Jump to content

முடிந்தால் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கீழே உள்ள படத்தில் ஆறு ஆங்கில வார்த்தைகள் ஒளிந்துள்ளன‌.
முடிந்தால் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

 

12642869_10154267756799578_1352203777675

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடை, வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 11     பல பல நூறு ஆண்டு காலமாக சில மத வழக்கங்கள், தமிழர்கள் வாழ்வில் புராணங்களுடன் கலந்து, இன்றளவும் பொதுவாக பின்பற்றப் பட்டு வருகிறது, அதனை மூட நம்பிக்கை என்று சிலரும், பழம் வழக்கங்கள் என்று சிலரும், மரபுகள் என்று சிலரும் கூறுவர். இவை அன்றைய சூழலில் மற்றவர்கள் மனதில் ஒரு பயத்தை உண்டாக்குவதற்க்கான ஒரு மாற்று வழியாக இருந்து இருக்கலாம்? இப்படியான பழம் வழக்கங்கள் இன்னும் தேவையா என பலர் கேள்வி கேட்கலாம்?   இன்றைய நவீன, அறிவியல் நடை முறையில் இவைகளின் பங்கு எப்படி இருக்கும் என்பதை நாம் கட்டாயம் அறிய வேண்டும். அப்பொழுது தான் அதற்கு ஏற்றவாறு எம் பழக்க வழக்கங்களையும் அல்லது அதை ஒட்டிய மரபுகளையும் சரிப்படுத்தி, அடுத்த தலை முறைக்கு எமக்கு பெருமை சேர்க்குமாறு கொண்டு செல்ல முடியும். எது எவ்வாறாயினும் பொதுவாக தமிழர்களின் பல சடங்குகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுக்குப் பின்னால் அறிவியல் சார்ந்த அல்லது ஏதாவது பொதுக் காரணங்கள் இருப்பதை காண்கிறோம். அதனை நீங்கள் அறியும் போது கட்டாயம் உங்களுக்கு அது வியப்பை கொடுக்கும். இப்போது சில விந்தையான மரபுகளின் பின்புலத்தில் இருக்கும் அருமையான காரணங்களைப் பார்ப்போம், இவை ஒருவேளை இன்று தேவை அற்றதாகவும் இருக்கலாம்?   பொதுவாக இலக்கியம், கவிதை என்றாலே நமக்கு ஒரு வெறுப்புத்தான். அதுக்கும் எமக்கும் வெகு தூரம் என்று ஒதுங்கி விடுவோம். ஆனால் அவற்றிற்குள் எவ்வளவு விடயங்கள் - வானியல், அறிவி யல், மருத்துவம், கட்டிடவியல், இலக்கணம், கணிதம் இன்னும் பல - புதைத்து இருக்கின்றன என்று பார்க்கும் பொழுது எம்மை வியப்படைய வைக்கிறது. அவை அத்தனையையும் அறிவியலின் படி சரி என சொல்ல வரவில்லை, ஆனால் பல இன்றைய அறிவியலை சார்ந்து இருப்பது எம்மை ஆச்சிரியப்பட வைக்கிறது. அவைகளில் சில சங்க பாடல்களில் கிரகணத்தை பற்றி என்ன கூறி இருக்கிறது என்று பார்ப்போம்.   நற்றிணை 377,இல் "அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த பசங்கதில் மதியத்து அகல் நிலாப் போல” என்ற வரி : அகன்ற கரிய ஆகாயத்தின் கண்ணே (அரவினாற்) பாம்பினால் சிறிது விழுங்கிக் குறை படுத்தப் பட்ட பசிய கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல என்கிறது இந்த பாடல். எனினும் திங்களைப் பாம்பு விழுங்கியது என்று, புராணக் கதையை எடுத்து கூறினாரோ அல்லது அந்த பாட்டின் பொருளை, பின்னாளில் அப்படி மொழி பெயர்த்தனரோ என்று எனக்கு ஒரு ஐயப்பாடு, ஏன்னென்றால், அங்கு, அந்த சங்க பாடலில், "அரவுக் குறைபடுத்த" என்றுதான் உள்ளது "அரவு கவ்வ அல்லது விழுங்க " என இல்லை [huge moon with cool rays, in the wide, dark sky, that is reduced by a snake], சிலர் அரவு என்ற சொல்லுக்கு வருத்து என்ற பொருளும் உண்டு என்றும், ஆகவே ஒளியை இருள் கவ்வுதல் என, அதாவது நிறைந்த குளிர்ச்சியான ஒளியை (நிலவை) இருள் கொஞ்சம் கொஞ்சமாகப் பாம்பு இரையை விழுங்குவதைப் போலத் தீண்டி வருத்துகிறது என்கின்றனர், இங்கு