Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தூதுவளை சம்பல் 1

Featured Replies

2009 வைகாசி 12 ஆம் நாள் சர்வதேசத்தின் கரங்களுக்காகவும் இந்தியாவின் பாதுகாப்புக்காகவும் நாங்கள்  வானொலிகளை  திருப்பி  கொண்டு, அடுக்கப்பட்டு  கிடந்த துணிகளால்  ஆன மண் மூடைகளுக்கு  நடுவே  கிடந்த அந்த  பொழுது.  அவற்றையும் தொலைத்து விட்டு வெறும் நிலமே  பாதுகாப்பாக  படுத்திருந்த அந்த பொழுதுகள் சர்வதேசமே எங்கள் இருப்பை உறுதிப்படுத்த முடியாது தவித்து கொண்டிருந்த நாட்களில் ஒன்று. பல வல்லரசுகள் எம்மை ஒன்றிணைந்து அழித்தொழித்த நாட்களில் ஒன்று.  நாங்கள் வழமையான சில  பணிகளில்  கிடக்கிறோம். வழமை போலவே அந்த இரவும் எமக்கு விடிந்து போனது. செல்லும் ரவையும் விமானமும் எங்கள் தலைகளை குறி வைத்து பாய்ந்து வந்து கொண்டிருந்த ஒரு காலை பொழுது  அது. இதில ஒன்றை வெட்டுங்க அவடத்தில ஒன்றை வெட்டுங்க ” I ” வடிவ பதுங்குகுழிகளை அமைக்கும் தீவிர முயற்சியில் நாம் எமக்கான தந்தையின் கட்டளைகள் இவை அதையும் தாண்டி அம்மாவின் குரல் ஒலிக்கிறது. “எல்லோரும் சாப்பிடுவம் வாங்கோ”… கிடந்த அரிசியில் கிடைத்த உப்பை இட்டு காச்சப்பட்ட கஞ்சி ஒரு குவளை எமக்கு அம்மாவிடம்  இருந்து  கிடைக்கிறது. அதை  உண்பதற்காக  நாங்கள் ஆவல்  கொண்டிருந்தாலும், உயிர் பிரியும் அபாயம் எம்மை துரத்தி  கொண்டு  இருந்ததால் நாங்கள் அவ்விடத்துக்கு  மெதுவாகவே  நகர்கிறோம்.  தலை தூக்கி நடந்தால் பதுங்கி சுடும் குறியாளர்களின் தாக்குதல் நிட்சயமாக எம்முயிரை பறிக்கும் அல்லது எதிரியால்  தொடர்ந்து  சுடப்பட்டு  கொண்டிருந்த பீ.கே  என்று  சொல்லப்படுகின்ற  கனரக இயந்திர துப்பாக்கி ரவைகள் எம்மை  சாகடிக்கும். இத்தனைக்கும் மத்தியிலும் தொடர்கிறது எங்கள் உயிர் காக்கும் அந்த பதுங்கு குழி வெட்டும் பணி.

கிடைத்த  கஞ்சிக்காக  நாங்கள்  கூடி  இருந்த அந்த நேரம் எனது சிறிய தந்தையின் மகளின் குரல் கேட்கிறது. ” அந்த குரல் அண்ணா தூதுவளை சம்பல் தாறதா…?”  எப்பிடி அதை தயார் செய்தாள் என்பது யாரும் அறியாதது. ஆனால் அங்கே பற்றைக்குள் படர்ந்திருந்த தூதுவளையில் உப்பிட்டு தரமான சம்பல் ஒன்றை செய்திருந்தாள் சிறிய தந்தையின் மகள் அதை தொட்டு கொண்டு கஞ்சியை குடித்த போது உண்மையில் அந்த நேர மரண அச்சம் கூட காணாமல் போயிருந்தது.

எப்பிடி அது அவளால் முடிந்தது? சாவுக்கான மணித்துளி எண்ணப்பட்டு கொண்டிருந்த போதும் கஞ்சிக்கு சுவையாக அதை தயார் செய்ய அவளுக்கு எப்படி எண்ணம் வந்தது யாரும் அறியா நியம். பல வேளைகள் உண்ணாதிருந்த எமக்கு அது உண்மையில் அமிர்தமே…

