் பயறு, கொண்டைக்கடலையை வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். பிறகு, கொண்டைக்கடலை, பச்சைப் பயறு, உப்பு, அவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


p97l.jpg

ஸ்பிரவுட்ஸ் மசால்வடை

தேவையானவை:

முளைகட்டிய பயறு கலவை (பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, காராமணி) - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லித்தழை - கால் கப்
சோம்பு - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முளைகட்டிய பயறு வகைகள், இஞ்சி, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து, கெட்டியாக அரைத்து எடுக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி தட்டிப் போட்டு, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.  

  • தொடங்கியவர்

மட்டன் தொக்கு... சும்மா `கிழி கிழி கிழி’! - கலா மாஸ்டர் கிச்சன்

கு.ஆனந்தராஜ், படங்கள்: ரா.வருண் பிரசாத்

 

“வெஜ், நான்-வெஜ் ரெண்டையுமே நான் நல்லா சமைப்பேன். ஆனா, நேரம்தான் இருக்காது. என் குடும்பத்துக்குச் சமைச்சுப் போட்டுச் சந்தோஷப்படுத்த, அப்பப்போ அந்த நேரத்தை உருவாக்கிக்குவேன்’’ - கலகலப்புடன் பேசுகிறார் கலா மாஸ்டர்.

“நாங்க அக்கா தங்கச்சிங்க ஏழு பேரு. எல்லாருக்குமே சின்ன வயசுலேயே எங்கம்மா சரோஜினி நல்லா சமைக்கக் கத்துக்கொடுத்துட்டாங்க. அவங்க செய்ற சாம்பார், உருளைக்கிழங்கு ஸ்ட்யூ, புளிச்சக்கீரை சாதத்துக்கு நாங்க எல்லோரும் அடிமைகள். அம்மா, இந்த உணவுகளை ஸ்கூலுக்குக் கொடுத்தனுப்புற நாள்கள்ல எல்லாம் லஞ்ச் பாக்ஸ் சுத்தமா காலியாகிடும். வீட்ல இருக்கிறப்ப அவங்க உருட்டிக்கொடுக்குற சாதத்துல, அன்பு அற்புதமான சுவையா சேர்ந்திருக்கும்.

p74c.jpg

எங்கப்பா கோபால் ஐயர், அவரோட சொந்த ஊரான ஈரோட்டுல பிரபல சமையல் கான்ட்ராக்டர். நடனம், சினிமான்னு எங்க ஆசைகளுக்கு உயிர்கொடுக்க, அம்மா எங்களையெல்லாம் சின்ன வயசுலேயே சென்னைக்கு அழைச்சுட்டு வந்துட்டாங்க. அதனால அப்பா, ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை சென்னைக்கு வந்து எங்களோடு சில நாள்கள் தங்கிட்டுப் போவார். அப்படி வரும்போது நாங்க கேட்கிற சமையல், ஸ்வீட்ஸை எல்லாம் செய்துகொடுப்பார். அதை நாங்க எல்லோரும் சேர்ந்து சாப்பிட்ட அந்தச் சந்தோஷத் தருணங்கள், நாங்க எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் திரும்பக் கிடைக்காது.

என்னோட 12 வயசுலேயே சினிமாவுல பரபரப்பா வேலை செய்ய ஆரம்பிச்சுட்டேன். அப்போவெல்லாம் சரியா சாப்பிடவே மாட்டேன். வேலைல இருந்தா, பசி, தூக்கம்னு எதுவும் என்னை அண்டாது. என்னால ஷூட்டிங் தாமதமாகக் கூடாதுனு ஓடிட்டே இருப்பேன். இதனால காலையில சாப்பாட்டை மதியமும், மதிய சாப்பாட்டை சாயங்காலமும், கடைசியா நைட்டு 12 மணிக்கும் சாப்பிடுறதுனு போகும் வாழ்க்கை. நேரத்துக்குச் சாப்பிட மாட்டேங்கிறேன்னு வீட்டுல எல்லோரும் வருத்தப்படுவாங்க.

இருபது வயசுல நான் பார்க்க ரொம்ப ஒல்லியா இருப்பேன். எல்லா ஸ்டார்ஸும் என்னை ‘ஒல்லிக்குச்சி கலா’ன்னுதான் சொல்லுவாங்க. ஒருகட்டத்துல, வேலை பரபரப்புல நேரத்துக்குச் சாப்பிடாததே ஒபிஸிட்டி பிரச்னை ஏற்படக் காரணம் ஆகிடுச்சு. ஒழுங்கா சாப்பிடலைன்னாலும், சூப்பரா சமைப்பேன். அதுலயும் நான் செய்ற பிரியாணி, முட்டைக்கறிக்கு எங்க குடும்பம் என்னைக் கொண்டாடித் தீர்த்துடும். ஷூட்டிங் இல்லாத நாள்களில் அக்கா தங்கச்சிங்க கூடினா, ‘இன்னிக்கு கலா சமைப்பா’னு எல்லோரும் குஷி ஆகிடுவாங்க. அசைவம் பிடிக்காத பிருந்தாவைத் தவிர, மற்ற எல்லோரும், ‘வெரைட்டி வெரைட்டியா பிரியாணி செய்வியே... இன்னிக்கும் அப்படி மணக்க மணக்க சமைச்சுப் போடு, வயிறார சாப்பிடுறோம்’னு கேட்பாங்க. எனக்குக் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம், அப்படி நாங்க சந்திக்கிற தருணங்கள் ரொம்பக் குறைஞ்சுடுச்சு. இப்போ கணவர் மகேஷ், பையன் வித்யூத் ரெண்டு பேரும் என் சமையல் ஃபேன்ஸ். 

எங்க வீட்டுல குக் இருக்காங்க. சினிமா, டெலிவிஷன், டான்ஸ் நிகழ்ச்சிகள்னு நான் பிஸியா ஓடிக்கிட்டு இருக்கிறதால, காலை மற்றும் மதியம் அவங்க சமைப்பாங்க. என் கணவருக்கும் பையனுக்கும் தினமும் ஏதாச்சும் ஒருவேளைக்காவது நான்-வெஜ் வேண்டும். அதனால என்ன சமைக்கணும்னு முதல் நாளே யோசிச்சு, குக்கிட்ட சொல்லிடுவேன். என்ன வேலை இருந்தாலும் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல ஃபேமிலி டைம் எனக்கு. கணவருக்கும் பையனுக்கும் நான்தான் டின்னர் செஞ்சு கொடுப் பேன். மேக்ஸிமம் அரைமணி நேரம்தான்... அந்தளவுக்கு சூப்பர் ஃபாஸ்டா சமைப்பேன். மலையாள ஸ்டைல் உருளைக்கிழங்கு ஸ்ட்யூதான் அடிக்கடி செய்வேன். அன்னிக்கு மட்டும் எங்க மூணு பேருக்குமே எக்ஸ்ட்ரா இட்லிகள் வயிற்றுக்குள்ள போகும்.

p74b.jpg

எண்ணெய் அதிகம் சேர்க்காத தமிழ்நாடு, கொங்கு ஸ்பெஷல், மலையாள வெஜ், நான்-வெஜ் உணவுகள்... இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறைய பழங்கள், தண்ணீர் எடுத்துக்குவேன். கல்யாணமான புதுசுல அடிக்கடி ஹோட்டல்ல சாப்பிடுவோம். ஆனா, இப்போ பையனோட ஆரோக்கியத்துக்காக ஹோட்டலுக்குப் போறதையே நிறுத்திட்டோம். அவனுக்கு என்ன பிடிச்சாலும் அதை வீட்டிலேயே செய்து கொடுத்துடுவேன். சாப்பிட்டு முடிச்சதும் உடல் உழைப்பைக் கொடுக்கும் ஏதாச்சும் ஒரு வேலையை செய்துடுவேன்’’ என மாஸ்டர், தன் ஸ்பெஷல் சமையலான மட்டன் தொக்கு செய்ய மசாலா தயார் செய்தபடி பேசிக்கொண்டிருக்க, அவர் கணவர் மகேஷ் கிச்சனுக்குள் என்ட்ரி ஆனார்.

``வெல்கம் சார்! ரொம்ப நாளைக்கப்புறமா கிச்சனுக்குள்ள வந்திருக்கீங்க...” என்று கணவரிடம் பேசியவாறே, சில நிமிடங்களில் மட்டன் தொக்கு செய்து முடித்துவிட்டார் கலா மாஸ்டர். கணவருக்கும் மகனுக்கும் டைனிங் டேபிளில் பரிமாறியபடி தொடர்ந்தவர், “வேலையில எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், நாங்க மூணு பேரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடும்போது மனசு ரிலாக்ஸ் ஆகிடும்.

முன்பெல்லாம் என் வீட்டுல பிரியாணி, ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்னு எது செஞ்சாலும், என் சிஸ்டர்ஸ் எல்லாருக்கும் கொடுத்தனுப்புவேன். இப்போ அக்கா தங்கைகள் எல்லோரும் ஆளுக்கொரு பகுதியில பிஸியா இருக்கிறதால, எப்பயாச்சும்தான் சந்திக்கிறோம். அவங்களை ரொம்ப மிஸ் பண்றேன். சீக்கிரமே எல்லோரையும் கூப்பிட்டு பிரியாணி சமைச்சுப் போடணும்’’ என்று கலா மாஸ்டர் சொல்லும்போது, ``மம்மி... மட்டன் தொக்கு சூப்பர். சும்மா கிழி கிழி கிழி” என்று அவர் மகன் பாராட்ட, ``எனக்கே என் டயலாக்காடா செல்லம்!’’ என்ற மாஸ்டர், அந்தத் தட்டில் இன்னும் ஒரு கரண்டித் தொக்கு வைக்கிறார்!

அம்மாவின் கை, பிள்ளைக்கு அன் லிமிட்டடாகத்தான் பரிமாறும்!


மட்டன் தொக்கு ரெசிப்பி!

தேவையானவை:
மட்டன் - 250 கிராம்
பெரிய வெங்காயம்  - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
எலுமிச்சைப் பழம் - ஒன்று
(சாறு பிழியவும்)
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - ஒன்று
சோம்பு - அரை டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லித்தழை,
பெரிய வெங்காயம் - அலங்கரிக்கத்
தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

p74a.jpg

செய்முறை:
மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், இஞ்சி - பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு மூடிபோட்டு வேகவிடவும். மூன்று விசில் வந்ததும் அடுப்பை `சிம்’மில் வைத்து இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.  ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து மட்டன் கலவையை தனியே எடுத்து வைக்கவும்.

p74.jpg

மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் தயார் செய்து வைத்திருக்கும் மட்டன் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை கொதிவரத் தொடங்கும் முன்பு மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிவிடவும்.

கலவை சுண்டுவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பாக எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக் கிளறிவிட்டு வேகவிடவும். கலவையில் தண்ணீர் வற்றி கிரேவியானதும், அடுப்பை அணைத்துக் கொத்தமல்லித்தழை மற்றும் நறுக்கிய வெங்காயத்தைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

  • தொடங்கியவர்

30 வகை மூலிகை சமையல்

 

 

11.jpg

``இன்றைய காலகட்டத்தில், மாறி வரும் சூழலுக்கு ஏற்ப, நோய்களின் தாக்கமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதைத் தடுக்கும் மருந்துகளின் பக்கவிளைவுகளும் அதிகம். எனவே, ‘உணவே மருந்து... மருந்தே உணவு’ என்ற நம் முன்னோர் வாக்கைப் பின்பற்றி, எளிதாக கிடைக்கக்கூடிய பொருள்களை வைத்துப் பல்வேறு உணவுகளைப் பரிமாறியுள்ளேன்’’ என்று கூறுகிறார், ஓசூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் எஸ்.சாந்தி. அவர் வழங்கும் 30 வகை மூலிகை சமையல் உணவுகள் இந்த இணைப்பிதழில்... உங்களுக்காக!

2.jpg

ஹெர்பல் டீ

தேவையானவை: காய்ந்த துளசி இலை, காய்ந்த புதினா இலை - தலா ஒரு கைப்பிடியளவு, பட்டை - சிறிய துண்டு, கறுப்பு ஏலக்காய் - 2, பச்சை ஏலக்காய் - 5, மிளகு - ஒரு டீஸ்பூன், அதிமதுரப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், சுக்குத்தூள் - ஒரு டீஸ்பூன், திப்பிலி - 5, ஜாதிக்காய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த தேயிலை - ஒரு கைப்பிடி அளவு, கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு.

3.jpg

செய்முறை: மிக்ஸியில் துளசி இலைகளுடன் புதினா இலைகள் சேர்த்து ஒரு சுற்றுச்சுற்றவும். இதனுடன் மிளகு, பட்டை, கறுப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், சுக்குத்தூள், திப்பிலி, அதிமதுரப் பொடி, ஜாதிக்காய்த்தூள், காய்ந்த தேயிலை சேர்த்து அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.

பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து, அரைத்தத்தூள் ஒரு டீஸ்பூன், தேவையான அளவு கருப்பட்டி (அ) நாட்டுச் சர்க்கரை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி அருந்தலாம்.
குறிப்பு: விரும்பினால் பால் அல்லது சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கலாம்.

பயன்: தேவையற்ற கொழுப்பை நீக்கும்; அஜீரணக் கோளாறுகளை அகற்றும்.

பூண்டு லேகியம்

தேவையானவை:  நாட்டு பூண்டுப் பல் – 12 முதல் 20 வரை, பால் - 100 மில்லி, கருப்பட்டி அல்லது வெல்லம் - 100 கிராம், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

4.jpg

செய்முறை: பூண்டுப் பற்களைப் பாலில் வேகவைக்கவும். ஆறியதும் நன்கு மசிக்கவும் (மிக்ஸியில் அரைத்தும் எடுக்கலாம்). கருப்பட்டி (அ) வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். பிறகு, வெல்லக் கரைசலுடன் பூண்டு விழுது, ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கிளறவும். கெட்டியாகி சுருண்டு வரும்போது மீதமுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சுருளக்கிளறி இறக்கவும். ஆறியபின் பாட்டிலில் சேகரித்து வைக்கவும். 

