Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘வடமராட்சி கிழக்கு நன்னீர் திட்ட சர்ச்சை’ : தலையிடுவாரா சம்பந்தன்? – பதிலளிக்கிறார் சுகிர்தன்

Featured Replies

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%

‘வடமராட்சி கிழக்கு நன்னீர் திட்ட சர்ச்சைக்கு’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முதலமைச்சர், விவசாய அமைச்சர், மற்றும் வடமராட்சி கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் சந்தித்து ஒரு சுமூக தீர்வை எட்ட முயற்சி செய்யவேண்டும் என்ற துளியம் இணையத்தின் யோசனையை தான் ஏற்பதாகவும் அதற்கான முயற்சியை தாம் எடுப்பதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு மக்கள் அமைப்புக்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு இன்று (26-02-2016) நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும் வடமராட்சி கிழக்கின் நிலமைகள் தொடர்பாகவும் வடமராட்சி கிழக்கை பிரதிநிதிவப்படுத்தும் வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் துளியம் இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணல்:

துளியம் : வடமராட்சி கிழக்கில் 26-02-2016 அன்று நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டம் யாருக்கு எதிரானது?

சுகிர்தன் : நாளைய ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டிற்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த ஆர்ப்பாட்டத்தை வடமராட்சி கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்தான் ஏற்பாடு செய்துள்ளது. தண்ணீர் பிரச்சினை தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பாகவும் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாகத் தெரிவித்துள்ள மாணவர் ஒன்றியத்தினர் பொது அமைப்புக்களை அழைத்துப் பேசி உள்ளார்கள், எங்களை அழைத்துப் பேசவில்லை. இந்த ஆர்ப்பாட்த்தில் நான் கலந்துகொள்ளமாட்டேன்.

துளியம் : தாங்கள்தான் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சரின் கொடும்பாவிகள் எரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

சுகிர்தன் : அது முற்றிலும் தவறான கற்பனைச் செய்தி. எனக்கும் அந்த ஆர்ப்பாட்டத்திற்கும் தொடர்பில்லை. வடமராட்சி கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினரான என்னை ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்திய எவரும் அழைத்துப்பேசக் கூட இல்லை.

துளியம் : வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினரான நீங்கள் அம்மக்களின் கரிசனைகளை, பிரச்சனைகளை கட்சி மட்டத்தில் பேசித் தீர்த்திருந்தால் இப்படியான ஆர்ப்பாட்டங்களைத் தவிர்த்திருக்கலாமே.

சுகிர்தன் : வடமராட்சி கிழக்கு பொது அமைப்பின் பிரதிநிதிகளுடன் நான் சென்று கல்வி அமைச்சர் குருகுலராஜாவை ஒரு தடவையும், விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் முதலமைச்சரை இரு தடவைகளும் சந்தித்தோம். இந் நன்னீர்த் திட்டத்தால் வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு பாதிப்புக்கள் இருக்கின்றன, இத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டாமென பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கைகள் வைத்தனர். கடற்தொழிலாளர் சமாசம் மற்றும் மக்களின் சம்மதம் இல்லாமல் இத்திட்டம் நிறைவேற்றப்படாது என விவசாய அமைச்சர் உறுதி அளித்தார். ஆனால் அதன்பின்பு இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் காராணமாக விவசாய அமைச்சினால் கடற்தொழிலாளர் சமாசம் கலைக்கப்பட்டது. அதன்பின்பு பிரதேச செயலாளர் தலைவராக்கப்பட்டு தங்களிற்கு சார்பான இருவரை பொறுப்புக்கு நியமித்தார்கள். இந் நியமனத்திற்குப்பிறகு அப்பிரதேச மக்களின் ஒப்புதல் பெறாமல் நன்னீர்த்திட்டத்தின் முதற்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

துளியம் : விவசாய அமைச்சர் மற்றும் முதலமைச்சரிடம் முறையிட்டும் இதற்குச் சரியான பதில் கிடைக்காதபட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தினிடம் முறையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாமே?

சுகிர்தன் : இதுவிடயமாக சில மாதங்களுக்கு முன்பு, வடமராட்சி கிழக்கு மக்கள் ஒன்றியத்தினர் கையளித்த மகஜரை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

துளியம் : ஆனால் இது தொடர்பாக இதுவரை சம்பந்தன்  அவர்கள் கருத்தேதும் தெரிவிக்கவில்லையே? அந்த மகஜருக்கு பதிலேதும் அனுப்பினாரா அல்லது முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சருக்கு இது தொடர்பான அறிவுறுத்தல் ஏதும் அனுப்பப்பட்டதா?

