Jump to content

இவைதான் ஐபோன் 7-ன் ரகசியங்களா? #iPhone7


Recommended Posts

இவைதான் ஐபோன் 7-ன் ரகசியங்களா? #iPhone7

apple.jpg

ப்பிள் ரசிகர்களுக்கு இன்றைய இரவுதான் சிவராத்திரி. இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஐபோன் 7 மற்றும் ஆப்பிள் வாட்ச் - 2 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோ நகரில், பில்கிரஹாம் சிவிக் ஆடிட்டோரியம் இந்த நிகழ்ச்சிக்காக தயாராகி வருகிறது. 7,000 பேர் வரை கொள்ளும், அந்த அரங்கில், டெக்னாலாஜி ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில், இன்று இரவு புதிய ஐபோன் பிறக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இணையத்தில் லைவ்வாக காணவும் முடியும்.  ஐபோன் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே இருந்தாலும், கூட கபாலி ஓபனிங் சீன் போல, இன்னும்  அதுபற்றிய புதுப்புது தகவல்கள் லீக் ஆகிக்கொண்டே இருக்கின்றன. அதுபற்றிய லேட்டஸ்ட் அப்டேட்தான் இந்தக் கட்டுரை. 

(இந்தக் கட்டுரையை நல்லா படிச்சுக்கங்க ப்ரோ.. இதுதான் நீங்கள் படிக்கும் கடைசி ஐபோன் லீக்ஸ் பற்றிய கட்டுரை. ஏனெனில், இன்று இரவு ஐபோன் வெளியாகிவிட்டால், பிறகு அதைபற்றிய அலசல்களும், விவாதங்களும் துவங்கிவிடும் அல்லவா? எனவே படையப்பா சிவாஜி போல, கடைசியாக ஒருமுறை ஐபோன் பற்றி பாத்துடுவோமா?)

கசியவிட்ட ஹாங்காங் ஆப்பிள்:

ஐபோன் 7 வருவது தெரிந்தாலும், அதில் எத்தனை மாடல்கள் வரும் என்பது தெரியாத புதிராகவே இருந்தது. ஆனால் ஐபோன் இன்று மாலை வெளியாக இருக்கும் நிலையில், அதனை பற்றிய தகவல்கள் பற்றி ஹாங்காங்-ன் ஆப்பிள் வலைதளத்தில் வெளியானது. வெளியான சில மணிநேரங்களிலேயே சேர்க்கப்பட்ட தகவல்கள் நீக்கப்பட்டது. இயர்போன் வாங்கும் பகுதியில், ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் என அதில் தெரியவர, அதை கேட்ச் செய்துவிட்டனர் ஐபோன் பாய்ஸ். ஆக இந்த இரண்டு மாடல்கள்தான் வரும் என முடிவுக்கு வந்துள்ளனர். மேலும் 3.5 mm ஆடியோ ஜாக் இருக்குமா, இருக்காதா என குழப்பம் இன்னும் தொடர்கிறது. சோ..ப்ளீஸ்..வெயிட்!

apple2.jpg

புதுசா என்ன இருக்கு?

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் டிஸ்பிளேவில் எந்த மாற்றமும் இல்லாமல் 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் அளவிலேயே இருக்கும் என தெரிகிறது.  ஐபோன் 7 பிளஸ் இரண்டு, 12 மெகாபிக்சல் கேமராவுடனும், ஐபோன் 7 ஒரு 12 மெகாபிக்சல் கேமராவுடனும் வெளியாகலாம். ஐபோன் 7 மாடல்களில் இன்டர்னல் மெமரி 16 ஜி.பிக்கு பதில் 32 ஜி.பியாக மாறலாம். மேலும் இம்முறை 25 ஜி.பி மெமரியை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என்கின்றனர் ஆப்பிள் பீப்பிள்ஸ். அத்துடன் கூடுதலாக Deep Blue மற்றும் Space Black ஆகிய இரு வண்ணங்களில் வெளியாகலாம். ஐபோன் 2 ஜி.பி ரேம் அல்லது 3 ஜி.பி ரேம் மற்றும் ஆப்பிள் A10  பிராஸசரை கொண்டிருக்கலாம். 