பயன்: உணவுக்கு முன் அல்லது பின் இந்த லேகியத்தை ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர  ஜீரணம், வயிற்றுப் பொருமல், மாந்தம் சரியாகும்.

உளுந்தோரை

தேவையானவை: உடைத்த கறுப்பு உளுத்தம்பருப்பு - 50 கிராம், பச்சரிசி - 200 கிராம், பூண்டு – 6 பல்,   மிளகுத்தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு - 2, தோலுரித்த சின்ன வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கவும்), வெந்தயம் - கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

5.jpg

செய்முறை: குக்கரில் நல்லெண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, சீரகம், பூண்டு, வெந்தயம், சின்ன வெங்காயம், மிளகுத்தூள், உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதனுடன் பச்சரிசி, உப்பு, 3 கப் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரை மூடி 2 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் குக்கரைத் திறந்து, சிறிதளவு நல்லெண்ணெய், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

பயன்: மாதவிடாய்க் கோளாறு உள்ளவர்களுக்கும், பூப்பெய்திய பெண்களுக்கும், எலும்பு சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கவும் ஏற்ற உணவு இது.

கறிவேப்பிலைக் குழம்பு

தேவையானவை: தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்), பூண்டு – 8 பல், தாளிப்பு வடகம் - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சை அளவு, வெல்லம் - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

6.jpg

வறுத்து அரைக்க: கறிவேப்பிலை - 3 கைப்பிடி அளவு, மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி - தலா ஒரு டீஸ்பூன், மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5.

செய்முறை: புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும். வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு வறுத்து அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுக்கவும். ஆறியதும் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு வடகம், வெந்தயம், பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், உப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். மேலே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு, குழம்பு கெட்டியாகி வரும்போது கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

பயன்: ரத்தச்சோகை, முடி உதிர்தல், சோர்வு, மயக்கம் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாகும் குழம்பு இது.

பிரண்டைத் துவையல்

தேவையானவை:  நார் நீக்கிய பிரண்டைத் துண்டுகள் - ஒரு கப், உளுத்தம்பருப்பு  - ஒரு டேபிள்ஸ்பூன், தோலுரித்த சின்ன வெங்காயம் - 8, புளி  - சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 5,  (விரும்பினால்) தேங்காய்த் துருவல் – சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

7.jpg

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம், பிரண்டை, உப்பு, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து துவையலாக அரைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து துவையலுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

பயன்: கால்சியம் சத்து, நார்ச்சத்து கொண்டது. எலும்பு, மூலம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு மருந்தாகும். 

மூலிகை மோர்க்குழம்பு

தேவையானவை:  மோர் - 3 கப், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு.

8.jpg

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு.

வறுத்து அரைக்க: பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, ஓமம் - அரை டீஸ்பூன், தோல் சீவி துருவிய இஞ்சி - கால் டீஸ்பூன், புதினா இலை, துளசி இலை – தலா 15, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு, வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுக்கவும். ஆறியதும் தண்ணீர் தெளித்து கொரகொரவென அரைத்து எடுக்கவும். மோருடன் உப்பு, மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்துக் கலக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு, தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து மோர்க்கலவையை ஊற்றி, நுரைத்து வரும்போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.  

பயன்: நாவறட்சி, தொண்டைக் கமறல் நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

அத்திக்காய் கூட்டு

தேவையானவை: அத்திக்காய் - 15, பாசிப்பருப்பு – 100 கிராம், தேங்காய்த் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 3, தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்), தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு.

9.jpg

தாளிக்க: தேங்காய் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், சீரகம், கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: அத்திக்காய்களை உப்பு, மஞ்சள்தூள் கலந்த நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி, நான்கு  துண்டுகளாக நறுக்கவும். குக்கரில் பாசிப்பருப்புடன் அத்திக்காய், தண்ணீர் சேர்த்து 2 விசில்விட்டு இறக்கவும். தேங்காய்த் துருவலுடன் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர்விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வேகவைத்த பருப்புக் கலவையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச்  சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, கூட்டுடன் கலந்து பரிமாறவும்.
 
பயன்: குழந்தை பாக்கியம் ஏற்பட உதவும். வாதம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பிரச்னைகளுக்கும் மருந்தாகும்.

தேன் - தினை லட்டு

தேவையானவை: தினை மாவு - ஒரு கப், வெல்லம் (அ) கருப்பட்டித் தூள் - முக்கால் கப், தேன் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.

10.jpg

செய்முறை: வெறும் வாணலியில் தினை மாவை  வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும். ஆறிய பின் வெல்லம் (அ) கருப்பட்டித் தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும்.  இதனுடன் தேன், நெய் சேர்த்துக் கலந்து, சிறிய லட்டுகளாகப் பிடிக்கவும்.

பயன்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற சத்தான சிற்றுண்டி.

வல்லாரைத் துவையல்

தேவையானவை: வல்லாரைக்கீரை – ஒரு கட்டு (சுத்தம் செய்து நறுக்கவும்), கறுப்பு உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தோலுரித்த சின்ன வெங்காயம் – 10, புளி – சிறிதளவு, சீரகம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, வெள்ளை உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு  - தலா ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

111.jpg

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடலைப்பருப்பு, கறுப்பு உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து வறுக்கவும். இதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், கீரை, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறிய பின் புளி, உப்பு  சேர்த்து துவையலாக அரைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, வெள்ளை உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து துவையலுடன் கலந்து பரிமாறலாம். 

பயன்: ஞாபகசக்தியைத் தூண்டும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு மருந்தாகும்.

அங்காயப் பொடி

தேவையானவை: தனியா (மல்லி), மிளகு, சீரகம், ஓமம், காய்ந்த வேப்பம்பூ – தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், சுக்குத்தூள் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

12.jpg

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள வற்றை வெறும் வாணலியில் ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பவுடராக அரைத்து சேகரிக்கவும். சூடான சாதத்துடன் சிறிதளவு நெய், அரைத்த பொடி சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்.

பயன்: குழந்தை பெற்ற பெண்களுக்கு மிகவும் நலம் தரும்.

திப்பிலி ரசம்

தேவையானவை: திப்பிலி - 5, மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, புளி - எலுமிச்சை அளவு, வேக வைத்த பாசிப்பருப்பு தண்ணீர் - அரை கப், தக்காளி - 2 (நறுக்கவும்), கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெல்லம் - ஒரு சிறிய துண்டு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2.

13.jpg

செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வெறும் வாணலியில் திப்பிலி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வறுத்துப் பொடிக்கவும். பாத்திரத்தில் புளிக்கரைசல், தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்துக் கரைத்து ஒரு கொதிவிடவும். இதனுடன் அரைத்த பொடி, பருப்பு தண்ணீர், கொத்தமல்லித்தழை சேர்த்து நுரைத்து வரும்போது இறக்கவும். வாணலியில் நெய்விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து ரசத்துடன் கலந்து பரிமாறவும்.

பயன்: கபத்தைக் கரைக்கும்; உடல் சூட்டைத் தணிக்கும்; காய்ச்சலுக்கு ஏற்ற மருந்தாகும்.

செலவு குழம்பு

தேவையானவை: செலவு சாமான் – தலா 10 கிராம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்),  தோலுரித்த சின்ன வெங்காயம் – 10, காய்ந்த மிளகாய் - 5, நல்லெண்ணெய் – தேவையான அளவு, தாளிப்பு வடகம் - ஒரு டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.

14.jpg

செய்முறை: வெறும் வாணலியில் செலவு சாமான்களை சேர்த்து வறுத்து பவுடராக பொடிக்கவும். புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு வடகம் தாளித்து வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். பிறகு, அரைத்த பவுடரைச் சேர்த்து கொதிவிட்டு ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு இறக்கவும்.

சூடான சாதத்தில் சிறிதளவு  நெய்விட்டு, இந்தக் குழம்பைச் சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பு: செலவு சாமான்கள் சுக்கு, மிளகு, கண்டந்திப்பிலி, வெந்தயம், சதகுப்பை, ஓமம், சீரகம், பெருங்காயம், கருஞ்சீரகம், சித்தரத்தை, அரிசி திப்பிலி ஆகியனவாகும்.

பயன்: குழந்தை பெற்ற பெண்களுக்கு நலம் பயக்கும்; காய்ச்சல் நேரங்களிலும் சாப்பிடலாம்.

கண்டந்திப்பிலி - கற்பூரவல்லி குழம்பு

தேவையானவை: மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கண்டந்திப்பிலி - 15, கற்பூரவல்லி இலை - 5, தோலுரித்த சின்ன வெங்காயம் – 15 (பொடியாக நறுக்கவும்), புளி -  சிறிய எலுமிச்சை அளவு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெல்லம் – சிறிய துண்டு, தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

15.jpg

செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வாணலியில் சிறிதளவு  நல்லெண்ணெய்விட்டு தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கண்டந்திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். இதனுடன் கற்பூரவல்லி இலைகளைச் சேர்த்து தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் புளிக்கரைசல், உப்பு, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து கொதிக்கவைத்து, குழம்பு கெட்டியான பின்பு இறக்கவும்.

பயன்: நெஞ்சு சளியைக் கரைக்க உதவும்.

மூலிகை ஊறல் நீர்

தேவையானவை:  ஆவாரம்பூ - ஒரு கைப்பிடியளவு, ஏலக்காய் - ஒன்று, ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், வெட்டி வேர் - சிறிதளவு, துளசி, புதினா - சிறிதளவு, பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன்.

16.jpg

செய்முறை: மண் குடுவையில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைச் சேர்த்து  இரவு முழுவதும் ஊறவிடவும். மறுநாள் காலையில் வடிகட்டி பருகலாம்.

பயன்: உடல் உஷ்ணம் நீங்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். தேவையற்ற கொழுப்பு கரையும். உயர் ரத்த அழுத்தம் குறையும்.

புதினா சூப்

தேவையானவை:  பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - ஒன்று, மிளகு - சீரகத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா இலைகள் - ஒரு கப், எலுமிச்சைப் பழம் - ஒரு மூடி, உப்பு - தேவையான அளவு.

17.jpg

செய்முறை: எலுமிச்சைப் பழத்தை சாறு பிழியவும். குக்கரில் பாசிப்பருப்புடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், புதினா இலைகள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி 2 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மூடியைத் திறந்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை நீக்கிவிட்டு மத்தால் கடையவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகு - சீரகத்தூள் சேர்த்துப் பருகலாம்.

பயன்: பசியைத் தூண்டும். புத்துணர்ச்சி தரும். கொழுப்பைக் குறைக்கும்.

புழுங்கல் அரிசி கஞ்சி

தேவையானவை:  புழுங்கல் அரிசி - ஒரு கப், பூண்டு - 15 பல், தோல் சீவி துருவிய இஞ்சி -  சிறிதளவு, வெந்தயம் - கால் டீஸ்பூன், முருங்கை இலை - ஒரு கைப்பிடி அளவு, தேங்காய்ப்பால் அல்லது மோர் - ஒரு கப், மிளகு, சீரகம், உப்பு – தேவையான அளவு.

18.jpg

செய்முறை: குக்கரில் புழுங்கல் அரிசி, பூண்டு, இஞ்சித் துருவல், வெந்தயம், சீரகம், மிளகு, முருங்கை இலை, உப்பு, நான்கு டம்ளர் தண்ணீர்விட்டு மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் தேங்காய்ப்பால் அல்லது மோர்விட்டு கடைந்து பருகலாம்.

பயன்: வாயு பிரச்னைகளுக்கும் வயிற்று உபாதைகளுக்கும் மருந்தாகும்.

சீரகம் - கொத்தமல்லி பால் சோறு

தேவையானவை: சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் - 2 கப், சீரக சம்பா அரிசி - ஒரு கப், பூண்டு - 6 பல், தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (கீறவும்), தயிர் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

19.jpg

செய்முறை: குக்கரில் தேங்காய் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து, பூண்டு, இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் தயிர், அரிசி, உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் மூடி, 2 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

பயன்: வயிற்றுப்புண், வாய்புண் நீங்கும்; நல்ல உறக்கம் வரும்.

தூதுவளை ரசம்

தேவையானவை: தூதுவளை இலைகள் - 15, மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், வேகவைத்த பாசிப்பருப்பு தண்ணீர் - ஒரு கப், புளிக்கரைசல் - ஒரு கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், தட்டிய பூண்டு – 5 பல், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 

20.jpg

செய்முறை: புளிக்கரைசலுடன் உப்பு, மஞ்சள்தூள், பூண்டு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தூதுவளை இலைகள் சேர்த்து வதக்கவும். இதனுடன்  புளிக்கரைசல் ஊற்றி, ஒரு கொதிவிடவும். பிறகு, மிளகு - சீரகத்தூள், பருப்புத் தண்ணீர் சேர்த்து நுரைத்து வரும்போது இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

பயன்: கபம், காய்ச்சல், தலைவலி, உடல்வலி நீங்கும்.

ரோஜாப்பூ துவையல்

தேவையானவை: பன்னீர் ரோஜா இதழ்கள் - ஒரு கப், பொட்டுக்கடலை - கைப்பிடி அளவு, தேங்காய்த் துருவல் - தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 3, உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, எண்ணெய் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

21.jpg

செய்முறை: ரோஜா இதழ்களுடன் பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, அரைத்துவைத்த துவையலுடன் கலந்து பரிமாறவும்.

பயன்: உடல்சூட்டைக் குறைக்கும். வயிற்று எரிச்சல், குமட்டல் பிரச்னைகளுக்கு மருந்தாகும். ரத்த விருத்திக்கு உதவும். ஞாபகசக்தியைத் தூண்டும்.

