Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர்ந்தோரின் அழுத்தங்களை சரியாக கையாளவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு

Featured Replies

புலம்பெயர்ந்தோரின் அழுத்தங்களை சரியாக  கையாளவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு

 

புலம்பெயர் மக்களின் அபிலாசைகள் எவற்றில் தங்கியுள்ளது என்பது அறியப்படாமலுள்ள நிலையில் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் மக்களுக்கிடையிலான இடைவெளி மிக அதிகமாகிக்கொண்டே செல்கின்றது என்று   வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் ஹர்ச. டி. சில்வா  தெரிவித்தார். harsha-de-silva-afp_650x400_41450878962.

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது குறித்த மக்கள் கொண்டுள்ள எதிர்ப்பார்ப்புகள் மற்றும் அழுத்தங்கள் என்பன அதிகளவிலான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அதனை தகுந்த முறையில் கையாள வேண்டியதொரு கடப்பாடு தற்போதய அரசாங்கத்துக்கு உண்டு என்பதனை மறுப்பதற்கில்லை  என்றும் அவர் குறிப்பிட்டார்.  

கடல் கடந்த இலங்கையர்களை ஊக்குவிப்பதற்கான பாதை எனும் நூல் வெளியீடு நேற்று முன்தினம் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் சிறப்பு பிரதிநிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.    இந்நிகழ்வில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு" எனும் தலைப்பின்கீழ் விசேட கலந்துரையாடலும் நடைபெற்றது. 

இதன்போது கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் ஹர்ச. டி. சில்வா, 

இலங்கையை சேர்ந்த சுமார் 3 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளில் புலம்பெயர் மக்களாக வாழ்கின்றனர். தெற்காசிய நாடுகளிலேயே இலங்கையர்  தான் அதிகளவிலான புலம்பெயர்  மக்களாக   வெளிநாடுகளில் வாழ்கின்றனர். 

உள்நாட்டு மக்களை இன மத மொழி ரீதியில் ஒன்றிணைக்க முடியுமானாலும் புலம்பெயர் மக்களை குறித்த எந்தவொரு காரணிகளாலும் ஒன்றிணைக்க முடியாமலுள்ளமையே தற்போது காணப்படும் பெரும் சவாலாககாணப்படுகின்றது. புலம்பெயர் மக்களின் அபிலாசைகள் எவற்றில் தங்கியுள்ளது என்பது அறியப்படாமலுள்ள நிலையில் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் மக்களுக்கிடையிலான இடைவெளி மிக அதிகமாகிக்கொண்டே செல்கின்றது.

காலணித்துவ ஆட்சிக்கு பின்னரான அபிவிருத்தி திட்டங்களில் உள்ள குறைபாடுகள், சமநிலையற்ற அபிவிருத்தி திட்டங்கள், 30 வருட சிவில் யுத்தம், ஜே.வி.பி கலவரம் போன்ற பல்வேறு காரணிகள் இடம்பெற்றுள்ளன.  அந்த வகையில் இலங்கையை பொறுத்தமட்டில் கடல்கடந்த புலம்பெயர் மக்களின் செல்வாக்கு உள்நாட்டு மக்களின் இன, மத, அரசியல், சமூக காரணிகளில் பாரிய செல்வாக்கினை செலுத்தியுள்ளது. 

தற்போது நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசியல் ஸ்திரதன்மையொன்று தோற்றம் பெற்றுள்ளது.  அதேவேளை புலம்பெயர் தமிழ் மக்களின் பரவலான எதிர்ப்பார்ப்புக்கள் மற்றும் அவர்களின் பங்களிப்புக்கள் இலங்கை மக்களை பெரும் மாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில் நல்லிணக்க செயற்பாடுகளிலும் அபிவிருத்தி செயற்பாடுகளிலும் புலம்பெயர் மற்றும் கடல்கடந்த மக்களின் பங்களிப்பு அத்தியாவசியமான தேவையாக உள்ளது அதனை காத்திரமான அரசியல் நகர்வுகளில் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பதிலேயே    பெரும் சவால் தங்கியுள்ளது.