iphone-7-blue.jpg

 

வடிவமைப்பை பொறுத்தவரை மெல்லியதாகவும், வாட்டர் ரிசிஸ்டண்ட் வசதிகளுடன் இருக்கும். ஆப்பிள் ஐபோன் 7, 32 ஜி.பியின் விலை 53,100 ரூபாய், 128 ஜி.பி 61,200 ரூபாய் மற்றும் 128 ஜி.பியின் விலை 71,300 ரூபாயாகவும் இருக்கும் எனவும் எர்திர்பார்க்கப்படுகிறது.  ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ், 32 ஜி.பியின் விலை 61,100 ரூபாய், 128 ஜி.பி 69,200 ரூபாய் மற்றும் 128 ஜி.பியின் விலை 79,300 ரூபாயாகவும் இருக்கலாம்.. கடந்த ஆப்பிள் ஐபோன் 6 எஸ் போல் அல்லாமல் இந்த போன் மிகுந்த வரவேற்பை பெறும் என ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கிறது. எனவே ஐபோன் உற்பத்தியை 10 சதவீதம் அதிகரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் வரும் 16-ம் தேதி முதலும், இந்தியாவில் தீபாவளி பட்ஜெட்டைக் குறிவைத்து, அக்டோபரிலும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

http://www.vikatan.com/news/information-technology/68117-will-this-be-the-new-iphone-7-feature.art

Link to comment
Share on other sites

ஒன்றுமே இல்லாத சாதா போனை ஏக எதிர்பார்ப்புக்கு எகிறவைத்து விற்கிறதில் அமெரிக்கனை மிஞ்ச ஆள் கிடையாது .oneplus 3 phone இரண்டு சிம் கார்ட்  விலையும் குறைவு  பாவிப்பில் மற்ற போன்கள் கிட்டவும் வராது என்னிடம்  oneplus 1 இரண்டு சிம் உள்ளது whatsapp,முகநூலுக்கு ஒன்றும் தொடர்புக்கு ஒன்றுமா உபயோகத்தில் உள்ளது இதுவரை பிரச்சினை இல்லை .

 

Link to comment
Share on other sites

ஆப்பிள் வாட்ச், சூப்பர் மேரியோ, கலக்கல் ஆப்பிள் நிகழ்ச்சி அப்டேட்ஸ்!

*ஆப்பிள் நிறுவனத்தின் ட்விட்டர் அக்கவுன்ட்டில் அவசரப்பட்டு, தனது புதிய ஐபோன் 7, ஐபோன் 7 ப்ளஸ் போன்களைப் பற்றி ட்வீட் செய்துவிட்டது ஆப்பிள்.

* ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் லென்ஸ் கேமரா உள்ளது. ஐபோன் 7 வாட்டர் ரெஸிஸ்டன்ட் என்பது பெரிய ப்ளஸ்.

14237688_2021409798085420_49907883554371

* செப்டம்பர் 16ம் தேதி அன்று புக்கிங் ஸ்டார்ட்ஸ்!

* ஆப்பிள் வாட்சில் போக்கிமான் கோ

* ஐபோனில் புதிய சூப்பர் மேரியோ 

* ஆப்பிள் ஸ்டோரில் 140 பில்லியன் டவுன்லோடுகள்

* ஆப்பிள் மியூசிக்கில் 17 மில்லியன் பயன்பாட்டாளர்கள்

14287609_1068520049870609_1621813944_n.j

* ஆப்பிள் சிஇஓ டிம் குக் ஆப்பிள் நிகழ்ச்சி மேடைக்கு வந்தார்

http://www.vikatan.com/news/information-technology/68124-apple-event--iphone-7-launch-updates.art

Link to comment
Share on other sites

ஆப்பிள் வாட்ச், சூப்பர் மேரியோ, கலக்கல் ஆப்பிள் நிகழ்ச்சி அப்டேட்ஸ்!