முடக்கத்தான் கீரை ரசம்

தேவையானவை: சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை இலைகள் - 3 கப், புளி -  கொட்டைப்பாக்கு அளவு, தக்காளி – 3 (பொடியாக நறுக்கவும்), பூண்டு விழுது, மிளகு - சீரகத்தூள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், நெய், கறிவேப்பிலை – சிறிதளவு.

22.jpg

செய்முறை: புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். இரண்டு கப் முடக்கத்தான் கீரை இலைகளை தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தனியாக வைக்கவும். வாணலியில் நெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் தக்காளி, உப்பு, பூண்டு விழுது, மீதமுள்ள ஒரு கப் இலைகளை சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல்விட்டு, ஒரு கொதி வந்ததும் மிளகு - சீரகத்தூள், வடிகட்டிய கீரைச்சாறு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

குறிப்பு: முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது முடக்கத்தான்.

பயன்: கை, கால், மூட்டுவலி, வாதநோய்களுக்கு நல்ல மருந்தாகும்.

குப்பைமேனி சூப்

தேவையானவை: குப்பைமேனிக் கீரை  - ஒரு கைப்பிடியளவு, பாசிப்பருப்பு - 50 கிராம், பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு - 2, பிரிஞ்சி இலை - ஒன்று, மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

23.jpg

செய்முறை: சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு பேஸ்ட் போல கரைக்கவும். குக்கரில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, பாசிப்பருப்பு, குப்பைமேனிக் கீரை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து மூடி            2 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மசித்து வடிகட்டவும். இதனுடன் மிளகு - சீரகத்தூள், சோள மாவு கரைசல் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி சூடாகப் பருகவும்.

குறிப்பு: விரும்பினால் எலுமிச்சைச் சாறு கலந்தும் பருகலாம்.

பயன்: கசப்புத்தன்மை இருந்தாலும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.

வெந்தயம் - வெள்ளைப் பூண்டு குழம்பு

தேவையானவை: வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், நாட்டுப் பூண்டு - 20 பல், தோலுரித்த சின்ன வெங்காயம் – 15 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்)  - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்), புளி - சிறிய எலுமிச்சை அளவு (கரைத்துக் கொள்ளவும்), நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு,
தாளிக்க: வடகம், பெருங்காயத்தூள், வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

24.jpg

செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் புளிக்கரைசல், வெந்தயப்பொடி,  ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய், வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

பயன்: வயிற்று உப்பசம், வயிற்றுவலி, வாயு கோளாறுகள், உடல்சூட்டு வலி போன்றவற்றுக்கு மருந்தாகும்.

அறுகம்புல் தேன் சாறு

தேவையானவை: அறுகம்புல் - அரை கட்டு, தேன் - 2 டேபிள்ஸ்பூன், தண்ணீர் - 3 கப்.

செய்முறை: அறுகம்புல்லைக் கழுவி தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டவும். இதனுடன் தேன் சேர்த்துக் கலந்து பருகலாம்.

25.jpg

பயன்: ரத்தத்தில் உள்ள நச்சு களை வெளியேற்றும்.

மூலிகை ஊத்தப்பம்

தேவையானவை:  தோசை மாவு - 3 கப், பசலைக்கீரை, புதினா, துளசி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தலா கைப்பிடி அளவு, மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கி வதக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், தேங்காய்த் துருவல், கேரட் துருவல், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

26.jpg

செய்முறை: சுத்தம் செய்த பசலைக்கீரை, புதினா, துளசி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்து எடுக்கவும். தோசை மாவுடன் மிளகு - சீரகத்தூள், சின்ன வெங்காயம், அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை காயவைத்து, மாவை சிறிய ஊத்தப்பங்களாக ஊற்றவும். அதன் மேலே தேங்காய்த் துருவல், கேரட் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய்விட்டு வேகவைத்து எடுக்கவும்.

பயன்: பல், ஈறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு.

மூலிகை பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், புதினா, கொத்தமல்லித்தழை - தலா கைப்பிடி அளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, வெங்காயம், தக்காளி -
தலா 2 (நீளவாக்கில் நறுக்கவும்), சின்ன வெங்காயம் - 8, கற்பூரவள்ளி இலை, துளசி – தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகு, சோம்பு, தயிர் – தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்), மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

27.jpg

செய்முறை: சின்ன வெங்காயத்துடன் தக்காளி, மிளகு, சோம்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். புதினா, துளசி, கற்பூரவள்ளி, கொத்தமல்லித்தழை, தயிர் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரிசியை 5 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த விழுது வகைகளைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி அரிசி, 2 கப் தண்ணீர்விட்டு மூடி 2 விசில்விட்டு இறக்கவும். ஆவி அடங்கியதும் திறந்து மேலே சிறிதளவு நெய்விட்டு சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: தண்ணீருக்குப் பதிலாக தேங்காய்ப்பால் சேர்க்கலாம்.

பயன்: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

கற்றாழை நீர் சாரம்

தேவையானவை: கற்றாழை – ஒரு மடல், மோர் – ஒரு கப், புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

28.jpg

செய்முறை: கற்றாழை மடலை சீவி, நன்கு பலமுறை கழுவி புதினா, கொத்தமல்லித்தழை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து வடிகட்டவும். இதனுடன் மோர், உப்பு சேர்த்துப் பருகலாம்.

பயன்: கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்; சருமப் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

மூலிகை சாலட்

தேவையானவை: கேரட் துருவல், வெள்ளரித் துருவல் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய் (பச்சை, சிவப்பு, மஞ்சள்) – தேவையான அளவு, வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), வேர்க்கடலை - சிறிதளவு, இந்துப்பு – தேவையான அளவு, புதினா, கொத்தமல்லித்தழை, துளசி - தலா கைப்பிடியளவு, காய்ந்த திருநீற்றுப் பச்சிலை, வெந்தயக்கீரை – சிறிதளவு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, தேன் – தேவையான அளவு.

29.jpg

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அகலமான பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.

பயன்: காலை சிற்றுண்டியாக சாப்பிடலாம். தோல் பளபளப்பாகும்.

ஓமப் பூரி

தேவையானவை: ஓமம் – 20 கிராம், கோதுமை மாவு - 3 கப், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், ஓம வாட்டர் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30.jpg

செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, ஓமம், சீரகத்தூள், ஓம வாட்டர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு, மாவை சிறிய உருண்டைகளாக்கி, பூரிகளாக திரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, திரட்டிய பூரிகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.

பயன்: வயிற்றுப் பொருமல், நெஞ்செரிச்சல், செரிமானப் பிரச்னைகளைத் தடுக்கும்.

துளசி - நெல்லி துவையல்

தேவையானவை: முழு நெல்லிக்காய் - 5, துளசி - ஒரு கைப்பிடி அளவு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு  - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய், இந்துப்பு - தேவையான அளவு.

31.jpg

செய்முறை: நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி துண்டுகளாக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், நெல்லிக்காய், தேங்காய்த் துருவல், இந்துப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்துத் துவையலாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை  தாளித்து, துவையலுடன் சேர்க்கவும்.

பயன்: வைட்டமின்-சி நிறைந்தது; நோய் எதிர்ப்புச்சக்தியைத் தூண்டும்.

சிறுதானிய மூலிகை கஞ்சி

தேவையானவை: குதிரைவாலி, சாமை, வரகு, பாசிப்பருப்பு கலவை – 100 கிராம்,  மிளகு - சீரகத்தூள் -  ஒரு டீஸ்பூன், புதினா, துளசி - சிறிதளவு, கிராம்பு - ஒன்று, பூண்டு - 6 பல், வெந்தயம் - கால் டீஸ்பூன், இந்துப்பு - தேவையான அளவு.

p32.jpg

செய்முறை: குக்கரில் குதிரைவாலி, சாமை, வரகு, பாசிப்பருப்பு சேர்த்து வறுக்கவும். அதனுடன் துளசி, புதினா, கிராம்பு, பூண்டு, வெந்தயம், இந்துப்பு, மிளகு - சீரகத்தூள், 4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 4 விசில்விட்டு இறக்கவும். ஆவிவிட்டதும் மத்தால் கடைந்து அருந்தலாம்.

குறிப்பு: விரும்பினால் மோர் சேர்த்தும் அருந்தலாம்.

பயன்: காய்ச்சலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். கபம், வாயு சீராகும்.

  • தொடங்கியவர்

சூப்பரான ஸ்ரீரங்கம் வத்த குழம்பு

ஸ்ரீரங்கம் வத்த குழம்பு என்றதுமே அனைவரது வாயிலும் எச்சில் ஊறும். அத்தகைய வத்த குழம்பை இன்று எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.

 
சூப்பரான ஸ்ரீரங்கம் வத்த குழம்பு
 
தேவையான பொருட்கள் :

சுண்டக்காய் - 1 கப்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
புளி - எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 50 கிராம்
வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

201708191252389374_1_srirangamvathakuzha

செய்முறை :

புளியை கரைத்து கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.

அடுத்து, அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.

குழம்பு திக்கான பதம் வந்தவுடன் அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், ஸ்ரீரங்கம் வத்த குழம்பு ரெடி!!!
  • தொடங்கியவர்

புத்துணர்ச்சி தரும் கொய்யா - அத்திப்பழ சாலட்

தினமும் பழங்களை சாலட் முறையில் சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இன்று கொய்யா, அத்திப்பழத்தை வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
புத்துணர்ச்சி தரும் கொய்யா - அத்திப்பழ சாலட்
 
தேவையான பொருட்கள் :

கொய்யாக்காய்  - 2,
அத்திப்பழம் -  4,
உப்பு, மிளகுத்தூள் -  தேவையான அளவு.

201708231054265610_1_Guavafigsalad._L_st

செய்முறை :

கொய்யாக்காய், அத்திப்பழத்தை கழுவி சிறிய துண்டுகளாக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பழத்தை போட்டு இதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து சாப்பிடலாம்.

சூப்பரான கொய்யா - அத்திப்பழ சாலட் ரெடி.
  • தொடங்கியவர்

மூட்டு வலி நிவாரணம் தரும் முடக்கத்தான் ரசம்

 

மூட்டு வலியில் இருந்து நிவாரணம் தரும் வல்லமை பெற்றது முடக்கத்தான் கீரை. இன்று இந்த கீரையை வைத்து சூப்பரான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
மூட்டு வலி நிவாரணம் தரும் முடக்கத்தான் ரசம்
 
தேவையான பொருட்கள் :

முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடியளவு,
புளி - நெல்லியளவு,
உப்பு - தேவைக்கு
பூண்டு - 5 பல்,
காய்ந்த மிளகாய் - 3,
மஞ்சள் தூள் - சிட்டிகை
மிளகு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
நெய், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு.

201708261040115981_1_mudakathankeerairas

செய்முறை :

புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

பூண்டுடன் மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

கீரையை கழுவி தண்ணீர் சேர்த்து வேக விடவும். ஆறிய பின் வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுக்கவும்.

முடக்கத்தான் வடிகட்டிய தண்ணீருடன் புளி கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு அரைத்த பூண்டு மிளகாய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

மற்றொரு வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்துடன் கலந்து சூடாக சாதத்துடன் பரிமாறலாம்.

சூப்பரான முடக்கத்தான் ரசம் ரெடி.
  • தொடங்கியவர்

தேங்காய்ப்பால் தக்காளி சாதம் செய்வது எப்படி

வேலைக்கு, பள்ளிக்கு செல்பவர்களுக்கு தேங்காய்ப்பால் சேர்த்து தக்காளி சாதம் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று தேங்காய்ப்பால் தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
தேங்காய்ப்பால் தக்காளி சாதம் செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

பச்சை பட்டாணி - அரை கப்,
பச்சரிசி 2 கப்,
தேங்காய்ப் பால் - 2 கப்,
வெங்காயம் - 2
தக்காளி - 6,
பச்சை மிளகாய் - 2,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்.

201708281307208200_1_coconutmilktomatori

செய்முறை :

அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதனுடன், தேங்காய்ப் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு சேர்த்து உதிராக வேக வையுங்கள்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்குங்கள்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள்.

பட்டாணி நன்றாக வெந்து ஓரங்களில் நெய் பிரிந்து வரும் போது சாதத்தை சேர்த்துக் கலக்குங்கள்.

புளிப்பில்லாத தக்காளி என்றால் ஒரு மூடி அளவு எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.

சூப்பரான தேங்காய்ப்பால் தக்காளி சாதம் ரெடி.
  • தொடங்கியவர்

சூப்பரான மதிய உணவு சோயா ரைஸ்

 

பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த சோயா ரைஸ் சூப்பரான மதிய உணவு. இன்று இந்த சோயா ரைஸ் செய்முறையை பார்க்கலாம்.

 
சூப்பரான மதிய உணவு சோயா ரைஸ்
 
தேவையான பொருட்கள் :

உதிராக வடித்த சாதம் - 2 கப்,
மீல்மேக்கர் - 1/2 கப்,
காய்ந்தமிளகாய் - 3,
கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

தாளிக்க...

பட்டை - சிறிய துண்டு,
லவங்கம் - 2,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

201708231253326175_1_soyarice._L_styvpf.

செய்முறை :

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அடுப்பை நிறுத்தவும். அதில் சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு கலந்து, மீல்மேக்கர் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து, தண்ணீரை வடித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

காய்ந்தமிளகாயை, 1/2 கப் வெந்நீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த மிளகாய் விழுது சேர்த்து வதக்கி, பிறகு பொரித்த மீல்மேக்கர், கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

அனைத்து நன்றாக சேர்ந்து வரும் போது சாதம் சேர்த்து கலந்து அடுப்பை நிறுத்தவும்.

கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
  • தொடங்கியவர்

சூப்பரான சைடிஷ் கத்தரிக்காய் பெப்பர் ஃப்ரை

 

சம்பார் சாதம், தயிர் சாதம், சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும் கத்தரிக்காய் பெப்பர் ஃப்ரை. இன்று இந்த வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
சூப்பரான சைடிஷ் கத்தரிக்காய் பெப்பர் ஃப்ரை
 
தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் - அரை கிலோ,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
மிளகு தூள் - 1 ஸ்பூன்,
உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவைக்கு,
கடுகு - தாளிக்க.

201708301517344757_1_brinjalpepperfry._L

செய்முறை :

கத்தரிக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்த பின் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.

கத்தரிக்காய் பாதியளவு வெந்தவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் உப்பு சேர்த்து நன்கு வேகும்வரை வதக்கவும்.

கத்தரிக்காய் நன்றாக வெந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்.
  • தொடங்கியவர்

சத்தான கேழ்வரகு - முடக்கத்தான் ரொட்டி

மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற அடிக்கடி உணவில் முடக்கதான் கீரையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகு, முடக்கத்தான் வைத்து ரொட்டி செய்முறையை பார்க்கலாம்.

 
 
 
 
சத்தான கேழ்வரகு - முடக்கத்தான் ரொட்டி
 
தேவையான பொருட்கள் :

முடக்கத்தான் கீரை - ஒரு கப்,
ராகி மாவு - 2 கப்,
அரிசி மாவு - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று
கடுகு - அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

201709011051110364_1_mudakathankeerai-ro

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முடக்கத்தான் கீரையை கழுவி பொடியாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முடக்கத்தான் கீரை, ராகி மாவு, அரிசி மாவு, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து பிசறவும்.

வாணலியில் எண்ணெய் காய விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கி மாவுடன் சேர்த்து கலக்கவும்.

இதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பிசைந்த மாவை சிறிய அடைகளாக தட்டி தோசை கல்லில் போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

சத்தான கேழ்வரகு - முடக்கத்தான் ரொட்டி ரெடி.
  • தொடங்கியவர்

அவள் விகடன் கிச்சன் டெலிசியஸ் வொர்க் ஷாப் ரெசிப்பிகள் கீழே... 

வட இந்திய ஸ்பெஷல்

7.jpg

ஸ்டஃப்டு பனீர் குல்ச்சா

தேவையானவை:

நெய் – தேவையான அளவு

மேல் மாவு செய்ய:

மைதா மாவு - ஒரு கப்
கோதுமை மாவு - 2 கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

பூரணம் செய்ய: துருவிய பனீர் – கால் கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்
கொரகொரப்பாகப் பொடித்த முந்திரி - கால் கப்
பொடியாக நறுக்கிய உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள், சாட் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவுடன் கோதுமை மாவு, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, மாவின் நடுவில் சிறிய குழி செய்து எண்ணெய்விட்டுப் பிசிறி, தேவையான அளவு தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசைய வேண்டும் (தளர இருக்க வேண்டாம்). பூரணம் செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து சிறிய உருண்டைகளாக்கிக்கொள்ளவும்.

பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக்கி, கிண்ணம் போல செய்து நடுவே செய்துவைத்துள்ள பூரணத்தை வைத்து மூடவும். பிறகு, இந்த உருண்டைகளைப் பூரணம் வெளியே வராமல் சற்று கனமான சப்பாத்திகளாகத் திரட்டவும். (மெல்லியதாகத் திரட்டினால் மொறுமொறுவென்று ஆகிவிடும்).  சப்பாத்திக்கல்லை காயவைத்து, திரட்டிய குல்ச்சாக்களைப் போட்டு, நெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு:

குல்ச்சாக்களைச் சப்பாத்திக்கல்லில் போட்டு பாதி வெந்தவுடன் எடுத்து, தணலில் இருபுறமும் சுட்டு மேலே நெய் தடவியும் பரிமாறலாம்.

6.jpg

பனீர் குல்ச்சன்

தேவையானவை:

நீளமாக நறுக்கிய குடமிளகாய் - 
2 கப் (அரை கிலோ)
நீளமாக நறுக்கிய வெங்காயம் -  
2 கப் (அரை கிலோ)
நீளமாக நறுக்கிய தக்காளி - 
2 கப் (அரை கிலோ)
நீளமாக நறுக்கிய 
பனீர் துண்டுகள்  - ஒரு கப்
பொடியாக நறுக்கிய 
கொத்தமல்லித்தழை - அரை கப்
இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
கஸூரி  மேத்தி  (உலர் வெந்தயக் கீரை) - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் (மல்லித்தூள்) - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
சன்னா மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பிரியாணி இலை – ஒன்று
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -  அரை கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய், வெண்ணெய் சேர்த்துக் காயவிட்டு பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் தனியாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், சன்னா மசாலாத்தூள், உப்பு, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்துச் சுருள வதக்கவும்.  பிறகு தக்காளி, வெங்காயம், குடமிளகாய் சேர்த்துக் கலந்து மூடி, அடுப்பை `சிம்’மில் வைத்து வேகவிடவும்.  இறுதியாக பனீர், கஸூரி மேத்தி, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து இறக்கவும்.

செட்டிநாடு ஸ்பெஷல்

10.jpg

ரங்கூன் புட்டு

தேவையானவை:

பாம்பே ரவை - ஒரு கப்
வெல்லம் (பொடித்தது) - ஒரு கப்
பாசிப்பருப்பு (வேக வைத்தது) - கால் கப்
நெய் - கால் கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - அரை கப்

8.jpg

செய்முறை:

எண்ணெய் - நெய் கலவையைக் கடாயில் காயவைத்து, முந்திரிப்பருப்பு சேர்த்து லேசாக வறுத்து அதனுடன் ரவையைச் சேர்க்கவும். ரவை வறுபட்டவுடன் அதனுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி வைக்கவும். 

இரண்டரை கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதில், வறுத்த ரவை, தேங்காய்த் துருவல் கலவையைச் சேர்த்து நன்கு கிளறி மிதமான தீயில் வேகவைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் வடிகட்டிய வெல்லம், வேகவைத்த பாசிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சேர்ந்து வரும்வரை கிளறி இறக்கவும். 

மசாலா பணியாரம்

தேவையானவை:

பச்சரிசி - அரை கப்
உளுந்து -  அரை கப்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் - கால் கப்
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுந்து (தாளிக்க) - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

9.jpg

செய்முறை:

அரிசியையும் உளுந்தையும் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு இரண்டையும் கிரைண்டரில் நன்கு மையாக அரைத்துக்கொள்ளவும் (பருக்கைகள் இருக்கக் கூடாது). அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். 

2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் கடாயில் காயவைத்து கடுகு, உளுந்து சேர்த்து சிவந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்து 30 விநாடிகள் வதக்கி அரைத்த மாவுடன் சேர்க்கவும். அதை நன்கு கலந்து காயவைத்த எண்ணெயில் சிறு சிறு உருண்டைகளாகப் போட்டு சற்றுச் சிவக்க பொரிந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

சாட்  ஸ்பெஷல்

12.jpg

சன்னா சாட்

தேவையானவை:

வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்
பிரெட் ஸ்லைஸ் - 6
வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
வறுத்த சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

11.jpg

அலங்கரிக்க:

பேரீச்சம்-புளி சட்னி - அரை கப்
(செய்முறை பக்கம் 16-ல் உள்ளது) 
க்ரீன் சட்னி - கால் கப்
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கடைந்த தயிர் - 3 டீஸ்பூன்
சர்க்கரை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - சிறிதளவு
சாட் மசாலாத்தூள் - சிறிதளவு
வறுத்த சீரகத்தூள் - சிறிதளவு
சேவ் - தேவையான அளவு

செய்முறை:

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் தண்ணீரை வடித்துவிட்டு குக்கரில் கொண்டைக்கடலையுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிட்டு இறக்கவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக்கவும். இதன்மீது சிறிதளவு வெண்ணெய் அல்லது நெய் தடவி டோஸ்ட் செய்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர், வேகவைத்த கடலை, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். பரிமாறும் கிண்ணத்தில் முதலில் சிறிதளவு சன்னா மசாலாவை ஊற்றவும். இதன்மீது சில பிரெட் துண்டுகளை அடுக்கவும். இதன் மேலே தயிர், சர்க்கரை, பேரீச்சம் சட்னி, க்ரீன் சட்னி, தக்காளி, சேவ் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். இறுதியாக சாட் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

க்ரீன் சட்னி

தேவையானவை:

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சைச் சாறு - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொத்தமல்லித்தழையை மண் போகக் கழுவவும். இதை மிக்ஸியில் போட்டு பச்சை மிளகாய், இஞ்சி, சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து சட்னியாக அரைத்து எடுக்கவும்.

சாட் வகைகள், பக்கோடா, சமோசா, பர்கர், டிக்கி, டோக்ளாவுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

பேரீச்சம் - புளி சட்னி

தேவையானவை:

கொட்டை நீக்கிய புளி - கால் கப்
கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம் - அரை கப்
துருவிய வெல்லம் - அரை கப்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
சூடான தண்ணீர் - 3 கப்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
சீரகம் - கால் டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
எள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன்

13.jpg

செய்முறை:

பேரீச்சம் பழத்தைச் சுடுநீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். இதனுடன் புளி சேர்த்து சிறு தீயில் பத்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் விழுதாக அரைத்து வடிகட்டவும். இதனுடன் வெல்லம், உப்பு சேர்த்துக் கரைக்கவும். மீண்டும் இந்தக் கலவையை 5 நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்கவிட்டு இறக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம் தாளிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, எள் சேர்த்து தாளித்து சட்னியுடன் கலக்கவும். பேரீச்சம் சட்னி தயார். இந்தச் சட்னியை தாளிக்காமல் ஆறவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து நீண்ட நாள்கள் பயன்படுத்தலாம்.

ஸ்பிரவுட் - ஃப்ரூட் சாட்

தேவையானவை:

விரும்பிய பழக்கலவை - ஒரு கப் (ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, கிவி, ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, வாழைப்பழம்)
முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - ஒரு கப்
சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சர்க்கரை - அரை டீஸ்பூன் (விரும்பினால்)
கறுப்பு உப்பு - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்

செய்முறை:

பச்சைப் பயறை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். அகலமான பாத்திரத்தில் பழக்கலவை, வெள்ளரித் துண்டுகள், பச்சைப் பயறு, எலுமிச்சைச் சாறு, சாட் மசாலாத்தூள், மிளகுத்தூள், சர்க்கரை, கறுப்பு உப்பு சேர்த்துக் கலக்கவும்.  மேலே ஃப்ரெஷ் க்ரீம் ஊற்றிப் பரிமாறவும்.

14.jpg

குறிப்பு:

1. பச்சைப் பயறை குக்கரில் வேகவைத்தும் பயன்படுத்தலாம். வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் சமையலில் பயன்படுத்தவும். மொறுமொறுப்பாக வேண்டுமானால் அரை வேக்காட்டில் எடுக்கவும்.
2. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், வேகவைத்த ஸ்வீட் கார்ன் சேர்க்கலாம்.
3. வேகவைத்த உருளைக்கிழங்கு அல்லது சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்க்கலாம்.  
4. நட்ஸ் வகைகள் சேர்க்கலாம்.
5. க்ரீன் சட்னி, ஸ்வீட் சட்னி, சேவ் சேர்க்கலாம்.

பாப்டி

தேவையானவை:

மைதா மாவு - அரை கப்
கோதுமை மாவு - அரை கப்
சீரகத்தூள், உப்பு  - தலா அரை டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் 
தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவுடன் கோதுமை மாவு, உப்பு, சீரகத்தூள் சேர்த்து, தண்ணீர்விட்டு கெட்டியாகச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். இந்த மாவை ஈரத்துணியால் மூடி பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு, மாவை சிறிய உருண்டைகளாக்கி திரட்டி, சூடான எண்ணெயில், மிதமான தீயில், பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

புதினா கொத்தமல்லி சட்னி 

தேவையானவை:

புதினா இலைகள் - ஒரு கப்
கொத்தமல்லித்தழை - அரை கப்
பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
கறுப்பு உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சட்னி செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.

 

15.jpg

பாப்டி சாட்

தேவையானவை:

பாப்டி - 24
கடைந்த தயிர் - 250 கிராம்
உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து, தோலுரித்து சிறிய துண்டுகளாக்கவும்)
வேகவைத்த பட்டாணி - 2 கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்
புதினா - கொத்தமல்லி சட்னி - அரை கப்
பேரீச்சம் - புளி சட்னி - அரை கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
வறுத்த சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
கறுப்பு உப்பு - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
சேவ் - கால் கப் (விரும்பினால்)

செய்முறை:

தட்டில் பாப்டிகளை உடைத்துப் போட்டுப் பரப்பவும். இதன் மீது உருளைக்கிழங்கு, பட்டாணி, வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தழை, தயிர் சேர்க்கவும். இதன் மேலே புதினா - கொத்தமல்லி சட்னி, பேரீச்சம் சட்னி ஊற்றவும். பிறகு கறுப்பு உப்பு, சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு, சாட் மசாலாத்தூள், சேவ் தூவி பரிமாறவும்.  

மில்லெட் ஸ்பெஷல்

18.jpg

வெஜ் சீஸ் பால்ஸ்

தேவையானவை:

சாமை அரிசி - ஒரு கப்
கடலை மாவு - அரை கப்
கேரட் துருவல் – அரை கப்
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப்
பீன்ஸ் – 4 (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
சீஸ் துருவல் - முக்கால் கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

16.jpg

செய்முறை:

குக்கரில் சாமை அரிசியுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மூடி 3 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மூடியைத் திறந்து, சாமை சாதத்தை நன்கு மசித்து அகலமான பாத்திரத்துக்கு மாற்றவும். இதனுடன் கேரட், பீன்ஸ், கோஸ், பச்சை மிளகாய், வெங்காயம், சீஸ் துருவல், கொத்தமல்லித்தழை, கடலை மாவு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். பிறகு, பிசைந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:

பிசைந்த கலவை நீர்க்க இருந்தால் மேலும் சிறிதளவு கடலை மாவு சேர்க்கலாம்.

