Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நளினி விடயத்தில் தமிழக அரசு முடிவெடுக்கலாம்: நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

நளினி விடயத்தில் தமிழக அரசு முடிவெடுக்கலாம்: நீதிமன்றம் உத்தரவு

நளினி விடயத்தில் தமிழக அரசு முடிவெடுக்கலாம்: நீதிமன்றம் உத்தரவு

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வேலூர் சிறையில் இருக்கும் நளினி தாக்கல் செய்திருக்கும் மனு மீது தமிழக அரசு முடிவு எடுக்கலாம். ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=81817

  • தொடங்கியவர்

நளினி விடுதலையில் தமிழக அரசு முடிவு எடுக்கலாம்..! வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்

nalinilong.jpg

 

சென்னை; முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும், 161வது விதி மூலம் தன்னை விடுவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவிற்கு தமிழக உள்துறை துணைச் செயலாளர் டேனியல் தேவஆசீர்வாதம் அளித்த பதில் மனுவில், ' 20 வருடங்கள் சிறையில் உள்ளவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு நளினி வழக்கில் பொருந்தாது. இது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழக அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், நளினி மனு மீது தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்து நளினி மனுவை முடித்து வைத்தது.

http://www.vikatan.com/news/tamilnadu/66340-tn-government-will-take-decision-in-nalini-release.art

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
இனி  அதனை எதிர்த்து.... யாரும் கோர்ட் படி ஏற முதல், அவரை விடுதலை செய்ய வேண்டும்.

  • தொடங்கியவர்

விடுதலை குறித்து பரிசீலிக்கக் கோரிய நளினியின் மனு தள்ளுபடி

 

20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பதால் தன்னை விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

151202063924_nalini_murugan_640x360_ap_n
 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டு நளினி உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகளாகச் சிறையில் உள்ளனர்.

இந்த நிலையில், தான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் தன்னை விடுதலை செய்ய வேண்டுமென கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசின் சிறைத் துறைக்கும் உள்துறை செயலருக்கும் மனு செய்தார். 1994ஆம் ஆண்டில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ஒன்றின்படி, 20 ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர்களை விடுதலை செய்யலாம் என்று இருப்பதைச் சுட்டிக்காட்டி இந்த மனுவை அவர் அளித்திருந்தார்.

அந்த மனு மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இது குறித்து முடிவெடுக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை நளினி தாக்கல் செய்தார்.

இதற்குப் பதிலளித்த தமிழக அரசு, நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என பதிலளித்தது.

அந்த மனு மீது இன்று தீர்ப்பளித்த நீதிபதி சத்யநராயணா, இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், இந்த மனுவைத் தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தார்.

உச்ச நீதிமன்ற வழக்கில் வெளியாகும் தீர்ப்பின் அடிப்படையில் நளினியை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டுமென்றும் நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

http://www.bbc.com/tamil/india/2016/07/160720_naliniplea

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒருவரே முன்னுக்குப் பின் முரணாக எழுதியிருக்கிறார்.  என்ன நடந்தது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
இனி  அதனை எதிர்த்து.... யாரும் கோர்ட் படி ஏற முதல், அவரை விடுதலை செய்ய வேண்டும்.

சிறித்தம்பி! தொடர்கதை மாதிரி உப்பிடித்தான் அடிக்கடி சொல்லுவாங்கள் ஆனால் அங்கை ஒண்டும் நடக்காது/நகராது.

  • தொடங்கியவர்
5 minutes ago, karu said:

என்ன ஒருவரே முன்னுக்குப் பின் முரணாக எழுதியிருக்கிறார்.  என்ன நடந்தது.

 

அதனால்தான் 3 விதமான செய்தியையும் இணைத்தேன்....

எனக்கு விளங்கியது...

உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்குக்கு ஒரு முடிவு வந்தபின்தான்... அந்த தீர்ப்பின் அடிப்படையில் ஏதாவது ஒரு முடிவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.