Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாக்குதலில் ஒருவர் பலி; ஐவர் கைது

Featured Replies

தாக்குதலில் ஒருவர் பலி; ஐவர் கைது
 
 

article_1467958739-mmmm.jpg-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, கல்குடாப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிப்பிள்ளை பாக்கியராசா (வயது 51) என்பவர் நேற்று வியாழக்கிழமை இரவு இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பலியாகியுள்ளார்.  

அத்துடன், இவரிடமிருந்து இரண்டரைப் பவுண் தங்கநகையையும் இனந்தெரியாதோர் பறிமுதல் செய்துகொண்டு தப்பிச்சென்றிருந்தனர்.

பாசிக்குடா கடலில் சுற்றுலாப் படகை செலுத்துபவரான இவரது வீட்டுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றும் இருவர் வாடகைக்கு குடியிருக்கின்றனர். இவர்கள் மூவரும் நேற்றையதினம் இரவு சிகரெட் வாங்குவதற்கு கடைக்குச் சென்றுகொண்டிருந்தனர். இதன்போது, கல்குடா -வாழைச்சேனை பிரதான வீதியில் இம்மூவரையும் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்கள் வழிமறித்துத் தாக்கியுள்ளனர்.  

இம்மூவரில் ஒருவர் தப்பியோடியதுடன், ஏனைய இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் தம்பிப்பிள்ளை பாக்கியராசா என்பவர் உயிரிழந்துள்ளார். இத்தாக்குதலில் காயமடைந்த மற்றைய நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து 05 பேரை இன்று வெள்ளிக்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், இந்தச் சம்பவத்துடன் வேறு எவரும் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கல்குடாப் பிரதேசத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யூ.பி.டி.ஏ.கருணாநாயக்க தலைமையில் கூட்டம் கல்குடா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ;.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கல்குடா பிரதேசத்தில் ஹோட்டல்களில் வேலை செய்துகொண்டு வீடுகளில் தங்கியுள்ளோர் இன்று வெள்ளிக்கிழமை மாலை 03 மணியுடன் வீடுகளிலிருந்து   வெளியேறி; ஹோட்டல் விடுதிகளில் தங்க வேண்டும்  என்றும்; மேசன், ஓடாவி வேலைகளுக்கு வந்துள்ளோர் தங்களின் பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

- See more at: http://www.tamilmirror.lk/176530/த-க-க-தல-ல-ஒர-வர-பல-ஐவர-க-த-#sthash.NpD8fSSf.dpuf

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா மற்றும் பாசிக்குடா பிரதேசத்தில் ஏற்படவிருந்த இனமுறுகல் நிலை பொலிஸாரினதும் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டையடுத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (07) இரவு கல்குடா பொலிஸ் பிரிவில் கல்குடா வாழைச்சேனை பிரதான வீதியில் வைத்து தமிழ் சகோதரர் தாக்கப்பட்டு அவரிடம் இருந்து இரண்டரை பவுன் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட நிலையில், தாக்கப்பட்டவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாசிக்குடா கடற்கரையில் சுற்றுலா படகு ஓட்டுனரான வாழைச்சேனை வீதி கல்குடாவை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிப்பிள்ளை பாக்கியராசா தனது வீட்டுக்கு அருகாமையில் வாடகைக்கு இருக்கும் இரண்டு சிங்கள சகோதரர்களுடன் இரவு 10.30 மணியளவில் தனது வீட்டில் இருந்து பக்கத்தில் உள்ள கடைக்கு சிகரெட் வாங்குவதற்காக சென்ற வேளை, பாசிக்குடா ஹோட்டல்களில் தொழில் செய்து கொண்டு கல்குடா பிரதேசத்தில் வாடகைக்கு வீடு எடுத்துக் கொண்டு இருக்கும் சிங்கள சகோதரர்கள் (கொலைகாரர்கள்) கடைக்குச் சென்றவர்களை தாக்கியதில் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன், ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றையவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து கல்குடா மற்றும் பாசிக்குடா பிரதேசத்தில் இன முறுகல் ஏற்படக்கூடிய பதற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் யூ.பி.டி.ஏ.கருநாயக்க தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் கல்குடா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனும் கலந்து கொண்டுள்ளார்.

அந்த கூட்டத்தில் கல்குடா பிரதேசத்தில் ஹோட்டல்களில் வேலை செய்து கொண்டு வீடுகளில் தங்கியுள்ளோர் இன்று மாலை 03.00 மணியுடன் வீடுகளை விட்டு வெளியேறி, ஹோட்டல் விடுதிகளில் தங்க வேண்டும் என்றும், ஹோட்டல்களில் பணி புரியாமல் வேறு வேலைகளுக்கு வந்துள்ளோர் தங்களது பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என்று எடுக்கப்பட்ட தீர்மானத்தை பொதுமக்களிடம் அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் அமைதி காத்து கலைந்து சென்றுள்ளனர்.