ஒரு அறிவியல் விளக்கத்தை காண்கிறோம், அதே போல, பரிபாடல் 11 இல், வரி 9 - 10 இல், "பாம்பு ஒல்லை மதியம் மறையவரு நாளில் வாய்ந்த" [The snake hides the full moon rapidly] என்கிறது. அகநானுறு 313 யிலும் "அரவு நுங்கு மதியின்",என்று ஒரு வரி உண்டு, இங்கு "நுங்கு" என்பதற்கு பல பொருள் உண்டு, விழுங்கு, கைக்கொள்ளு, கெடு, ஆரப் பருகு ஆகும். எனவே இதன் பொருள் விழுங்கப்பட்ட அல்லது கைப்பற்றப் பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட [swallowed by or captured by or destroyed by] நிலவு என்கிறது. இங்கு அரவு என்பதற்கு வறுத்து என்று பொருள் எடுத்தால், அது வருத்தி கைப்பற்றப்பட்ட அல்லது சேதப்படுத் தப்பட்ட நிலவு என்று ஆகிறது என்பதை காண்க. இது கிரகணம் என்றால் என்ன என்பதன் முன்னைய விளக்கம் ஆகும்.   ஆனால், இன்றைய விஞ்ஞான உலகம் கிரகணத்தை வேறுமாதிரிப் பார்க்கிறது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது, சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால், சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறது. அதே போல, சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில், முழு நிலா நாளில் வரும்போது, சந்திர கிரகணம் உண்டாகிறது என்று இன்று அறிவியல் எமக்கு எடுத்து காட்டுகிறது.   கிரகணம் என்று வடமொழிச் சொல்லின் மூல வார்த்தை ஒரு தமிழ் வார்த்தை. அது கரவணம். கரத்தல் = மறைத்தல்! ஆகும். என்றாலும் கிரகணங்கள் பற்றி பல்வேறு நம்பிக்கைகள், கதைகள் தமிழர்கள் மத்தியில் பிராமண இந்து மதத்தின் தாக்கத்தால், அது கொடுத்த புராணங்களால் இன்றும் உண்டு. அது அன்றில் இருந்து இன்றுவரை தொடர்கிறது.   ஆனால் புராணக் கதைகள் பெரும்பாலனவைகளைப் படிக்கும் போது கடவுள்மார்கள் மக்களுக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாக சித்தரிக்கப்பட்டு உள்ளதை உணர்கிறேன். அவர்கள் செய்யும் விபரீதமான செயல்கள் எல்லாம் மனிதரே செய்ய அஞ்சும் விலக்கப்பட்ட செயல்களாக இருப்பதையும் காண்கிறேன்.   ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சீரிய தமிழ் மரபுக்கு ‘இந்திரனே! நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. அதன் வழியே புராணங்களும்.   அதனாலேயே புராணகதைகள் பெரும்பாலனவைகள் எல்லாம் சரியான கீழ்த்தரக் குணம் இருப்பவர்களாகவும், நமக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழ்ப் பாரம்பரியமோ ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது. நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி. என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே என்கிறது.   ஒரு சுப தின த்தின் போது ‘என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய்ப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக!’ என்ற ரீதியில் மணிக் கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அருவருப்பாக மாற்றும்?   மற்றும் ஒரு உதாரணமாக, திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம், ''சோமஹ ப்ரதமோ, விவேத கந்தர்வ, விவிதே உத்ரஹ, த்ருதியோ அக்னிஸடே, பதிஸ துரியஸதே, மனுஷ்ய ஜாஹ'', என்று மணமகளை நோக்கி சொல்லப்படும் இந்த மந்திரத்தின் அர்த்தம்-   நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான் காவதாக ஒரு மானிடனை அடைகிறாய் ஆகும். முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன. இடையிடையே கவித்துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு. பொதுவாக புராணங்கள் இந்து சமயத்துக்கு அடிப்படையான வேதங்களைப் பின்பற்றியே எழுதப்பட்டது. அதனால் தான் அதுவும் அது போலவே உள்ளது என நான் நம்புகிறேன்.   