* எதிர்பார்த்தபடியே ஐபோன் 7-ல் ஆடியோ ஜாக் இல்லை!!

iphonee.jpg

* 25 சதவிகிதம் அதிக ப்ரைட்னஸ், கலர் மேனேஜ்மென்ட், 3டி டச் வசதி கொண்டது ஐபோன் 7

* ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் மாடல்களில் வெளியாகிறது.

* ஐபோன் 7-ல் 7 MP FaceTime HD செல்ஃபி கேமரா, 12 MP பின்புற கேமரா

* வெளியானது ஐபோன் 7…இது தான் ஐபோன் 7-ன் ஃபர்ஸ்ட் லுக் 

iphone%207.JPG

*ஆப்பிள் நிறுவனத்தின் ட்விட்டர் அக்கவுன்ட்டில் அவசரப்பட்டு, தனது புதிய ஐபோன் 7, ஐபோன் 7 ப்ளஸ் போன்களைப் பற்றி ட்வீட் செய்துவிட்டது ஆப்பிள்.

* ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் லென்ஸ் கேமரா உள்ளது. ஐபோன் 7 வாட்டர் ரெஸிஸ்டன்ட் என்பது பெரிய ப்ளஸ்.

http://www.vikatan.com/news/information-technology/68124-apple-event--iphone-7-launch-updates.art

புதுமையின் உச்சம் : ஏர்பாட்ஸ் - ஐந்து மணிநேரம் நீடிக்கும் பேட்டரி கொண்ட வையர்லெஸ் ஹெட்போன்ஸ்

ipods.JPG

ipods1.jpg

* எதிர்பார்த்தபடியே ஐபோன் 7-ல் ஆடியோ ஜாக் இல்லை!!

Link to comment
Share on other sites

வெளியாகியது ஐ-போன் 7 : விலை தெரியுமா?

 

 

 

உலகமே எதிர்ப்பார்த்த புதிய பொழிவுடன் ஐ-போன் 7, மாதிரிகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கையடக்கத் தொலைபேசி தயாரிப்பில் முன்னணி உள்ள ஆப்பிள் நிறுவனமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 6 மற்றும் 6 எஸ் கையடக்கத் தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியது. 3806E63100000578-3778252-The_iPhone_7_wi

அதே போன்று இந்தாண்டின் ஐபோன் 7 மாதிரிகளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என கடந்த மாதம் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில்  புதிய மாதிரி ஐபோன் 7, ஐ போன் 7 பிளஸ், மற்றும் கைக்கடிகாரம் 2 மாதிரிகள்  அறிமுகப்பட்டுத்தப்பட்டன. 

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த அறிமுக விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் ஐபோன்களை அறிமுகம் செய்து, அதன் சிறப்பம்சங்கள் கூறினார்.

 

இந்த கையடக்கத் தொலைபேசியில் இருக்கும் புதிய வசதிகள் குறித்து டிம் குக் தெரிவிக்கையில்,

 

சூப்பர் மெரியோ ரன்:

ஆப்பிள் ஐபோன் 7 இல் உலகில் பிரபலமான மரியோ விளையாட்டு அறிமுகமாகிறது. மக்கள் அதிகம் இந்த விளையாட்டை பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.DF0f5fdf.jpg

 

ஆப்பிள் கைக்கடிகாரம் மாதிரி 2:

