Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் பிரியமான மகராசி

Featured Replies

என் பிரியமான மகராசி
------
நிலவின் வடிவத்தை.....
உடலாக கொண்டு .....
நிலவின் ஒளியை உடல்.....
நிறமாக கொண்டவள்.....
என் பிரியமான மகராசி.......!!!

மயிலைப்போல் பாடுவாள்.....
குயிலைபோல் ஆடுவாள்....
நடனமாடும் சிகரமவள்....
அவள் வதனத்தை உவமைக்குள் .....
பூட்டிவைக்கமுடியாததால்.....
உவமைகளையே ......
மாற்றவைத்துவிட்டாள்.............!!!

அவளை கவிதை வடிக்கிறேன்.....
வரிகள் வெட்கப்படுகின்றன......
அவளின் வெட்கத்தையும்....
கவிதையின் வெட்கத்தையும்.....
இணைக்கும் போது எனக்கும்....
வெட்கம் வருகிறது - அவளை.....
வார்த்தைகளால் நினைக்கும் போது .........!!!

அவளை தொட்டு பார்க்கும் .........
பாக்கியம் எனக்கு கிடைக்குமோ....
கிடைக்காதோ தெரியாது ......
நிச்சயம் கவிதையால் அவளை.....
தொடாமல் இருக்க மாட்டேன்.....
அவள் உள்ளம் தொட்ட பாக்கியன்.....
நானாவேன்........................!!!

கண் சிமிட்டும் போதெல்லாம்......
என் இதயத்தை ஒவ்வொருமுறை......
புகைபடம் எடுத்துவிடுகிறாள்......
ஒவ்வொருமுறையும் தலைமுடி.....
கோதும்போது நரம்புகளை......
வருடி கிள்ளி எடுத்து வீசுகிறாள்.....!!!

&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி
காதல் கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

கவிப்புயல் இனியவனின் கவிதையை ரசிக்க வந்தேன்

காதல் புயலொன்று தூக்கி என்னை வீசியது

பால்யப் பருவத்து நினைவுக்குள் வீழ்த்தியது

காதலுடன் எழுந்து நான் வெத்திலை பாக்கு இடிக்கிறேன்

என் பிரியமான மகராசி அதனை உண்ணும் அழகு பார்க்க....!!

  • தொடங்கியவர்
19 hours ago, Paanch said:

கவிப்புயல் இனியவனின் கவிதையை ரசிக்க வந்தேன்

காதல் புயலொன்று தூக்கி என்னை வீசியது

பால்யப் பருவத்து நினைவுக்குள் வீழ்த்தியது

காதலுடன் எழுந்து நான் வெத்திலை பாக்கு இடிக்கிறேன்

என் பிரியமான மகராசி அதனை உண்ணும் அழகு பார்க்க....!!

மிக்க நன்றி அழகு அழகு 
கருத்து அழகு 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிப்புயல் இனியவரே!! ஆனாலும் தங்களின் கவித்துவம் இயற்கையின் இயல்பையே மாற்றி அமைத்துவிட்டதே புரிகிறதா.....???

  • தொடங்கியவர்
18 hours ago, Paanch said:

நன்றி கவிப்புயல் இனியவரே!! ஆனாலும் தங்களின் கவித்துவம் இயற்கையின் இயல்பையே மாற்றி அமைத்துவிட்டதே புரிகிறதா.....???

மயிலைப்போல் பாடுவாள்.....
குயிலைபோல் ஆடுவாள்....
நடனமாடும் சிகரமவள்....
அவள் வதனத்தை உவமைக்குள் .....
பூட்டிவைக்கமுடியாததால்.....
உவமைகளையே ......
மாற்றவைத்துவிட்டாள்.............!!!

இதை தானே சொல்கிறீர்கல் அதுதானே மாற்றி விட்டாள் என்று 
கவலை படுகிரேன் கவிதையில் 

நன்றிநன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கவிப்புயல் இனியவன் said:

இதை தானே சொல்கிறீர்கல் அதுதானே மாற்றி விட்டாள் என்று 
கவலை படுகிரேன் கவிதையில் 

நுனிப்புல் மேய்ந்துவிட்டேன் மன்னிக்கவும். :(

Edited by Paanch

  • தொடங்கியவர்

போதும் உன் கண் .....
எறிகணை வீச்சு .....
இதயத்தை தவிர .....
உடல் முழுதும் ......
கருகி விட்டேன் .....!!!

நான் ......
கடவுளின் படைப்பு ......
நீ கடவுளாகவே .......
படைக்க பட்டவள் ......
அழகு தேவதைகளின் ....
வதனக்கடவுள் .........!!!