வரகு உக்காரை

தேவையானவை:

வரகு, பாசிப்பருப்பு - தலா 100 கிராம்
வெல்லம் - 200 கிராம்
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்
முந்திரி - 10
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

17.jpg

செய்முறை:

வெறும் வாணலியில் வரகையும் பாசிப்பருப்பையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த ரவையுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி, வெந்த உக்காரையில் சேர்த்துக் கிளறவும். நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்க்கவும். உக்காரையுடன் வெல்லம் சேர்ந்து திரண்டு வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரியைச் சேர்த்து, ஏலக்காய் பொடி மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ஈவ்னிங் ஸ்பெஷல்

21.jpg

கவுனி அரிசி கீர்

தேவையானவை:

கவுனி அரிசி – கால் கப்
காய்ச்சாத பால் – ஒரு லிட்டர்
சர்க்கரை – முக்கால்  கப்
கண்டன்ஸ்டு மில்க் – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

19.jpg

செய்முறை:

கவுனி அரிசியைக் கழுவி, மூன்று கப் தண்ணீர் ஊற்றி ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, குக்கரில் அரிசியுடன் ஊறவைத்த தண்ணீரை ஊற்றி அரை மணி நேரம் வேகவைத்து இறக்கவும்.   ஆறிய பின் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி முக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சவும். இதனுடன் அரைத்த கவுனி சாதம், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து ஒரு கொதிவிடவும். இறுதியாக சர்க்கரை சேர்த்துக் கிளறி நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறலாம்.

பீட்ரூட் வடை

தேவையானவை:

பீட்ரூட் துருவல் - ஒன்றரை கப்
கடலைப்பருப்பு - ஒரு கப்
பொட்டுக்கடலை மாவு – கால் கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப்
காய்ந்த மிளகாய் – 8
சோம்பு - அரை டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – கால் கப்
நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

20.jpg

செய்முறை:

பீட்ரூட் துருவலுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டிச் சாறு எடுக்கவும். கடலைப்பருப்பை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை நன்கு வடித்துவிட்டு காய்ந்த மிளகாய், சோம்பு, தேவையான அளவு பீட்ரூட் சாறு ஆகியவற்றைச் சேர்த்து வடை மாவு பதத்துக்குக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை மாவு, வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துப் பிசையவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, தயாரித்த உருண்டைகளை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

ஜில் ஜில் ஸ்பெஷல்

22.jpg

கிரேப் ஸ்குவாஷ்

தேவையானவை:

கறுப்பு திராட்சை - அரை கிலோ  (இதிலிருந்து வரும் ஜூஸை அளவு எடுக்க வேண்டும்)
ஜூஸ் ஒரு கப் என்றால்  சர்க்கரை 2 கப்
தண்ணீர் - ஜூஸ் எந்த அளவோ அதே அளவு
சிட்ரிக் ஆஸிட் - கால் டீஸ்பூன்
கிரேப் அல்லது டோனோவின் எசன்ஸ் - அரை டீஸ்பூன்

செய்முறை:

திராட்சையைச் சுத்தம் செய்து லேசாக மசித்து (மத்தால்) அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு அதை ஜூஸரில் போட்டுச் சாறு எடுத்துக்கொள்ளவும். ஒரு கப் ஜூஸ் என்றால் 2 கப் சர்க்கரை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சர்க்கரையைக் கரைய விடவும். பின்பு அதனுடன் சிட்ரிக் ஆஸிட் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு கீழே இறக்கி ஒரு கப் ஜூஸை அதனுடன் சேர்க்கவும். ஆறியதும் எசன்ஸ் சேர்த்து கலந்து பாட்டில் வைக்கவும். தேவையானபோது கால் கப் சிரப்புடன் முக்கால் கப் தண்ணீர் சேர்த்துப் பருகவும்.

எலுமிச்சை ஸ்குவாஷ்

தேவையானவை:

எலுமிச்சை ஜூஸ் - ஒரு கப்
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - ஒரு கப்
சிட்ரிக் ஆஸிட், லெமன் எசன்ஸ் - தலா கால் டீஸ்பூன்
லெமன் யெல்லோ கலர் - சிறிது.

செய்முறை:

சர்க்கரையையும் தண்ணீரையும் ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பில் வைத்துக் கரைய விடவும். சர்க்கரை முழுவதுமாகக் கரைந்ததும் சிட்ரிக் ஆஸிட் சேர்த்து கொதிக்க விடவும். பின்பு இறக்கி ஆறவிட்டு கலர், எலுமிச்சை ஜூஸ், லெமன் எசன்ஸ் சேர்த்து பாட்டிலில் நிரப்பவும். தேவையான போது கால் கப் சிரப் முக்கால் கப் தண்ணீர் சேர்த்துப் பருகவும். இதை ஃப்ரிஜ்ஜில் வைத்திருந்தால் மூன்று மாதங்கள் வரை நன்றாக இருக்கும்.

23.jpg

ஸ்பெஷல் ரோஸ் மில்க்

தேவையானவை:

சர்க்கரை - ஒரு கப்
தண்ணீர் - அரை கப்
சிட்ரிக் ஆஸிட் - கால் டீஸ்பூன்
ரோஸ்மில்க் எசன்ஸ் - அரை டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்து அடுப்பில் வைத்து கரைய விடவும். சர்க்கரை கரைந்ததும் சிட்ரிக் ஆஸிட் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு இறக்கி ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கலந்து பாட்டிலில் நிரப்பி வைக்கவும். வேண்டும்போது பாலில் சேர்த்துக் கலந்து பருகவும்.

த்ரீ டேஸ்ட் ஸ்பெஷல்

26.jpg

பீடா தோசை

தேவையானவை:

தோசை மாவு – தேவையான அளவு
பீட்ரூட் – ஒன்று (தோல் சீவி, துருவவும்)
கேரட் – ஒன்று (தோல் சீவி, துருவவும்)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்)
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும்)
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
லவங்கம் – 2
ஏலக்காய் - 2
நறுக்கிய கொத்தமல்லித்தழை – கைப்பிடியளவு
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

24.jpg

செய்முறை:

குக்கரில் கேரட்டுடன் பீட்ரூட் சேர்த்து வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு லவங்கம், ஏலக்காய் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, வேகவைத்த கேரட், பீட்ரூட், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துச் சுருள வதக்கி இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவைத் தோசைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிடவும். தோசையின் நடுவே சிறிதளவு வதக்கிய மசாலா, சிறிதளவு வெண்ணெய் சேர்த்துப் பரப்பி, பாய் போல சுருட்டவும். பிறகு, ஒரு இன்ச் துண்டுகளாக நறுக்கிப் பரிமாறவும்.

வேப்பம்பூ சாதம்

தேவையானவை:

உதிர் உதிராக வடித்த சாதம் – ஒரு கப்
காய்ந்த வேப்பம்பூ –  ஒரு டீஸ்பூன்
மோர் மிளகாய் - 4
பூண்டு – 10 பல்
கறிவேப்பிலை – சிறிதளவு
நெய், உப்பு – தேவையான அளவு

25.jpg

செய்முறை:

வாணலியில் சிறிதளவு நெய்விட்டு உருக்கி, மோர் மிளகாய் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பவுடராகப் பொடிக்கவும். அதே வாணலியில் சிறிதளவு நெய்விட்டு வேப்பம்பூ சேர்த்து வறுத்து, பூண்டு, கறிவேப்பிலை, அரைத்த பொடி சேர்த்து வதக்கவும். இதனுடன் வடித்த சாதம், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

சைனீஸ் பேல்

தேவையானவை:

நூடுல்ஸ் – ஒரு பாக்கெட் (வேகவைக்கவும்)
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கேரட் – ஒன்று (தோல் சீவி, துருவவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
மாங்காய் – ஒன்று (துருவவும்)
குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய வெங்காயத்தாள் – கைப்பிடியளவு
தக்காளி சாஸ் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

27.jpg

செய்முறை:

வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு நூடுல்ஸை போட்டு மொறுமொறுவென பொரித்தெடுக்கவும். பெரிய பவுலில் கேரட் துருவல், மாங்காய், வெங்காயம், தக்காளி, குடமிளகாய், தக்காளி சாஸ், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் பொரித்த நூடுல்ஸ் சேர்த்து சட்டென்று கலக்கி, மேலே வெங்காயத்தாள் தூவி உடனே பரிமாறவும்.

குறிப்பு:

நூடுல்ஸை அதிகம் வேகவிட வேண்டாம்; தண்ணீரை வடியவிடவும். இல்லையென்றால், எண்ணெய் அதிகம் குடிக்கும். மொறுமொறுப்பாக அதிக நேரமாகும்.

டெசர்ட் ஸ்பெஷல்

29.jpg

மாம்பழ பிர்னி

தேவையானவை:

காய்ச்சாத பால் - ஒரு லிட்டர்
பச்சரிசி - 5 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - அரை கப்
கண்டன்ஸ்டு மில்க் - கால் கப்
மாம்பழக் கூழ் - அரை கப்
தோல் சீவி, பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் - அரை கப்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
ரோஸ் வாட்டர், சாரைப்பருப்பு, உடைத்த பிஸ்தா, முந்திரி, நெய், ஏலக்காய்த்தூள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

28.jpg

செய்முறை:

அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, நைஸாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு முந்திரி, பிஸ்தாவைத் தனித்தனியாகப் போட்டு வறுத்து எடுத்து வைக்கவும். அதே பாத்திரத்தில் பாலை ஊற்றிச் சூடாக்கி, அடுப்பைச் சிறு தீயில் வைத்து, நடு நடுவே கிளறிக் காய்ச்சவும். பால் பாதியாகச் சுண்டிய பிறகு அரைத்த அரிசி விழுதைப் போட்டு கைவிடாமல் கிளறவும் (சரியாகக் கிளறாவிட்டால் கட்டி கட்டியாக ஆகிவிடும்). அரிசி நன்கு வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதனுடன் ரோஸ் வாட்டர் விட்டு மூடிவைக்கவும். பால் ஆறியதும் மாம்பழக்கூழ், மாம்பழத் துண்டுகள் சேர்த்துக் கலக்கவும். மேலே முந்திரி, பிஸ்தா, சாரைப்பருப்பு, குங்குமப்பூ தூவி அலங்கரிக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும். 

குறிப்பு:

அரிசிக்குப் பதிலாக, ஒரு லிட்டர் பாலுக்கு 3 டேபிள்ஸ்பூன் அரிசி மாவைக் குளிர்ந்த பால் அல்லது தண்ணீரில் கரைத்தும் சேர்க்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி பிர்னி

தேவையானவை:

காய்ச்சாத பால் - ஒரு லிட்டர்
வறுத்த ரவை - 4 டேபிள்ஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
உடைத்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
உலர் திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
வறுத்த சாரைப்பருப்பு, பிஸ்தா துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - ஒரு கப்
விரும்பிய பழக்கூழ் - அரை கப்
பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி - அரை கப்

நெய் – சிறிதளவு

30.jpg

செய்முறை:

முந்திரியைத் தண்ணீரில் ஊறவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு திராட்சை சேர்த்து வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். அடிகனமான வாணலியில் பாலை ஊற்றிச் சூடாக்கி, அடுப்பைச் சிறு தீயில் வைத்து,  நடு நடுவே கிளறி சுண்டக் காய்ச்சவும். இதனுடன் ரவையைச் சேர்த்துக் கிளறி வேகவிடவும். பிறகு சர்க்கரை, அரைத்த முந்திரி விழுது, ஜாதிக்காய்த்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். ஆறிய பிறகு பழக்கூழ், ஸ்ட்ராபெர்ரி சேர்த்துக் கலக்கவும். மேலே திராட்சை, பிஸ்தா, சாரைப்பருப்பு, குங்குமப்பூ  தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

ஹெல்த் ஸ்பெஷல்

32.jpg

ஹெல்த் மில்க் மிக்ஸ்

தேவையானவை:

பனங்கற்கண்டுத்தூள் - 
கால் கிலோ
பாதாம், முந்திரி, பிஸ்தா - 
தலா 50 கிராம்
கறுப்பு உளுந்து - 50 கிராம்
ஏலக்காய் -  5
மிளகு - 10
சுக்குத்தூள் - 2 டீஸ்பூன்

31.jpg

செய்முறை:

கறுப்பு உளுந்து, பாதாம், முந்திரி, பிஸ்தா, மிளகு, ஏலக்காய் ஆகியவற்றை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறியதும் இதனுடன் பனங்கற்கண்டுத்தூள், சுக்குத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்துச் சலிக்கவும். காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைக்கவும்.

பயன்படுத்தும் முறை:

ஒரு கப் காய்ச்சிய பாலுடன் தேவையான அளவு இந்த மிக்ஸைச் சேர்த்துக் கலந்து பருகலாம். இது, புரோட்டீன் சத்து நிறைந்தது.

டேட்ஸ் சாக்லேட்

தேவையானவை:

பேரீச்சம் பழம் - ஒரு கப்
சாக்கோ சிப்ஸ் - அரை கப் 
 (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்)
முந்திரி - கால் கப்
பாதாம் - கால் கப்

33.jpg

செய்முறை:

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் முதலில் சாக்கோ சிப்ஸைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். இதனுடன் பேரீச்சம் துண்டுகள் சேர்த்து அரைக்கவும். இறுதியாக முந்திரி, பாதாம் சேர்த்து அரைத்து எடுக்கவும். (பாதாம், முந்திரி சற்று துகள்களாக ஆங்காங்கே தெரிய வேண்டும்). அரைத்த கலவையை விரும்பிய மோல்டில் நிரப்பி எடுக்கவும். இந்த சாக்லேட்டுகளை அப்படியே பரிமாறலாம் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தும் பரிமாறலாம்.  