அன்றைய பொழுதி சாய்ந்து இருள் சூழ்ந்த அந்த மணிப்பொழுது கேட்டுக் கொண்டிருந்த அல்லது பாய்ந்து வந்து கொண்டிருந்த உயிர் குடிக்கும் இரும்புத்துண்டுகளின் வரவில் சிறு ஓய்வு… பத்து பதினைந்து நிமிடங்கள் அது நீடித்திருக்கும். அதுவே எங்கள் மேல் விழப்போகும் சாவுக்கான குறியீடு என்று புரியவில்லை எமக்கு. சிறிது நேரம் விழி அயர்ந்து போனோம்

எங்கள் இருப்பிடத்துக்கு மேல் “வண்டு ” என்று எம்மால் குறியிடப்படும் வேவு விமானம் (beech craft ) இரைகிறது என் மனது நடக்க இருக்கும் அசம்பாவிதத்தை உணராமல் இல்லை தூங்கிய அனைவரையும் எழுந்து பாதுகாப்பு தேட சொல்லி உத்தரவிடுகிறேன் அனைவரும் தம்மால் முடிந்த பாதுகாப்பு நிலையான குப்பற படுத்து கொள்கிறனர். எந்த மறைப்புக்களும் அற்ற அந்த பற்றைகளை பாதுகாப்பரண்களாக கொண்டு  நாங்கள் அனைவரும் படுத்து கிடக்கிறோம். எங்கெங்கெல்லாமோ வீழ்ந்து  வெடிக்கும் எறிகணைகள் ரவைகளின் சத்தங்களை தாங்க முடியாது இரு  காதுகளும் திணறுகின்றன. நாங்கள்  இரு கைகளையும் நெஞ்சுக்கும் நிலத்துக்கும்  இடையே வைத்து கொண்டு  விரல்களால் இரு  காதுகளையும் பொத்திய படி படுத்து கிடக்கிறோம். இவை மட்டுமே அன்றைய நாட்களின் எமது பாதுகாப்பு  அரண்கள். சிங்களத்தின் முல்லைத்தீவு பிரதான ஆட்லறித்தளத்தில் இருந்து எறிகணைகள் ஏவப்பட்டு கொண்டிருந்த போது அந்த ஆட்லறி எறிகணை  எம் இடத்தை நோக்கி  வருகிறது. நான் படுத்திருந்த  அந்த  சிறு குழி போன்ற இடத்தில் இருந்து ஐந்து மீற்றர் தூரத்தில் நின்ற  மரம் ஒன்றில் பட்டு  சிதறிப்போகிறது.

மரத்தின்  முன்  பக்கமாக  அமைக்கப்பட்டு இருந்த ஒரு பதுங்குகுழி  இடம்காணாமல்  போகிறது அதற்குள்  இருந்த கிட்டத்தட்ட பத்துப்பேருக்கு  மேலான உறவுகள் உடல் சிதறி கிடப்பது எனக்கு புரிகிறது  ஆனாலும் என்னால் எழுந்து சென்று  பார்க்க  முடியாத நிலை மீண்டும் மீண்டும் எறிகணைகள்  வீழ்ந்து வெடித்து கொண்டிருந்ததால் தலை நிமிர்த்த  முடியவில்லை நான் படுத்தே  இருந்தேன். என் அருகில் படுத்திருந்த அனைவரும் பட்ட காயத்தின்  வேதனையில் முனக தொடங்குகிறார்கள்.  அங்கே ஒரு இரத்த வெள்ளம் உருவாகியது. அனைவரும் காயமடைந்திருந்தார்கள் என்னையும் ஒரு சகோதரனையும் தவிர. மீதி  இருந்தவர்கள் அனைவரும் காயப்பட்டிருந்தார்கள். தம்பி  எனக்கு  கட்டு  போடு  ஐயோ அம்மா வலிக்குது ….. என்று மாறி  மாறி  எழுந்த குரல்களுக்கு இடையே நானும் எனது சகோதரனும் ஓடிக்கொண்டிருந்தோம்  காயத்துக்கு கட்டு போட முடியவில்லை யாருமே யாரையும் பார்க்க முடியவில்லை அந்த அளவுக்கு அந்த இடத்தை  முழுவதும் புகை சூழ்ந்திருந்தது.  அழுகுரல்கள் வானளவு எழுந்தது. ஆனால் அந்த குரல்கள் எந்த வல்லரசுக்கும் கேட்கவே இல்லை… தொடர்ந்து கொண்டிருந்தது அந்த இடத்தை துடைத்தழிப்பதற்கான தாக்குதல்கள் …. அப்போது தான் அண்ணா……. அந்த குரல் தேய்ந்து கொண்டிருந்தது..

%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.