Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருத்தித்துறை துறைமுகத்தில் கடற்புலிகள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒரு விடயத்தைக் கவனிக்கலாம். புலிகள் நாகர்கோவில் கடலில் நிற்கும்போதே, கப்பல் காங்கேசந்துறைக்கு நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தது என்பதில் இருந்து, சிறிலங்கா அரசு கடற்புலிகள் குறித்து எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதை விட நாகர்கோவில் கடற்பகுதியை இறுக்கமான கண்ணகாணிப்பில் வைத்திருக்கின்றது என்பதையும் கவனிக்க.

மற்றது, தன் கடற்படையை புலிகளோடு மோதச் செய்து பலமிழக்க வைக்க சிங்கள அரசு விரும்பவில்லை. அதனால் தான், விமான, மற்றும் தடைப்படையை வைத்து தாக்குதல் நடத்தியதே தவிர, கடற்படையை பாவிக்கவே இல்லை.

இது சாதாகமானதா,இல்லையா என்றோ, அல்லது எவ்வாறு சாதகமாகப் பாவிக்கலாம் என்பதை வரலாறு தான் கூற வேண்டும்.

ஆனால் யாழ்பாணத்தின் மீது தாக்க கூடும் என்பதில் சிங்கள அரசு அவதானமாக இருக்கின்றது. யாழ்பாணத்தை காக்க வேண்டும் என்று என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பது தான், பருத்தித்துறை மீது செல் தாக்குதல் நடத்தி அப்பாவிப் பெண்ணைச் சாகடித்தது.

  • Replies 78
  • Views 17k
  • Created
  • Last Reply

தினக்குரல் இப்படி சொல்கின்றதே

கப்பல் மீது கடற்புலிகள் தாக்குதல்

* பருத்தித்துறையில் பொருட்களை இறக்கிவிட்டு காங்கேசன்துறை நோக்கிப் புறப்பட்ட வேளை சம்பவம்

வடமராட்சி பருத்தித்துறை துறைமுகத்துக்கு அப்பால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சரக்குக் கப்பலொன்று தாக்குதலுக்கிலக்காகியுள்ள அதேநேரம், அங்கு கடற் சமரொன்று இடம்பெற்றதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை துறைமுகத்தில் பொருட்களை இறக்கிவிட்டு காங்கேசன்துறை துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்ட `சிற்றி ஒப் லிவபூல்' என்ற சரக்குக் கப்பலே தாக்குதலுக்கிலக்கானதாகத் தெரிவிக்கப்பட்டது.

பருத்தித்துறை துறைமுகத்துக்கு அப்பால் சுமார் 3 கடல்மைல் தூரத்தில் நேற்று மாலை இந்தக் கப்பல் பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது திடீரென துறைமுகப் பகுதிக்கு வந்த படையினர் ஊழியர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு கூறியுள்ளனர்.

அவசர அவசரமாக துறைமுக ஊழியர்களும் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறிய அதேநேரம், துறைமுகத்துக்கு வெளியே, பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த சரக்குக் கப்பலும், அந்தப் பணியை நிறுத்திவிட்டு காங்கேசன்துறை துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்டது.

இவ்வேளையில், அந்தக் கடற்பரப்பினுள் நுழைந்த கடற்புலிகளின் 20 படகுகள் சரக்குக் கப்பலை சுற்றி வளைத்ததுடன் அந்தக் கப்பலை தங்களது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மாலை 3.45 மணிமுதல் 5.45 மணிவரை இந்தக் கப்பலை கடற்புலிகள் தங்கள் கட்டுப்பாட்டினுள் வைத்திருந்ததுடன், அந்தக் கப்பலினுள் இருந்த 25 க்கும் மேற்பட்டோரை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்ததாகவும் இதில் பத்துப்பேர் கடற்படையினரெனவும் கூறப்பட்டபோதும் இவற்றை உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்தநிலையில், கப்பலிலிருந்த அனைவரையும் தங்கள் படகுகளினுள் புலிகள் இறக்கிய நிலையில், சரக்குக் கப்பலில் வெடிச் சத்தம் கேட்டதாகவும் இதையடுத்துப் பெரும் புகையுடன் தீப்பிளம்புகள் தென்பட்டதாகவும் கரையோர மக்கள் தெரிவித்தனர்.

எனினும், கப்பல் கடலில் மூழ்கவோ அல்லது தாழவோ இல்லையெனவும் அவர்கள் கூறினர்.

இவ்வேளையிலும் அந்தக் கடற்பரப்பில் கடற்புலிகளின் 20 க்கும் மேற்பட்ட படகுகள் சுற்றித் திரிந்துகொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்ததாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், அந்தக் கடற்பரப்புக்கு கடற்படைப் படகுகள் எதுவும் வரவில்லையெனவும், அதேநேரம் கடற்புலிகளின் படகுகள் நடமாடிய பகுதிகளை நோக்கி கரையோரப் படைமுகாம்களிலிருந்தும் பலாலி மற்றும் வடமராட்சி பல்லப்பை இராணுவ முகாமிலிருந்தும் கடும் ஆட்லறி ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

ஹெலிகொப்டர்களும் அதிக உயரத்திலிருந்து கடற்புலிகளின் படகுகளை நோக்கித் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தன.