ஸ்டார் ஹோட்டல் ஸ்பெஷல்

34.jpg

தேங்காய்ப்பால் சாதம் 

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - அரை கிலோ 
முற்றிய தேங்காய்  - அரை மூடி 
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - ஒன்று
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - 4
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - சிறிதளவு
லெமன் கிராஸ் - 2 குச்சி
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
நெய்யில் வறுத்த முந்திரி - சிறிதளவு 
உப்பு - தேவையான அளவு

35.jpg

செய்முறை:

அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். முற்றிய தேங்காயைத் தண்ணீர்விட்டு அரைத்து 4 டம்ளர் பால் எடுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு  பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கிக் கொள்ளவும். அதில் தேங்காய்ப்பால்விட்டு மஞ்சள்தூள் சேர்க்கவும். நன்றாகக் கொதி வந்த பிறகு பாஸ்மதி அரிசியைப் போட்டு அதனுடன் உப்பு, லெமன் கிராஸ் சேர்த்துக் கிளறிவிடவும். குக்கரை மூடி, வெயிட் போடாமல், மிதமான தீயில் 15 - 20  நிமிடங்கள் வேகவிடவும். பிறகு குக்கரைத் திறந்து, நெய்யில் வறுத்த முந்திரி, நெய் சேர்த்து நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி சுடச்சுட பரிமாறவும். 

ஃபிரெஷ் ராஜ்மா குருமா

தேவையானவை:

ஃபிரெஷ் ராஜ்மா - கால் கிலோ (வேகவைக்கவும்) 
தேங்காய் - அரை மூடி
வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்) 
தக்காளி - ஒன்று (நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 4
முந்திரி - தேவையான அளவு
பெருஞ்சீரகம் - தேவையான அளவு
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - ஒன்று
ஏலக்காய் - 4
இஞ்சி - பூண்டு விழுது - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

36.jpg

செய்முறை:

தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், பெருஞ்சீரகம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு லவங்கம், பட்டை, ஏலக்காய் தாளித்து பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, தேங்காய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறி... வெங்காயம், தக்காளி, சேர்த்து வதக்கவும். பிறகு அதில் ராஜ்மாவைப் போட்டுக் கிளறி இறக்கினால் சுவையான ஃபிரெஷ் ராஜ்மா குருமா தயார். 

மலாய் ஜிகர்தண்டா

தேவையானவை:

கெட்டியான பால் - அரை லிட்டர்
பாதாம் பிசின் - 25 கிராம்
பனங்கற்கண்டு - 50 கிராம்
மில்க்மெய்டு - 4 டீஸ்பூன்
பாதாம் பவுடர் - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் - சிறிதளவு

37.jpg

செய்முறை:

பாலை முதல் நாளே காய்ச்சி, அதில் பனங்கற்கண்டு போட்டு வடிகட்டி ஃப்ரிட்ஜில் வைக்கவும். அதேபோல, பாதாம் பிசினையும் முதல் நாளே தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் கெட்டியான பாலில் பாதாம் பிசின் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும். அதில் மில்க்மெய்டு, பாதாம் பவுடர் சேர்த்துக் கலக்கி ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறும்போது இதை டம்ளரில் ஊற்றி, மேலே நறுக்கிய பாதாம், முந்திரி தூவி பரிமாறவும்.

பிரெட் ஸ்பெஷல்

40.jpg

பிரெட் அல்வா

தேவையானவை:

பிரெட் - ஒரு பாக்கெட்
சர்க்கரை - 3 கப்
முந்திரி, திராட்சை - ஒரு கப்
நெய், எண்ணெய், பால், ஏலக்காய் - தேவையான அளவு

38.jpg

செய்முறை:

பிரெட்டை எண்ணெயில் பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு, ஒரு கடாயில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு, அதில் வறுத்த பிரெட் சேர்க்கவும். அதில் பிரெட் நன்கு வெந்தவுடன், ஏலக்காய் மற்றும் நெய் சேர்க்கவும். அல்வா கடாயில் ஒட்டாத அளவுக்கு நெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவும். இறுதியாக முந்திரி மற்றும் திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.

வெஜிடெபிள் பிரெட் பஜ்ஜி

தேவையானவை:

பிரெட் - 5 துண்டுகள்
காய்கறிகள் கலவை - ஒரு கப்
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்
உப்பு, பெருங்காயம், எண்ணெய் - தேவையான அளவு

39.jpg

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூள் எடுக்கவும். அதில் தண்ணீர் ஊற்றி மாவு பதத்துக்குக் கலக்கவும். அதில் காய்கறிகள் கலவை சேர்த்து, பிரெட் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். 

கர்நாடகா ஸ்பெஷல்

42.jpg

மதுர் வடை

தேவையானவை:

ரவை, மைதா, அரிசி மாவு - தலா 100 கிராம்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
சீரகம் - அரை டீஸ்பூன்
வெள்ளை எள் (வறுக்காதது) - ஒரு டீஸ்பூன்
துருவிய கொப்பரை - 2 டீஸ்பூன்
ஒன்றிரண்டாக நசுக்கிய வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
சூடாக்கிய எண்ணெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் (பொரிக்க) - அரை லிட்டர்
உப்பு - ஒன்றரை டீஸ்பூன்

41.jpg

செய்முறை:

ரவை, மைதா, அரிசி மாவு ஆகியவற்றை தனித்தனியே சிவக்க வறுத்துக்கொள்ளவும். இவற்றுடன் உப்பு, சோடா உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், எள், வேர்க்கடலை, வெங்காயம், துருவிய கொப்பரை, சூடான எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு நீர்விட்டு, சப்பாத்தி மாவு போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவிடவும். மாவை பெரிய எலுமிச்சை அளவு எடுத்து உருட்டி அரை இன்ச் கனத்தில் தட்டி, சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் சிவக்க பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:

உள்ளங்கையில் / பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி தட்டிப் போட்டால், சுலபமாக எடுத்து வடை செய்ய உதவியாக இருக்கும்.

  • தொடங்கியவர்

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி

 

புரட்டாசி மாதம் பிறக்க இருக்கிறது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மற்றும் நவராத்திரி நாள்களில் விரதம் இருக்கும் பலர் தங்கள் உணவில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் சமைப்பதுண்டு. அப்படிப்பட்ட விசேஷ நாள்களுக்கான சத்தான ரெசிப்பிகளை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹேமா சதீஷ்.

2.jpg

வத்தக்குழம்பு

தேவையானவை: மணத்தக்காளி வற்றல் - 5 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, வெந்தயம் - கால் டீஸ்பூன், மல்லி (தனியா), கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல், மிளகாய்த்தூள் - தலா 3 டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சை அளவு, கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

3.jpg

செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், மல்லி (தனியா), கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள், வெந்தயம் சேர்த்து வறுக்கவும். ஆறிய பின் சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, மணத்தக்காளி வற்றல் சேர்த்துக் கிளறவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: நல்லெண்ணெய் சேர்த்தால் குழம்பு சுவையாக இருக்கும்.

கருணைக்கிழங்கு வறுவல்

தேவையானவை: கருணைக்கிழங்கு - கால் கிலோ, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள் - தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

4.jpg

செய்முறை: கருணைக்கிழங்கை தோல் சீவி, பெரிய சதுர துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், தேவையான அளவு நீர் சேர்த்து வேகவைத்து நீரை வடியவிடவும்.  கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் குழைக்கவும். இதில்  கருணைக்கிழங்கை சேர்த்துப் பிசிறி வைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, கருணைக்கிழங்குச் துண்டுகளை அடுக்கி, சுற்றிலும் எண்ணெய்விட்டு வறுத்து எடுக்கவும்.

ஈஸி சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - கால் கிலோ, தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

5.jpg

செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். துவரம்பருப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து வேகவைத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து புளிக்கரைசல், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன்  வேகவைத்த பருப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.  கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

தேங்காய் இட்லிப் பொடி

தேவையானவை: தேங்காய் - ஒரு மூடி (துருவவும்), கடலைப்பருப்பு, உளுந்து - தலா 50 கிராம், காய்ந்த மிளகாய் – 10, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.

6.jpg

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்ற பொடி இது. நல்லெண்ணெய் சேர்த்து உபயோகிக்கலாம்.

பொரிச்ச கூட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு - கால் கப், புடலங்காய் - கால் கிலோ (விதை, நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும்), உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, கடுகு - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன். 

7.jpg

செய்முறை: பாசிப்பருப்பை வேகவைத்து எடுக்கவும். வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியபின் தேங்காய்த் துருவல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் புடலங்காய், மிளகாய்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர்விட்டு, பருப்பு சேர்த்து வேகவிடவும். பிறகு, அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதிவிடவும். மேலே தேங்காய் எண்ணெய்விட்டு இறக்கவும்.

அரிசி இட்லிப் பொடி

தேவையானவை: புழுங்கல் அரிசி, உளுந்து - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் -  5, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

8.jpg

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.
இதை இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

வேப்பம்பூ ரசம்

தேவையானவை: வேப்பம்பூ - 2 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மல்லி (தனியா), துவரம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 3, புளி - எலுமிச்சை அளவு, கடுகு - சிறிதளவு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

9.jpg

செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும். வெறும் வாணலியில் மிளகு, சீரகம், மல்லி (தனியா), துவரம்பருப்பு, பெருங்காயத்தூள், 2 காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, காய்ந்த மிளகாய் ஒன்று, வேப்பம்பூ சேர்த்து வறுக்கவும். இதனுடன் புளிக்கரைசல், உப்பு, அரைத்த பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

வேப்பம்பூ துவையல்

தேவையானவை: வேப்பம்பூ - ஒரு கைப்பிடியளவு, கடலைப் பருப்பு - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, எண்ணெய், கடுகு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

10.jpg

செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருள்களை (புளி, கடுகு தவிர) வெறும் வாணலியில் தனித்தனியே வறுக்கவும். ஆறிய பின் புளி சேர்த்து தண்ணீர்விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.இத்துடன் சூடான எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

முருங்கைக்கீரை சூப்

தேவையானவை: முருங்கைக்கீரை - கைப்பிடியளவு, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கொள்ளு - ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

111.jpg

செய்முறை:  சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைக்கவும். வெறும் வாணலியில் மிளகு, சீரகம், கொள்ளு, முருங்கைக்கீரை சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அரைத்த விழுது, தேவையான தண்ணீர், சோள மாவுக் கரைசல், உப்பு ஆகியவற்றை பாத்திரத்தில் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, வடிகட்டி சூடாகப் பரிமாறவும்.

அவல் கொழுக்கட்டை

தேவையானவை: அவல் - ஒரு கப், வெல்லம் - கால் கப், ஏலக்காய் - 2 (தட்டவும்), தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்.

12.jpg

செய்முறை: அவலை மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டவும். இதனுடன் அரைத்த அவல், ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். ஆறிய பின் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும் (இட்லி பானையில் / இட்லி குக்கரில் வேகவைக்கலாம்)

கேரட் கீர்

தேவையானவை: கேரட்  - 2 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்), காய்ச்சாத பால் - கால் லிட்டர், ஏலக்காய் - 3 (தட்டவும்), முந்திரி - 6, சர்க்கரை - அரை கப்.

13.jpg

செய்முறை: முந்திரியைச் சுடுநீரில் சிறிது நேரம் ஊறவிடவும்.  குக்கரில் கேரட்டுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.  ஆறியபின் கேரட்டுடன் முந்திரி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். இதனுடன் அரைத்த விழுது, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். வறுத்த முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.

அவல் சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை: அவல் - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், பொடித்த வெல்லம் - அரை கப்,  ஏலக்காய் - 2 (தட்டவும்), முந்திரி, திராட்சை - தலா 2 டீஸ்பூன், நெய் - தேவையான அளவு.

14.jpg

செய்முறை:  வாணலியில் நெய்விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அவலை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். பாசிப்பருப்பை குக்கரில் வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். பிறகு, வெல்லக் கரைசலுடன் வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். இதனுடன் உடைத்த அவல், ஏலக்காய் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

கீரை தோசை

தேவையானவை: பாலக்கீரை - அரை கட்டு, தோல் சீவிய இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, தோசை மாவு - 2 கப், எண்ணெய் – தேவையான அளவு.

15.jpg

செய்முறை: பாலக்கீரையின் நரம்பு நீக்கி கழுவி நறுக்கவும். இதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். தோசை மாவுடன் அரைத்த விழுது சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: தோசை மாவிலேயே உப்பு இருப்பதால், உப்பு சேர்க்கத் தேவையில்லை. விருப்பப் படுபவர்கள், மிகவும் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.

கார்ன்  சுண்டல்

தேவையானவை:  கார்ன் (முழு சோளம்) - ஒன்று, காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

161.jpg

செய்முறை: கார்னை உப்பு சேர்த்து வேகவைத்து உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இதனுடன் உதிர்த்த கார்ன் முத்துகளைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கடலை மாவு -  கீரை சப்பாத்தி

தேவையானவை: கடலை மாவு - 300 கிராம், கோதுமை மாவு - 100 கிராம், ஏதாவது ஒரு வகை கீரை - ஒரு சிறிய கட்டு (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கவும்), தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு -  தேவையான அளவு.

17.jpg

செய்முறை: கடலை மாவுடன் கோதுமை மாவு, கீரை, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு, மாவை சிறிய உருண்டகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டவும். தோசைக்கல்லை க்காயவைத்து திரட்டிய சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

வேர்க்கடலைப் பால் பாயசம்

தேவையானவை: பாசிப் பருப்பு, வெல்லம் -  தலா 150 கிராம், வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்.