பூ என்றால் மரத்தில் .....
இருந்து பூக்க வேண்டும் ......
நீயோ பூவிலிருந்து பூத்தவள்......
பூமகள் ..........!!!

என்னை புதைத்த இடத்தில் ......
புல் தான் முளைக்கும் .....
உன்னை புதைக்கும் இடத்தில் .....
பூக்கள் மலரும் ........
அப்படியொரு அதிசயபிறவி ......!!!

&
கவிப்புயல் இனியவன் 
என் பிரியமான மகராசி 02

  • கருத்துக்கள உறவுகள்

'ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்' என்ற பழமொழி உங்கள் காதல் கவிதைகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. :love:

  • தொடங்கியவர்

வீணையின் நரம்புகள் .....
அசைந்தால் இசை .....
உன் கூந்தலின் முடிகள் ....
அசைந்தால் எனக்கு இசை .....!!!

இதயத்தில்- நீ 
இரு-தாங்கி கொள்வேன் .......
நீயோ .......
குருதி இருக்கிறாய் .....
உடல் முழுதும் ஓடினால்.....
எப்படி தாங்குவேன் ......?

யானைக்கு இரண்டு ....
தந்தம் தான் மவுசு ......
உன் முத்து பற்கள்......
ஒவ்வொன்றும் தந்தத்தின் .....
மவுசு ...........!!!
 
&
கவிப்புயல் இனியவன் 
என் பிரியமான மகராசி 03

  • தொடங்கியவர்
11 hours ago, Paanch said:

'ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்' என்ற பழமொழி உங்கள் காதல் கவிதைகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. :love:

:11_blush::11_blush::11_blush:

 

  • தொடங்கியவர்

மனை கதவை திறந்து ..... 
வைத்திருக்கிறேன் ..... 
எப்போது வருவாய் என்று ..... 
நீயோ மனக்கதவை .... 
பூட்டி வைத்திருக்கிறாயே....? 

உன்னை நினைத்து கவிதை ..... 
எழுத சற்று கண்ணை மூடினேன் ..... 
அந்த நொடிக்குள் ஆயிரம் ..... 
பட்டாம் பூச்சியாய் வருகிறாய் ..... 
அருவியாய் வருகிறது கவிதை .....!!! 

நீ என்..... 
இதயத்தை கண்ணாடியாய் ...... 
பார்க்கிறாயா .....? 
வருவதும் செல்வதும் புரியவில்லை .....!!! 

& 
கவிப்புயல் இனியவன் 
என் பிரியமான மகராசி 04

  • தொடங்கியவர்

உன்னை வர்ணித்து ....
எழுத நான் உன் மீது ....
காதல் மோகம் ....
கொண்டவனல்ல ......
காதல் மீது காதல் ......
கொண்டவன் .......
நீ -என் காதலின் ......
கருவி மட்டுமே ..........!!!

உன் இதழ்களை வர்ணித்து .....
எழுதிய கவிதைகள் எல்லாம் ....
சிறப்பு கவிதை ......
சிறப்பிதழ் கவிதை .....
பக்கத்தில் சிறப்பாய் வருகிறது ......!!!

நீ 
சேலை உடுத்து வந்தால் ....
அன்றைய கவிதை தலைப்பு ....
கவிதையாகிறது .....
பாவாடை தாவணியில் வந்தால் .....
பார்வையில் அதிகம் பெற்ற .....
கவிதை பகுதிக்குள் வருகிறது ....!!!


கவிப்புயல் இனியவன் 
என் பிரியமான மகராசி 05

  • தொடங்கியவர்

இப்போதுதான் ......
புரிகிறது சாம்ராசியங்கள் .....
பெண்களால் கவிழ்த்துக்கு ....
காரணம் .......................!!!

எனக்கொரு அனுமதி  தா .....
உன் மூச்சாக வருவதற்கு .....
இதயத்தை எட்டி பார்த்து  விட்டு ......
வருவதற்கு .........!!!

உனக்கு காதல் வரும் போது.......
பாவம் ஆண்கள் தாடி யோடு .....
அலையப்போகிறார்கள் ........
என்னை தவிர யாரும் உன்னை .....
நெருங்க முடியாததால் ......!!!

வரைந்த ஓவியம் அழகுதான் .....
வளர்ந்துகொண்டே இருக்கும் .....
உன் அழகை எப்படி வரைவது ......?


கவிப்புயல் இனியவன் 
என் பிரியமான மகராசி 06
 

  • தொடங்கியவர்

நல்ல வேளை.......
ஆடை கண்டு பிடித்தார்கள் .....
மறைக்கப்பட்ட ஆடையில் .....
நீ இத்தனை அழகாய் .....
இருக்கிறாய் ..............!!!

