Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் எம்மை பிரிக்கிறது! வடக்கு முதல்வர் சுட்டிக்காட்டு!

Featured Replies

அரசியல் எம்மை பிரிக்கிறது! வடக்கு முதல்வர் சுட்டிக்காட்டு!
 
 
அரசியல் எம்மை பிரிக்கிறது! வடக்கு முதல்வர் சுட்டிக்காட்டு!
அரசியலானது எங்களை பிரித்து என்ன குறிக்கோளுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறக்க வைத்திருக்கிறது. எங்களுடைய தனித்துவமான அரசியல் கட்சி ரீதியான ஏதோ எண்ணங்கள் எம்மை பிரித்து வைத்திருக்கிறது என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணம் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் எந்தக் கட்சியில் இருந்தாலும் நோக்கம் வடமாகாணத்தை விருத்தி செய்வது என்று இருக்கும் போது அதற்கு இடமளிக்காது கட்சி ரீதியிலான பிரச்சினைகளில் ஈடுபடுவதால் எங்களுக்கிடையே பலவிதமான முரண்பாடுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
 
சில தபாப்தங்கள் முன் வடபகுதியில் இயங்கிய அலுவலகங்களும் ஏனைய மாகாணங்களில் இயங்கிய அலுவலகங்களுக்கு முன்மாதிரிகையாக விளங்கின. ஆனால் இன்றைய நிலையோ எம்மை கையாலாகாதவர்களாக மாற்றிவிட்டது. எந்தவொரு விடயத்தை எடுத்தாலும் மத்திய மாகாணம், வடமேல் மாகாணம், மேல் மாகாணத்தைக் கேட்டுப்பாருங்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்;டுள்ளோம். இதற்கு வலுவான காரணம் நாம் சேவையில் இணைந்த பின் தொடர்;ந்து கற்கின்ற  பழக்கத்தை அடியோடு மறந்த விடுகின்றோம். ஆகவே எந்த சேவையில் இருந்தாலும் கற்கின்ற பழக்கத்தை கைவிடாமல் தொடர்ந்தால் முன்பு இருந்த நிலைக்கு நாம் உயர்வு பெறுவோம் என்றார்.
 
  • தொடங்கியவர்
வடமாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும்: சி.வி.
 
26-02-2016 05:34 PM
Comments - 0       Views - 4

article_1456488393-9.jpgசொர்ணகுமார் சொரூபன்

'ஒரு சேவையில் இணைந்தால் அதிலே எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஏனோதானோ என இருந்து ஓய்வுபெறுவதைத் தவிர்த்து, எமது வடமாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும்' என்ற நோக்குடன் முன்னேற்றகரமாக செயற்படுங்கள் என

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இணையத்தள அங்குரார்ப்பணம் இன்று வெள்ளிக்கிழமை (26) யாழ்ப்பாணம் மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றபோது, இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்த பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கூறுகையில்,

'சில தசாப்தங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அல்லது வடபகுதியில் இயங்கிய அனைத்து அலுவலகங்களும் ஏனைய மாகாணங்களில் இயங்கிய அலுவலகங்களுக்கு அல்லது திணைக்களங்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கின. ஆனால் இன்றைய நிலையோ எம்மை கையாலாகாதவர்களாக மாற்றிவிட்டன.

எந்தவொரு விடயமாயினும் மத்திய மாகாணத்தை கேட்டுப் பாருங்கள் அல்லது மேல் மாகாணத்தைக் கேட்டுப் பாருங்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். இதற்கான வலுவான காரணம் நாம் சேவையில் இணைந்துவிட்ட பின் தொடர்ந்து கற்கின்ற பழக்கத்தை அடியோடு மறந்துவிட்டுள்ளோம்.

எமது முயற்சிகள் முழுவதும் பொருள் ஈட்டலிலும் குடும்பத்தை மேன்நிலைப்படுத்துவதிலும் மட்டுமே கழிந்து போகின்றன. சுயமேம்பாட்டில் நாட்டம் கொள்வதில்லை. இதனாலேயே இன்று பலர் என்ன சேவையில் இணைந்தார்களோ அதேசேவையில் இளைப்பாறும் வரை ஏனோதானோ என இருந்துவிட்டு ஓய்வு பெறுகின்றார்கள். இந்நிலைகளில் இருந்து மாற்றம் பெறுவது அத்தியாவசியமாகின்றது. எம்மவர்கள் முன்பு இருந்த நிலைக்கு உயர்வுபெற வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் பாடுபடவேண்டும். நாம் ஒவ்வொருவரும் இந்த வடமாகாணத்தைக் கட்டி எழுப்புவதில் ஏதோ ஒரு பங்கை வகிக்கின்றோம் என்ற எண்ணம் எம்மிடையே மேலோங்க வேண்டும். நாம் நினைத்தால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை.
யாழ். மாநகர சபையின் நிர்வாக அலகுகளில் காணப்படுகின்ற அல்லது ஏற்படக்கூடிய குறைபாடுகளை இனம் காண்பதற்கும் அவற்றை சீர்செய்வதற்குமான ஆலோசனைகளை வழங்குவதற்கென ஒரு ஆலோசனைக்குழு ஸ்தாபிக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்புக்குரியது.

இந்த ஆலோசனைக்குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் துறை சார்ந்த விற்பன்னர்களாக காணப்படுகின்றனர். பொறியியல், நிர்வாகம், திட்டமிடல், காணிப்பங்கீடு, கல்வி, மருத்துவம், கட்டடம், நீதி, நீர்ப்பாசனம் என பல்துறைசார் விற்பனர்களும் இதில் அங்கத்துவம் வகிப்பது போற்றப்பட வேண்டியது. இந்த 11 அங்கத்தவர்களின் தெரிவுகளும் முறையாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு கிடைக்கப்பெற்ற 42 விண்ணப்பதாரிகளை நேர்முகப் பரீட்சை மூலம் தேர்ந்தெடுத்தலினால் நடைபெற்றன.

மாநகர சபையின் பல வேலைத்திட்டங்கள் இன்று தடங்கியுள்ள நிலையில் இக்குழு தமது ஒத்துழைப்பை வழங்கி அவசரமானதும் அவசியமானதுமான கழிவகற்றல், மீள்சுழற்சி முறை ஆகிய விடயங்களில் உடனடிக் கவனம் செலுத்துவார்கள்' என எண்ணுகின்றேன் என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/166999/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%A3%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B5-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%B5-#sthash.VfcJhZvm.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

தமிழனைப் பிரித்தாளப் பயன்படும் தந்திரங்கள் 3 தான் ஐயா...

1. சாதியம்

2.மதம்.

3. அரசியல்.

இதனை விளங்கிக் கொண்டு தான் தமிழன் கவனமாக உலக ஒழுங்கை அவதானித்து.. நகர்ந்து செல்ல வேண்டி உள்ளது. இதனை தவிர்க்கவும் முடியாது. இதற்கு அஞ்சவும் கூடாது. tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.