Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

800 பயனாளிகளுக்கு யாழில் வீடமைப்புக் கடன்.

Featured Replies

800 பயனாளிகளுக்கு யாழில் வீடமைப்புக் கடன்.
 
 
800 பயனாளிகளுக்கு யாழில்  வீடமைப்புக் கடன்.
யாழில் 800 பயனாளிகளுக்கு, வீடமைப்பு கடன் திட்டத்தின் கீழ் அமைச்சர் சஜித் பிரேமதாசவால் காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.
housingn-loan-in-kilinochi-4.jpg
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், யாழ்.மாவட்ட முகாமையாளர் ரவீந்திரனின் தலைமையில், யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
 
‘2025ஆம் ஆண்டு அனைவருக்கும் வீடு’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் யாழ்.மாவட்டத்தில், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் தமது வீடுகளை அமைப்பதற்காகவும், பழைய வீடுகளை திருத்துவதற்காகவும், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அடிப்படையில் 800 பேர் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கு  50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை வீடமைப்பு கடன் திட்டங்கள் வழங்கப்பட்டன.
housingn-loan-in-kilinochi-3.jpg
 
இந்த நிகழ்வில், சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

http://onlineuthayan.com/news/14557

  • தொடங்கியவர்
ஐக்கியமாக வாழ்வதற்கு தமிழர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்-சஜித்
 
 
ஐக்கியமாக வாழ்வதற்கு தமிழர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்-சஜித்
 நாங்கள் அனைவரும் ஒன்றாக ஐக்கியப்பட்டு வாழ்வதற்கு தமிழ் மக்கள் தமது ஒத்துழைப்புக்களைத் தரவேண்டும்  என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 800 பயனாளிகளுக்கான வீட்டுக் கடன் திட்டம் வழங்கும் நிகழ்வு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-
 
”நான் யாழ்ப்பாணத்திற்கு வரும்போது இந்த வீதியின் இரு மருங்கிலும் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை பார்த்துக்கொண்டு வந்தேன். இந்த நல்லாட்சி அரசில் அடுத்து வரும் ஐந்து ஆறு வருடங்களில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பாடுபடுவேன்.
 
இந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் பதினைந்து பிரதேச செயலர் பிரிவுகளில், 435 கிராம சேவையாளர் பிரிவில் ஆயிரத்து 406 கிராமங்கள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு கிராமங்களிலும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வழிகாட்டலில் வீடமைப்பு குழுக்களை அமைக்கவுள்ளோம்.
இந்த வீடமைப்பு குழுக்கள் ஊடாக, அனைவருக்கும் இல்லம் வழங்கும் செயற்திட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.
 
எனது தந்தையாரால் எண்பத்திமூன்று வீடமைப்பு திட்டங்கள் யாழில் நிறுவப்பட்டன. எமது ஆட்சியில் அதனையும் கடந்து இதற்கு அதிகமான வீடமைப்புத் திட்டங்களை நிறுவி வழங்கவுள்ளோம் என்பதனை உறுதியுடன் கூறுகின்றோம். நூறு ஏக்கர் அரச காணியை இனங்காணுங்கள். அந்த அரச காணியில் 625 வீடுகள் அமைத்து யாழ்.மக்களுக்கு வழங்க தயாராக இருக்கின்றோம் என, யாழ்.மாவட்ட அரச அதிபரிடம் கூறியுள்ளோம்.
 
இந்த நேரத்தில் அமைச்சர் விஜயகலாவிற்கும் ஒரு ஆலோசனையை வழங்குகின்றேன். நீங்கள் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிற்கும் சென்று மக்கள் தேவைகளை இனங்கண்டு, அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட முகாமையாளர் ஆகியோரிடம் கலந்துரையாடி மக்களுடைய வீட்டு தேவைகளை எம்மிடம் முன்வையுங்கள். இந்த மக்கள் அனைவருடைய வீட்டுத் தேவைகளை நிறைவு செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்து கொள்கின்றேன்.
 
கடந்த 2015ஆம் ஆண்டு 8ஆம் திகதி, பாழடைந்த சீர்குலைந்த ஒரு தேசமே எங்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆட்சியாளர்கள் முழுமையாக இந்த நாட்டை சீரழித்துத்தான் கைவிட்டு சென்றார்கள். மக்கள் இன ரீதியாக, மத ரீதியாக, மொழி ரீதியாக பிளவு பட்டிருந்தார்கள். ஆனால் இன்று அவ்வாறல்ல, இன மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக இன்று ஒரே குடையின் கீழ் திரண்டு இருக்கின்றோம். எனவே இந்த நல்லாட்சியை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று கருதுகின்றோம். எனினும் சிலர் உங்கள் மனங்களில் நச்சு விதைகளை விதைக்கக் கூடும். அந்த நச்சு விதைகளை விதித்ததன் பயனாகத்தான் கடந்த முப்பது ஆண்டுகளாக பேரனர்த்தத்தையும் பேரழிவையும் சந்தித்திருந்தோம்.
 
எனவே தயவு செய்து நாங்கள் அனைவரும் ஒன்றாக ஐக்கியப்பட்டு வாழ்வதற்கு, எங்களுக்கு உங்கள் ஒத்துழைப்புக்களை தர வேண்டும்” என்றார்.

http://onlineuthayan.com/news/14566

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.