Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கும் மைத்திரிக்கும் இடையில் இடம்பெற்ற மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது!

Featured Replies

logo.png

 

எஸ்.எம்.ஈ.சி. என்ற  அவுஸ்திரேலிய நிறுவனம் சிறீலங்காவில் லஞ்ச, ஊழல் மோசடியில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் வெளிநாட்டு அதிகாரிகள் 2011ஆம் ஆண்டு சிறீலங்காவின் கழிவுநீர் திட்டத்திற்காக 2.3மில்லின் டொலரினை மோசடியான முறையில் வழங்கியுள்ளனர்.

குறித்த நிறுவனத்தின் இ-மெயில்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அமைச்சராக இருந்த நேரம் குறித்த நிதியானது எஸ்.எம்.ஈ.சி. நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அரசியலுக்கான ‘நன்கொடை’ என மைத்திரிபால சிறிசேனவும் அவரது உதவியாளரும் தெரிவித்திருந்தனர்.

ஆனால், இ-மெயில்கள் இது 2009ஆம் ஆண்டு உலக வங்கியினால் அணைக்கட்டுத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி என்பதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இதற்கு மாறாக, மைத்திரிபால சிறிசேன 1.8மில்லியன் டொலர் பெறுமதியான அணைக்கட்டின் ஒப்பந்தத்தை எஸ்.எம்.இ.சி. நிறுவனத்திற்கு வழங்கியிருந்தார்.

அண்மையில் பதவி விலக்கப்பட்ட எஸ்.எம்.இ.சி. நிறுவனத்தின் சிறீலங்கா மேலாளர், அவுஸ்திரேலிய அமைச்சருக்கும், ஒருங்கிணைப்புச் செயலாளருக்கும், தெரிவிக்க விரும்புவதாக தனது சகாக்களுக்கு இ-மெயில் எழுதியிருந்தார்.

அதில், இலஞ்சமாகப் பெறப்பட்ட பணமானது சில தேவைகளுக்காக பயன்படுத்தப்படவேண்டியிருந்தது எனவும், அது ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சில பெயர் குறிப்பிட விரும்பாத கட்சிகளை முன்னுரிமைப்படுத்த வேண்டிய தேவை தனக்கிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் எஸ்.எம்.இ.சி நிறுவனமானது இது ஒரு ‘அரசியல் நன்கொடை கோரிக்கை’ என உறுதிபடத் தெரிவித்தது. ஆனால் உள்ளக விசாரணையில் இது நன்கொடை இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

http://thuliyam.com/?p=38895

திட்டத்திற்கு அனுமதியளிக்க அரசியல் நன்கொடை வழங்குமாறு ஜனாதிபதி கோரினாரா? அவுஸ்திரேலிய ஊடகம்:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இயங்கி வரும் Fairfax Media  என்ற இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஸ்னோவி மவுன்டன்ஸ் என்ஜினியரிங் கம்பனி (SMEC என்ற நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல்களின் போது இலங்கை ஜனாதிபதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த ஊடக நிறுவனத்தின் ஊடகங்களில் ஒன்றான தி ஏஜ் பத்திரிகை இது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது.

2011ம் ஆண்டில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் 2.3 மில்லியன் டொலர் பெறுமதியான கழிவுநீர் வடிகாலமைப்பு திட்டமொன்றை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அதிகாரிகள் லஞ்சம் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அமைச்சரவை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திட்டத்திற்கு அனுமதியளிக்க அரசியல் நன்கொடை ஒன்றை வழங்குமாறு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது ஆலோசகரும் கோரியதாகவும் அது தொடர்பிலான மின்னஞ்சல் தகவல்கள் காணப்படுவதாகவும் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய மத்திய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நிறுவனத்தின் மின்னஞ்சல்களின் ஊடாக மோசடி பற்றிய தகவல்கள் அம்பலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் நன்கொடை ஒன்று கேட்கப்பட்டதனை நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

எனினும் உள்ளக விசாரணைகளின் மூலம் லஞ்சம் வழங்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

காவல்துறையினரின் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135219/language/ta-IN/article.aspx

20 minutes ago, Athavan CH said:

உள்ளக விசாரணைகளின் மூலம் லஞ்சம் வழங்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அப்ப சர்வதேச விசாரணையை மகிந்த கும்பல் கோரலாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொள்ளையடிப்புக்கு இவரும் சளைத்தவரில்லை. ஆட்சிப்பீடத்திலிருந்து இறங்கும் போது எல்லாம் வெளிச்சத்துக்கு வரும்.

நல்லாச்சி நல்லாச்சி எண்டு நாக்கை தொங்கப்போடுறவைக்கு ஒரு வணக்கம் சொல்லிக்கிறேன்.tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.