சுகிர்தன் : முதலமைச்சருக்கோ விவசாய அமைச்சருக்கோ ஏதாவது அறிவுறுத்தல்கள் சம்பந்தன் ஐயாவிடம் இருந்து அனுப்பப்பட்டதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அந்த மகஜருக்கு பதில் அனுப்பியிருந்தாலும் அந்த ஒன்றியத்துக்குத்தான் பதில் அனுப்பப்பட்டிருக்கும் எனக்கு வராது. அவர்களுக்கு பதில் அனுப்பப்பட்டதா இல்லையா என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் சம்பந்தன் ஐயாவில் 100 சதவீதம் நான் குற்றஞ்சாட்டத் தயாரில்லை. அவருக்கு வேலைப்பளு அதிகம். அத்துடன் ஒரு சிலர் அவருக்கு கட்டுப்படத் தயாரில்லை.

 துளியம் :நன்னீர்த் திட்டத்தால் எவ்வித பாதிப்பும் வராது என விவசாய அமைச்சர் கூறுகிறாரே?

சுகிர்தன் : உண்மையிலேயே இந்த நன்னீர்த் திட்டத்தால் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனக் கருதினால் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோர் மக்களின் சந்தேகங்களைப் போக்கித் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இப்படியான நன்னீர்த் திட்டங்கள் நடைபெறுகின்ற இடங்களுக்கு மக்கள் ஒன்றிய பிரதிநிதிகளை அழைத்துச் சென்று அவர்களின் சந்தேகங்களைப் போக்கி, அம்மக்களின் சம்மதத்துடன் இந்த திட்டத்தை ஆரம்பிக்கலாமே. மக்களின் எதிர்ப்பைமீறி சர்வாதிகாரத்தைப் பிரயோகித்து இத்திட்டம் நிறைவேற்றப்படுவதைத்தான் நான் எதிர்க்கிறேன். இதனால் என்மீது கட்சி நடவடிக்கை எடுத்தாலும் நான் அந்த மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.

துளியம் : சுமந்திரன் அவர்கள்தான் உங்களுக்கு மாகாணசபையில் போட்டியிடுவதற்கான அனுமதியைப் பெற்றுத் தந்தாகவும் அவரின் நிகழ்ச்சி நிரலில்தான் நீங்கள் செயற்படுவதாகவும் எழும் குற்றாச்சாட்டுக்கள் பற்றி உங்கள் கருத்து.

சுகிர்தன் :  முதலில் நான் ஒன்றைக் குறிப்பிடவிரும்புகிறேன் சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகிய நான் தன்னிச்சையாகத்தான் செயற்படுகிறேன், யாருடைய நிகழ்ச்சி நிரலிலும் செயற்படவில்லை. சுமந்திரன்தான் ‘சீற்’ பெற்றுத் தந்தார் என்பது தவறான தகவல். மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பு சுமந்திரன் எம்பியை பழக்கமில்லை. எனக்கு மாகாண சபை ‘சீற்’ வந்ததென்றால் அதற்கு முதல்காரணம் இளைஞர் அணிச் செயலாளராக இருந்த சிவகரன் அண்ணை அடுத்து மாவை ஐயா. குறிப்பிட்டுச்சொல்லக் கூடிய இன்னொருவர் உடுப்பிட்டித் தொகுதி அமைப்பாளர் பரஞ்சோதி.

அடுத்த மாகாண சபைத் தேர்தலை எடுத்துக்கொண்டால் ‘சீற்’ தந்தால் மட்டும் வெல்ல முடியாது. மக்கள் நலன்களைப் புறக்கணித்துவிட்டு நாம் தனிநபர் நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட்டால் மக்கள் எனக்கு வாக்களிக்கமாட்டார்கள். நான் யாருக்கும் பயந்தோ அல்லது எனது சுயநலத்துக்காகவோ சரியான செயற்பாட்டிலிருந்து விலகமாட்டேன்.

துளியம் : தண்ணீர்ப் பிரச்சினை தொடர்பான விடயத்தை சம்பந்தன் அவர்களிடம் எடுத்துச் சென்று சம்பந்தன், முதலமைச்சர், விவசாய அமைச்சர், நீங்கள் ஆகியோர் சந்தித்து இப்பிரச்சினைக்கு ஒரு சுமுகமாக தீர்வை எட்ட முயற்சி செய்வீர்களா?