உதாரணமாக பலர் இன்னும், குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், கிரகணத்தின் போது வீட்டிற்குள் இருக்கிறார்கள். அவர்கள், தம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு எந்தவித குறைபாடும் ஏற்படக்கூடாது என்ற ஒரு பாரம்பரியமாக வந்த ஒரு பயத்தால், அல்லது அதற்கு கற்பித்த புராணக் கதையால், அப்படி தமது பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.   அதே போல், அந்த நேரத்தில் கிரகத்தை நேரடியாக பார்க்கவும் மாட்டார்கள். கிரகணத்தின் போது உணவருந்தவோ சமைக்கவோ கூடாது எனவும் நம்புகிறார்கள். மேலும் சில வீடுகளில் ஒவ்வொரு உணவு பண்டத்தின் மீதும் துளசி இலை போடுவார்கள். இது ஒரு ஒரு மூலிகை செடி என்பதால், அந்த உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை ஆகும்.   கிரகண நேரத்தில் வெளியே நடமாடக்கூடாது; சாப்பிடக்கூடாது; வானத்தைப் பார்க்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், விஞ்ஞான உலகம், நாசா [nasa] உட்பட கிரகணத்தை வேறு மாதிரிப் பார்க்கிறது. கிரகணங்களால் நம் உடல் நலனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது; அந்த இயற்கை நிகழ்வை பார்த்து ரசிக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். எனவே கிரகணங்களைப் பற்றிய நம்முடைய நம்பிக்கையும் அறிவியலும் வேறு வேறாக இருக்கின்றன. ‘கிரகணம் என்பது வெறும் நிழல் விளையாட்டு’ என்று கண்டறிந்து சொல்லியுள்ளார் கி.பி. 476 இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற இந்திய பண்டைய விஞ்ஞானி / வானியலார். [Aryabhata states that the Moon and planets shine by reflected sunlight and he explains eclipses in terms of shadows cast by and falling on Earth]   அதனால், கிரகணம் குறித்து பெரிதாக அச்சப்படத் தேவையில்லை. கிரகண நேரம் மட்டும் அல்ல. எப்போதுமே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. சூரியன் மட்டும் அல்ல, எந்த பிரகாசமான ஒளியையும் எப்போதும் வெறும் கண்ணால் அதிக நேரம் பார்க்கக் கூடாது. பிரகாசமான ஒளியை உற்றுப் பார்க்கும்போது, நம் கண்களில் உள்ள நிறமி [pigment] பாதிக்கப்படும்.   காலம் காலமாக விதைக்கப்பட்ட தவறான நம்பிக்கைகளின் விளைவு இது ஆகும். உதாரணமாக, பௌர்ணமி சமயங்களில் உடலுக்கு எப்படி பாதிப்பு கிடையாதோ அதே போல் கிரகணத்தாலும் உடலுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. வழக்கமாக பௌர்ணமியின் போது கடல் அலை சற்று அதிகமாக இருப்பது போலவே, கிரகணத்தின் போதும் கடல் அலையில் மாற்றம் சற்று அதிகமாக இருக்கலாம். என்றாலும் இதனால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 12 தொடரும்               
    • நிழலி... கரப்பத்தான் இல்லை. கரப்பொத்தான் என்றுதான்... சொல்வார்கள். 😂
    • 15 ஆண்டுகளுக்கு முன்னர் வீரச்சாவடைந்த தலைமகனுக்கு வீரவணக்கம் நடைபெறுகிறது   வீரவணக்கம் தலைவர் மாமா  
    • நிழலி நேற்று செய்தியுடன் படங்களும் எதிலோ பார்த்தேன். இப்போது கண்டுபிடிக்க முடியவில்லை.படங்கள் மட்டுமே வருகின்றன. இதனால் ஏதாவது தறறென்றால் படங்களை நீக்கிவிடவும்.
