Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நானும் என் ஈழமும் - பகுதி 3

Featured Replies

part3%20copy.jpg

மூன்றாவது பாகத்தை எழுத முதல், என்னை எழுத ஊக்குவிப்பவர்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. புலத்தில் தமிழ் கற்ற எனக்கு ஆரம்பத்தில் இருந்த தயக்கத்தை தூக்கி எறிய வைத்து, தொடர்ந்து "நீங்க எழுதுங்க பபா" என சொல்லும் உறவுகளுக்கு என் அன்பு எப்பொழுதும் உண்டு.

முதல் இரண்டு தொடரும் எழுதும் போது, நினைவுகள் பல மனதில் வர கண்ணீருடன் தான் எழுதினேன். இந்த பாகத்தில் எமை காக்க களத்தில் நிற்கும் போராளிகளை பற்றியதாக இருக்கும். அவர்களுடான என் உறவு, அவர்களை பற்றி என் மனதில் இருப்பவை.

ஊரில் எங்கட வீட்டுக்கு முன்னால போராளிகளின் வீடு. எங்கள் வீடு அவர்கள் வீடு என பிரிப்பது பாவம் என்பேன். காலையில் கண் முழித்ததில் இருந்து இரவு படுக்க போகும் வரை "அண்ணாக்கள்" என்று அவர்கள் பின்னாலே திரிவேன். என் குடும்பத்தில் இருக்கும் அண்ணாக்களை விட எனக்கு எம் ஈழத்து குடும்பத்தில் நெருங்கிய சகோதரர்கள் அதிகம்.

"ஆளின்ட கதையை பாருங்கோ! வண்டு போல இருந்த ஆள்" பல வருடங்கள் சென்று என்னை பார்த்த ஒரு சகோதரன்.

"நாங்கள் வளர்த்து விட்டு இப்ப கதையும் கேட்க வேண்டி இருக்கு" இது இன்னொரு அண்ணா.

அவர் சொன்னதை போல தான், நாங்கள் ஊரில் இருக்கும் நாட்களில் எல்லாம் என்னை கவனமாக பார்த்தவர்கள் அவர்கள் தான்.

இப்பொழுது நான் குழப்படி செய்யும் வேலைகளில் அம்மா சொல்லுவது "பெடியள் வளர்த்த குணத்தை காட்டுராயாடி" எங்கள் வீட்டில் "டி" போடால் அது செல்லம் கொஞ்சும் போது மட்டும் தான். என்ன தான் குறை பட்டு கொண்டாலும் அம்மாக்கு பெருமை தான்.

என்னை பொருத்த வரை போராளிகளுடன் பழக சந்தர்ப்பம் கிடைத்தவர்கள் குடுத்து வைத்தவர்கள், கடவுளால் ஆசீர்வாதிக்கப்பட்டவர்கள்.போ

தமிழன் என்றால் பாட்டை கேட்கும் போது மனதில் உணர்ச்சிகள் அலை மோதும், வீரம் வரும்....

உண்மைதான் தூயா.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர் மிக நன்றாக உள்ளது. படிக்கும் எங்களுக்கும் கண்கள் பனிக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தனை அன்பானவர்கள் எத்தனை பேரை நாம் இழந்துவிட்டோம். எமக்கிருக்கும் பெரிய பயம் என்ன? "சாவு" அதை வென்றவர்கள் எம் வீரர்கள். சாவும் நேரலாம் என்று தெரிந்தும் தாய் நாட்டிற்காக கையில் துப்பாக்கிகளை ஏந்தி களம் செல்கின்றார்கள்.எப்படி முடிகிறது? நினைத்து பாருங்கள்? எங்களால் அது முடியுமா? பூச்சியை கண்டாலே பயப்படுபவர்கள் தான் அதிகம் எம்முள். அதை விட அதிகம் சுயநலம். இந்த உணர்வுகள் அனைத்தையும் தூக்கி எறிந்து வந்தவர்கள் எங்களை மானத்துடனும், உயிருடனும் வாழ வைக்கும் போராளிகள்.

