Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகாண முடியாது ஜனாதிபதி கூறுகிறார்

Featured Replies

பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகாண முடியாது ஜனாதிபதி கூறுகிறார்

 

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சில முக்கிய கேள்விகளுக்கு  விடையளிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? ஜனாதிபதி தேர்தல் ஏன் இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டது? ஆகிய கேள்விகளுக்கு கடந்த அரசாங்கம் இதுவரையில் பதிலளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக விவகாரங்களில் இலங்கை என்ற தலைப்பில் நேற்று முன்தினம் கொழும்பில்  நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

be0a02c3929d386bbfee80169a2d1548_XL.jpg

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

ஜனாதிபதி அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

உள்நாட்டு ரீதியிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.இந்தப் பிரச்சினைகள் சர்ச்சைகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியாது.கடந்த காலங்களில்  உலகின் பலம்பொருந்திய நாடுகளும் தலைவர்களும் இலங்கை மீது நன்மதிப்பு கொண்டிருக்கவில்லை.   

இந்தப் பிரச்சினையிலிருந்து நாட்டை மீட்டு எடுப்பதற்கு எமது அரசாங்கம் முயற்சித்த போது சர்வாதிகாரிகள் நாட்டை தாம் காட்டிக் கொடுப்பதாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

சந்தர்ப்பவாதிகள் இலங்கையில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாகவும் போலியான பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.இலங்கையின் வெளிவிவகார கொள்கை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றது.  

எவ்வாறெனினும் எந்தவொரு நபரினதும் கொள்கைகளின் அடிப்படையில் இலங்கையில் ஆட்சி நடத்தப்படாது.இலங்கை மீது தற்போது சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதில்லை.   

எனினும், இலங்கையில் மனித உரிமைகள் பேணப்பட வேண்டுமெனவும் சட்டம் ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் சர்வதேசம் விரும்புகின்றது என்றார். 

http://www.virakesari.lk/article/7558

  • கருத்துக்கள உறவுகள்

maithripala-srisenaஅனைத்துலக ஆதரவுடனேயே எதிர்காலத்தை வெற்றி கொள்ள முடியும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சிறிலங்காவின் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான பயணம்  எனும் தொனிப்பொருளில் நேற்று பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில், உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

”கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எமது வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பாக பாராட்டுக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. அரசியல் எதிராளிகளால் அவ்வாறு முன்வைக்கப்படும் பெரும்பாலான விமர்சனங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

ஐ.நா தலைமையிலான அனைத்துலக அமைப்புக்கள், அதேபோன்று உலகில் உயர் பொருளாதார நிலையைக் கொண்ட நாடுகளுடன் உள்ள தொடர்புகளை சில அரசியல் எதிராளிகள் பிழையான விதத்தில் விமர்சிக்கின்றனர்.

நான் நாட்டைக் காட்டிக் கொடுப்பதாகவும், உலகின் பலமிக்க நாடுகளுக்கு எமது நாட்டை ஆக்கிரமிக்க சந்தர்ப்பத்தை வழங்குவதாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் நிராகரிக்கிறேன்.

ஒன்றரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் உலகில் எந்தவொரு நாடோ அல்லது அனைத்துலக அமைப்புக்களோ எம்மீது எந்தவிதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை. அத்தோடு எந்தவிதமான அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை. உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.

வெளிநாடுகளுடன் பேச்சு நடத்தும் போது அவர்கள் பொதுவான கருத்தினையே முன்வைக்கின்றனர். அதாவது ஜனநாயகத்தை உறுதி செய்தல், மக்களின் சுதந்திரத்தை உறுதி செய்தல, மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்தல் ஊடகத்துறை உட்பட அனைத்து துறைகளினதும் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமென்றே வலியுறுத்துகின்றனர்.