    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 24       அரசகுமாரி சிங்கத்துடன் புணர்ந்து ஒரு ஆண் ஒரு பெண் என இரு மானிட பிள்ளைகளை பெற்று, பின் அந்த ஆண், தன் தந்தை சிங்கத்தை கொன்று, அதன் பின் தன் சகோதரி சிம்மசீவலியை மணந்து, அவர்களுக்கு பதினாறு முறை இரட்டைக் குழந்தைகளாக, அதுவும் எல்லாம் ஆண்பிள்ளைகளாக பிறந்தது என்பது கற்பனை கூட செய்யமுடியாத ஒரு நிகழ்வு ஆகும்.   அந்த முப்பத்திரண்டில் மூத்தவன் தான் விஜயன் ஆகும். இவனைத்தான் சிங்கள இனத்தின் முதல் குடிமகனாக மகாவம்சம் பெருமையுடன் கூறுகிறது. அதுவும் புத்த பெருமான் தேர்ந்து எடுத்த ஒருவன் என்று மகுடம் சூட்டுகிறது!   இப்ப என் மனதில் தோன்றுவது, புத்தருக்கு விஜயனிலும் அவனின் கூட்டாளிகளிடமும் ஒரு தனிப்பட்ட ஆர்வம் இருக்குது என்றால், ஏன் அவர்கள் இலங்கையில் அரசாட்சியை ஏற்படுத்திய பொழுது, புத்த மதத்தினராக இருக்கவில்லை? மற்றது, அவர்கள் இலங்கையை அடைந்த கையோடு, இயக்கர்களிடையே தான் அவர்களின் முதல் இலங்கை வாழ்வு தொடங்குகிறது. ஆனால் இந்த இயக்கர்களைத் தான் ஏற்கனவே புத்தர் தன் முதல் வருகையில் பயமுறுத்தி, இங்கு வாழ தகுதி அற்றவர்கள் என துரத்தி விட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.   அப்படி தகுதி அற்றவர்களை மீண்டும் வரவழைத்து, தான் தேர்ந்து எடுத்த, பெருமைமிக்க விஜயன் மற்றும் அவனின் கூட்டாளிகளை சந்திக்க விடுவாரா? அதுமட்டும் அல்ல, புத்தருடன் மிகவும் நட்பாக ஒரு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நாகர்களை ஏன் விஜயனும் கூட்டாளிகளும் சந்திக்கவில்லை. நாகர்களின் வேண்டுகோளை ஏற்று இரண்டாம் தடவையாக நாகர்களை மூன்றாம் வருகையில் பிரத்தியேகமாக சந்தித்தது என்னவாச்சு? அவர்களை மறந்து விட்டாரா ?   மற்றது மகாவம்சத்தின் பிந்திய அத்தியாயத்தில் தான், புத்த மதம், விஜயனின் அரசாட்சிக்கு [கி மு 543 - கி மு 505] பிறகு ஏழாவது மன்னனான தேவநம்பிய தீசன் அரசாட்சியில் [கி மு 307 - கி மு 267] இலங்கைக்கு, கிட்ட தட்ட இருநூற்று நாற்பது ஆண்டுகளின் பின், அசோகனின் மகனினுடாக அல்லது தூதுவருக்கூடாக இலங்கைக்கு அறிமுகம் செய்யப் பட்டது என்று கூறுகிறது? அது மட்டும் அல்ல, புத்தமதத்தை உலகெங்கும் பரப்பியதும் அசோகனே! சிங்களம் என்ற இனம் ஒன்று தொடங்குவதற்கு ஒரு ஆரம்ப புள்ளியாக இருந்தான் என்பதைத் தவிர, இதில் விஜயனின் பங்கு என்னவென்று புரியவில்லை?   அசோகனின் உற்ற நண்பனான தேவநம்பிய தீசன் அல்லது தீசன் இலங்கையை ஆளும் காலத்தில், புத்த சமயப்பரப்பாளர் குழுவொன்றை [Buddhist monk missionary] தன் மகனின் தலைமையில் அங்கு அனுப்பினான் என்கிறது மகாவம்சம். இந்த தீசன் பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது பல அற்புதங்கள் நிகழ்ந்தன என்றும், இவையனைத்தும் தீசனின் பெருமையால் நிகழ்ந்தவை என்றும், இவ்வற்றை