இதயத்தை கனக்க வைக்கும் வரிகள். உண்மைதான் தூயா விடுதலைப் போராளிக்கு நிகர் வேறு யாரும் இலர்.

Edited by இளங்கோ

ஆமாம் தூய உங்கள் நினைவுகள் என்னுடன் பழகிய ஒரு சில அண்ணாமாரையும் நினைவுக்கு கொண்டுவருகிறது அவர்களில் எனக்கு தெரிந்து 5பேர் கூட உயிருடன் இருக்கினமா என்பது சந்தேகம். அதில் ஏற்கனவே நான் யாழில் நினைவுகூர்ந்த லெப்கேணல் சிவநேசனும் ஒருவர் என்னை மிகவும் பாதித்து இவருடைய வீரச்சா தான். மீண்டும் இவரை நினைவு கூற ஒரு வாய்ப்பு தந்த தூயவுக்கு எனது நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா உங்கள் பதிவுகளின் வளர்ச்சி மிக அழகாக இருக்கிறது.

மிகவும் பயனானதும் கூட.

மேலும், மேலும் வளரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தூயாவைப்போல் அனுபவமில்லை. ஆனால் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன். தூயாவின் உருக்கமான அனுபவங்கள் என்னைப்போன்றவர்களை உருக்கியே விடுகின்றன.

  • தொடங்கியவர்

தமிழன் என்றால் பாட்டை கேட்கும் போது மனதில் உணர்ச்சிகள் அலை மோதும், வீரம் வரும்....

உண்மைதான் தூயா.....

நன்றி பனங்காய் :lol:

தொடர் மிக நன்றாக உள்ளது. படிக்கும் எங்களுக்கும் கண்கள் பனிக்கின்றன.

தொடர்ந்து படித்து குறை நிறைகளை சுட்டிகாட்டுங்கள் இளங்கோ..நன்றி

Edited by தூயா

  • தொடங்கியவர்

ஆமாம் தூய உங்கள் நினைவுகள் என்னுடன் பழகிய ஒரு சில அண்ணாமாரையும் நினைவுக்கு கொண்டுவருகிறது அவர்களில் எனக்கு தெரிந்து 5பேர் கூட உயிருடன் இருக்கினமா என்பது சந்தேகம். அதில் ஏற்கனவே நான் யாழில் நினைவுகூர்ந்த லெப்கேணல் சிவநேசனும் ஒருவர் என்னை மிகவும் பாதித்து இவருடைய வீரச்சா தான். மீண்டும் இவரை நினைவு கூற ஒரு வாய்ப்பு தந்த தூயவுக்கு எனது நன்றிகள்

ஓ நீங்கள் முன்னர் கூறியது நினைவில் இருக்கு..உங்கள் உணர்வுகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் சந்தியா

  • தொடங்கியவர்

தூயா உங்கள் பதிவுகளின் வளர்ச்சி மிக அழகாக இருக்கிறது.

மிகவும் பயனானதும் கூட.

மேலும், மேலும் வளரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நன்றி.

மிக்க நன்றி தேவன்..உங்கள் வார்த்தைகள் எனக்கு உற்சாகத்தை குடுக்கின்றது... :huh:

எனக்கு தூயாவைப்போல் அனுபவமில்லை. ஆனால் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன். தூயாவின் உருக்கமான அனுபவங்கள் என்னைப்போன்றவர்களை உருக்கியே விடுகின்றன.

படித்து, உங்கள் கருத்துக்களை எழுதியமைக்கு மிக்க நன்றிகள் ஐயா

Edited by தூயா

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் சிறுவயதில் ஒடி ஆடி விளையாடிப் படித்தவர்களும் இப்பொழுது மாவீரர்களாக இருக்கிறார்கள். உங்கள் பதிவை வசிக்கும் போது அவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.