ஆப்பிள் கைக்கடிகாரம் மாதிரி 2 அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய ஆப்பிள் வாட்சின் டிசைனில் எந்த வித மாற்றமும் இல்லாமல் தண்ணிருக்குள் 50 மீட்டர் ஆழம் வரை ‛வோட்டர் புரூப்' மற்றும் ‛ஸ்விம் புரூப்' அம்சம் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கைக்கடிகாரம் டூயல் - கோர் புரசசர் உடன் வேகமாக செயல்படும் திறன் கொண்டது. மேலும் கைக்கடிகாரத்தில் ஜி.பி.எஸ்., வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.3806D7E300000578-3778252-A_new_Watch_ver

 

ஜொக்கிங் மற்றும் ஓட்ட பயிற்சி பெறுபவர்களுக்கு பயன்பெறும் வகையில் ஆப்பிள் நிறுவனம் நைக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு பல்வேறு மேம்பாடுகளை கொண்ட நைக் பிளஸ் கைக்கடிகாரத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை இலங்கை மதிப்பில் சுமார் 54 ஆயிரம் ரூபாய் ஆகும்.3806D01A00000578-3778252-Jeff_Williams_o

 

போக்கிமேன் கோ:

உலகம் முழுவதும சமீபத்தில் மிகவும் பிரபலமான ‛போக்கிமேன் கோ' விளையாட்டு ஆப்பிள் கைக்கடிகாரத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

3806E4BE00000578-3778252-image-a-74_1473

ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் :

ஐபோன் 7 ‛வோட்டர்- டஸ்ட் புரூப்' வசதியுடன் வருகிறது. இந்த கையடக்கத் தொலைபேசி ஜெட் பிளக், பிளக், கோல்ட், சில்வர், ரோஸ் கோல்ட் ஆகிய வர்ணங்களில் வெளியாகிறது. fs0fsf1561fdfs.jpg

ஆப்பிள் 7 பிளஸ்சில் பிரதான கெமரா 12 மெகா பிக்சல் தரத்தில் 2லென்ஸ் உடன் வெளியாகியுள்ளது. இந்த 2 லென்ஸ் 56.எம்.எம்., ஒப்டிகல் சூம் வசதிக்காக ஒரு லென்ஸ{ம், வைட் ஹேங்கிள் வசதிக்காக மற்றொரு லென்ஸ{ம் கொடுக்கப்பட்டுள்ளது.

3807191000000578-3778252-The_iPhone_7_plfsdfd6f2dfsfs.jpg

ஐ.ஓ.எஸ். 10 இயங்குதளம்

இந்த போன் ஐ.ஓ.எஸ். 10 இயங்குதளத்தில் செயல்பட கூடியது.

3806AC2000000578-3778252-The_handset_wil

ஹெட் போன் 

ஐபோன்7 மற்றும் 7 பிளஸில் ஸ்டிரியோஸ்பிக்கர் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக ‛வயர்லெஸ் - ஹெட் போன் ' வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்டுள்ளது.

f0dfd1f5d1fdfd.jpg

ஐபோன் 7 ல் வை-பை இணைப்புடன் 14-15 மணி நேரம் செயலில் இருக்கும் அளவிற்கு பேட்டரி மேம்படுத்தப்பட்டுள்ளது.

380715F300000578-3778252-The_new_159_wir

ஐ-கிளவுட்:

ஐபோன்7 ஐயும் மற்ற ஆப்பிள் தயாரிப்புகளையும் இனைக்கும் வகையில் ஐ-கிளவுட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏனைய ஆப்பிள் தயாரிப்புகளுக்கு கோப்புகளை பரிமாற்றம்செய்ய முடியும்.

3806CC1B00000578-3778252-The_new_Watch_a

ஆப்பிள் பே:

ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ‛ஆப்பிள் பே' வை பயன்படுத்தும் வகையில் ‛என்.எப்.சி.,' தொழினுட்ப வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம பணபரிமாற்றம் செய்யமுடியும்.