உன் முழு அழகையும் .....
ரசிக்க நான் ஆதிவாசியாய் ......
பிறக்கவேண்டும் ....
அவர்களும் இப்போ ஆடை .....
அணிகிறார்கள் .............!!!

நீ 
சேலையில் வரும்போது .....
வானவில்லா ......?
அருவியா .............?
அசையும் வெண் முகிலா ...?

நீ  கோபப்படும் போது .....
நீவிடும் வெளி மூச்சு ....
கரியமில வாயுவா ......?
கருகிவிடும் வாயுவா ......?


கவிப்புயல் இனியவன் 
என் பிரியமான மகராசி 07

  • தொடங்கியவர்

ஆலமரத்தின் விழுதுகள் .....
நிலம் தொடுவதுபோல் .....
உன் கூந்தல் நிலத்தை ....
தொடும் அழகு .......!!!

என்னவளே .....
அருவியில் நீ குளிக்காதே .....
இரண்டு அருவியை எப்படி .....
என் கண் நோக்கும் .......?

நீ 
வியர்வையுடன் வெளி வராதே ......
வண்டுகளும் தேனீக்களும் .......
மொய்க்கப்போகின்றன ........!!!

பூ மரத்தை பார்ப்பர் .....
பூந் தோட்டத்தை பார்ப்பர் ......
நடமாடும் பூந்த்தோட்டத்தை .....
நான் மட்டுமே பார்க்கிறேன் ......!!!

&
என் பிரியமான மகராசி 08
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

  • தொடங்கியவர்

உன்னை ....
இமயமலை சிகரம் ....
என்பேன் .....
உன் இமைகள் ....
சிகரமாய் 
இருப்பதால் ......!!!

எனக்கு 
நீ தொங்கு தோட்டம் .....
அழகான உறுப்புக்களை ....
நீ 
சுமர்ந்து கொண்டு செல்வதால் ......

நீ 
சிரித்தால் தென்றல் .....
முறைத்தால் புயல் .....
கோபித்தால் சுனாமி .....
நான் எல்லாவற்றாலும் .....
உன்னால் பாதிக்கப்பட்டடேன் .....!!!

நீ 
என்னை காதல் செய்யும் ....
தினம் தான் எனக்கு .....
சுதந்திர தினம் ..................!!!

&
என் பிரியமான மகராசி 09
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

பட்ட மரத்தில் ஊஞ்சல் .....
ஆடுகிறாள் .......
மரம் கூட துளிர்க்கிறது .......
முற்கள் மேல் நடக்கிறாள் ....
பூக்கள் ஆகிறது ..........!!!

உன் அழகை .....
நினைக்கும் போது....
இதயத்தில் ஊசி குத்துகிறது ......
நீ நேரில் வரும்போது .....
இதயம் ஈட்டியால் ......
குத்துகிறாய் .........!!!

நீ 
தீப்பந்தத்துடன் திரியும் .....
அழகு மோகினி .......
நான் நீர் வீழ்ச்சி ......
நீ அணைந்துதான் ......
ஆகவேண்டும் ...................!!!

&
என் பிரியமான மகராசி 10
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

  • தொடங்கியவர்

உன் உடம்பில் ......
முடிகள் சிலுக்கும் போது.....
வெட்கப்பட்டு உதிர்கின்றன ....
இலைகள் .......!!!

நீ 
சிரிக்கும் போது ....
மறைந்து விடுகிறது .....
நட்ஷத்திரங்கள் ............!!!

உன் 
இரட்டை சடையில் .....
தேரே இழுக்கலாம் ......
ஒரு உதவி செய் .....
உன் கை குட்டையாக ....
ஏற்றுக்கொள் அப்போதாவது .....
உன்னால் கசக்கப்படுவேன் .....!!!

&
என் பிரியமான மகராசி 10
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
       காதல் கவி நேசன் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

  • 1 month later...
  • தொடங்கியவர்

முழு ......
நிலா வெளிச்சத்தில் ......
கருவானவள் .........!!!

பூக்கள் மலரும் போது......
பிறந்தவள் .............!!!

தென்றல் வீசியபோது ......
பேசியவள்...........!!!

விண்மீன்கள் துடித்த போது.....
சிரித்தவள் ...........!!!

கொடி அசைந்தபோது .....
நடந்தவள் .........!!!

புல் நுனியில் பனி படர்கையில் ......
பருவமடைந்தவள் .........!!!

இத்தனை அழகுகொண்டவளே .....
என் பிரியமான மகராசி......!!!

&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி
காதல் கவிதை 11

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.