Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனிநாடு கோரவில்லை - ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைத் தருமாறு சம்பந்தன் கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு,கிழக்கு தமிழர்கள் இனிமேல் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கமாட்டார்கள் என்றும், ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு நியாயமான தீர்வை  அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வடக்கு,கிழக்கு தமிழர்கள் இனிமேல் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கமாட்டார்கள் என்றும், ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு நியாயமான தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

   

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று நடந்த விவாதத்தின் போது உரையாற்றிய இரா.சம்பந்தன்- அனைத்து சமூகங்களும் ஏற்கக்கூடிய தீர்வுவொன்றை நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்க வேண்டும். ஸ்ரீலங்காவை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வுதான் சிறந்தது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரது அணியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு கோரிக்கையொன்றை விடுக்கவுள்ளதாகவும், ஆனால் அவர் இந்த சபையில் தற்போது இல்லை. மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் தேசிய தலைவர்களில் ஒருவராகவே கருதப்படுகிறார். அவர் தற்போது நாட்டிற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். அவரின் ஒத்துழைப்பு இந்த நாட்டு மக்களுக்கு தேவையானது. பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் நலனை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். இந்த விடயத்தில் சாதகமான முடிவை எடுக்க வேண்டும். என்று குறிப்பிட்டார்.

சம்பந்தன் தனது உரையில் புதிய அரசியல் யாப்புக்கான யோசனைகளில் வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என தனது உரையில் வலியுறுத்தவில்லை. உள்ளக சுயநிர்ணய உரிமை என்றோ அல்லது தமிழர்களின் இறமையையும் வடக்கு கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசம் என்பதையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற எந்தவொரு கடுமையான வார்த்தைப் பிரயோகங்களையும் சம்பந்தன் தனது உரையில் வெளிப்படுத்தவில்லை.

http://www.seithy.com/breifNews.php?newsID=149145&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, தமிழரசு said:

வடக்கு,கிழக்கு தமிழர்கள் இனிமேல் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கமாட்டார்கள் என்றும், ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு நியாயமான தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தனிநாடு கோரவில்லை - ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைத் தருமாறு சம்பந்தன் கோரிக்கை! 

அப்படியாயின் உங்கள் உசுப்பேத்தலுக்கு பலியான இத்தனை பொதுமக்களுக்கும் பதில் சொல்ல வேண்டியதும் உங்கள் கடமையே.

77 இவர்கள் உசுப்பெத்தினது உண்மைதான் ஆனால் அதை அவர்கள் உணர்ந்து பல சகாப்தங்கள் ஆகிவிட்டது .

அதற்கு பிறகு அரசியலே தெரியாமல் ஒரு கூட்டம் வந்தது அவர்களும் அவர்களை ஆதரித்தவர்களும்  தான் இத்தனை அழிவிற்கும் பதில் சொல்லவேண்டியவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

முடியல்ல... தந்தை செல்வா காணாத ஒற்றையாட்சி இணக்கமெல்லாம்.. உவர் காணப் போறார். நம்பிக்கையோடு இருப்போம்.. 55 வருட கால தமிழர்களின் தோல்வி அரசியல் தலைவர் குடுகுடுப்பை சம்.. எங்களுக்கு ஒற்றையாட்சிக்குள் சிங்களவனோடு கூடப்படுத்துறங்க தங்கக் கட்டில் செய்து தருவார் என்று.

தமிழரசுக் கட்சிக்காரர்களின்.. தமிழீழம் மருகி.. தனிநாடாகி.. பின் அது மருகி.. சமஸ்டியாகி.. பின் அது மருகி.. பிராந்தியமாகி.. பின் அது மருகி..இணைந்த..மாகாணமாகி.. பின் அது மருகி.. பிரிந்த மாகாணமாகி.. பின் அது மருகி.. மாவட்ட இணைத்தலைமையாகி நிற்குது.

இப்படி ஒற்றையாட்சி விதம் விதமா பூனைக்குட்டி போடும் என்றால்.. என்ன மண்ணாங்கட்டிக்கு தமிழீழம்.. இரத்தத்திலகம்.. புளொட்.. ஈபி.. நாபி எல்லாம் உருவாக விட்டிட்டு இந்தவை. உவை.. தங்களை பிள்ளைகளை பத்திரமா லண்டனுக்கு அனுப்பி வைக்கேக்கையே சனம் யோச்சிச்சிருந்தா.. உவர் இப்ப எதிர்கட்சி தலைவரா இல்ல.. வீட்டுச் சுவரில.. படமா தொங்கிக்கிட்டு இருந்திருப்பார். இதுங்க எல்லாம் இப்ப தமிழர்களுக்கு தலைவர்.

தலைவர் என்ற பெயரில்.. எல்லாத்தையும் வீணடிக்க ஒரு சில பிறப்புகள்.. எம்மோடு.

உவை போற இடம் சுடுகாடு மட்டும் தான்.

எல்லாம் தமிழன்.. தலைவிதி. :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, arjun said:

77 இவர்கள் உசுப்பெத்தினது உண்மைதான் ஆனால் அதை அவர்கள் உணர்ந்து பல சகாப்தங்கள் ஆகிவிட்டது .