18.jpg

செய்முறை: வெறும் வாணலியில் பாசிப்பருப்பை வறுத்துக் குழைவாக வேகவிடவும். மிக்ஸியில் வேர்க்கடலையுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வெந்த பருப்புடன் சேர்த்துச் சூடாக்கவும். இதனுடன் பொடித்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும்.

கோதுமை ரவை - காய்கறி சாதம்

தேவையானவை: கோதுமை ரவை – 500 கிராம், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு கலவை - 100 கிராம், கேரட், பீன்ஸ் - தலா 150 கிராம், கீரை - சிறிய கட்டு (சுத்தம் செய்து நறுக்கவும்), எலுமிச்சைப் பழம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

19.jpg

செய்முறை: பருப்பு வகைகளுடன் கேரட், பீன்ஸ், கீரை, பச்சை மிளகாய் சேர்த்து வேக வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து, கோதுமை ரவைச் சேர்த்து வேகவைக்கவும். இதனுடன் வேகவைத்த பருப்பு - காய்கறி கலவை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.  இதில் எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும். இத்துடன் சூடான எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்துப்
பரிமாறவும்.

மாவிளக்கு

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், வெல்லம் - கால் கப், ஏலக்காய்  - 3, உப்பு - ஒரு சிட்டிகை.

20.jpg

செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, களைந்து நிழலில் உலர்த்தவும். லேசாக ஈரம் இருக்கும்போது மிக்ஸியில் மாவாக அரைத்து சலிக்கவும். இதனுடன் வெல்லம், ஏலக்காய், உப்பு சேர்த்து மிக்ஸியில் மீண்டும் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும்.

கொத்தமல்லி சாதம்

தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - ஒரு கப், கொத்தமல்லித்தழை  - 2 கைப்பிடி அளவு, தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, நெய் - சிறிதளவு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், முந்திரி - 4, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

21.jpg

செய்முறை: கொத்தமல்லித்தழையுடன் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு கடலைப்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து எடுக்கவும். பிறகு, அதே வாணலியில் கடுகு சேர்த்து தாளித்து அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் சாதம் சேர்த்து கலக்கவும். மேலே வறுத்த கடலைப்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

கீரை - கடலைப்பருப்பு கட்லெட்

தேவையானவை: கடலைப்பருப்பு - 250 கிராம், ஏதாவது ஒருவகை கீரை - ஒரு கட்டு (சுத்தம் செய்து, நறுக்கவும்), பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கவும்), பிரெட் ஸ்லைஸ் -  5 ( மிக்ஸியில் பொடிக்கவும்), தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

22.jpg

செய்முறை: கடலைப்பருப்புடன் கீரை சேர்த்து வேகவைத்து மசிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, அரைத்த பிரெட் பொடி, உப்பு சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். இந்தக் கலவையைச் சிறிய உருண்டைகளாக்கி கட்லெட் வடிவில் தட்டவும். தோசைக்கல்லை காயவைத்து, கட்லெட்டுகளை அடுக்கி, சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் பொன்னிறமாகச் சுட்டு எடுக்கவும்.

புளியோதரை பொடி சாதம்

தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - ஒரு கப், மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, புளி - எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

23.jpg

வறுத்துப் பொடிக்க: மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எள் - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.

தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு, வேர்க்கடலை -  தலா 2 டீஸ்பூன்.

செய்முறை: புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும். இதில் புளிக்கரைசலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். கலவை கெட்டியான பிறகு சாதம், அரைத்த பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

எள்ளு சாதம்

தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - ஒரு கப், எள் - 5 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, மிளகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

24.jpg

செய்முறை: எள்ளை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, களைந்து காயவைக்கவும். காய்ந்த எள்ளை வெறும் வாணலியில் போட்டு வெடிக்கவிட்டு எடுக்கவும். பிறகு, அதே வாணலியில்  காய்ந்த மிளகாய், மிளகு, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு, எள்ளுடன் வறுத்த பொருள்களைச் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.  சாதத்துடன் அரைத்த பொடி சேர்த்துக் கிளறினால் எள்ளு சாதம் ரெடி.

வெஜ் சப்ஜி

தேவையானவை: கேரட், குடமிளகாய் - தலா ஒன்று, பீன்ஸ் - 100 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, நெய், உப்பு – தேவையான அளவு.

25.jpg

வறுத்துப் பொடிக்க: தனியா (மல்லி), கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, வெந்தயம் - கால் டீஸ்பூன்.

செய்முறை: காய்கறிகளைக் கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். குக்கரில் காய்கறிகளுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிட்டு இறக்கவும். வாணலியில் நெய்விட்டு சீரகம் தாளிக்கவும். இதனுடன் வேகவைத்த காய்கறிகளைச் சேர்த்துக் கிளறவும்.

பிறகு அரைத்த பொடி, கறிவேப்பிலை சேர்த்து மேலும் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

வாழைக்காய் - குடமிளகாய் பொரியல்

தேவையானவை: வாழைக்காய், குடமிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள், சோம்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

26.jpg

வறுத்துப் பொடிக்க: மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், வேர்க்கடலை - 3 டீஸ்பூன்.

செய்முறை: வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு தாளிக்கவும். இதனுடன் தக்காளி, வாழைக்காய், குடமிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். இறுதியாக கறிவேப்பிலை, அரைத்த பொடி தூவிக் கிளறி இறக்கவும்.

மரவள்ளிக்கிழங்கு வடை

தேவையானவை: மரவள்ளிக் கிழங்கு - கால் கிலோ, பச்சை மிளகாய் - 2, ஊறவைத்த கடலைப் பருப்பு  - 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

01.jpg

செய்முறை: மரவள்ளிக்கிழங்கின் தோலைச் சீவி சிறிய துண்டுகளாக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், பருப்பு, உப்பு சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு அரைத்த கலவையைச் சிறிய வடைகளாகத் தட்டிப்போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

பச்சைப் பயறு குழம்பு

தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு சிட்டிகை, சீரகம் - கால் டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

27.jpg

செய்முறை: பச்சைப் பயறை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். குக்கரில் பச்சைப் பயறைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து மிக்ஸியில் போட்டு, தேவையான தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு தாளிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த பச்சைப் பயறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதிவிடவும். இறுதியாக, அரைத்த விழுது சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

வெள்ளரிக்காய் ஸ்டூ

தேவையானவை: வெள்ளரிக்காய் – ஒன்று (சிறிய துண்டுகளாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), தேங்காய்த் துருவல் - அரை கப், தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

28.jpg

செய்முறை: தேங்காய்த் துருவலுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து பச்சை மிளகாய், அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறி, ஒரு கொதிவிட்டு இறக்கவும். இதனுடன் வெள்ளரித் துண்டுகள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

கோதுமை அப்பம்

தேவையானவை:  கோதுமை மாவு - ஒரு கப், வெல்லம் - அரை கப், ஏலக்காய்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் – 5 டீஸ்பூன்.

29.jpg

செய்முறை: வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும். இதனுடன் கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக்   கரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைச் சிறிய குழிக்கரண்டியால் எடுத்து ஊற்றி பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

பச்சைப் பயறு - அரிசி தோசை

தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், பச்சரிசி - அரை கப், பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

30.jpg

செய்முறை: பச்சைப் பயறு, அரிசியை தனித் தனியாக ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் களைந்து பச்சைப் பயறு, அரிசி, பச்சை மிளகாயை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர்விட்டு மாவாக அரைத்து எடுக்கவும். இதனுடன் உப்பு சேர்த்துக் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

பிரெட் உப்புமா

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 5, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

31.jpg

செய்முறை: தோசைக்கல்லைக் காயவைத்து, பிரெட் ஸ்லைஸ்களைப் போட்டு சுற்றிலும் எண்ணெய்விட்டு டோஸ்ட் செய்து எடுக்கவும். பிறகு, சிறிய துண்டுகளாக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வதக்கவும். கடைசியாக பிரெட் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

  • தொடங்கியவர்

தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்

இட்லி, சப்பாத்தி, தோசை, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த தக்காளி ஊறுகாய் சூப்பராக இருக்கும். இந்த தக்காளி ஊறுகாய் பத்து நாட்கள் வரை கெட்டுப்போகாது.

 
 
தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்
 
தேவையான பொருட்கள் :

தக்காளி - 1 கிலோ
காய்ந்த மிளகாய் - 2
தனி மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து.

201709071523397993_1_Tomatopickle._L_sty

செய்முறை :

வெந்தயத்தை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியுடன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு பெருங்காயம் போட்டு நன்றாக வதக்குங்கள்.

தக்காளியில் உள்ள தண்ணீர் எல்லாம் நன்றாக வற்றியதும் தக்காளி நன்றாக சுருண்டு திக்காகி எண்ணெய் மிதந்து வரும் சமயத்தில் பொடித்து வைத்துள்ள வெந்தயத்தூளை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பிலிருந்து இறக்குங்கள்.

சூப்பரான தக்காளி ஊறுகாய் ரெடி.

இந்தக் தக்காளி ஊறுகாய் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
  • தொடங்கியவர்

பேரீச்சம்பழ ரெசிப்பி

 

 

p75a.jpg

p75h.jpg

`பேரீச்சம்பழம் ரத்தசோகையைப் போக்குவதற்கும், முடி உதிர்வைத் தடுப்பதற்கும் உதவக்கூடியது. உடலுக்கு உறுதி அளிக்கக்கூடிய ரிபோஃப்ளாவின், நியாசின், ஃபோலேட், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே போன்ற அனைத்துச் சத்துக்களும்கொண்ட ஒரே பழம் பேரீச்சம்பழம்தான். சத்தான பேரீச்சம்பழத்தில் செய்யக்கூடிய சுவையான ரெசிப்பிகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் மீனா சுதிர்.

டேட்ஸ் க்ரன்சீஸ்

தேவையானவை:

பேரீச்சம்பழம் – ஒரு கப்
கோதுமை மாவு – அரை கப்
வெண்ணெய் – கால் கப்
வறுத்த எள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

p75b.jpg

செய்முறை:

கோதுமை மாவுடன் உருக்கிய வெண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பேரீச்சம்பழக் கொட்டைகளை நீக்கி சிறிய துண்டுகளாக்கி மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதனுடன் எள்ளைச் சேர்த்து தனியாக எடுத்து வைக்கவும். மாவை இரண்டு பாகங்களாகப் பிரித்து மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும்.  ஒரு சப்பாத்தியின் மீது அரைத்த பேரீச்சம்பழ விழுதை தடவி, அதன்மீது இரண்டாவது சப்பாத்தியை வைத்து மூடி சுற்றிலும் ஓரங்களை ஒட்டவும். பிறகு குக்கீஸ் கட்டரால் நீளவாக்கில் ரிப்பன் போல நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும். வாணலியில்  எண்ணெயைக் காயவிட்டு இந்த ரிப்பன்களைப் போட்டுப் பொன்னிறமாக பொரித்தெடுத்து சதுரத் துண்டுகளாக்கவும். சூடாக இருக்கும்போதே வெனிலா ஐஸ்க்ரீமுடன் பரிமாறவும்.

டேட்ஸ் நட்ஸ் ரோல்

தேவையானவை:

பேரீச்சம்பழம் – 30
பொடியாக நறுக்கிய பாதாம் – ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பிஸ்தா – ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வால்நட் – ஒரு டேபிள்ஸ்பூன்
கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன்

p75c.jpg

செய்முறை:

வெறும் வாணலியில் கசகசாவைச் சேர்த்து வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு மிக்ஸியில் சேர்த்து தண்ணீர்விடாமல் விழுதாக அரைத்து எடுக்கவும். இதனுடன் பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் துண்டுகள் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, இந்தக் கலவையை சிலிண்டர் வடிவில் ரோல்களாக உருட்டி, கசகசாவில் புரட்டி எடுக்கவும். ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்துத் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

டேட்ஸ் அண்ட் வால்நட் லோஃப்

தேவையானவை:

பேரீச்சம்பழம் – முக்கால் கப்
கோதுமை மாவு – ஒரு கப்
வால்நட்ஸ் – முக்கால் கப் (பொடியாக நறுக்கவும்)
உலர்திராட்சை – கால் கப்
பால் – ஒன்றரை கப் (காய்ச்சி ஆறவைத்தது)
எண்ணெய் – அரை கப்
பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 2 டீஸ்பூன்
வெண்ணெய் - சிறிதளவு

p75d.jpg

செய்முறை:

அவனை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு ப்ரீ ஹீட் செய்யவும். பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கிப் பொடியாக நறுக்கவும்.

சிறிதளவு பேரீச்சத் துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும். சிறிதளவு வால்நட்  துண்டுகளையும், உலர்திராட்சையையும் தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள பேரீச்சத் துண்டுகளை அரை கப் பாலில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். 

பிறகு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மீதமுள்ள பால், எண்ணெய், பேரீச்சம் விழுது சேர்த்துக் கலக்கவும்.

இதனுடன் கோதுமை மாவு கலவையைப் பொறுமையாகக் சேர்த்துக் கலந்து  பேரீச்சம்பழத் துண்டுகள், நறுக்கிய வால்நட்ஸ், உலர்திராட்சையையும் சேர்க்கவும். வெண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில், இந்தக் கலவையை ஊற்றி, தனியாக எடுத்துவைத்த பேரீச்சத் துண்டுகள்,  நறுக்கிய வால்நட்ஸ், உலர்திராட்சையை மேலே தூவவும். `அவனில்’ ட்ரேயை வைத்து, 40 – 45 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுத்துப் பரிமாறவும்.