 

பியுசன் புரொசசர்:

ஐபோன் 7 பியுசன் புரொசசர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புரொசசர்  சுமார் 3.3 பில்லியன் டிரான்சிஸ்டர்களை கொண்டு செயல்படுகிறது. அதனால் இதன் செயல்திறன் பல மடங்கு அதிகமாக இருக்கும்

3806E4BE00000578-3778252-image-a-74_1473

அதிக சேமிப்புத்திறன்:

ஐபோன் 7 ல் புதிதாக 128 மற்றும் 256 ஜி.பி., உள்ளடக்க மெமரியுடன் வெளியாகிறது. குறைந்தபட்சமாக 32 ஜி.பி., போனும் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.

3806B1B000000578-3778252-Apple_is_alsop_

விலை: 

ஐபோன் 7 இன் ஆரம்ப விலை ரூ. 95000 (32 ஜிபி), ஐபோன் 7 ப்ளஸ் தொடக்க விலை ரூ. 112847 (32 ஜிபி) எனவும் கூறப்படுகிறது. 

இருப்பினும் அதிகார்பூர்வ விலை பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. ஐ-போன் 7, 7 ப்ளஸ் மாதிரி கையக்கத் தொலைபேசிகள் அமெரிக்க சந்தைகளில் செப்டம்பர் 16 முதல் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 

அதற்கான இணைய முன்பதிவு நாளை முதல் ஆரம்பமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

http://www.virakesari.lk/article/11110

Link to comment
Share on other sites

#iphone7: ஆப்பிள் எடுத்த முடிவு சரிதானா?

a2.jpg

ப்பிளின் புதிய ஐபோன்களோடு, சில சர்ச்சைகளும், சிக்கல்களும் சேர்ந்தே வெளியாகியிருக்கின்றன. அதாவது ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன்களில் “ஹெட்போன் ஜாக்” எனப்படும் பாடல் கேட்பதற்கான வொயரை சொருகும் 3.5 மிமீ போர்ட்டை நீக்கியுள்ளது. இதற்குப் பதிலாக, வயர்லெஸ் தொழில்நுட்பத்தை முன்னிறுத்தும் வகையில் “ஏர்பாட்ஸ்” என்னும் வயர்லெஸ் ஹெட்போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு பக்கம் எதிர்ப்பும், மறுபக்கம் ஆதரவும் இருக்கின்றன. ஆப்பிள் செய்தது சரிதானா?

இதற்கு ஆப்பிள் சொல்லும் காரணம் என்ன?

ஐபோன்களிலிருந்து ஹெட்போன் ஜாக் நீக்கப்படும் தகவலை அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பில் சில்லேர் கடந்த வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அறிவித்தார். அப்போது “கடைசியாக இருப்பது ஒரே வார்த்தைதான்: நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் மூலம் முன்னேறி, நம்மை முன்னேற்றிடும் புதிய விஷயங்களை செய்வதே அது” என்றார்.  நூறு வருடங்களுக்கும் மேலான, ஆடியோ ஜாக் எல்லாம் பழசு. இனி எல்லாம் வயர்லஸ்தான். அதற்கு இதுவே முதல்படி எனக் கூறியிருக்கிறது ஆப்பிள். அதற்காக ஆப்பிள் சொல்லும் காரணங்கள் இவைதான்.
         1. "ஒவ்வொரு வருடமும் மக்கள் புதுப்புது சிறப்பம்சங்களை எங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். எனவே தான் ஐபோன்களின் வடிவமைப்பு, வாட்டர் ப்ரூப், சிறந்த பேட்டரி போன்றவற்றை பூர்த்தி செய்வதற்காக ஹெட்போன் ஜாக்கை நீக்கியுள்ளோம்"
         2. மேலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும்போது இதுபோன்ற கருத்துக்கள் சகஜம்தான் எனக்கூறும் ஆப்பிள், இன்னும் சில வருடங்களில் மக்களிடையே நாம் ஏன் இத்தனை வருடமாக வயர்லெஸ் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுமென்றும் சவால்விடுகிறது.

a3.jpg

இனி பழைய “ஹெட் போன்களை” ஐபோனில் பயன்படுத்த வழியே இல்லையா?

