Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துருக்கி வம்சாவளி ஜெர்மானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு

Featured Replies

துருக்கி வம்சாவளி ஜெர்மானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு

 

துருக்கிய வம்சாவளியை சேர்ந்த 11 ஜெர்மானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல்துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

160516115349_germany_police_640x360_gett

 

 ஜெர்மனி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய ஆர்மேனியர்கள் இனப்படுகொலை பற்றிய தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தால் துருக்கிய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்

முதல் உலகப் போரின்போது பல்லாயிரக்கணக்கான ஆர்மேனியர்கள் கொல்லப்பட்டதை இனப்படுகொலை என பிரகடனப்படுத்தும் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்ததற்காக இவர்கள் அச்சுறுத்தல்களை பெற்ற பின்னர் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

“எங்கிருந்தாலும் உன்னை கண்டறிவோம்” அல்லது “உன்னுடைய ஜெர்மானிய நண்பர்கள் மறந்துவிடலாம். ஆனால் நாங்கள் மறக்கமாட்டோம்” என்று தெரிவிக்கின்ற அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை பெற்றுள்ளதாக பசுமை கட்சியின் தலைவர் செம் ஒஸ்தமிர் பிராங்போட்டர் அல்ஜிமெயின் என்ற செய்தித்தாளிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் துருக்கியில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று ஜெர்மானிய வெளிறவு துறை எச்சரித்துள்ளது.

ஆர்மேனியர்களின் படுகொலையை ஓர் இனப்படுகொலை என்று பிரகடனம் செய்யும் ஜெர்மனி நாடாளுமன்றத் தீர்மானமானது, அதனை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்ளாத துருக்கி அரசை கோபமடைய செய்துள்ளது.

http://www.bbc.com/tamil/global/2016/06/160612_germanyparliment?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறவுகள்

உலகநாடுகள் தமது சுயநலன் சாராது மக்கள் நலன் சார்ந்து (அது எந்த இனமாயினும்) செயற்படாதவரை இதுபோன்ற அழிவுகள் தொடர்கதையே. முதலாம் உலகப்போரின் அவலம், இரண்டாம் உலகப்போர் முடிவுத் தீர்மானம்  என்பவற்றின் பின்னரும் ஏன் இன்றுவரை இனப்படுகொலை நடக்கிறது.  ஆர்மேனியா முதல் தமிழீழம்வரை தொடர்வதற்கான கரணியகர்த்ததாக்களும் இவர்களே. 


துருக்கியரசு குர்திஸ் மக்களைக் கொல்வதைத் தடுக்காது, அரசுக்கெதிராகப் போராடிய தலைவரைக் கைது செய்ய உதவிய மேற்கினது இரட்டை முகமே சான்று. இன்று அதனையே தமிழீழத்திலும் செய்து முடித்துள்ளது. மனித அழிவு எந்த வடிவில் வந்தாலும், அதனைத் தடுக்கவேண்டும் என்று முதலில் நீங்கள் தீர்மானத்தை எடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, nochchi said:

உலகநாடுகள் தமது சுயநலன் சாராது மக்கள் நலன் சார்ந்து (அது எந்த இனமாயினும்) செயற்படாதவரை இதுபோன்ற அழிவுகள் தொடர்கதையே. முதலாம் உலகப்போரின் அவலம், இரண்டாம் உலகப்போர் முடிவுத் தீர்மானம்  என்பவற்றின் பின்னரும் ஏன் இன்றுவரை இனப்படுகொலை நடக்கிறது.  ஆர்மேனியா முதல் தமிழீழம்வரை தொடர்வதற்கான கரணியகர்த்ததாக்களும் இவர்களே. 


துருக்கியரசு குர்திஸ் மக்களைக் கொல்வதைத் தடுக்காது, அரசுக்கெதிராகப் போராடிய தலைவரைக் கைது செய்ய உதவிய மேற்கினது இரட்டை முகமே சான்று. இன்று அதனையே தமிழீழத்திலும் செய்து முடித்துள்ளது. மனித அழிவு எந்த வடிவில் வந்தாலும், அதனைத் தடுக்கவேண்டும் என்று முதலில் நீங்கள் தீர்மானத்தை எடுங்கள்.

வல்லவர்கள் என்றும் தமக்கு சாதகமாகவே தாயக்கட்டைகளை உருட்டுவார்கள். ஒரு காலத்தில் குர்திஷ் அழிவுக்கு காரணமானவர்கள் இன்று மறைமுகமாக ஆயுதம் வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.