வாழைச்சேனை பாசிக்குடாவில் சிங்களவர்களால் தமிழர் கொலை

இந்த கொலை சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கல்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்துடன் வேறு எவரும் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பிரதேசத்தில் சிங்களவர்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டமையாலும், மது பாவனை அதிகம் காணப்படுவதாலும் பல இன முறுகல் நிலைகள் காணப்படுகின்றது. அண்மையில் இரண்டு ஹோட்டல் ஊழியர்களுக்கு நடைபெற்ற மோதலில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/community/01/110306

 

Edited by போல்

கிழக்கு மாகாணத்தில் திரியும் சிங்களப் படுகொலையாளர்கள் முற்றாக அகற்றப்பட வேண்டும்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தடுக்க வக்கில்லாத சிங்கள-பௌத்த போலீஸ் வெறியர்கள், காணமால் போனவர்கள் பற்றி தகவல் சேகரிக்கும் தமிழரை மட்டும் விசாரணை, அது இது என்று சித்திரவதை செய்வதை யோகேஸ்வரன் தெரிந்திருப்பார்.     

இப்படிப்பட்ட சிங்கள-பௌத்த போலீஸ் வெறியர்களை யோகேஸ்வரன் நம்புவது மூடத்தனம்.  

 

மேலுள்ள காணொளியில் 7 ஆவது நிமிடத்தில் சொல்லப்படும் கூற்றை கவனிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா மற்றும் பாசிக்குடா பிரதேசத்தில் ஏற்படவிருந்த இனமுறுகல் நிலை பொலிஸாரினதும் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டையடுத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (07) இரவு கல்குடா பொலிஸ் பிரிவில் கல்குடா வாழைச்சேனை பிரதான வீதியில் வைத்து தமிழ் சகோதரர் தாக்கப்பட்டு அவரிடம் இருந்து இரண்டரை பவுன் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட நிலையில், தாக்கப்பட்டவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாசிக்குடா கடற்கரையில் சுற்றுலா படகு ஓட்டுனரான வாழைச்சேனை வீதி கல்குடாவை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிப்பிள்ளை பாக்கியராசா தனது வீட்டுக்கு அருகாமையில் வாடகைக்கு இருக்கும் இரண்டு சிங்கள சகோதரர்களுடன் இரவு 10.30 மணியளவில் தனது வீட்டில் இருந்து பக்கத்தில் உள்ள கடைக்கு சிகரெட் வாங்குவதற்காக சென்ற வேளை, பாசிக்குடா ஹோட்டல்களில் தொழில் செய்து கொண்டு கல்குடா பிரதேசத்தில் வாடகைக்கு வீடு எடுத்துக் கொண்டு இருக்கும் சிங்கள சகோதரர்கள் கடைக்குச் சென்றவர்களை தாக்கியதில் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன், ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றையவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து கல்குடா மற்றும் பாசிக்குடா பிரதேசத்தில் இன முறுகல் ஏற்படக்கூடிய பதற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் யூ.பி.டி.ஏ.கருநாயக்க தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் கல்குடா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனும் கலந்து கொண்டுள்ளார்.

அந்த கூட்டத்தில் கல்குடா பிரதேசத்தில் ஹோட்டல்களில் வேலை செய்து கொண்டு வீடுகளில் தங்கியுள்ளோர் இன்று மாலை 03.00 மணியுடன் வீடுகளை விட்டு வெளியேறி, ஹோட்டல் விடுதிகளில் தங்க வேண்டும் என்றும், ஹோட்டல்களில் பணி புரியாமல் வேறு வேலைகளுக்கு வந்துள்ளோர் தங்களது பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என்று எடுக்கப்பட்ட தீர்மானத்தை பொதுமக்களிடம் அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் அமைதி காத்து கலைந்து சென்றுள்ளனர்.

 

இந்த கொலை சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கல்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்துடன் வேறு எவரும் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பிரதேசத்தில் சிங்களவர்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டமையாலும், மது பாவனை அதிகம் காணப்படுவதாலும் பல இன முறுகல் நிலைகள் காணப்படுகின்றது. அண்மையில் இரண்டு ஹோட்டல் ஊழியர்களுக்கு நடைபெற்ற மோதலில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/110306

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.