Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டென்மார்க் கத்தோலிக்க திருச்சபையின் அத்துமீறல்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டென்மார்க் கத்தோலிக்க திருச்சபையின் அத்துமீறல்!

கடந்த 09.01.07 அன்று டென்மார்க்கில் உள்ள கிரின்ஸ்ரட் நகரத்தில் கத்தோலிக்க தமிழர்களால் நடத்தப்படுகின்ற "டென்மார்க் கத்தோலிக்க திருச்சபை" என்கின்ற அமைப்பு ஒரு ஒளிவிழாவை நடத்தியது.

அந்த விழாவில் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த பலர் கௌரவிக்கப்பட்டார்கள். கௌரவிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு பட்டங்களும் வழங்கப்பட்டன. அவர்கள் கத்தோலிக்க திருச்சபைக்கும் சமூகத்திற்கும் ஆற்றிய சேவைகளுக்காக அவர்களுக்கு அந்தப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

பட்டங்கள் பெற்றவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்ட பொழுது, அவர்கள் பெற்ற பட்டங்களை அடைமொழியாகக் கொண்டே அழைக்கப்பட்டார்கள். அதன்படி திரு. ராசா மரியா பெர்னாண்டா என்பவர் ஒளிவிளக்கை ஏற்றுவதற்காக மேடைக்கு அழைக்கப்பட்டார்.

எமது தமிழீழ உறவுகளுக்கு நீதியோடு கூடிய சமாதானமும், வெற்றியும் விடுதலையும் கிடைக்க வரம் வேண்டி திரு ராசா மரியா பெர்னாண்டா ஒளியை ஏற்றி வைப்பார் என்று அறிவிப்பாளர் கூறி அவரை அழைத்தார். ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட "பட்டம்" விடயம் புரிந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும்.

டென்மார்க் கத்தோலிக்க திருச்சபை ஒவ்வொருவரையும் எப்படி அழைக்க வேண்டும் என்று அறிவிப்பாளருக்கு எழுதிக் கொடுத்திருந்தது. அதை அறிவிப்பாளரும் அப்படியே வாசித்தார். கத்தோலிக்க திருச்சபை திரு. ராசா மரியா பெர்னாண்டாவிற்கு கொடுத்த பட்டம் "நாட்டுப்பற்றாளர்".

"நாட்டுப்பற்றாளர்" திரு. ராசா மரியா பெர்னாண்டா என்று அவர் மேடைக்கு அழைக்கப்பட்டார்.( "நாட்டுப்பற்றாளர்" என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுவதன் ஒலி வடிவத்தை கேட்பதற்கு இங்கே http://webeelam.com/denmark.wav "கிளிக் செய்யவும்)

நாட்டில் பற்றுள்ள அனைவரும் நாட்டுப்பற்றாளர்கள்தான். அதை யாரும் மறுக்கப் போவதில்லை. ஆனால் இன்றைக்கு "நாட்டுப்பற்றாளர்" என்கின்ற சொல் ஒரு மதிப்புமிக்க ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இந்த விருதை நாட்டுக்காக அல்லும் பகலும் பணி புரிந்து சாவடைந்தவர்களுக்கு விடுதலைப்புலிகள் வழங்கி கௌரவித்து வருகிறார்கள். "நாட்டுப்பற்றாளர்கள்" விடுதலைப் போரை தாங்குபவர்களாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஏதோ ஒரு அமைப்பு யாரோ ஒருவருக்கு "நாட்டுப்பற்றாளர்" என்று பட்டம் வழங்குவது கண்டிக்கத்தக்கது. இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடும்.

கத்தோலிக்க திருச்சபையால் "நாட்டுப்பற்றாளர்" பட்டம் பெற்ற குறிப்பிட்ட நபர் பற்றி விசாரித்ததில், அவர் சுனாமியின் பின்பு டென்மார்க் தமிழர் புனர்வாழ்வுக்க கழக பணிமனையில் இடையிடையே நின்று சில உதவிகளை செய்பவர் என்று தெரிய வருகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு கத்தோலிக்க திருச்சபை அவருக்கு "நாட்டுப்பற்றாளர்" என்று பட்டம் வழங்கியதா என்று தெரியவில்லை.

குறிப்பிட்ட நபருக்கு இப்படி "நாட்டுப்பற்றாளர்" விருது வழங்கப்பட்டது ஒரு தற்செயலான செயலாக இருக்க முடியாது. தமிழீழ உறவுகளின் வெற்றிக்கும் விடுதலைக்குமாக வரம் வேண்டி ஒளிவிளக்கை ஏற்றுகின்ற வேலையை அவருக்கு கொடுத்ததன் மூலமாக குறிப்பிட்ட நபரை "நாட்டுப்பற்றாளர்" என்று அழைத்துக் கௌரவித்தது நன்கு அறிந்து திட்டமிட்டு செய்த ஒரு செயல் என்பது புரிகிறது.

இந்த இடத்தில் ஜேர்மனியில் நடந்து ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு தாயகத்தில் இருந்து விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு ஜேர்மனி வந்திருந்தது. அந்தக் குழுவில் "தேசத்தின்குரல்" அன்ரன் பாலசிங்கம், தமிழ்செல்வன், பின்பு துரோகியாகிப் போன கருணா ஆகியோர் இருந்தனர்.

