Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டு மாதங்களில் சிறிலங்காவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

electronic National Identity Cardசிறிலங்காவில் புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் திட்டம் இன்னும் இரண்டு மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

எட்டு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்துக்கு, வரும், செவ்வாயன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெறப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர்  சரத் குமார தெரிவித்தார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள அடையாள அட்டையில், அனைத்து கைவிரல் அடையாளங்களையும்  உள்ளடக்கிய உயிரியல் தகவல்கள் மற்றும் ஒளிப்படம் அடங்கிய இலத்திரனியல் அட்டை ஒன்று இருக்கும்.

65 வயது வரை, ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இது புதுப்பிக்கப்படும். 65 வயதுக்குப் பின்னர் புதுப்பிக்கத் தேவையில்லை.

இந்த அடையாள அட்டையில் ஏதேனும் மோசடிகள் செய்தால், அளிக்கப்படும் தண்டனையும் மூன்று மாதச் சிறைத்தண்டனையில் இருந்து ஒரு ஆண்டு சிறைத்தண்டனையாக அதிகரிக்கப்படும். அத்துடன் அபராதமும் 5 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படும்.

இந்த அடையாள அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விபரங்களும் பதிவு செய்யப்படும். எனினும் அது கட்டாயமானதல்ல. இந்த தரவுகள், குடிவரவுத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைக்கப்படும்.

இந்த அடையாள அட்டையில் உள்ள தரவுகள், அடையாள அட்டையின் உரிமையாளர் அல்லது நீதிமன்ற உத்தரவின் மூலம் கோரப்பட்டால் மட்டுமே வெளியிடப்படும்.

புதிய அடையாள அட்டைக்கு கிராம அதிகாரிகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதேச செயலக அதிகாரிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2016/06/19/news/16916

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பிரஜைகளின் ஆள் அடையாளத்தினை உறுத்திப்படுத்துவதற்கான தொழில் நுட்ப அட்டை.

ஆட்பதிவுத் திணைக்களமானது அனைத்து இலங்கைப் பிரஜைகளினதும் ஆள் அடையாளத்தினை உறுதி செய்யும் முகமாக, தொழில்நுட்ப மாற்றத்துடன் இணைந்து சிறப்பான மாற்றங்களுடன் தனது நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மிக அண்மித்த காலப் பகுதிக்குள் இடைக்கால அடையாள அட்டையானது  புதிய தொழில் நுட்பங்களுடன் சிவில் விமான சேவையின் தரத்திற்கு அமையவும், மிகவும் சூட்சகமான பாதுகாப்பு உத்திகளுடனான அட்டை ஒன்றினை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது நீண்ட கால செயல்திட்டத்தின் முதற்கட்டமாவதோடு, உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பிரஜைகளின் ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள தொழில் நுட்பத்தினை இலங்கையர்களுக்கும் அறிமுகப்படுத்தும் பொருட்டு மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டமாகும்.

1972 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம், முதல் முறையாக கையால் எழுதப்பட்டு விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டைக்காகவும், மற்றும் 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி முதல் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலம் கணனித் தொழில் நுட்ப முறையினூடாக அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்ற அடையாள அட்டைக்காகவும், இன்று வரை பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உள்ளீட்டு அட்டை என்ற பாரம்பரிய அம்முறையிலிருந்து விலகி  புதிய தொழில் நுட்ப அட்டையின் மூலம் புதிய திருப்பத்துடன் இந்த இடைக்கால தேசிய அடையாள அட்டையினை விநியோகிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கு பிரஜைகளின் ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்துவதற்காக அட்டையில் அச்சிடப்படும் தரவுகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அச்சிடப்படுவதற்கும், சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பின் தரத்திற்கு அமைவாக புகைப்படத்தினை உள்ளடக்கிய அடையாள அட்டையினை விநியோகிப்பதற்கும் நடவடிக்கையினை மேற்கொள்வதுடன், இதன் மூலமாக ஆள் அடையாளத்தினை மிகச் சரியாகவும் நம்பகத் தன்மையுமானதாக உறுதிப்படுத்தக்கூடிய வேலைத்திட்டமாகும் என்பது ஆட்பதிவுத் திணைக்களத்தின் நம்பிக்கை ஆகும்.
  New-Id.png
http://www.rpd.gov.lk/Templates/news - tamil.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.