Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெங்களூருவில் அவமதிக்கப்பட்ட இளையராஜா..! என்ன காரணம்?

Featured Replies

பெங்களூருவில் அவமதிக்கப்பட்ட இளையராஜா..! என்ன காரணம்?

IlayarajaBangaloreairport1.jpg



பெங்களூரு விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் இசையமைப்பாளர் இளையராஜா, பாதுகாப்பு அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவருக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்கள் ஏராளம். இளையராஜா கோயிலுக்கு சென்றுவிட்டு தனது குடும்பத்தினருடன் சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, இளையராஜாவை தடுத்து நிறுத்திய அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரது பையை சோதனை செய்துள்ளனர்.

அப்போது, பையில்  தேங்காய், விபூதி போன்ற பிரசாதப் பொருட்கள் இருந்ததால், அவற்றை அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி, பிரசாதப் பொருட்களை அங்கேயே விட்டுச் செல்ல அதிகாரிகள் நிர்ப்பந்தித்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த இளையராஜா, பிரசாதப் பொருட்களை விட்டுச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இளையராஜாவை அங்கிருந்த அதிகாரிகள் காத்திருக்க வைத்தனர்.

அப்போது, உடனிருந்த இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, இந்த சம்பவத்தை தனது செல்போனில் படம் எடுத்ததோடு, அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளார். சகப்பயணிகளும் இளையராஜா குறித்து அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து கார்த்திக் ராஜா செல்போனில் இருந்த படத்தை நீக்கிய அதிகாரிகள், பின்னர் பிரசாதப் பொருட்களுடன் செல்ல அனுமதித்துள்ளனர். சுமார் ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின்னர் இளையராஜா அங்கிருந்து சென்றுள்ளார். இதனை உறுதி செய்துள்ள கார்த்திக் ராஜா, இந்த செயலுக்காக விமான நிலைய அதிகாரிகள் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, பெங்களூரு விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக இளையராஜா பற்றி சர்ச்சைகள் பல எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/64949-why-ilayaraja-insulted-in-bangalore-airport.art

  • தொடங்கியவர்

இது ஒரு சாதாரண விஷயம்: விமான நிலைய சோதனை குறித்து இளையராஜா விளக்கம்

 

ilayaraja_2276613f.jpg
 

"இது ஒரு சாதாரண விஷயம். நான் உங்களைப் போல் சாதாரணமானவன்" என்று விமான நிலைய சோதனை சர்ச்சை குறித்து இளையராஜா விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இளையராஜா கொண்டுவந்த உடைமைகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தன‌ர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல‌றிந்த விமான நிலைய பாதுகாப்பு உயர் அதிகாரிகள், சோதனை நடத்தியதற்கும், காத்திருக்க வைத்ததற்கும் இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டனர். அதிகாரிகள் வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து சக‌ பயணிகள் கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்திற்கு பெரும் எதிர்ப்பு உண்டானது. இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இச்சம்பவம் தொடர்பாக இளையராஜா, "இது ஒரு சாதாரணமான விஷயம் தான். பாதுகாப்புக்காக சோதனை செய்வது அனைத்து இடங்களிலும் நடக்கும் சாதாரண விஷயம் தான். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதை விட சித்திரவதை நடந்த விஷயங்களை எல்லாம் நான் கடந்து போயிருக்கிறேன். அதெல்லாம் ஒன்றுமே இல்லை. அவர்கள் அவர்களுடைய பணியை செய்யவில்லை என்றால் இந்தியா, இந்தியாவாக இருக்காது.

தேங்காய் பிரசாதம் கொண்டு சென்ற பையைத் திறக்கச் சொன்னார்கள். அவ்வளவு தான். திறந்து காட்டினேன். இதனை என்னுடைய ரசிகர்கள் பார்த்துவிட்டு, என்னைத் தொடர்பு கொண்டு அனுதாபத்தையும், கோபத்தையும் தெரிவிக்கிறார்கள். தேவையில்லாத விஷயங்களில் தங்களது நேரத்தை ஏன் இந்திய மக்கள் வீணாக்குகிறார்கள் என்பதில் எனக்கு பெரிய வருத்தம்.

ஏனென்றால் இந்த சோதனையை நான் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்து இங்கு பணியாற்றுபவர்கள் சாப்பாட்டைப் பார்க்க முடியாது, பணிக்கு நேரத்துக்கு வர வேண்டும். அந்த மாதிரியான எரிச்சலில் கூட இருப்பார்கள். அவர்களுக்கு யார், யாரென்று தெரியாது. இந்தமாதிரியான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இது ஒரு சாதாரண விஷயம். நான் உங்களைப் போல் சாதாரணமானவன். எந்த இடத்தில் எப்படி நடத்துக் கொள்ள வேண்டுமோ, அப்படி நடக்கட்டுமே. அவர் என்னை சோதனை செய்தவுடன் பெரியவனாவதும், நான் சிறியவனாவதும் கிடையவே கிடையாது. நான் எப்பவும் ராஜா தான். அந்த இடத்தில் அவனுடைய வேலையை அவன் செய்கிறான். அதனை நான் அனுமதிக்கிறேன், ஒத்துழைக்கிறேன். அவனும் என்னோடு சண்டையிடவில்லை, நான் சண்டையிடவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/இது-ஒரு-சாதாரண-விஷயம்-விமான-நிலைய-சோதனை-குறித்து-இளையராஜா-விளக்கம்/article8704128.ece?homepage=true

தேவை என்றால் ஸ்கான்னிங் இயந்திரத்தில் கோவில் பிரசாதமான தேங்காயை பரிசோதனை செய்துவிட்டு அனுப்பியிருக்கலாம். வட இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் இங்கிதம் தெரியாதவர்கள், மூளையற்றவர்கள், பொது அறிவற்றவர்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இவர்கள் தான் சட்டத்தை மதிக்கப்பழகவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பாதி தேங்காய்க்கு இவ்வளவு டாச்சர் குடுத்திருக்கிறாங்கள். Rofl

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.