அதற்கு பிறகு அரசியலே தெரியாமல் ஒரு கூட்டம் வந்தது அவர்களும் அவர்களை ஆதரித்தவர்களும்  தான் இத்தனை அழிவிற்கும் பதில் சொல்லவேண்டியவர்கள் 

புலிகள் மீது உள்ள பகை உணர்வை மேல் வைக்கபாது எழுதுங்கள்

இதைத்தான் புலிகளும் எல்லா பேச்சுவார்த்தையிலும் சொன்னார்கள்

கேட்டார்கள்

தமிழீழக்கோரிக்கையை கைவிடுவதானால்

நீங்கள் உங்களால் முடிந்த தீர்வை முன்  வையுங்கள்

பரிசிலிக்கின்றோம் என்று.

உண்மையா இல்லையா?

சிங்களம் வைத்ததா???

அப்போ ஆயுதம் சிங்களத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தது???

இப்ப......???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

4 hours ago, விசுகு said:

புலிகள் மீது உள்ள பகை உணர்வை மேல் வைக்கபாது எழுதுங்கள்

இதைத்தான் புலிகளும் எல்லா பேச்சுவார்த்தையிலும் சொன்னார்கள்

கேட்டார்கள்

தமிழீழக்கோரிக்கையை கைவிடுவதானால்

நீங்கள் உங்களால் முடிந்த தீர்வை முன்  வையுங்கள்

பரிசிலிக்கின்றோம் என்று.

உண்மையா இல்லையா?

சிங்களம் வைத்ததா???

அப்போ ஆயுதம் சிங்களத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தது???

இப்ப......???

விசுகர்!  எதுக்கெடுத்தாலும் புலி அலர்ஜி கூட்டத்தோடை நல்லது கெட்டது கதைச்சு பிரயோசனமில்லை.

5 hours ago, விசுகு said:

புலிகள் மீது உள்ள பகை உணர்வை மேல் வைக்கபாது எழுதுங்கள்

இதைத்தான் புலிகளும் எல்லா பேச்சுவார்த்தையிலும் சொன்னார்கள்

கேட்டார்கள்

தமிழீழக்கோரிக்கையை கைவிடுவதானால்

நீங்கள் உங்களால் முடிந்த தீர்வை முன்  வையுங்கள்

பரிசிலிக்கின்றோம் என்று.

உண்மையா இல்லையா?

சிங்களம் வைத்ததா???

அப்போ ஆயுதம் சிங்களத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தது???

இப்ப......???

 

எத்தனை தீர்வுகள் வைத்தார்கள் எத்தனை பேச்சுவார்த்தைகள் நடந்தது .

அண்ணைக்கு "நடுவில கொஞ்ச பக்கத்தை காணோம் " 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, arjun said:

 

எத்தனை தீர்வுகள் வைத்தார்கள் எத்தனை பேச்சுவார்த்தைகள் நடந்தது .

அண்ணைக்கு "நடுவில கொஞ்ச பக்கத்தை காணோம் " 

சிங்களம் தீர்வுகளை வைத்ததா?

சொல்லவே இல்லை??

கையெழுத்து வைத்ததையே கீழித்தெறிந்தவர்கள் தானே அவர்கள்...

கொஞ்ச பக்கங்கள் காணாமல் போகலாம்

பக்கங்களே இல்லாதிருக்கக்கூடாது...

உரிமையை கேட்பதற்கு ஆயுதம் தேவையில்லை நியாயம் இருந்தால் காணும் .அதன் அடிபடையால் தான் பல நாடுகளில் அரசியல் தீர்வு கேட்கின்றார்கள் .

கனடாவில் கியூபெக் நல்ல உதாரணம் .

இலங்கையில் தமிழர்கள் அந்த அரசியல் போராட்டம் தான் செய்தார்கள் .செல்வா முதல் அமிர் வரை .சிங்களம் அசையவில்லை .இவர்கள் ஆயுத போராட்டம் நடத்தவில்லை எனவே அடுத்தபடியாக சர்வதேசத்திடம் நியாயம் கேட்டு போனார்கள் .

அதே நேரம் ஆயுத போராட்டமும் தொடங்கியது ,வேறு பரிணாமத்தில் போராட்டம் தொடர்ந்து சர்வதேச மயப்பட்டது ஆனால் பல வேண்டாத நிகழ்வுகளும் நிகழ்ந்தது .எதிரியுடன் சம பலத்தில் ? பேச்சு வார்த்தைகளும் நடந்தது .இங்கு தீர்வு தமிழர்கள் தரப்பால் தான் எட்டாமல் போனது .

போர் முடிவுக்கு வந்தது .

மீண்டும் தீர்விற்கு தமிழர் அரசியல் தலைவர்கள் போராடுகின்றார்கள் இப்போ ஆனால் காலம் வேறு சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு வேறு இதை புரியாமல் திரும்ப திரும்ப சிங்களம் மீண்டும் ஏமாற்றும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை .

சிங்களம் ஏமாற்றத்தான் முயற்சிக்கும் ஆனால் இனி அது பலிக்காது என்றுதான் நினைக்கின்றேன் .

இதற்குள் எம்மவர் ஏன் குழப்ப நிற்கின்றார்கள் என்றுதான் புரியவில்லை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.