Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்,கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள்

Featured Replies

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்,கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள்
 
 
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்,கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாகவும், யாழ் பஸ் நிலையத்திற்கும் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
download-1.jpg
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சிறையில் படுகொலை செய்யப்பட்ட டில்ரூக்ஷனின் மரணத்திற்கு நீதி வழங்குமாறு கோரியும் வெகுஜன அமைப்பு மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று(திங்கட்கிழமை) யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
unnamed4-720x480.jpg
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ‘நல்லாட்சி அரசாங்கமே அரசியல் கைதிகளை விடுதலை செய், பழிவாங்காதே பழிவாங்கதே அரசியல் கைதிகளை பழிவாங்காதே, இராணுவத்தினை வெளியேற்று, தாமதிக்காதே தாமதிக்காதே கைதிகளை உடன் விடுதலை செய்’ போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
unnamed-32.jpg
இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மாக்சீச லெனினிச கட்சியின்தலைவர் சி.க செந்தில்வேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
unnamed-52.jpg
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று காலை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெக்கப்பட்டுள்ளது.
 
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதுடன், 1983 முதல் 2012 ஆண்டு வரை சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் கொலையுண்ட அரசியல் கைதிகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
unnamed-23.jpg
இதேவேளை, தமது விடுதலையை வலியுறுத்தி இன்று(திங்கட்கிழமை) காலை முதல் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/news/16023

  • தொடங்கியவர்

விடுதலை செய்...!
 
08-08-2016 01:26 PM
Comments - 0       Views - 30

article_1470643148-Pro%20%281%29.JPG

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று, யாழ் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக, இன்று முற்பகல் இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஒறிணைந்து, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (படப்பிடிப்பு - சொர்ணகுமார் சொரூபன்)

article_1470643160-Pro%20%282%29.JPG

article_1470643173-Pro%20%283%29.JPG

article_1470643182-Pro%20%284%29.JPG

article_1470643190-Pro%20%285%29.JPG

article_1470643199-Pro%20%286%29.JPG

article_1470643246-Pro%20%287%29.JPG

- See more at: http://www.tamilmirror.lk/178918/வ-ட-தல-ச-ய-#sthash.he13nkgy.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது ஒரு வகையில் போராட்டம் என்ற நெருப்பின் சூட்டில்தான் மக்களது உணர்வுகளும் பொங்கி வழியும். இல்லையென்றால் அவை தூங்கிவிடும். :( 

அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிப்பதால் மக்களுக்குக் கேடுவராது என்பதற்கு இதுவரை விடுவிக்கப்பட்ட கைதிகள் சாட்சியாக உள்ளனர் . :unsure:

  • தொடங்கியவர்
கைதிகளின் விடுதலையில் அரசு தீர்க்கமான முடிவிற்கு வரவேண்டும்-சுரேஸ்
 
 
கைதிகளின் விடுதலையில் அரசு தீர்க்கமான முடிவிற்கு வரவேண்டும்-சுரேஸ்
இனங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தினை ஏற்படுத்த அரசாங்கம் விரும்பினால், உடனடியாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
 
தம்மை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் இன்று (திங்கட்கிழமை) அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் பலர் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று முற்பகல் ஆர்ப்பட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், ஊடகங்களிடம் மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
 
அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அரசாங்கம் காரணங்களை கூறிவருகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவோம் என்றார்கள். பின்னர் அதில் மாற்றத்தை கொண்டுவருவோம் என்றார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவந்தாலும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வார்கள் என்பதில் எவ்வித உத்தரவாதமும் கிடையாது.
 
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பது தமிழ் மக்களின் ஏகோபித்த முடிவு. அதற்காக தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட வேண்டிய தேவை இருக்கின்றது.
DSC09588-720x480.jpg
நிமலரூபன் மற்றும் டில்ரூக்ஷனின் படுகொலைகளுக்கு அரசாங்கம் இதுவரை யில் பதில் சொல்லவில்லை. இவைகளை எல்லாம், சாதாரணமாக நடைபெற்ற கொலைகள் என காட்டிக் கொள்வதற்கு அரசாங்கம் முனைகின்றது. இனங்களுக்கு இடையிலான நல்லுறவினை அரசாங்கம் விரும்புமாக இருந்தால், அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
 
மேலும், வவுனியாவில் உள்ள வழக்கினை அநுராதபுரத்திற்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள வழக்குகளை வேறு மாவட்டத்திற்கும் மாற்றுகின்றார்கள். குமாரபுரம் வழக்கு திருகோணமலையில் இருந்து அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். அதேபோன்று அரசியல் கைதிகளின் வழக்குகளும் மாற்றப்படுகின்றன. இவ்வாறு வழக்குகளை ஏனைய மாவட்டங்களுக்கு மாற்றுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கம் உடனடியாக அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வழக்கு விடயங்களில் தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும்” என்றார்

http://onlineuthayan.com/news/16036

நல்லிணக்கத்தை வெளிப்படுத்த தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும்-சித்தார்த்தன்
 
 
நல்லிணக்கத்தை வெளிப்படுத்த தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும்-சித்தார்த்தன்
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது,அரசியல் கைதிகளை விடுதலை செய்வது போன்ற விடயங்கள் மிகத் தெளிவாகக்கூறப்பட்டுள்ள நிலையில் அதனைச் செய்வதாக அரசாங்கம் சர்வதேசத்திற்குஉறுதியளித்துள்ள போதும் இன்றும் அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் பின்வாங்கிச் செயற்படுவது துரதிஸ்டம் எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமானதர்மலிங்கம் சித்தார்த்தன்.
 
சகல அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை முற்பகல்-10.30 மணி முதல் யாழ். பிரதான பேருந்து தரிப்பிடநிலையத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
8-8-2016%2015.8.19%201.jpg
இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
 
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல தடவைகள் அரசாங்கத்தால் எமக்கு உறுதிமொழி வழங்கப்பட்ட போதும் அந்த உறுதிமொழிகள் பல மாதங்கள் கடந்தும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
 
ஏறக்குறைய 90 தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் சிறையில்வாடிக் கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே நல்லிணக்கத்தைத் தற்போதைய அரசாங்கம்வெளிப்படுத்துகிறது என்றால் அவர்கள் அனைவரும் எந்தவித நிபந்தனையுமின்றிஉடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
 
அதன் மூலம் தான் அரசாங்கத்தின் உண்மையானநல்லிணக்கத்தை எமது மக்களுக்கு உணர்த்த முடியும்.
 
ஆகவே, எங்களுடைய அரசியல் கைதிகள் விடுவிக்கப்படும் வரை எமது மக்களின் போராட்டம் தொடரும் என்றார்.

http://onlineuthayan.com/news/16034

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.