Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதில்மேல் பூனை!

Featured Replies

எல்லாதிற்கும் பொதுவாய் 3 விடையிறுப்பு - அல்லது விடை எதிர்பார்ப்பு இருக்குமாம் - !

ஆனா 4 ஆ போச்சு!

நம்பிக்கைக்கும்- விசுவாசத்துக்கும் - எகத்தாளத்திற்கும்- ஏளனத்திற்கும்....

இடையே புகுந்து - என்னனமோ முயற்சித்தால் ...........

இதில உங்க இடம் எது?

இழப்பு இழப்பு - என்று கவலை படுவதெல்லாம் ..இப்போ!!

சிங்களம் ..முன்பெல்லாம் எங்களை... பொத்தி வைச்சமல்லிகை மொட்டுனு - காப்பாதிச்சுது - அப்பிடி சொல்ல வாறீங்களா?

ஏனுங்க -எங்களையும் மக்கள் என்று எந்த இடத்தில சிங்களவன் ஏற்றுக்கொண்டான்?

கனக்க வேணாம் ஒரே ஒரு இடம் சொல்லுங்க!

சரி ...

நீங்க நம்புற சிங்களவனை நம்பி போய்.......

செம்மணி சுடலையில - நூற்றுக்கணக்கா புதைக்கப்பட்ட உயிர்கள் ...

இன்றுவரை தெரியல உடலோ அல்லது உயிரோ எங்கே-னு!

இதில -உங்க தீர்ப்புதான் என்ன?

உங்கள் அளவிற்கு பகுத்தறிவது கஸ்டம்தான் ...

ஆனாலும் - இரத்தமும் சதையுமாய் தொடரும் ஒரு விடயங்களை புரிந்துகொள்ள பாட புத்தகம் தேவையா?

முற்றுப்பெறாத விடயங்கள் - காலம் காலமாய் விமர்சனங்களை எதிர் நோக்கும்!

தற்கால கட்டம்- ஆரம்பத்திலும் இல்லை...! முற்றும் இல்லை - !

மாறாய் முடிவிலி!!

எந்த இட்த்தில் அது முடிந்தாலும் -இழப்புதான் - !!

தந்தை செல்வா என்ற பெரியவர் - தமிழனை கடவுள்தான் காப்பாத்தணும் என்று சொன்னார் கேள்விபட்டு இருக்கமோ இல்லையா?

அந்த காலகட்டத்தில் - எந்த தமிழன் ஏகே-47 ஓடு அலைஞ்சான்?

அவர் காலகட்டத்தில் - ஆயிரமாயிரமாய் - யாரும் செத்ததே இல்லையா?

யுத்தம் என்றது நாங்க - கேட்டு பெற்றதா?

அல்லது - யுத்தம் என்பதும் - அழிவு என்பதும் - எம் இனம் தொடக்கி வைத்ததா?

நீங்கதான் சொல்லணும்!!

ஏதாவது - தெளிவா சொல்லுஙக... இல்லாட்டில்.........

என்ன சொல்ல முடியும்?

நீங்க -மதில்மேல் பூனை!

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் உங்கட தோஸ்து குறுக்காலபோறவர் குத்துக்குரணம் அடிச்சுச் சொல்லிட்டாரே அமெரிக்காவிட காலைப் பிடியுங்கோ என்று...! என்னே தீர்க்க தரிசனமான வேண்டுகோள்..!

இங்கு மாவிலாறு போகேக்கையே சர்வதேச அனுதாபத்தைப் பெற வேண்டும் என்று பலர் குரல் எழுப்ப அதென்ன சர்வதேசம் நாங்கள் தாங்கள் எங்களை தலைவிதியைத் தீர்மானிக்க வேண்டும் என்று முழங்கினவை..இப்ப ஐயோ புலம்பெயர்ந்த மக்கள் அமெரிக்காவிட காலைப் பிடியுங்கோ என்று பனர் போட்டிருக்கினம்...!

புலிகள் செய்த தவறுகள்..