கண்ட மன்னன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து. ‘என்னுடைய நண்பனான தர்ம அசோகனைத் தவிர வேறு யாரும் இவ் விலை மதிப்பற்ற பொருள்களைப் பெறத் தகுதியுள்ளவர்கள் அல்ல. எனவே இவற்றைப் பரிசாக அவருக்கு அனுப்புவேன்' என்றான் என்றும் பதினோராம் அத்தியாயம், 'தேவநம்பிய தீசன் பட்டாபிஷேகம்' [ Chapter XI / The Consecrating Of Devanampiyatissa] கூறுகிறது.   மேலும் பதின்மூன்றாவது அத்தியாயம் 'மஹிந்தர் வருகையில்' [Chapter XIII / The Coming Of Mahinda], இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறான். அதைத் தொடர்ந்து, பதிநான்காவது அத்தியாயம் 'தலைநகர் புகுதலில்' [Chapter XIV / The Entry Into The Capital], அரசனை [தீசனை] சோதிப்பதற்காக மஹிந்த தேரர் அவனை சூட்சுமமான கேள்வி கேட்டார். கேட்கக் கேட்க பல கேள்விகளுக்கும் அவன் பதிலளித்தான் என்கிறது.   இப்ப நான் உங்களைக் கேட்க விரும்புவது, புத்தரால் தேர்ந்து எடுக்கப்பட்ட, விஜயன் வரும் பொழுது, அங்கு ஒரு அதிசயமும் நடைபெறவில்லை, மாறாக உயர்குலம் அற்ற இயக்கர் பெண்ணை மணக்கும் சூழ்நிலைக்கு தள்ளப் படுகிறான். பின் அவன் தன் மனைவியையும் பிள்ளைகளையும், துரத்திவிட்டு, உயர் குல பாண்டிய தமிழ் இளவரசியை இரண்டாம் தாரமாக அல்லது மூன்றாம் தாரமாக மணக்கிறான், என்றாலும் கடைசி தாரத்துக்கு பிள்ளைகள் இல்லாமல் அவன் சந்ததி இலங்கையை ஆளாமல், முற்றுப் பெறுகிறது. முதல் அல்லது குவேனி பிள்ளைகளை கூட அவன் கூப்பிட முயலவில்லை? சிங்க மிருகத்தின் பேரன் ஆளலாம் என்றால், அந்த பேரன் - விஜயன் மற்றும் யட்சினி அல்லது யட்சி (Yakshini) அரசி குவேனிக்கு பிறந்த பிள்ளைகளுக்கு என்ன குறை ? அப்படி என்றால் ஏன் அவனை புத்தர் தேர்ந்தெடுத்தார் ?   இரண்டாவதாக, இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறான். அப்படி என்றால் புத்தர் தன் முதல் தெரிவான விஜயனில் தடுமாறி, இரண்டாவது தெரிவை இருநூறுக்கு சற்று மேற்பட்ட ஆண்டுகளின் பின் காலம் தாழ்த்தி செய்தாரா ?   மூன்றாவதாக, அசோகன் தீசனின் நட்பிலும், அவன் ஆளும் இலங்கையிலும் மிகவும் அக்கறை கொண்டு மஹிந்த தேரரை அனுப்பினார் என்கிறது, அப்படி என்றால், எதற்காக, மஹிந்தர் வந்து இலங்கையில் இறங்கும் பொழுது, தீசன் சோதிக்கப் பட்டான்?   எவராவது இதை வாசிக்கும் பொழுது, அவர்களின் மனதில் கட்டாயம் அசோகன், தீசனின் நட்பிலும், மற்றும் ஒருவரை ஒருவர் எவ்வளவுதூரம் புரிந்து வைத்து இருந்தார்கள் என்பதிலும் ஒரு ஐயப்பாடு ஏற்படும் என்றும் தோன்றுகிறது? [When one reads this portion of the Mahavamsa, the question arises how far Asoka and Tissa could be friends and how much Asoka knew of Tissa]     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 25 தொடரும்   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.