Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தபாய குறித்து சர்ச்சைக்குரிய தகவல் ஒன்றை வெளியிட்டார் சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1450249319gotta.jpg
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில் நடந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் மரணம் குறித்து அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் சிங்க படைப்பிரிவில் பணியாற்றிய காலத்தில் படை அணி ஒன்றை அழைத்துக்கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்றதாகவும் அது போர் சம்பந்தப்பட்ட பயணம் அல்ல எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். 

அணியில் சென்ற சிப்பாய் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சுகவீனமுற்ற நேரத்தில், அந்த சிப்பாயை தரையில் இழுத்துச் செல்லுமாறு கோத்தபாய ஏனைய சிப்பாய்களுக்கு கட்டளையிட்டதாகவும் அவ்வாறு இழுத்துச் செல்லும் போது, கோத்தபாய நோய்வாய்ப்பட்ட அந்த சிப்பாயை காலால் உதைத்ததாகவும் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

இறுதியில் சுகவீனமுற்றிருந்த சிப்பாய் இறந்து போனார், இதனையடுத்து ஆத்திரமடைந்த ஏனைய சிப்பாய்கள் கோத்தபாயவை தாக்கியுள்ளனர். இவ்வாறான சம்பவம் ஒன்று நடந்தால், அதனுடன் சம்பந்தப்பட்ட அதிகாரியின் இராணுவ வாழ்க்கை அத்துடன் முடிந்து விடும். 

எனினும் அன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மகிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதியின் ஊடாக கொடுத்த அரசியல் அழுத்தம் காரணமாக கோத்தபாய இராணுவத்தில் தொடர்ந்தும் இருந்துள்ளார். 

நான் வெளியிட்டுள்ள இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்றால், ஊடகங்கள் முன்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நான் கோத்தபாய ராஜபக்சவுக்கு சவால் விடுக்கின்றேன்.

இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க என்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன எனவும் அமைச்சர் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmuyDSbSXmo4A.html

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா பல மனிதர்களுக்கு எமனாக இருந்துள்ளார். இவர் மனித குலத்திற்கு எதிரான ஒருவர் போலவே தெரிகிறது. tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகா எங்கப்பா?

பொன்சேகா ஆதாரம் இல்லாமல் கதைப்பதில்லை.

நீதி அமைச்சர் ராஜபக்சே இப்படி தான், இவரோட கொழுவி பிரச்சனைப்பட, ஒரு முக்கிய விஷயம் குறித்து தன்னிடம் ஆதாரம் உள்ளதாக பொன்னர்  சொல்ல, அவர் சவால் விட,  ஆதாரத்தினை புட்டுப் புட்டு  வைத்தபோது, அதிர்ந்து போய், இப்போது கம் என்று இருக்கிறார்.

Edited by Nathamuni

பொன்னர் கடைசியில ஒரு மாசலும் இல்லாமல் ஓடப்போறார்  

தான் முப்படைத்தளபதியாய் இருக்கேக்க இதட்கு நடவடிக்கை எடுக்காமல் தானே இருந்தவர். 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்

மைத்திரிக்கும் ரணிலுக்கும் வாலாட்ட தொடங்கியிருக்கிறார்

ஆனால் தமிழருக்கு நல்லது தான் நடக்கிறது...

5 minutes ago, விசுகு said:

இவர்

மைத்திரிக்கும் ரணிலுக்கும் வாலாட்ட தொடங்கியிருக்கிறார்

ஆனால் தமிழருக்கு நல்லது தான் நடக்கிறது...

இவர் இதை 2015 ஜனவரி 9ம் திகதியே சொல்லியிருக்கலாம். 

போர்க்குற்றவிசாரணையை திசை திருப்பவே இந்த விளையாட்டெல்லாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Surveyor said:

இவர் இதை 2015 ஜனவரி 9ம் திகதியே சொல்லியிருக்கலாம். 

போர்க்குற்றவிசாரணையை திசை திருப்பவே இந்த விளையாட்டெல்லாம். 

எம்மை பிரித்து

ஆளையாள் ஏவிவிட்டு

அடிபடவைத்து எம்மை அடக்கி ஆள்கிறார்கள்

இப்போ அவர்கள்.....???

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Surveyor said:

இவர் இதை 2015 ஜனவரி 9ம் திகதியே சொல்லியிருக்கலாம். 

போர்க்குற்றவிசாரணையை திசை திருப்பவே இந்த விளையாட்டெல்லாம். 

இல்லை அளவை,

இவரைக் கொண்டு வந்ததுக்கு முக்கிய காரணம் இருக்கே..

நாட்டை புலிகளிடம் இருந்து காத்த தம்மையும், இராணுவத்தினையும்  விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்று மஹிந்த கோஸ்டி கிளம்ப, ராணுவம் வேற, மஹிந்த கோஸ்டி வேற...

ராணுவ நலன்களை, அதன் தலைவராய் இருந்த நான் பார்ப்பேன் என்று, ராணுவத்தில் இருந்து வரக் கூடிய அழுத்தங்களை தவிர்க்க இவர் முன்னிலைப் படுத்தப் படுகின்றார்.

2 hours ago, விசுகு said:

எம்மை பிரித்து

ஆளையாள் ஏவிவிட்டு

அடிபடவைத்து எம்மை அடக்கி ஆள்கிறார்கள்

இப்போ அவர்கள்.....???

நிச்சயமாக, ஆனால் நமக்கு இதில் ஏதும் நன்மைபெறமுடியும் என்றாலும் எங்கடை ஆக்கள் விடமாட்டினம் அண்ணை.

 

1 hour ago, Nathamuni said:

இல்லை அளவை,

இவரைக் கொண்டு வந்ததுக்கு முக்கிய காரணம் இருக்கே..

நாட்டை புலிகளிடம் இருந்து காத்த தம்மையும், இராணுவத்தினையும்  விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்று மஹிந்த கோஸ்டி கிளம்ப, ராணுவம் வேற, மஹிந்த கோஸ்டி வேற...

ராணுவ நலன்களை, அதன் தலைவராய் இருந்த நான் பார்ப்பேன் என்று, ராணுவத்தில் இருந்து வரக் கூடிய அழுத்தங்களை தவிர்க்க இவர் முன்னிலைப் படுத்தப் படுகின்றார்.

இருக்கலாம், ஆனால் உறுதியாக கூற முடியாது. இரானுவத்துடன் பொன்னர் தொடர்பில் இல்லையே. அவருக்கு 2010ல் ஒரு கொமாண்டர் கூட ஆதரவழிக்கவில்லை. 2015 தேர்தலில் சிங்களவர்கள் அவரை ஒரு MP கூட ஆக்கலையே. எதிர்வரும் நாட்களில் தெரியும். 

 

Edited by Surveyor

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.