1.மேற்குலக இந்திய ஜப்பானிய ஆதிக்கம் தலைதூக்கிய போது அதற்கு மாற்றீடான வகையில் சர்வதேச உறவுகளை பகிரங்கமாக வளர்த்துக் கொள்ளாமை. அமெரிக்காவோட சண்டை என்றாலும் கியூபா வெனிசுலா ஆஜின்ரைனா என்று மேற்குலக ஒட்டுதல் இல்லாத நாடுகளோடு உறவுகளைக் கொண்டிருக்கிறது..!

2. மக்களுக்கு அபரிமிதமான தோற்றத்தைக் காட்டியது. மக்கள் படை என்று உருவாக்கியவர்களுக்கு நாளை என்ன நடக்கப் போகிறது என்பது இன்று கேள்விக் குறியாக உள்ளது. புலிகள் தாங்கள் பெரும் படைவலுவோடு இருப்பதாகத் தோற்றம் காட்டியதும் மக்களை அப்படி எண்ண வைத்ததும் தவறு..!

3. போர் ஒன்று தொடரும் போது மக்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளாக என்னென்ன செய்யப்படலாம் என்று அறிவுறுத்தாமை. இன்று மக்களுக்காக விலகிப் போய் இருப்பினும் அரசு சொல்கிறது இன்னும் சில தினங்களில் இடம்பெயர்ந்தவர்கள் மீளக் குடியேறுவர் என்று. ஆக இராணுவத்தின் மீதான புலிகளின் எறிகணைத்தாக்குதலை நிறுத்த அரசு தமிழ் மக்களையே கேடயமாக்கப் போகிறது. மீண்டும் பலியிடப்படப் போவது மக்ககள்...!

4. கருணா விவகாரத்தை கடும்போக்கோடு அணுகுவதைத் தவிர்த்து மென்போக்கோடு போயிருந்தால் கிழக்கில் போராளிகளினதும் ஆயுதத்தினதும் ஆதரவாளர்களினதும் பலம் சிதைவடைவதைத் தவிர்த்திருக்கலாம்..!

5. புலிகள் தொடர்ந்து மெளனம் காப்பது. மக்களுக்கு உடனுக்குடன் நிலைமையை விளக்க பேச்சாளர்கள் நியமிக்கப்பட்டும் நிலவரங்கள் தொடர்பில் மெளனம் காப்பது மக்கள் தனித்துவிடப்பட்ட தன்மையையே உணர வைக்கிறது..! இவை தவிர்க்கப்பட வேண்டும்..! அரசின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து மக்களின் போராளிகளின் மனோ பலத்தை அதிகரிக்க ஆவண செய்யத்தவறியமை. இராணுவம் கதிரவெளிக்குச் சென்றதும் போராளிகள் சிலர் இராணுவத்திடம் சரணடையும் நிலைக்குச் சென்றுள்ளனர்..!

ஆக விடுதலைப்புலிகள் பல நிலைகளில் ஸ்திரமாக இருப்பினும் இன்றைய காலக்கட்டத்தில் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட நிலையில் நாளை வடக்குக் கிழக்கு இணைப்புக்கு கருத்துக்கணிப்பு என்று ஒன்றைக் கிழக்கில் வைத்து இராணுவ ஆளுமையின் கீழ் அதில் வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகப் பிரிக்க அரசுக்கு புலிகளின் பின்னடைவுகள் நிச்சயம் உதவும். அதுமட்டுமன்றி கருணா குழுவின் தலைமையின் கீழ் கிழக்கின் சில பகுதிகள் பொம்பை ஆட்சிக்கு உட்படவும் வாய்ப்புண்டு. இதனால் பாதிக்கப்படப் போவது புலிகளின் ஆதரவு மக்களும்..போராட்ட உணர்வுமே..! :icon_idea:

  • தொடங்கியவர்

யுத்தம் என்றது நாங்க - கேட்டு பெற்றதா?

அல்லது - யுத்தம் என்பதும் - அழிவு என்பதும் - எம் இனம் தொடக்கி வைத்ததா?

