Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டிய தேவையில்லை

Featured Replies

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டிய தேவையில்லை
 
 

article_1455074962-aa.jpgஉண்மையான நல்லிணக்கம், விசுவாசமாக ஏற்படவேண்டுமாயின், நியாயமான, நிரந்தர அரசியல் தீர்வு அவசியமானது என்பதை, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனிடம்
வலியுறுத்தினோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்
எம்.பி தெரிவித்தார்.

ஹுஸைனுக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினருக்கும் இடையில், கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.

சந்திப்புத் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர், தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனை சந்தித்து நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தப்பேச்சுவார்த்தை திருப்திகரமானதாக இருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில்,  நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக முறையாக அமுல்படுத்தவேண்டும் என்ற கருத்தை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம்.

நாட்டில் உள்ள தேசிய பிரச்சினை சம்பந்தமாகவும் ஏனை விடயங்கள் பற்றியும் எடுத்துரைத்தோம். காணிகள் விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோரின் விவகாரம் தொடர்பாகவும் ஆணையாளருடன் கலந்துரையாடினோம்.

அதேபோல, உண்மையான நல்லிணக்கம் விசுவாசமாக ஏற்படவேண்டுமாயின் ஒரு நிரந்தரமான நியாயமான அரசியல் தீர்வு தேவை என்பதனை வலியுறுத்தினோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  இதேவேளை, அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்று ஹுஸைன் தெரிவித்திருந்தமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

அது ஒரு கருத்து. அவருடைய கருத்து, சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் அதனைச்செய்யமுடியாது என்பது அவருடைய கருத்து. பொதுமன்னிப்பின் ஊடாக, அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டிய தேவையில்லை. அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு வேறுபல ஒழுங்குகள் இருக்கின்றன என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/165681/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%B2-#sthash.YTE4nx7a.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்லிட்டாராம்.. இவர் வழிமொழியுறாராம்.

ஒவ்வொரு சொறீலங்கா சுதந்திர தினத்துக்கும் 1000 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு... வெசாக்கிற்கு பொது மன்னிப்பு.. இப்படி எத்தனை கேசுகளை.. கோட் நடைமுறைக்கு அப்பால் சொறிலங்கா கைவிடுகுது..

தமிழ் மக்களைப் படுகொலை செய்ததை விசாரிக்க சர்வதேசம் வேண்டாம்.. ஆனால் தமிழ் கைதிகளை விடுவிக்க சர்வதேசக் கருத்து மிக முக்கியம். இதையும் இந்த சம் என்ற அரைகுறை தான் சொல்லியும் திரியுது.

என்னடா நாடகம் போடுறீங்க.. இதில இவர் சம் மாத்தி மாத்திப் பேசிக்கிட்டு.

ஓடுங்கடா எல்லாரும்.. அரசியல்.. ஐநா ஆட்டுக்குட்டின்னு கிட்டு.

இவ்வளவு படுகொலையும் நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சு சனம் கிளிநொச்சியில் வைச்சு ஐநாவே போகாத என்ற போது ஒளிச்சு ஓடின ஐநாவை முதலில விசாரிக்கனும்.. வந்திட்டாங்க.. ஹசன்.. குசன் என்று கொண்டு.. ஆளுக்கொரு நீதியும் நடைமுறையும்.

இன்றைய வல்லாதிக்க உலக ஒழுங்கில்... மனிதமும்.. நீதியும் செத்துக்கிடக்கு. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா வை ஒரு மனிதாபிமான அமைப்பாகப் பார்த்து 2008முதல்  ஏமாந்ததமிழர்கள் இன்றும் ஏமாற்றப்படுகிறார்கள். பொருண்மியநலன்களுக்கான ஓட்டத்திலே பொழுபோக்காகப் பிரமுகர்கள் தமிழரைப்பற்றிப் பேசுகிறார்கள். அது கிந்தியா முதல் அமெரிக்காவரை, இதுதான் உண்மை. எமக்கான விடுதலையை நாமேபெற அர்பணிப்போடு செயற்படவேண்டுமென 40 ஆண்டுகளின் முன்பே தெட்டத்தெளிவாக உரைத்தவரது வாய்மொழி இன்றுவரை பொருந்தியே வருகிறது. ஆனால் அவரது சீடர்கள்தாமும் தூங்கி மற்றையோரையும் தூங்கவைத்துச் சுயலாப அரசியல் குளிர்காய்தலில்  காலத்தைக் கடத்துகிறார்கள். என்ன செய்வது தமிழனின் விதியா? அல்லது விவேகமற்ற இனமா? இறைவனுக்கே வெளிச்சம்!

ஐநா ஒரு சரியான அமைப்பாக இருந்தால் அது என்று மனிதஉரிமை சாசனத்தைப் பிரகடனம் செய்தததோ அன்றிலிருந்து மனித உரிமையை மதிக்காது கொலைத் தாண்டவம் ஆடும் அரசுகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் பலநூறாயிரம் உயிர்களைப் பாதுகாத்திருக்கலாம். ஆனால் பக்கச்சார்போடு தமது நலன்சார்ந்த உலகின் கையாளாகச் செயற்படும் ஐநாவால் உலகில் இனியும் இடம்பெற, இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களையோ கொலைகளையோ நிறுத்தக்கூடிய வினையாற்றும் தகைமையதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனது நாட்டிலும்

அவரது உறவுகளுக்கும் என்ன நடக்குது

மனித உரிமை எந்தளவுக்கு மதிக்கப்படுகுது என்று பார்க்க சொல்லுங்கப்பா..

இது இந்திய ராணுவம் யாழ்ப்பாணத்தில கேட்ட கதையாகத்தான் இருக்கும்

தனிவீடும் கிணறும் இருக்கிற உங்களுக்கு என்ன பிரச்சினை என்று.

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.