Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் தமிழ் அகதிகள் குடியேறி 30 ஆண்டுகள் - நியூபவுண்லாந்தில் உணர்வுபூர்வ நிகழ்வு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இரண்டு படகுகளில் 155 தமிழ் அகதிகள் 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கனடாவின் நியூபவுண்லாந்துக் கடற்கரையில் தரையிறங்கி, 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக்   குறிக்கும் வகையிலும், கப்பலில் வந்தவர்களை காப்பாற்றிய அனைவருக்கும் கனடியத் தமிழர் சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையிலும் நியூபவுண்லாந்தில் நேற்று சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை கனடிய தமிழர் பேரவை ஒழுங்கு செய்திருந்தது.

இரண்டு படகுகளில் 155 தமிழ் அகதிகள் 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கனடாவின் நியூபவுண்லாந்துக் கடற்கரையில் தரையிறங்கி, 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையிலும், கப்பலில் வந்தவர்களை காப்பாற்றிய அனைவருக்கும் கனடியத் தமிழர் சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையிலும் நியூபவுண்லாந்தில் நேற்று சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை கனடிய தமிழர் பேரவை ஒழுங்கு செய்திருந்தது.

   

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, 155 அகதிகளையும் காப்பாற்றிய மாலுமிகளும், அவர்களது குடும்பத்தினரும், மேலும் 1986ஆம் ஆண்டு குடிவரவு ஆமைச்சராக இருந்த Gerry Weiner அவர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரொறன்ரோ, மொன்றியால் நகரிலிருந்து சமூகத் தலைவர்கள், பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் நியூபவுண்லாந்தில் ஒன்று கூடினர்.

அகதிகளைக் காப்பாற்றிக் கரைசேர்த்த கனடா கடற்படைக் கப்பல் அருகே சம்பிரதாயபூர்வமாக நன்றி தெரிவிக்கும் பேச்சுக்கள் இடம் பெற்றன. மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்த சங்கரி அதில் கலந்து கொண்டு உரையாற்றினார். முன்னாள் அமைச்சர் Gerry Weiner அவர்களும் அதில் பங்கெடுத்துக் கொண்டார்.

1986ஆம் ஆண்டு அந்த 155 தமிழர்களும் அகதியாக கப்பலில் வந்தபோது அவர்களைத் 'திருப்பி அனுப்பவேண்டும்' என்ற கோரிக்கைகள் எழுந்தன. அப்போது கனடாவின் பிரதமராக இருந்த Brian Mulroney அவற்றையெல்லாம் நிராகரித்து, அகதிகளாக அந்த 155 பேரையும் ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாகவே கனடாவின் அரச நிலைப்பட்ட அகதிக் கொள்கைகள் பலவும் சீரமைக்கப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்று கனடாவில் பெருமளவில் தமிழர்கள் அகதிகளாக குடியேறிக் குடியுரிமை பெற இக் கப்பல் பயணமும் பெரும் பங்காற்றியது.

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இரண்டு சிறிய படகுகளில் 1986ஆம் ஆண்டு கடலில் பயணித்த இரு தமிழ் அகதிகள் 30 வருடங்களுக்குப் பின்னர் தாங்கள் வந்த படகில் அமர்ந்த போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.

 

canada-tamils-event-120816-seithy%20(1).

 

 

canada-tamils-event-120816-seithy%20(2).

 

 

canada-tamils-event-120816-seithy%20(3).

 

 
   
 
   Bookmark and Share Seithy.com

http://www.seithy.com/breifNews.php?newsID=163414&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலையை சாத்தியப்படுத்த முயற்சித்தமோ இல்லையோ.. அல்லது அதற்காக உழைத்தோரை பாதுக்காக முற்பட்டமோ இல்லையோ.. அல்லது அவர்களின் நியாயத்தை உலகிற்கு சொல்ல முற்பட்டமோ இல்லையோ..   போராட்டத்தின் விளைவுகளால் விளைந்த சில செளகரியங்களை.. அனுபவிச்சம். இதில.. பெருமை வேற. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

தமிழீழ விடுதலையை சாத்தியப்படுத்த முயற்சித்தமோ இல்லையோ.. அல்லது அதற்காக உழைத்தோரை பாதுக்காக முற்பட்டமோ இல்லையோ.. அல்லது அவர்களின் நியாயத்தை உலகிற்கு சொல்ல முற்பட்டமோ இல்லையோ..   போராட்டத்தின் விளைவுகளால் விளைந்த சில செளகரியங்களை.. அனுபவிச்சம். இதில.. பெருமை வேற. :rolleyes:tw_angry:

அவர்களின் பங்களிப்புக்கள்

தாயக வேலைத்திட்டங்களை அறியாமல் 

பொதுவாக இப்படி சொல்லமுடியாது நெடுக்கு...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அவர்களின் பங்களிப்புக்கள்

தாயக வேலைத்திட்டங்களை அறியாமல் 

பொதுவாக இப்படி சொல்லமுடியாது நெடுக்கு...

50,000 போராளிகளினதும்..2 இலட்சம் மக்களினதும் தியாகத்தை விடவா இவர்களின் அகதி வாழ்க்கையில் அளப்பெரிய தியாகம் அமைந்து விட்டது..??!

கனடாவில்.. எல்லாத்துக்கும் தடை. 2.5 இலட்சம் மக்களின் தியாகமும் பல்லாயிரம் பேரின் உழைப்பும் வாழ்க்கையும் வீண், 

இதில என்ன வேலைத்திட்டம்.. என்ன இன அழிப்பை.. போர்க்குற்றத்தை எல்லாம் மறப்பிக்கப் பண்ணிட்டு.. அகதி வாழ்வின் ஆரம்பம் பற்றி புளகாங்கிதம் அடைவதா..?!

இல்ல..

கோழி.. மாடு.. சைக்கிள்.. மலசல கூடம்.. வாசிகசாலை.. கோவில் கட்டுதலா..???! 

இதைச் செய்ய எதுக்கு இவ்வளவு இழப்புகளும்.. அகதி ஓட்டமும்..???! tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இவை யோ்மனியில் இருந்து கப்பலில் வந்தவையோ.அப்படி என்றால் ஏதோ ஊரில் இருந்து வந்த மாதிரி பொிய பீலங்.இது ரொம்ப ஓவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.