நீங்கதான் சொல்லணும்!!

திரு- நெடுக்காலபோவான் - இதுக்கு ஏதும் சொல்லுங்க!!

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் என்றது நாங்க - கேட்டு பெற்றதா?

அல்லது - யுத்தம் என்பதும் - அழிவு என்பதும் - எம் இனம் தொடக்கி வைத்ததா?

நீங்கதான் சொல்லணும்!!

திரு- நெடுக்காலபோவான் - இதுக்கு ஏதும் சொல்லுங்க!!

சிங்களவன் பல்லக்குத் தூக்க பல்லிழித்த தமிழர்கள் தான் தொடக்கி வைத்தது..! டொனமூர் காலத்திலேயே ஒரு தீர்வைக் கட்டிருந்தால்..இன்று நாம் கொங்கொங் போல இருந்திருப்போம்..! :icon_idea::icon_idea:

  • தொடங்கியவர்

சிங்களவன் பல்லக்குத் தூக்க பல்லிழித்த தமிழர்கள் தான் தொடக்கி வைத்தது..!

அதுதான் சொல்லிட்டனே..............

வரலாற்று தவறுகள்தான் ....-காரணம்!

தற்காலகட்டத்தில்....

இதை எப்பிடி திருத்தலாம் - உங்க பார்வையில்?

மதிலை பூனையோ வர்ணன் . ம் தீர்வுகள் ,கேள்விகள் , விளக்கங்கள் எல்லாம் கேட்டு கேட்டு புல்லரிப்பு வருது. :P ஆனா வர்ணன், முறித்து முறித்து எழுதாம கோர்வையா எழுதினா நல்லா இருக்குமோ?, :icon_idea:

எல்லாம் இருக்க நீங்க ஏன் இந்த தலைப்பை தொடங்கின்னீங்க?? :icon_idea:

நிறைய நாள் களத்தை வடிவா வசிக்கலையா ஒண்டுமே புரியலை

Edited by KULAKADDAN

  • தொடங்கியவர்

மதிலை பூனையோ வர்ணன் . ம் தீர்வுகள் ,கேள்விகள் , விளக்கங்கள் எல்லாம் கேட்டு கேட்டு புல்லரிப்பு வருது. :P ஆனா வர்ணன், முறித்து முறித்து எழுதாம கோர்வையா எழுதினா நல்லா இருக்குமோ?, :icon_idea:

எல்லாம் இருக்க நீங்க ஏன் இந்த தலைப்பை தொடங்கின்னீங்க?? :icon_idea:

நிறைய நாள் களத்தை வடிவா வசிக்கலையா ஒண்டுமே புரியலை

ஏதோ சொல்ல வருகிறார்கள் - அதை ஒரு வரில சொல்லுங்க - என்ற முயற்சிதான் - குளகாட்டான் !

மத்தும்படி எனக்கு - உறவு பெரிசா இல்ல - இந்த களத்தில!

இவர்கள் சொல்லவருவதை - எல்லாரும் புரிந்துகொள்ள சில முயற்சி!

நெடுக்காலபோவான் உங்கள் கருத்துக்கள் அபாரம்! தேனிக்கும் ரிபிசிக்கும் அனுப்புங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

பழங்கதைகளைப் பேசி, அப்போது இப்படிச் செய்திருக்கலாமே, அப்படிச் செய்திருந்தால் இப்படியாகி இருக்காதே என்று அலம்புவதை விட்டு, எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தியுங்கள். தற்போதிருக்கும் நிலையிலிருந்து, நாங்கள் எங்கே செல்லவேண்டும், எப்படிச் செல்லவேண்டும், இலக்குகளை அடையச் செய்ய வேண்டியன என்ன என்று யோசிக்கவேண்டும். இதைவிட்டுவிட்டு பழையகாலத்தில் நடந்தவிடயங்களைக் குற்றம் சாட்டுதல், நாம் எமது கடைமைகளில் இருந்து தப்புவதற்கான சாக்குகளாகும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.