Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிக்கும் இதயத்தின் கவிதை 

Featured Replies

  • தொடங்கியவர்

காதலில் தோற்ற இதயம்.....
மெழுகுதிரி போன்றது......
பிறர் முன்னால் சிரித்து.....
தன்னை வருத்தும்.......!

இதோ 
தெருவில் வாடிக்கிடக்கிறது......
நீ தூக்கியெறிந்த பூச்செண்டு......
பாவம் அதை நான் பறித்து....
உனக்கு தந்து அதன் இன்பதை.....
பிரித்துவிட்டேன்..........!

இரண்டு மலைகளுக்கு.....
நடுவே வடியும் நீர்போல்.....
உன் நினைவுக்கும் கனவுக்கும்.....
நடுவில் நான் அழுகிறேன்.......!

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 198

  • Replies 67
  • Views 89.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 20.4.2017 at 4:56 PM, கவிப்புயல் இனியவன் said:

காதலில் தோற்ற இதயம்.....
மெழுகுதிரி போன்றது......
பிறர் முன்னால் சிரித்து.....
தன்னை வருத்தும்.......!

-----

இரண்டு மலைகளுக்கு.....
நடுவே வடியும் நீர்போல்.....

உன் நினைவுக்கும் கனவுக்கும்.....
நடுவில் நான் அழுகிறேன்.......!

கவிப்புயல்....  உங்கள் காதல் கவிதைகளை, 
முசுப்பாத்திக்காக... வாசிக்க ஆரம்பித்து...
உங்கள் ரசிகனாகி விட்டேன். :)

ஆனாலும்... அந்த நீல எழுத்தில் உள்ளவை...
இரட்டை அர்த்தம் பொதிந்தாக, எனது அறிவுக்கு தென்படுகின்றது. :grin:
மேலதிக விளக்கம்  தேவை. (சும்மா.... தமாசு) :D:

  • தொடங்கியவர்
8 hours ago, தமிழ் சிறி said:

கவிப்புயல்....  உங்கள் காதல் கவிதைகளை, 
முசுப்பாத்திக்காக... வாசிக்க ஆரம்பித்து...
உங்கள் ரசிகனாகி விட்டேன். :)

ஆனாலும்... அந்த நீல எழுத்தில் உள்ளவை...
இரட்டை அர்த்தம் பொதிந்தாக, எனது அறிவுக்கு தென்படுகின்றது. :grin:
மேலதிக விளக்கம்  தேவை. (சும்மா.... தமாசு) :D:

இரண்டு மலைகளுக்கு.....
நடுவே வடியும் நீர்போல்.....

உன் நினைவுக்கும் கனவுக்கும்.....
நடுவில் நான் அழுகிறேன்.......!

நிச்சயமாக சத்தியமாக இல்லை
என் ஆயிரகணக்கான கவிதைகளில் இரட்டை அர்த்த்தை நான் சேர்பதே இல்லை
நன்றி நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

:grin: :D:

  • 1 month later...
  • தொடங்கியவர்

ஆயிரம் கவிதையை ....
வலியோடு எழுதினாலும் ....
அரைவாசி வலியையே....
எழுத முடிகிறது .....!

கடுமையான வலியை....
எழுத மனம் துடிக்கும் ....
வரிகள் போட்டி போடும் ....!
ஆனால்இதயம் தடுக்கும் .....
அதற்குதானே உன்னை ....
வைத்திருந்த வலி புரியும் ....!

எல்லா வலிகளையும்.......
வரிகளாக கொட்டி விட்டால்....
இதயத்துக்கு என்ன வேலை......
உன்னை நினைக்காத இதயம்.....
இருந்தென்ன பயனென்று......
நினைக்கிறது போலும்........!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
மனதை கவரும்
காதலியாக பார்த்தேன்
முடியவில்லை ....!
 
இதயத்தின் வலியை....
கவிதையாக வடிக்கிறேன்....
கவிதையை நேசிக்கும்....
காதலியாக இருந்துவிடு.....
உயிரே ....!
 
உன்னை நினைத்து கவிதை....
எழுதும் போதுதானடி.....
எழுத்து கருவி கூட .....
கண்ணீர் விட முனைகிறது .....!!!
 
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
  • தொடங்கியவர்

நீ 
தந்த காதல் பிரிவுக்கு....
மிக்க நன்றி.....
நீ
இல்லாத போதும்.....
உன்னையே நினைக்கும்....
அளவுக்கு நினைவுகளை....
தந்துவிட்டு சென்றதற்கு........!

இதயத்தில் காயமில்லை.....
என்றாலும் வலிக்குதே.....
எங்கே கற்றுக்கொண்டாய்....
காயம் தராமல் வலியைதரும்....
வித்தையை.....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

நீ 
தந்த காதல் பிரிவுக்கு....
மிக்க நன்றி.....
நீ
இல்லாத போதும்.....
உன்னையே நினைக்கும்....
அளவுக்கு நினைவுகளை....
தந்துவிட்டு சென்றதற்கு........!

இதயத்தில் காயமில்லை.....
என்றாலும் வலிக்குதே.....
எங்கே கற்றுக்கொண்டாய்....
காயம் தராமல் வலியைதரும்....
வித்தையை.....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் 

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா... "ரைம்"  பாசு... பண்ணுங்க,  கவிப்புயல் இனியவன். :)

  • 1 month later...
  • தொடங்கியவர்
நீ
என்னை மறந்துவிடு......
என்று சொன்னபோதே.....
நான் இறந்து விட்டேன்....!
 