அத்துடன் புலம்பெயர் மக்களை பொறுத்தமட்டில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஆதிக்கம் காலத்துக்கு காலம் அதிகப்படியான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் அரசியல் செயற்பாடுகளில் தேவையான மாற்றங்களும், தமிழ் தலைமைகளின் அரசியல் அபிலாசைகளுக்குள்ளும் ஏதேவொரு தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

அதேவேளை யுத்தத்தின் போது இரு தரப்புகளிடையேயும் ஏராளமான உறவுகளை நாம் இழந்துள்ளோம். அந்தவகையில் தற்போது மக்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள வடு மற்றும் சமூக அடையாளங்களில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள், அடையாளங்கள் போன்றன் தீர்க்கப்படவேண்டிய முக்கியமான தேவையாகவுள்ளன. ஆனாலும் கடல் கடந்த மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள உணர்ச்சி பூர்வமான பிரதிபலிப்புக்கள் மற்றும் அபிலாசைகள் என்பன இலங்கையின் உள்நாட்டு மக்களின் தேவைகளை மற்றும் உண்மையான பிரதிபலித்துள்ளனவா என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.

 அறிவு பரிமாற்றல் மற்றும் அபிவிருத்தி பரிமாற்றல்கள் போன்றன புலம்பெயர் மக்களுக்கும் உள்நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்பில் அத்தியாவசியமான தேவையாக உள்ளது. இதனடிப்படையிலேயே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் புலம்பெயர்ந்த மக்களின் குரலிலும் அதனை உள்நாட்டு பொறிமுறைகளில் அடையாளப்படுத்துவதற்றுகும் தேவையான அனைத்து பொறிமுறைகளையும் பரிசீலித்துள்ளது. குறித்த லிடயங்கள் தற்போதைய அரசியல் சூலழில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தினை பொறுமையுடன் எதிர்ப்பார்த்திருக்கின்றோம்.

 தன்னார்வ நிறுவனங்களினதும் சர்வதேச தொண்டு நிறுவனங்களினதும் பண்முகப்படுத்தப்பட்ட கொள்கைகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் வெளிப்பாடுகளை பிரதிபலித்தல் பொறிமுறைகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனடிப்படையில் நாம் குறித்த நிறுவனங்களுடன் சுமூகமானதும் உள்நாட்டு மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு மற்றும் உளவியல் காப்பீடுகள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. 

 தற்போது அதிக சொல்லாடலுக்குள்ளான விடயமாக புலம்பெயர் தமிழ் மக்களின் செல்வாக்கு காணப்படுகின்றது. அந்தவகையில் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது குறித்த மக்கள் கொண்டுள்ள எதிர்ப்பார்ப்புகள் மற்றும் அழுத்தங்கள் என்பன அதிகளவிலான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அதனை தகுந்த முறையில் கையாள வேண்டியதொரு கடப்பாடு தற்போதய அரசாங்கத்துக்கு உண்டு என்பதனை மறுப்பதற்கில்லை என்றார்.

இந்நிகழ்வில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு" எனும் தலைப்பின்கீழ் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உள்நாட்டு மற்றும் கடல்கடந்த மக்களது பிணைப்புகள் தொர்பில் அதிகளவிலான கவணம் செலுத்தப்பட்டது. அதனடிப்படையில் இளம் அரசியல் தலைவர்கள் அமைப்பின் செற்பாட்டதிகாரி ரகு பாலசந்திரன் கருத்து தெரிவிக்கையில் 

சமாதானத்தை கட்டியெழுப்புதல் நல்லிணக்க பொறிமுறைகள், மீள்கட்டுமானம் போன்ற பல்வேறு துறைகளில் புலம்பெயர் மக்களின் செல்வாக்கு வரலாறு தொடக்கம் பல மாற்றங்களை ஏற்படுத்தி வந்துள்ளது. அத்தோடு இலங்கையின் இடப்பெயர்வு காரணிகளில் புற மற்றும் அக் காரணிகள் பல பங்களிப்பு செய்துள்ளன. அந்த வகையில் புலப்பெயர்வுக்கான அடிப்படை காரணிகளில் மிக முக்கியமான மாற்றத்தை புலம்பெயர் காரணிகள் வெளிப்படுத்தியுள்ளமையை மறுக்க முடியாது. 