மாலை 5 மணிக்குப் பின்னர் அந்தப் பகுதிக்கு வந்த கிபீர் விமானங்களும் கடற்பரப்பை நோக்கிக் குண்டுகளை வீசியதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாலை 5.45 மணியளவில் பருத்தித்துறைக் கடற்பரப்பிலிருந்து கடற்புலிகளின் படகுகள் அனைத்தும் பருத்தித்துறை முனைக் கடற்பரப்புக்குச் சென்று பின்னர் அங்கிருந்து வடமராட்சி கிழக்கு நோக்கி சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம், கப்பல் மாலுமிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, சரக்குக் கப்பல் நின்ற கடற்பகுதிக்கு கடற்படையினரின் டோரா பீரங்கிப் படகுகள் வந்ததை அவதானிக்க முடிந்ததாகவும் கரையோர மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்தச் சம்பவம் பற்றி கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தஸநாயக்கா கூறுகையில்,

நேற்று மாலை பருத்தித்துறை கடற்பரப்பில் நடைபெற்ற சமரில் கடற்புலிகளின் இரு படகுகளை கடற்படையினர் அழித்தனர். இதன்போது கடற்படையினருக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை.

சரக்குக் கப்பலுக்கு சமீபமாக வந்த கடற்கரும்புலிப் படகொன்று வெடித்துச் சிதறியதில் கப்பலுக்கு சேதமேற்பட்டதுடன் மாலுமியொருவர் காயமடைந்தார்.

அந்தக் கப்பலிலிருந்த படையினர் கடற்புலிப் படகுகள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

12க்கும் மேற்பட்ட டோராப் படகுகள் கடற்புலிகளின் படகுகள் மீது தாக்குதலை நடத்தியதில் இரு படகுகள் மூழ்கடிக்கப்பட்டதால் குறைந்தது ஆறு புலிகளாவது கொல்லப்பட்டிருப்பர் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், படைமுகாம்களிலிருந்து கடற்பரப்பை நோக்கி ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டபோது அதிலொன்று அல்வாய் ஷ்ரீலங்கா பாடசாலைக்கு அருகில் வீழ்ந்து வெடித்ததில் கிறேசியன் பானுமதி (34 - வயது) என்ற பெண் உயிரிழந்ததுடன், அவரது இரு குழந்தைகளும் படுகாயமடைந்த நிலையில், மந்திகை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலில் தாக்குதல் நிகள்ந்த போது தரையால் திசைதிருப்பி போக்குகாட்டும் தாக்குதல் நடந்ததாகவும் அதை எதிர்க்கத்தான் ஆட்லறி தாக்குதலை நடத்தியவாறு இராணுவத்தினர் டாங்கிகள் சகிதம் முன்னேறினர் என்கிறார்கள்

ஆனால் போர் நிறுத்த காலத்தில் தரையில் புலிகள் தாக்குதலகள் நிகழ்த்த மாட்டார்கள் என்பதும் போர் நிறுத்தத்தை கடுமையாக கடைப்பிடிக்கிறார்கள் என்பதை மறந்து கடலில் நடந்த தாக்குதலையும் அதே நேரம் தரையில் இனம் தெரியாத குழு ( மக்கள் படை.? , எல்லாளன் படை) நடத்திய தாக்குதலையும் முடிச்சு போட்டு பதிவு செய்தி வெளியிட்டமை சரியானது அல்ல...

அதைவிடுத்து பதிவு இணையம் இராணுவத்துக்கு சாப்பாடு கொண்டு வந்த கப்பல் போச்சே எண்டு ஒப்பாரி வைத்து இருக்கலாம் யாழ் தமிழர்களுக்கு சாப்பாடு வரும் ஒரேவழியும் அடைபட்டு போச்சுது எண்டு இன்னும் ஒருக்கால் ஊரைக்கூட்டு மார் அடிச்சு இருந்தால் சர்வதேசம் உடனடியாக புரிந்து கொண்டு சாப்பாட்டு கப்பல் ஒண்டையும் பாதுகாக்க படைகப்பல் ஒண்டையும் இலங்கை அரசுக்கு பரிசா குடுத்து இருக்கும்... சா எங்களின் நோக்கம் நிறைவேற தடையாக இருக்குக்கும் பதிவை நானும் கண்டிக்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு ஒரு தமிழ் இணைய ஊடகம். அதுவும் சமீபத்தில் உதித்த ஒன்று. அதன் செய்தியை சர்வதேச ஊடகங்களோ நிறுவனங்களோ முக்கியம் கொடுத்து பிரசுரித்த வரலாறே இல்லை. அப்படி இருக்க பதிவின் தவறு ஏதோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது போன்ற மாயை வளர்ப்பை விடுத்து யதார்த்தமான வழிகளில் மக்களுக்கு நிகழ்வுகளைக் கொண்டு செல்ல காட்ட முயலுங்கள்.

ஒருவேளை தமிழ்நெற் தவறு செய்திருந்தால் அது தாக்கத்தைத் தந்திருக்கும். ஆனால் பதிவு புதினம் சங்கதி.. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை விட வேறு எவராலும் வாசிக்கப்பட முடியாதவை. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.