Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையின் வயது 377 வருடங்களா... 2000 வருடங்களா?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் தலைநகர்,தென் இந்தியாவின் நுழைவு வாயில் என்று பல்வேறு, நிலைத்த பெருமையை உடைய சென்னை பெருமாநகராட்சி,  கோடி மக்கள் வாழும் பெரு நகரமாக வளர்ந்துள்ளது. உலகின் எந்த முக்கிய நகரத்தோடும் ஒப்பிடும் அளவிற்கு கலை, கலாசாரம்,வரலாறு என்று நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ள நகரமாக உள்ளது சென்னை. இதன் வயது 377 என்றும், அதற்கான 'சென்னை டே' கொண்டாட்டம் வரும் 22ம் தேதி கொண்டாடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், " சென்னைக்கு வயது 377 இல்லை, உண்மையான வயது 2,000 ஆண்டுகளுக்கும் மேலானது" என்று கூறி, அதற்கு ஆதரவு கேட்டு ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பு நடத்துகிறார் Chennai 2000 Plus Trust -ன் தலைவர் ஆர்.ரங்கராஜ்.   

இது குறித்து அவரிடம் விசாரித்தோம். ரங்கராஜ் நம்மிடம் கூறுகையில்,

" கடந்த 2004ம் ஆண்டு முதல் சென்னையின் பெருமையை உலகம் அறிந்திடும் வண்ணம் 'சென்னை டே' கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதியை,  'சென்னை உருவாக்கம் பெற்ற நாள்' என்று ஒரு தரப்பினர் கூறி, பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் என்று பல இடங்களில் 'சென்னை டே' கொண்டாட்டங்கள் நடத்த வழி வகுத்துள்ளனர். ஆனால் இது உண்மையான சென்னை நாள் இல்லை, பிரிட்டிஷ் அரசாங்கம் தமது நிர்வாக வசதிக்காக 377 வருடங்களுக்கு முன்பு, கி.பி.1639 ம் ஆண்டு,  ஆகஸ்ட் 22 ம் தேதியில் சென்னையைத் தலைநகராக உருவாக்கினர். அதனால் அதுவே சென்னையின் நாள் அல்ல. உண்மையில் சென்னையில் உள்ள கோயில்களின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கொண்டுள்ளன. அதே போல, பல்வேறு கல்வெட்டுச் சான்றுகள், இலக்கிய சான்றுகள் என நிறைய உள்ளன. பல்லாவரம், திருநீர்  மலை, திரிசூலம், திருநின்றவூர், அம்பத்தூர், மாதவரம், மயிலாப்பூர் என்று பல இடங்களில் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்த, கலை இலக்கியம் உள்ளிட்ட வரலாறுகள் படைத்த பகுதியாக சென்னை திகழ்ந்து வருகிறது.

சென்னையைச் சுற்றியும் சென்னைக்குள்ளும் ஓடும் நதிகள் கொசஸ்தலை, கூவம், அடையாறு. உலகின் எந்த  நாகரிகமும்  நதிக்கரையில்தான் வளர்ந்துள்ளது என்பதை வரலாற்று ஆவணங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. அதே போலத்தான் சென்னையும் இந்த 3 நதிகளின் கரைகளில் உருவாகி வளர்ந்துள்ளது என்று கொள்ளலாம். பிரிட்டிஷ் அரசு கூறியபடிதான் 'சென்னை டே' கொண்டாடவேண்டும் என்றில்லை. நமக்கு என்று வரலாறு இல்லையா என்ன?

ஏற்கெனவே மதராசப்பட்டினம் என்று இருந்த நகரை Madras(மெட்ராஸ்) என்று சுருக்கி அழைத்தனர் பிரிட்டிஷார். அவ்வளவே. அதனால் அவர்கள் கூறியபடி அவர்கள்தான் இந்த மாநகரை உருவாக்கினார்கள், அந்த நாள்தான்  ஆகஸ்ட் 22ம் தேதி என்று கூறுவது ஒப்புக்கொள்ளக்கூடியதில்லை.அதற்கு மாற்றாக கடந்த 1996 ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி தமிழக அரசு, Madras(மெட்ராஸ்) என்பதை 'சென்னை' என்று மாற்றி அறிவித்தது. அந்த நாளையே நாம் 'சென்னை நாள்' என்று கொண்டாடலாம். நம்மை அடிமைப்படுத்த பிரிட்டிஷார் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னையை தலைநகராக மாற்றினார். அதனால் அந்த நாளை நாம் சென்னை நாளாகக் கொண்டாடவேண்டிய அவசியமில்லை." என்றார்.

மேலும் தனது இந்தக் கருத்துக்கு வலு சேக்கும் விதமாக ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பும் நடத்தி வருகிறார் ரங்கராஜ்.

’சென்னை டே’ என்று எத்தனை நாட்களை வேண்டுமானாலும் அடுக்குங்கள்... அத்தனை நாட்களும் சென்னையைக் கொண்டாடுவோம்! 

தேவராஜன்   

http://www.vikatan.com/news/tamilnadu/67183-significance-and-controversies-regarding-madrasday.art

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:


’சென்னை டே’ என்று எத்தனை நாட்களை வேண்டுமானாலும் அடுக்குங்கள்... அத்தனை நாட்களும் சென்னையைக் கொண்டாடுவோம்! 

http://www.vikatan.com/news/tamilnadu/67183-significance-and-controversies-regarding-madrasday.art

அப்படியே "மதுரை டே" என ஒரு நாளை தெரிவு செய்து கொடுங்கோப்பா.. நாங்களும் கொண்டாட வேணாமா? fiesta24.gif

madurai-inhabitants-private.jpg     meenakshi-temple-1%25255B5%25255D.jpg?im

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

அப்படியே "மதுரை டே" என ஒரு நாளை தெரிவு செய்து கொடுங்கோப்பா.. நாங்களும் கொண்டாட வேணாமா? fiesta24.gif

madurai-inhabitants-private.jpg     meenakshi-temple-1%25255B5%25255D.jpg?im

 

சென்னையை விட, சங்கம் வளர்த்த  மதுரை பல ஆயிரம் வருடங்கள் மூப்பு. :101_point_up: :27_sunglasses:
குத்து மதிப்பாக பார்த்தால்.... இப்ப மதுரைக்கு  5,000 வயசு. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.