Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனிமையும் பிரிவும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிமையும் பிரிவும்

தனிமைத் துயரில் வாடிய போது

தனிமை மரணத்திலும் கொடியது என உணர்ந்தேன்

தன்னிச்சையாய் நீ பேசிய சொற்கள்

தண்ணிலவாய் என் நெஞ்சைத் தணித்தன

அரசியல், வரலாறு, இலக்கியம்,

அறிவியல் அனைத்தையும் பகிர்ந்தேன்

ஆசையாய் நீ கேட்கிறாய் என்பதை

அபிநயம் காட்டும் உன் முகம் கூறிற்று

பருகப் பருக பாலும் புளிக்குமாம்

பழகப் பழக நட்பும் புளித்தது உனக்கு

படிக்கப் படிக்கக் கருத்துக்கள் ஊறுமாம்

பழகப் பழக நட்பும் ஊறிற்று எனக்கு

சிறு புன்னகைக்கும் மறுக்கிறது உன் உதடு - என்

சிற்றறிவுக்குத் தெரியவில்லை மறுப்பின் காரணம்

சிறுபிள்ளைத்தனமாய் செய்யாத தப்புக்கு

சிந்தை கலங்கி மன்னிப்பும் கேட்டேன்

காயத்தை மாற்றும் சக்தி காலத்திற்கு உண்டெனில்

காலங்கள் செல்கையில் காயங்கள் மாறும்தான்

காலையும் மாலையும் காணும் வாய்ப்பினால்

காயத்தின் ஆழங்கள் கண்களை நனைக்கின்றன

பிழைகள் செய்ததாய் எனக்குத் தெரியவில்லை

பிணைப்பு ஒரு நாள் வருமோ தெரியாது

பிரிவினைவாதம் தனிமையிலும் கொடியது என உணர்ந்தேன்

பிரியும்போதாவது நண்பர்களாய் பிரிவோம்

ம்ம் தனிமையும் பிரிவும் கொடியதிலும் கொடியது அதனை கவியாக வடித்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள். அதிலும் என்னைக் கவர்ந்த வரிகள்

தனிமையும் பிரிவும்

தனிமைத் துயரில் வாடிய போது

தனிமை மரணத்திலும் கொடியது என உணர்ந்தேன்

தன்னிச்சையாய் நீ பேசிய சொற்கள்

தண்ணிலவாய் என் நெஞ்சைத் தணித்தன

அரசியல், வரலாறு, இலக்கியம்,

அறிவியல் அனைத்தையும் பகிர்ந்தேன்

ஆசையாய் நீ கேட்கிறாய் என்பதை

அபிநயம் காட்டும் உன் முகம் கூறிற்று

பருகப் பருக பாலும் புளிக்குமாம்

பழகப் பழக நட்பும் புளித்தது உனக்கு

படிக்கப் படிக்கக் கருத்துக்கள் ஊறுமாம்

பழகப் பழக நட்பும் ஊறிற்று எனக்கு

சிறு புன்னகைக்கும் மறுக்கிறது உன் உதடு - என்

சிற்றறிவுக்குத் தெரியவில்லை மறுப்பின் காரணம்

சிறுபிள்ளைத்தனமாய் செய்யாத தப்புக்கு

சிந்தை கலங்கி மன்னிப்பும் கேட்டேன்

காயத்தை மாற்றும் சக்தி காலத்திற்கு உண்டெனில்

காலங்கள் செல்கையில் காயங்கள் மாறும்தான்

காலையும் மாலையும் காணும் வாய்ப்பினால்

காயத்தின் ஆழங்கள் கண்களை நனைக்கின்றன

பிழைகள் செய்ததாய் எனக்குத் தெரியவில்லை

பிணைப்பு ஒரு நாள் வருமோ தெரியாது

பிரிவினைவாதம் தனிமையிலும் கொடியது என உணர்ந்தேன்

பிரியும்போதாவது நண்பர்களாய் பிரிவோம்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை அழகு இளங்கோ சார்

தனிமைத் துயரில் வாடிய போது

தனிமை மரணத்திலும் கொடியது என உணர்ந்தேன்

தன்னிச்சையாய் நீ பேசிய சொற்கள்

தண்ணிலவாய் என் நெஞ்சைத் தணித்தன

இந்த வரிகளும் அழகு.