உன்னை பிரிந்த பின்
என் இறந்த உடலை ....
நானே பார்கிறேன் ....!
 
என்
இறந்த உடலுக்கு அருகில்
நீயும் நிற்பதை நான்
பார்க்கிறேன் .....!
 
இறந்தபின் என் ...
உடலை பார்ப்பதும் ....
நீ அருகில் இருப்பதையும் ....
உயிரோடுபார்க்கும் ........
முதல் மனிதன் ....
நான் தான் .....!
 
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

உன் கண்ணீல் மின்சார சக்தி
என் இதயத்தில் மின் அதிர்வு
ஏன் இப்போ மின் வெட்டு ..?

-------
நீ தரும் வலியை
யாருடன் பரிமாறுவேன்
உன்னிடம் கூட சொல்ல
முடியாமல் தவிக்கிறேன்

------
கவிப்புயல் இனியவன்
 

  • 1 month later...
  • தொடங்கியவர்

என் 
மூச்சோடு மூச்சாய்......
இருந்தவளை காணவில்லை....
என் மூச்சு காற்றே.....
என்னவளை கண்டுபிடி.....!

எப்படி 
அவளை கண்டுபிடிப்பேன்.....
என்று அஞ்சாதே மூச்சே......
இந்த பிரபஞ்சத்தில்.......
என்னவளின் 
மூச்சு கண்ணீரோடு.......
கண்ணீரோடு கலந்திருக்கும்....!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன் 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தகவல் அறியும் சட்டத்தின்......
மூலம்  கேட்கப்போகிறேன்......
நீ என்னை காதலிக்கிறாயா....?

தேச வழமை சட்டத்தில்...
உன்னை கைது செய்ய முடியது.....
தேக வழமை சட்டம் இருந்தால்.....
உன்னை கைதுசெய்யனும்......
இதயத்தை திருடிய குற்றத்துக்கு.....!

&
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்
கனவிலும் .........
நினைவாலும் ......
கொல்வது  போதாதென்று ......
மௌனத்தாலும் ......
கொல்கிறாய் ..........
தயவு செய்து நிஜமாய்......
கொண்றுவிடு .........!
 
என் குறைந்த பட்ச....
கோரிக்கை நீ வேண்டும் .....
அதிக  பட்சகோரிக்கை .....
நீயே  வேண்டும் ........
முடியாதுபோனால் ........
உன் காதல் வேண்டும் .....!
 
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்  
  • தொடங்கியவர்

நீ....
காதலை.... 
மறுத்த அந்த நொடி.....
இதயம் கல்லறை......
சென்றுவிட்டது.....!

மூச்சு மட்டும்.......
பேச்சுக்காக இயங்குது.....
தோற்றுப்போனாலும்.....
தேடிக்கொண்டிருக்கிறேன்.....
உன் அழைப்புக்காய்.....!

எனக்காக ஒருமுறை....
வந்துவிட்டு போ......
இல்லை வந்து என்னை.....
கொண்றுவிட்டு போ....!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
பதிவு -201
கவிப்புயல் இனியவன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

நீ ....
என்னை விட்டு....
பிரிந்து சென்று....
விட்டாய்.......

உனக்கும் சேர்த்து.....
என் இதயம் வலிக்கும்...
வலியை யார் அறிவர்......?

என்னிடம்.....
கொட்டிக்கிடந்த.....
காதலையே உன்னால்.....
புரிந்துகொள்ள 
முடியவில்லை.......
வலியையா .....
புரியப்போகிறாய்.......?

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

என்னை 
மன்னித்துவிடு .....
என்று சொல்லும்போதே.....
நான் இறந்துவிட்டேன்.......!

இறைவா 
மரணத்தை கொடு......
அப்போதென்றாலும் ......
அருகில் வருகிறாளா ..........
பார்ப்போம்...!

இதயத்தை .....
உயிரோடு புதைத்தேன்......
நீ எனக்கு இல்லையென்று.....
முடிவாகியபின்........!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பதிவு - 203

  • 1 month later...
  • தொடங்கியவர்

பட்ட மரத்தில்
பட்டாம் பூச்சிக்கு...
என்ன வேலை....?

என்னை.....
பட்ட மரமாக்கி விட்டாய்.......
இப்போ........
பறக்கத்துடிக்கும்
பட்டாம் பூச்சி -நீ.........!

கனவுகளுக்கும்.....
கற்பனைகளுக்கும் ......
இந்த மரம் பொருத்தமில்லை ...
தயவு செய்து.......
மரத்தை மாற்றிவிடு ...!

பிரிந்து சேரத்துடிக்கும் 
இதயம் ............
உடைந்த பானையின்.....
முடிந்த கதைதான்....!

@
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
 

  • தொடங்கியவர்

மறக்க நினைக்கிறேன்
பலவற்றை ...
நினைக்க விரும்புகிறேன்
சிலவற்றை....!

மறக்கவே முடியாதவை
நினைக்கவே முடிந்தவை
ஒன்றே ஒன்றுதான்
நட்பு ....!

தோள் கொடுக்க....
உயிர் தோழன் நீ....
இருக்கும் வரை...
தோல்விகள்........!

ஆயிரம் ஆயிரம்.....
தோன்றினாலும்......
துவண்டு விழமாடேன்
உன் சுட்டு விரல்
எனக்கு சுட்டிக்காட்டும்
வெற்றியை ....!

@
கவிப்புயல் இனியவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.