நாம்  போரை பௌதீக ரீதியில் முடித்து வைத்துள்ளோம். ஆனால் மீண்டுமொரு போர் நாட்டில் ஏற்படுவதை தடுக்க எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறானதொரு நிலையில் மீண்டுமொரு போர் ஏற்படுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் கடுமையான சவால்களுக்கு மத்தியில் முன்னெடுத்து வருகிறோம்.

அண்மையில் வவுனியா சென்றிருந்தேன். அங்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் தமது நலன்களை கவனிப்பதில்லை என பிரச்சினைகளை முன்வைத்தார்கள். இதனை பார்க்கும்போது எவரும் திருப்தியுடன் இல்லை என்பது புலனாகின்றது.

கடந்த ஆட்சிக் காலத்தில் வடக்கில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டாலும் அனைத்தும் பௌதீக ரீதியானதாகவே இருந்தன. மக்களின் அடிப்படை வசதிகள், பாடசாலை அபிவிருத்திகள், ஆசிரியர் பற்றாக்குறை நீக்கம் உட்பட தேவையான விடயங்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை.

அனைத்துலக நாடுகளுடன் நட்புறவுடன் செயற்படுவதே எனது கொள்கை. இதன்மூலம் நாட்டின் எதிர்காலத்தை வெற்றி கொள்ள முடியும். மீண்டுமொரு முறை போர் ஏற்படாதிருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பேன்.

தேசிய நல்லிணக்கம், நல்லாட்சி என்ற வசனங்களின் அர்த்தத்தை எமது நாட்டில் சிலர் புரிந்து கொள்வதில்லை. எனவேதான் அதனை ஞானமற்றதாக விமர்சிக்கின்றனர்.

தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்துவதன் மூலமும், நல்லாட்சிக் கொள்கையை நிறைவேற்றுவதன் மூலமுமே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது.

உலகில் எந்தவொரு நாடும் இன்று தனித்து முன்னேற்றம் காண முடியாது. அனைத்துலக தொடர்புகளை பலப்படுத்துவதன் மூலமே ஒருநாட்டின் முன்னேற்றம் தங்கியுள்ளது. எனவே அனைத்துலக அமைப்புக்களுடனான தொடர்புகள் மிக முக்கியமானதாகும்.

இரண்டு ஆண்டுகாலம் பதவியில் இருப்பதற்கு சந்தர்ப்பம் இருந்தும் முன்னாள் அதிபர் ஏன் முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத்தினார் என்பது தொடர்பில் இன்றுவரை தெளிவான பதில் கிடைக்கவில்லை.

ஐ.நா. உட்பட வெளிநாடுகள் மற்றும் அனைத்துலக அமைப்புக்களுடன் தொடர்புகள் வீழ்ச்சி கண்டிருந்தனஅனைத்துலகம் எம்மை ஏற்றுக்கொள்ளாது ஒதுக்கி வைத்திருந்தது. பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருந்தது.

போர் முடிவுற்றாலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் ஏற்படவில்லை. இனங்களுக்கிடையேயான சந்தேகங்களே அதிகரித்தன. இலங்கையர்களிடையே சகோதரத்துவம் இருக்கவில்லை.

நாடு என்ற ரீதியில் இவ்விடயம் தொடர்பில் எமக்கு விமர்சனங்கள் உள்ளன. இந்த அனைத்து சவால்களுக்கு மத்தியில் சிறப்பானதொரு நாட்டை கட்டியெழுப்பவே நாம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.

மீண்டும் ஆட்சிக்கு வரும் மனோபாவத்துடன் எதனையும் முன்னெடுக்கவில்லை. நாட்டுக்குத் தேவையானதை வழங்குவதே எனது திட்டம்.

குறுகிய காலத்திற்குள் எதிர்பார்க்கும் பெறுபேறுகள் கிடைக்காமல் போகலாம். ஆனால் அனைத்துலக ரீதியில் எந்த இடத்தில் இருந்தோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் உள்ள நெருக்கடியை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அந்த நெருக்கடியை நாம் எப்படியாவது வெற்றிகொள்வோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2016/06/15/news/16809

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.