டேட்ஸ் அல்வா

தேவையானவை:

பேரீச்சம்பழம் – ஒரு கப் (கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும்)
சர்க்கரை – அரை கப்
பால் – ஒரு கப் (காய்ச்சி ஆறவைத்தது)
சர்க்கரை இல்லாத கோவா – அரை கப்
பொடியாக நறுக்கிய முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்
உலர்திராட்சை – ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்

p75f.jpg

செய்முறை:

பாலுடன் பேரீச்சம்பழத் துண்டுகள் சேர்த்து குழைய வேகவிட்டு இறக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

அதே பாத்திரத்தில் அரைத்த விழுது, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியாகி வரும்போது கோவா, மீதமுள்ள நெய்விட்டு கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். மேலே முந்திரி, திராட்சை கொண்டு அலங்கரித்துச் சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறவும்.

டேட்ஸ் எனர்ஜி பார்

தேவையானவை:

பேரீச்சம்பழம் – ஒரு கப்
பாதாம் – ஒரு டேபிள்ஸ்பூன்
வால்நட் – ஒரு டேபிள்ஸ்பூன்
முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்
சாக்கோ சிப்ஸ் – கால் கப்
ம்யூஸ்லி – முக்கால் கப்
நெய், வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்
தேன் – 2 டேபிள்ஸ்பூன்

p75g.jpg

செய்முறை:

பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும். வெறும் வாணலியில் பாதாம், முந்திரி, வால்நட் சேர்த்து வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அதே வாணலியில் நெய்விட்டு பேரீச்சத் துண்டுகள் சேர்த்து மூன்று நிமிடங்கள் வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். இதனுடன் பொடித்த நட்ஸ் சேர்த்துக் கலக்கவும். சாக்கோ சிப்ஸை பவுலில் போட்டு மைக்ரோவேவ் அவனில் சிறிது நேரம் வைத்து கரையவிட்டு எடுக்கவும். இதனுடன் பேரீச்சம் - நட்ஸ் கலவை, ம்யூஸ்லி, தேன் சேர்த்துக் கலக்கவும். வெண்ணெய் தடவிய ட்ரேயில் இந்தக் கலவையைப் பரவலாக ஊற்றிச் சமப்படுத்தி ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும். பிறகு, வெளியே எடுத்துத் துண்டுகளாக்கி காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவையானபோது சுவைக்கவும்.

  • தொடங்கியவர்

குழந்தைகளுக்கு விருப்பமான ரொட்டி ஜாலா

சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு வித்தியாசமாக முறையில் செய்து குடித்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று ரொட்டி ஜாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
குழந்தைகளுக்கு விருப்பமான ரொட்டி ஜாலா
 
தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 2 கப்,
முட்டை - ஒன்று (முட்டை தவிர்த்தும் செய்யலாம்),
தேங்காய்ப்பால் - அரை கப்,
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,
நெய் - தேவைக் கேற்ப,
உப்பு - ஒன்றரை டீஸ்பூன்.

201709091520182019_1_rotijala._L_styvpf.

செய்முறை :

முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.

மிக்சியில் மைதா மாவை போட்டு அதனுடன் தேங்காய் பால் மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு, அடித்து வைத்துள்ள முட்டை சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு அடிக்கவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதை வடிகட்டி கொள்ளவும்.

மாவு கெட்டியாகவும் இல்லாமல் தண்ணீராகவும் இல்லாமல் இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும்.

சிறிய தண்ணீர் பாட்டிலின் மூடியில் ஓட்டை போட்டு அந்த பாட்டிலில் கரைத்திருக்கும் மாவை ஊற்றி நன்கு மூடவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பாட்டிலில் உள்ள மாவை தோசை அளவுக்கு மாவைச் சுற்றினால் கோடு கோடாக விழும் (ஓட்டையிலிருந்து திரி திரியாக மாவு விழும். அதைச் சுற்றி சுற்றி ஊற்றிவிட்டு அதன்மேல் அந்தக் கோடுகள் இணையும்படி பூப்போல ஊற்றவும்). மேலே சிறிது நெய் தடவி, மிதமான தீயில் அடி சிவக்காமல் மடித்து சுருட்டி எடுத்துப் பரிமாறவும்.

சூப்பரான ரொட்டி ஜாலா ரெடி.
  • தொடங்கியவர்

சூப்பரான கேரட் - பட்டாணி ரைஸ்

 

பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு மதியம் சாப்பிட வெரைட்டியான லஞ்ச் செய்து கொடுக்க விரும்பினால் கேரட் - பட்டாணி ரைஸ் செய்து கொடுக்கலாம்.

 
 
சூப்பரான கேரட் - பட்டாணி ரைஸ்
 
தேவையான பொருட்கள் :

உதிரியாக வடித்த சாதம் - 2 கப்,
துருவிய கேரட் - ஒரு கப்,
உரித்த பட்டாணி - கால் கப்,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 4,
பட்டை - சிறிய துண்டு,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 1,
சோம்பு - கால் டீஸ்பூன்,
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு,
இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

201709111300061885_1_carrotpeasrice._L_s

செய்முறை :

ப.மிளகாய், புதினா, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து கேரட், பட்டாணி, உப்பு சேர்த்துக் கிளறவும்.

அனைத்து நன்றாக வெந்து எல்லாம் ஒன்றாகக் கலந்ததும், சாதத்தை சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி, புதினா தூவிக் கிளறி இறக்கவும்.

கேரட் - பட்டாணி ரைஸ் ரெடி!

இதற்கு சிப்ஸ், ஆனியன் பச்சடி சரியான சைட் டிஷ்.
  • தொடங்கியவர்

வரகு அரிசி காய்கறி சாதம்

 

சிறுதானியங்களுடன் காய்கறி சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று வரகு அரிசி, காய்கறிகள் சேர்த்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
வரகு அரிசி காய்கறி சாதம்
 
தேவையான பொருட்கள் :

வரகு அரிசி - 2 கப்,
காய்கறி கலவை (கேரட் பீன்ஸ், பட்டாணி) - 1 கப்,
பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா - 2,
பெரிய வெங்காயம் - 3,
தக்காளி - 3,
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
தயிர் - அரை கப்,
புதினா, கொத்தமல்லி - தலா அரை கட்டு,
பச்சை மிளகாய் - 3,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்.

201709130907525845_1_varaguvegetablerice

செய்முறை :

காய்கறிகள், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வரகு அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய்யை ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்குங்கள்.

அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து தக்காளி காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

தக்காளி காய்கறிகள் சற்று வதங்கியதும் தயிர், மிளகாய், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் ஆறு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் வரகு அரிசியை சேர்த்து கிளறி மூடி வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி பத்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

சூப்பரான சத்தான வரகு அரிசி காய்கறி சாதம் ரெடி.
  • தொடங்கியவர்

முட்டை ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு ஃபிரை

 
 
 

குழந்தைகளுக்கு முட்டை, உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்லகாம்.

 
 
 
 
முட்டை ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு ஃபிரை
 
தேவையான பொருட்கள் :

முட்டை - 5
மிளகாய் தூள் - 1 கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
வெங்காயம் - 1
தேங்காய்பால் - அரை கப்
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மைதா - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

201709141514005435_1_eggstuffedpotatofry

செய்முறை :

4 முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து 2 துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

வெங்காயத்தை மிக பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு, மிளகு துள் போட்டு கலக்கி வைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, தேங்காய் பால், வெங்காயம், மைதா போட்டு நன்கு பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.

பின்னர் உருண்டையை கையில் வைத்து வட்டமாகத் தட்டி நடுவில் பாதி முட்டையை வைத்து மூட வேண்டும்.

அதனை கலக்கி வைத்த முட்டையில் நனைத்து ரொட்டிதூளில் பிரட்டி வைக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதம் பிரட்டி வைத்துள்ள முட்டையை எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்க வேண்டும்.

சூப்பரான முட்டை ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு ஃபிரை ரெடி.
  • தொடங்கியவர்

பாகற்காய் தக்காளிப் புளிக்கறி

உடலுக்கு சத்தான பாகற்காய், சிறுவர் முதல் பெரியவர் வரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். நீரிழிவு நோயாளிக்களுக்கு மிகவும் நல்லது. ஒருவேளை, அதன் கசப்பு சுவை குழந்தைகளுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அதன் மகத்துவத்தை உணர வைத்து குழந்தைகளை சாப்பிட வைப்பது பெற்றோரின் கடமை.

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 250 கிராம்
தக்காளிப்பழம் - 250 கிராம்
வெங்காயம் - 5
பூண்டு - 10
வெந்தயம் - சிறிது
மிளகாய் வத்தல் - 5
கறிவேப்பிலை - சிறிது
புளி - 25 கிராம்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
மிளாகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
நீர் - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் பாகற்காயை கழுவி வட்ட வட்டமாக வெட்டவும். தக்காளியையும் கழுவி வெட்டவும். வெங்காயம் பூண்டு, மிளகாய் எல்லாவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். புளியை நீரில் கரைத்து அளவாக எடுத்து வைக்கவும். அதன் பின் வாணலியை அடுப்பில் வைத்து எணணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வதங்கி பொன் நிறமாக வரும் போது பூண்டை சிறிது தட்டி அதனுடன் சேர்த்து வெந்தயத்தையும் போட்டு நன்கு கிளறிக் கொண்டே மிளகாய்த் தூள், உப்புதூள், கரைத்த புளி இவற்றையும் சேர்த்து கறியை நன்கு கிளறி மூடி 5 நிமிடம் வேக விடவும். பின்னர் வற்றியதும் நறுக்கிய தாக்காளியையும் சேர்த்து வேக விடவும். பின்னர் ஆறவிட்டு பறிமாறலாம். சாதம், சாப்பாத்தி, தோசை இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

 
Bild könnte enthalten: Essen
  • தொடங்கியவர்

புளியோதரைக் குழம்பு

 

 
10CHLRDpuli

தினமும் ஒரே மாதிரியான சமையல், அலுக்கத்தானே செய்யும்? வாரம் ஒரு நாளாவது மாறுபட்ட ருசியில் சமைத்துச் சாப்பிடலாம் என்று பலருக்கும் தோன்றும். அதுவும் குழந்தைகள் இருக்கிற வீடுகளில் காரக்குழம்பு, புளிக்குழம்பு போன்றவற்றை எப்போதாவதுதான் செய்வார்கள். அதனால் காரசாரமாகச் சாப்பிட சிலர் ஏங்கிக் கிடப்பார்கள். இன்னும் சிலருக்கோ பாரம்பரிய உணவு சாப்பிட ஆசையாக இருக்கும். இப்படிப் பலரின் ஆவலுக்கும் தீர்வு தருகிறார் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த திலகவதி. புட்டு, கொழுக்கட்டை, புளிக் காய்ச்சல் என்று வகைக்கு ஒன்றாகச் செய்யக் கற்றுத்தருகிறார் இவர்.

புளியோதரைக் குழம்பு

 

என்னென்ன தேவை?

புளி - 50 கிராம்

காய்ந்த மிளகாய் - 6

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 3 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - ஒரு டீஸ்பூன்

தனியா - 2 டீஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை

- தேவைக்கேற்ப

நல்லெண்ணெய் - கால் லிட்டர்

 

எப்படிச் செய்வது

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, தனியா, மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு மிளகாய் வற்றல் போட்டு வறுக்க வேண்டும். அதன்பின்பு புளிக் கரைசலை ஊற்றி மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் போட வேண்டும். நன்கு கொதிக்கும் போது அரைத்து வைத்துள்ள பொருட்களைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். குழம்பு கெட்டியான பதத்துக்கு வரும்போது வேர்க்கடலை போட்டு இறக்க வேண்டும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

குழந்தைகளுக்கு விருப்பமான  சிக்கன் வறுவல்

 

குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கனை வைத்து வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
குழந்தைகளுக்கு விருப்பமான வெள்ளை சிக்கன் வறுவல்
 
தேவையான பொருட்கள் :

சிக்கன் - ½ கிலோ
சின்ன வெங்காயம் - 10
வெள்ளை மிளகுத் தூள் - ½ டீஸ்பூன்
சீரகத்தூள் - ½ டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - ½ டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1½ டீஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - ¾ டீஸ்பூன்.

201709181519223383_1_whitechickenfry._L_

செய்முறை :

வெங்காயத்தை தோல் நீக்கி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கத்தியால் கீறல் போடவும்.

ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் சின்ன வெங்காயம், மிளகுத் தூள், சீரகத்தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி ஒரு மணிநேரம் ஊறவிடவும்.

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் பொறித்து எடுக்கவும்.

சுவையான வெள்ளை சிக்கன் வறுவல் தயார்.
  • தொடங்கியவர்

குழந்தைகளுக்கு விருப்பமான சீஸ் ஆம்லெட்

குழந்தைகளுக்கு முட்டை, சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சூப்பரான ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
குழந்தைகளுக்கு விருப்பமான சீஸ் ஆம்லெட்
 
தேவையான பொருட்கள் :

முட்டை - 2
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
மொசரல்லா சீஸ் (Mozzarella cheese) - 2 டேபிள்ஸ்பூன்
குடை மிளகாய் (சிவப்பு, மஞ்சள், பச்சை) - தலா 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - சிறியது 1
கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்
பொடித்த மிளகு, உப்பு - சுவைக்கு.

201709191535189196_1_eggomeletwithcheese

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சீஸை துருவிக்கொள்ளவும்.

ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் நறுக்கி குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லி இலை, உப்பு, பொடித்த மிளகு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு உருகி வரும் பொழுது முட்டை கலவையை ஊற்றி சிறிது மூடவும். அடுப்பை மீடியமாக வைக்கவும். பின்பு திறந்து பிரட்டி விடவும்.

முட்டை வெந்தவுடன் மேலே சீஸ் தூவி சிறிது நேரம் மூடி வைக்கவும்.

சீஸ் உருகியதும் மேலே நறுக்கிய வெங்காயத்தாளை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

சுவையான சத்தான சீஸ் ஆம்லெட் தயார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.