சுகிர்தன் : நிச்சயமாக நான் திரும்பவும் முதலமைச்சரை இது தொடர்பாகச் சந்திப்பேன். அதில் தீர்வு கிடைக்காவிட்டால் சம்பந்தன் ஐயாவிடம் இந்த விடயத்தை எடுத்துச் சென்று கட்சி மட்டத்தில்பேசி நீங்கள் கூறியதுபோல் அனைவரும் ஒன்றுகூடி இதற்கு சுமூகமான தீர்வை பெற முயற்சி செய்வேன்.

http://thuliyam.com/?p=15539

Edited by கலையழகன்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கலையழகன் said:

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%

‘வடமராட்சி கிழக்கு நன்னீர் திட்ட சர்ச்சைக்கு’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முதலமைச்சர், விவசாய அமைச்சர், மற்றும் வடமராட்சி கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் சந்தித்து ஒரு சுமூக தீர்வை எட்ட முயற்சி செய்யவேண்டும் என்ற துளியம் இணையத்தின் யோசனையை தான் ஏற்பதாகவும் அதற்கான முயற்சியை தாம் எடுப்பதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு மக்கள் அமைப்புக்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு இன்று (26-02-2016) நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும் வடமராட்சி கிழக்கின் நிலமைகள் தொடர்பாகவும் வடமராட்சி கிழக்கை பிரதிநிதிவப்படுத்தும் வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் துளியம் இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணல்:

துளியம் : வடமராட்சி கிழக்கில் 26-02-2016 அன்று நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டம் யாருக்கு எதிரானது?

சுகிர்தன் : நாளைய ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டிற்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த ஆர்ப்பாட்டத்தை வடமராட்சி கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்தான் ஏற்பாடு செய்துள்ளது. தண்ணீர் பிரச்சினை தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பாகவும் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாகத் தெரிவித்துள்ள மாணவர் ஒன்றியத்தினர் பொது அமைப்புக்களை அழைத்துப் பேசி உள்ளார்கள், எங்களை அழைத்துப் பேசவில்லை. இந்த ஆர்ப்பாட்த்தில் நான் கலந்துகொள்ளமாட்டேன்.

துளியம் : தாங்கள்தான் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சரின் கொடும்பாவிகள் எரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

சுகிர்தன் : அது முற்றிலும் தவறான கற்பனைச் செய்தி. எனக்கும் அந்த ஆர்ப்பாட்டத்திற்கும் தொடர்பில்லை. வடமராட்சி கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினரான என்னை ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்திய எவரும் அழைத்துப்பேசக் கூட இல்லை.

துளியம் : வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினரான நீங்கள் அம்மக்களின் கரிசனைகளை, பிரச்சனைகளை கட்சி மட்டத்தில் பேசித் தீர்த்திருந்தால் இப்படியான ஆர்ப்பாட்டங்களைத் தவிர்த்திருக்கலாமே.

சுகிர்தன் : வடமராட்சி கிழக்கு பொது அமைப்பின் பிரதிநிதிகளுடன் நான் சென்று கல்வி அமைச்சர் குருகுலராஜாவை ஒரு தடவையும், விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் முதலமைச்சரை இரு தடவைகளும் சந்தித்தோம். இந் நன்னீர்த் திட்டத்தால் வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு பாதிப்புக்கள் இருக்கின்றன, இத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டாமென பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கைகள் வைத்தனர். கடற்தொழிலாளர் சமாசம் மற்றும் மக்களின் சம்மதம் இல்லாமல் இத்திட்டம் நிறைவேற்றப்படாது என விவசாய அமைச்சர் உறுதி அளித்தார். ஆனால் அதன்பின்பு இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் காராணமாக விவசாய அமைச்சினால் கடற்தொழிலாளர் சமாசம் கலைக்கப்பட்டது. அதன்பின்பு பிரதேச செயலாளர் தலைவராக்கப்பட்டு தங்களிற்கு சார்பான இருவரை பொறுப்புக்கு நியமித்தார்கள். இந் நியமனத்திற்குப்பிறகு அப்பிரதேச மக்களின் ஒப்புதல் பெறாமல் நன்னீர்த்திட்டத்தின் முதற்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

துளியம் : விவசாய அமைச்சர் மற்றும் முதலமைச்சரிடம் முறையிட்டும் இதற்குச் சரியான பதில் கிடைக்காதபட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தினிடம் முறையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாமே?

சுகிர்தன் : இதுவிடயமாக சில மாதங்களுக்கு முன்பு, வடமராட்சி கிழக்கு மக்கள் ஒன்றியத்தினர் கையளித்த மகஜரை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

துளியம் : ஆனால் இது தொடர்பாக இதுவரை சம்பந்தன்  அவர்கள் கருத்தேதும் தெரிவிக்கவில்லையே? அந்த மகஜருக்கு பதிலேதும் அனுப்பினாரா அல்லது முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சருக்கு இது தொடர்பான அறிவுறுத்தல் ஏதும் அனுப்பப்பட்டதா?