அவர்களுக்கும் மக்களுக்குமான சந்திப்பு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இடைவேளையின் போது பார்வையாளர்கள் பக்கத்தில் மிகவும் சத்தமாகவும் இரைச்சலாகவும் இருந்தது. அப்பொழுது ஒருவர் "மைக்கை" எடுத்து பார்வையாளர்களை அமைதியாக இருக்கும்படி சொன்னார். "இப்பொழுது இங்கே வந்திருக்கின்ற "மாவீரர்கள்" மீண்டும் விளக்கம் தர இருக்கிறார்கள், அமைதியாக இருங்கள்" என்று அவர் சொன்னார். இதை கேட்ட அனைவரும் உரத்து சிரித்து விட்டார்கள். அதன் பிறகுதான் அவருக்கு தன்னுடைய தவறு விளங்கியது.

அவர் ஒன்றும் அனுபவம் மிக்க அறிவிப்பாளர் இல்லை. விடுதலைப்புலிகளின் உயர்மட்ட தலைவர்களை மிக அருகில் பார்த்த பரவசத்தில் உளறிவிட்டார். அவ்வளவுதான்.

ஆனால் டென்மார்க்கில் நடந்தது அறிவிப்பாளரின் தவறு இல்லை. உளற வேண்டிய அவசியமும் இல்லை. அறிவிப்பாளர் நிகழ்ச்சி நடத்துபவர்களால் எழுதிக் கொடுக்கப்பட்டதையே வாசித்தார்.

அது மட்டும் அன்றி நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு "நாட்டுப்பற்றாளர்" என்றால் என்னவென்று தெரியாது என்றும் சொல்ல முடியாது. டென்மாக்கில் 3 உண்மையான "நாட்டுப்பற்றாளர்கள்" இருக்கிறார்கள். இந்த விருதினை டென்மார்க்கில் நாட்டுக்காக முழுநேர பணியாற்றி பின் மறைந்தவர்களுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் வழங்கி இருக்கிறது. கடைசியாக கடந்த ஓகஸ்ட் மாதம் நாட்டுக்காக முழு நேரம் பணியாற்றிய செல்வராசா என்பவர் வாகன விபத்தில் இறந்த போது, அவருக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் "நாட்டுப்பற்றாளர்" விருது வழங்கி கௌரவித்தது.

இப்படி டென்மார்க்கில் இருப்பவர்களுக்கு "நாட்டுப்பற்றாளர்" என்ற சொல்லின் அர்த்தம் தெரியும். இந்த நிலையில் டென்மார்க் கத்தோலிக்க திருச்சபை இப்படியான அத்துமீறலில் ஈடுபட்டது ஏற்றக்கொள்ளக் கூடியது அல்ல. இதற்கு கத்தோலிக்க திருச்சபை ஒரு விளக்கம் தருமா?

- நமது நிருபர்கள்

http://webeelam.com/DenmarkOlivizha.htm

இது டென்மார்க் கத்தோலிக்க திருச்சபையின் அத்துமீறல் மட்டுமல்ல தமிழீழ தேசியம் தலையெடுக்க அரும்பாடுபட்டு உயிர்துறந்த அப்பெரியார்களின் அதியுயர் கௌரவத்தையே உதாசீனம் செய்யும் ஒரு இழிவான செயலும் கூட.

விரைவில் தவறுகளை உணர்ந்து திருந்துவார்கள் என நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கத்தோலிக்கத் திருச்சபையின் செயல் இழிவான செயல். இதற்கு கத்தோழிக்க திருச்சபை என்ன பதில் சொல்லப் போகிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்ன பெரிய விடயம். உவங்கள் கட்டலிக் அமைப்பு இங்கயும் ஒரு ஒளிவிழா நடத்தினவங்கள்! ஒவ்வொரு வருசமும் பொதுஅறிவுப்போட்டி நடத்திறவயள். இந்த வருசமும் அப்படி பண்ணினவயள்.

இதில கேள்வி எழுதிறதும் கேள்வி கேட்கிறதும் ஒரே ஆள் தான்.

அவரின்ர கேள்வியளை கேளுங்கோ!

1. பிரபாகரன் நடாத்தும் இயக்கத்தின் பெயர் என்ன?

இப்படி ஒரு கேள்வி தேவையா? சரி அப்படி கேட்கனும் என்டாலும் அதை கொஞ்சம் மரியாதையா திரு வே.பிரபாகரன் என்டு தொடங்கி இருக்கலாம் தானே. நான் இந்த விழாவுக்கு போகேலை. ஆனா எங்கட போனதுவளும் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்குதுவள் தானே. இதுக்கு பதில் சொன்னவர் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு "தமிழீழ விடுதலைப்புலிகள்" என்றார். "ஏன் யோசிச்சு சொல்றீங்கள"; என்டு அறிவிப்பாளர் கேட்டாh. அதுக்கு பதில் சொன்னவர் சொல்லுறார் "விடுதலைப்புலிகள் என்டு சொல்வதா இல்லை தமிழீழ விடுதலைப்புலிகள் என்டு சொல்வதா என்று யோசித்தேன் என்றார்.

2. நடிகர் வியயின் மனைவி எந்த நாட்டை சேர்ந்தவர்?

பொதுஅறிவுக்கு மிக முக்கியமான கேள்விகள்!!!

3. எமனனின் வாகனம் என்ன?

இந்த கேள்வி 18வயது பொடியனை கேட்டது. அவர் தெரியேலை என்டு கேள்வி கேட்டவரின்ர மகனுக்கு போன் பன்னி கேட்கிறார். அவர் உடனே மேடையில் வந்து பதிலை சொல்லீட்டு போறார்.

இதுவளை எல்லாம் கேட்டால் பிறகு மதக்கலவரம் உருவாகி 10 தலையள் உறுளுமப்பா.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.