இத்தனை அன்பானவர்கள் எத்தனை பேரை நாம் இழந்துவிட்டோம்

உண்மை தான் தூயா..வாழ்க்கையில் எதையும் சம்பாதிக்கலாம். அன்புள்ளவங்களை சம்பாதிப்பது கஷ்டம். அந்த அன்புள்ளவங்களை போல தான் இயக்க அண்ணாமாரும்.அவர்கள் எண்ணங்கள் எல்லாம் வேறு. நினைத்தாலே ஆச்சரியமா இருக்கும். எனக்கு உங்களை போல ரொம்ப பழக்கம் என்றில்லை. ஆனால் எங்க வீட்டுக்கு 2 பக்கத்திலும் இருந்தாங்க.எங்கட அம்மம்மா ஒராள் அவர்களோடு பழக்கம் என்றதால அடிக்கடி வருவார்கள். எண்ட அண்ணா என்னை காலுக்கு குறுக்க காலை விட்டு விழுத்துவார். (கால் குறோஸ்) அப்பிடினு சொல்லுவாங்க. அப்படி என்னை செய்வதை அவர்களில ஒராள் கண்டால் எண்ட அண்ணன் சரி.

" இருடா வாறன்" எண்டு சொல்லி ஓடி வாறதுக்குள்ள எண்ட அண்ணா ஓடிடுவார். அப்படி ரொம்ப அன்பா இருப்பாங்க. எனக்கு இப்பவும் அவர்கள் பெயர்கள் ஞாபகம் இருக்கு.இடைக்கிட வருவார்கள் சில நேரம் வரும் போது முதல் முறை வந்த ஒரு அண்ணா இல்லாமல் இருப்பார். எங்க அவர் எண்டால் அவர் அடுத்த் முறை வருவார் எண்டு சொல்லுவார்கள். சின்ன வயசில நானும் அதை யோசித்ததில்லை.

ஊரில் அந்த காலத்தில இயக்க படங்கள் ஓடும். ஒரு முறை ஒரு அண்ணாவோட மடியில இருந்து படம் பார்த்திருக்கேன்.படம் பார்த்து நான் அழுவேன்..அப்பிடியே திரும்பி அவரும் அழுவார எண்டு பார்த்தால் அழாமல் இருப்பார். ' ஏன் அழேல்லை நீங்கள்' எண்டால். தான் தைரியமான ஆள் எண்டு சொல்லுவார். தானும் முந்தி அழுததாக சொல்லுவார்.' நீயும் வளர அழ மாட்டாய் பார்' எண்டு அடிக்கடி சொல்லுவார். அதுவே படத்துல வெற்றி பெற்றுட்டாங்க எண்டால் நான் எழும்பி துள்ளுவேன். அப்போது கூட பெருசா சிரிக்க மாட்டார்.என்ன அப்போது எனக்கொன்றும் புரிந்ததில்லை. அறியாமல் இருந்தேன்..பிறகு பிரச்சனை தொடங்க எல்லாரும் போயிட்டாங்க. அப்புறமா நானும் வளர்ந்து எல்லாம் புரிஞ்சுக்கிற வயசு வந்தப்போ யாருமே இருக்கல. :icon_idea:

  • தொடங்கியவர்

பதில்களுக்கு நன்றி கந்தப்பு & சிநேகிதி.. <_<

  • கருத்துக்கள உறவுகள்

பதில்களுக்கு நன்றி கந்தப்பு & சிநேகிதி.. <_<

அப்ப ப்ரியசகியா சினேகிதி

  • தொடங்கியவர்

கந்தப்பு ஆரம்பிச்சிட்டிங்களா?

சகி, மன்னிக்கவும்..இங்கால சிநேகிதியோட கதைச்சிட்டு இருந்தேன்..மாறி போட்டேன்..

நன்றாக இருகிறது..வாழ்த்துக்கள் தூயா!

வாசிக்கும் போது எனது நண்பர்களான வீரமரணம் அடைந்த மயூரன், கும்மி என்று அழைக்கும் கிருஸ்ணகுமார் ஆகியோர் யாபகத்துக்கு வருகிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.