அனுபவம் தந்த கவிதையா இந்தக் கவிதை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதையை ரசித்து கருத்து எழுதிய தங்கைக்கும்(சந்தியா) அக்காவுக்கும்(கறுப்பி) நன்றி

அனுபவம் என்று நீங்கள் சொல்வதும் சரிதான் கறுப்பியக்கா

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனுபவம் தோய்ந்த அழகிய கவிதைக்கு எனது பராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையை ரசித்து கருத்து எழுதிய தங்கைக்கும்(சந்தியா) அக்காவுக்கும்(கறுப்பி) நன்றி

அனுபவம் என்று நீங்கள் சொல்வதும் சரிதான் கறுப்பியக்கா

க வாக இருப்பதால்

கா வும் இல்லை

இம்சையும் இல்லை

நல்ல கவிதை

க வாக இருப்பதால்

கா வும் இல்லை

இம்சையும் இல்லை

அக்கா உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமோ??

"க" வுக்கும் "கா" வுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.

"க" வாக இருப்பவர்கள் எத்தனையோ பேர் "கா" இல் சாதனை படைக்கினம்.

Edited by YARLVINO

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

க வாக இருப்பதால்

கா வும் இல்லை

இம்சையும் இல்லை

நான் அந்த அர்த்தத்தில் உங்களை அக்கா என்று சொல்லவில்லை (நல்ல ஆளாக்கா நீங்கள்)

நான் 'தோழி' என்ற பெயரில் எழுதிய கவிதையின் பாட்டுடைத் தலைவியின் நிறமும் இந்தக் கவிதை எழுதக் காரணமாக இருந்த பெண்ணின் நிறமும் கறுப்புத்தான்.

கறுப்பும் சிவப்பும் வெறும் நிறங்களாக இருந்தால்தான் அழகு. அவையே மனிதரில் ஏற்றத் தாழ்வுகளை விதைக்கக் கூடாது. நீங்கள் ஒரு வேளை பகிடியாக எழுதியிருந்தாலும் ஒரு விதத்தில் சிறு காயத்தை ஏற்படுத்திவிட்டன.

இனம், மொழி, வர்க்கம், சாதி, நிறம், பால் போன்றவற்றில் வேறுபாடுகளையோ ஏற்றத்தாழ்வுகளையோ கற்பித்தால் அவை மனித விடுதலைக்கு எதிரானவையே!

Edited by இளங்கோ

க வாக இருப்பதால்

கா வும் இல்லை

இம்சையும் இல்லை

அக்கா உங்களுக்கு ஒன்று தெரியுமா கறுப்பாக இருப்பது தான் நல்லமாம் காரணம் சில நோய்களை எதிர்க்கும் சக்கி இருக்காம் என்று எங்கையோ படித்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறு புன்னகைக்கும் மறுக்கிறது உன் உதடு - என்

சிற்றறிவுக்குத் தெரியவில்லை மறுப்பின் காரணம்

சிறுபிள்ளைத்தனமாய் செய்யாத தப்புக்கு

சிந்தை கலங்கி மன்னிப்பும் கேட்டேன்

எனக்கு பிடித்த வரிகள். மற்றும் படி கவிதை முழுக்க அனுபவத்தின் பிரதி.மொத்தத்தில் அருமையான கவி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்கள் செல்வமுத்து, யாழ்வினோ, சஜீவன் அனைவருக்கும் நன்றி

எங்கே கறுப்பியக்கா நான் இறுதியாக எழுதியதைப் படித்தாவா என்று தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

படித்தேன் ரசித்தேன் இளங்கோ சார்.

நான் வேறு ஏதோ கருத்தை கொண்டு எழுதினன்.

நீங்க வேறு ஏதோ கருத்தை வைச்சு எழுதின மாதிரி தெரியுது.

என்ன கருத்தை நினைச்சு எழுதினன் எண்டு கேளாதீதிங்க.