சுகிர்தன் : முதலமைச்சருக்கோ விவசாய அமைச்சருக்கோ ஏதாவது அறிவுறுத்தல்கள் சம்பந்தன் ஐயாவிடம் இருந்து அனுப்பப்பட்டதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அந்த மகஜருக்கு பதில் அனுப்பியிருந்தாலும் அந்த ஒன்றியத்துக்குத்தான் பதில் அனுப்பப்பட்டிருக்கும் எனக்கு வராது. அவர்களுக்கு பதில் அனுப்பப்பட்டதா இல்லையா என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் சம்பந்தன் ஐயாவில் 100 சதவீதம் நான் குற்றஞ்சாட்டத் தயாரில்லை. அவருக்கு வேலைப்பளு அதிகம். அத்துடன் ஒரு சிலர் அவருக்கு கட்டுப்படத் தயாரில்லை.

 துளியம் :நன்னீர்த் திட்டத்தால் எவ்வித பாதிப்பும் வராது என விவசாய அமைச்சர் கூறுகிறாரே?

சுகிர்தன் : உண்மையிலேயே இந்த நன்னீர்த் திட்டத்தால் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனக் கருதினால் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோர் மக்களின் சந்தேகங்களைப் போக்கித் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இப்படியான நன்னீர்த் திட்டங்கள் நடைபெறுகின்ற இடங்களுக்கு மக்கள் ஒன்றிய பிரதிநிதிகளை அழைத்துச் சென்று அவர்களின் சந்தேகங்களைப் போக்கி, அம்மக்களின் சம்மதத்துடன் இந்த திட்டத்தை ஆரம்பிக்கலாமே. மக்களின் எதிர்ப்பைமீறி சர்வாதிகாரத்தைப் பிரயோகித்து இத்திட்டம் நிறைவேற்றப்படுவதைத்தான் நான் எதிர்க்கிறேன். இதனால் என்மீது கட்சி நடவடிக்கை எடுத்தாலும் நான் அந்த மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.

துளியம் : சுமந்திரன் அவர்கள்தான் உங்களுக்கு மாகாணசபையில் போட்டியிடுவதற்கான அனுமதியைப் பெற்றுத் தந்தாகவும் அவரின் நிகழ்ச்சி நிரலில்தான் நீங்கள் செயற்படுவதாகவும் எழும் குற்றாச்சாட்டுக்கள் பற்றி உங்கள் கருத்து.

சுகிர்தன் :  முதலில் நான் ஒன்றைக் குறிப்பிடவிரும்புகிறேன் சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகிய நான் தன்னிச்சையாகத்தான் செயற்படுகிறேன், யாருடைய நிகழ்ச்சி நிரலிலும் செயற்படவில்லை. சுமந்திரன்தான் ‘சீற்’ பெற்றுத் தந்தார் என்பது தவறான தகவல். மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பு சுமந்திரன் எம்பியை பழக்கமில்லை. எனக்கு மாகாண சபை ‘சீற்’ வந்ததென்றால் அதற்கு முதல்காரணம் இளைஞர் அணிச் செயலாளராக இருந்த சிவகரன் அண்ணை அடுத்து மாவை ஐயா. குறிப்பிட்டுச்சொல்லக் கூடிய இன்னொருவர் உடுப்பிட்டித் தொகுதி அமைப்பாளர் பரஞ்சோதி.

அடுத்த மாகாண சபைத் தேர்தலை எடுத்துக்கொண்டால் ‘சீற்’ தந்தால் மட்டும் வெல்ல முடியாது. மக்கள் நலன்களைப் புறக்கணித்துவிட்டு நாம் தனிநபர் நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட்டால் மக்கள் எனக்கு வாக்களிக்கமாட்டார்கள். நான் யாருக்கும் பயந்தோ அல்லது எனது சுயநலத்துக்காகவோ சரியான செயற்பாட்டிலிருந்து விலகமாட்டேன்.

துளியம் : தண்ணீர்ப் பிரச்சினை தொடர்பான விடயத்தை சம்பந்தன் அவர்களிடம் எடுத்துச் சென்று சம்பந்தன், முதலமைச்சர், விவசாய அமைச்சர், நீங்கள் ஆகியோர் சந்தித்து இப்பிரச்சினைக்கு ஒரு சுமுகமாக தீர்வை எட்ட முயற்சி செய்வீர்களா?

சுகிர்தன் : நிச்சயமாக நான் திரும்பவும் முதலமைச்சரை இது தொடர்பாகச் சந்திப்பேன். அதில் தீர்வு கிடைக்காவிட்டால் சம்பந்தன் ஐயாவிடம் இந்த விடயத்தை எடுத்துச் சென்று கட்சி மட்டத்தில்பேசி நீங்கள் கூறியதுபோல் அனைவரும் ஒன்றுகூடி இதற்கு சுமூகமான தீர்வை பெற முயற்சி செய்வேன்.

http://thuliyam.com/?p=15539

இவர் ஏன் ஆர்பாட்டத்திற்கு போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் ?

ஊர் பெடி  என்று வாக்கு போட்டு அனுப்பினால்...?
அரசியல் பேசுறாரோ ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.