புலம்பெயர்ந்தோர் எனும் பதத்திற்கு பல்வேறு வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்பட்டள்ளன. அந்த வகையில் இன, மத, மொழி அரசியல், பொருளாதார, கலாசார வரலாற்று ரீதியிலான தொடர்பை கொண்டிருக்காது பரம்பல் ரீதியாகவோ அல்லது குடித்தொகை ரீதியாகவோ ஒன்றிணைவார்களாயின் அவர்களை புலம்பெயர்ந்தோர் என வரையறுக்கப்படுகின்றனர்.

புலம்பெயர் சமூகம் தனது சொந்த நாடு தொடர்பிலும் தற்போது வாழ்ந்து வரும் நாடு தொடர்பிலும் இருவேறு வித்தியாசமான கருத்துக்களை கொண்டு காணப்படுகின்றது. . ஆனாலும் அவர்களாலும் இரு நாடுகளுக்கிடையே தெளிவான இணைப்புக்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வழங்க முடியுமென்பது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாக உள்ளது. அத்தோடு இலங்கையின் அபிவிருத்தி செய்றபாடுகளிலும் நல்லிணக்க செயற்பாடுகளிலும் புலம்பெயர் மக்களை விடுத்து நோக்க முடியாத நிலை காணப்படுவதும் உண்மை.

 வரலாறு ரீதியாக 3 முக்கிய முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. அந்த வகையில் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கமிடையிலான முரண்பாடு, ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சிக்குமிடையிலான முரண்பாடு மற்றும் தமிழ் தேசியவாதம்   முஸ்லிம் தேசியவாதம் என்பவற்றுக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு என்பவையே அவையாகும்.  மேற்குறிப்பிட்ட முரண்பாட்டு காரணிகளில் முதல் இரு முரண்பாடுகளும் 2009 ஆம் ஆண்டு முடிவுப்பெற்ற சிவில் யுத்தத்துக்கு பின்னர் தனிவிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதிக்கு பின்னர் தமிழ் தேசியவாதம் மற்றும் சிங்கள தேசியவாத கருத்துக்கள் மக்கள் மத்தியில் வேறூண்றியுள்ளமையினை உணர முடிகின்றது. இதற்கு புலம்பெயர் மக்களின் ஆதிக்கம் பாரிய செல்வாக்கு செலுத்தியுள்ளது எனலாம்.அத்தோடு புலம்பெயர் மக்களின் உண்மையான அரசியல் செல்வாக்கு மற்றும் பொருளாதார மாற்றங்கள் என்பவற்றை கண்டறிந்து அதனை நிலையானதும் கருத்தொருமைமிக்க  காரணிகளினடிப்படையிலும் கொண்டுசெல்ல வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.

http://www.virakesari.lk/article/8995

  • கருத்துக்கள உறவுகள்

 

On 15/07/2016 at 3:13 PM, நவீனன் said:

அபிவிருத்தி செயற்பாடுகளிலும் புலம்பெயர் மற்றும் கடல்கடந்த மக்களின் பங்களிப்பு அத்தியாவசியமான தேவையாக உள்ளது அதனை காத்திரமான அரசியல் நகர்வுகளில் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பதிலேயே    பெரும் சவால் தங்கியுள்ளது.

வெரி சிம்பிள் .....ஒவ்வொரு வருடமும் சிறிலங்காவின் பிரபல‌ கிரிக்கட் வீரர் ஒருவரை புலம்பெயர்ந்த தேசத்திற்கு அனுப்பி  "அப்பத்துடன் ஒரு பைலா பார்டி " போட்டால் மூவின மக்களும் ஒண்ணிக்காயிடலாம்.....புரொப்லம் சொல்வ்ட்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.