அழகான உங்க கவிதைக்கு சபாஷ் போடலாம். அற்புதமாயிருந்தது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிமையும் பிரிவும்

தனிமை இனிமை பிரிவு இன்பம் பெண்களாக இருந்தால்

தன் மீது படும் ஒளிக்கதிர்கள் தெறித்து வெளியேறாதவாறு அவை முழுவதையும் அப்படியே உள்வாங்கி உறிஞ்சும் மேற்பரப்புள்ள பொருட்கள்தான் எமது கண்ணுக்குக் கறுப்பாக தெரியும் என்பது விஞ்ஞான விளக்கம். உதாரணமாக ஒரு பொருள் சிவப்பாக தெரிந்தால் அது வெள்ளொளியிலுள்ள 7 நிறங்களில் 6 ஐ உறிஞ்சிக்கொண்டு மிகுதியான சிவப்பு நிற ஒளியை மட்டும் தெறிக்கச் செய்கிறது என்பது அர்த்தம்.

இதை நான் இங்கு குறிப்பிடுவது ஏனெனில் அகத்தின் அழகு முகத்தில் தெரியும், களத்தின் அழகு உங்கள் எழுத்தில்தான் தெரியும். கறுப்போ சிவப்போ எமக்குள் பாகுபாடு காட்டுவதற்கு அது உரிய காரணமாயிருக்கமுடியாது. கறுப்பி(என்னைப் பொறுத்தளவில் இது ஒரு பெயர்மட்டும்தான்) அவர்களின் மனம் நோகும்படி எழுதுவதை கள நேயர்கள் தவிர்த்துக் கொள்ளக் கடவது.

Edited by Norwegian

அரசியல், வரலாறு, இலக்கியம்,

அறிவியல் அனைத்தையும் பகிர்ந்தேன்

ஆசையாய் நீ கேட்கிறாய் என்பதை

அபிநயம் காட்டும் உன் முகம் கூறிற்று

அந்த அபினயத்தின் அழகை ரசிப்பதற்காகவே மாய்ந்து மாய்ந்து புத்தகங்களுக்குள் தவம் கிடந்த அனுபவம் எனக்கும் உண்டு.

ஆறிப்போன தழும்புகள் மட்டும் இன்னும் அளியாத தடங்களாக.....

மனதை மயிலிறகால் வருடிச்செல்கின்றன, உங்கள் வரிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த அபினயத்தின் அழகை ரசிப்பதற்காகவே மாய்ந்து மாய்ந்து புத்தகங்களுக்குள் தவம் கிடந்த அனுபவம் எனக்கும் உண்டு.

நன்றி ஈழநேசன் அவர்களே!

நீங்கள் கூறியிருப்பதும் உண்மைதான்.

அந்தப் பெண் பரத நாட்டயம் கற்றவா. நான் பேசும் தமிழ்த் தேசியம், தமிழ் இலக்கியம், வள்ளுவம், மார்க்சியம் , பெரியாரியம் இத்தியாதி இத்தியாதி போன்றவற்றை தொடர்ந்து பேசினால் அந்த ஆடலழகிக்கு அலுப்புத் தட்டிவிடும் என்பதால் பரதநாட்டியம் தொடர்பான புத்தகங்களை விழுந்து விழுந்து படித்து அவாவுடன் பகிர்ந்து கொண்டேன்.

Edited by இளங்கோ

அழகான கவிதை இளங்கோ (சார் இல்லை போதுமா)

அதிலும்

காயத்தை மாற்றும் சக்தி காலத்திற்கு உண்டெனில்

காலங்கள் செல்கையில் காயங்கள் மாறும்தான்

காலையும் மாலையும் காணும் வாய்ப்பினால்

காயத்தின் ஆழங்கள் கண்களை நனைக்கின்றன

எனக்கு ரொம்ப பிடித்த வரிகள்.

பெண்களை வர்ணிப்பது ஆண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களை வர்ணிப்பது ஆண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்

பெண்களை வருணிப்பதில் ஆண்களுக்கு இருக்கும் மகிழ்ச்சியைவிட அந்த வருணனையைக் கேட்டு ரசிப்பதில் பெண்களுக்கு இருக்கும் மகிழ்ச்சி அதை விட பல மடங்கு அதிகம் என்று எனக்கும் தெரியும்.

நன்றாக உணர்ந்து ஒவ்வொரு வரியும் எழுதி இருக்கிறியள். பாராட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.