         உங்களின் பழைய ஹெட்போன்களையும் புதிய ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ்சில் பயன்படுத்தலாம். ஆனால் அதை நேரடியாக இல்லாமல் அதற்குரிய “அடாப்டர்” மூலம் லைட்னிங் போர்ட் எனப்படும் நாம் மொபைலை சார்ஜ் ஏற்றும் பகுதியில் இணைத்து பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் அந்த அடாப்டர், ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் வாங்கும்போது இலவசமாக வழங்கப்படும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. 

ஆடியோ ஜாக்கை நீக்கியதால் ஏற்படும் பிரச்சனைகள்:

a4.jpg

நமது பழைய ஹெட் போன்களை பயன்படுத்தி பாடல் கேட்க வேண்டுமென்றால் நம்மிடம் எப்போதும் அந்த அடாப்டர் இருக்க வேண்டியது அவசியம். நம்மில் பலபேர் மொபைலை சார்ஜ் ஏற்றிக்கொண்டே பாடல் கேட்பது வழக்கம். ஆனால் அது இனி சாத்தியமில்லை. ஏனெனில் அந்த அடாப்டர் இணைக்கப்பட்டிருப்பது நாம் மொபைலை சார்ஜ் ஏற்றும் “லைட்னிங் போர்ட்” ஆகும். எனவே ஒரே சமயத்தில் பாடல் கேட்டுக்கொண்டே மொபைலை சார்ஜ் ஏற்றுவது சாத்தியமில்லை. ஆடியோ ஜாக்கை நீக்கியதற்காக ஆப்பிள் நிறுவனம் சொல்லும் காரணங்களை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆடியோ ஜாக்கோடும், ஐபோனை விட சிறந்த பேட்டரி திறனும், வாட்டர் ப்ரூப்  உள்ள மொபைல்களை மற்ற நிறுவனங்கள் ஏற்கெனவே அறிமுகப்படுத்திவிட்ட நிலையில் இந்த விளக்கம் போதுமானதாக இல்லை.
மேலும் நாம் பயன்படுத்தும் மொபைல், டேப்லட், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற மின்னணு பொருட்களில் அத்தியாவசமான தேவை என்று நாம் நினைக்கும் வசதிகளை ஆப்பிள் நீக்குவது இது முதல் முறையல்ல. அவ்வாறு ஆப்பிள் நீக்கியவற்றில் முக்கியமான விஷயங்களை கீழே காணலாம்.

பிளாப்பி டிஸ்க்:

1976 முதல் 1998 வரை பிளாப்பி டிஸ்க் என்னும் கணினிகளுக்குக்கிடையே தகவல் பரிமாற உதவும் முக்கியமான வழி. அப்போது பயன்பாடு உச்சத்தில் இருந்தது. அதில் அதிகபட்சம் 1.4 எம்பி தகவல்களை மட்டுமே சேமிக்க முடியும் என்பது வேறு கதை. ஆனால் 1998-ம் ஆண்டு ஆப்பிளின் ஐமேக் ஜி-3 என்னும் கணினி அறிமுகப்படுத்தப்பட்டபோது, பிளாப்பி டிஸ்க் நீக்கப்பட்டு நாம் தற்போது பயன்படுத்தும் யூஎஸ்பி சேர்க்கப்பட்டது. அப்போது பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் இப்போது நாம் பயன்படுத்தும் யூஎஸ்பிக்கு அதுவே தொடக்கம்.

டிவிடி டிரைவ் :

இன்றுவரை நாம் பயன்படுத்தி வரும் டிவிடிக்களை கிட்டத்தட்ட ஆப்பிளின் ஐமேக் கம்ப்யூட்டர்கள் மற்றும் மேக்புக் லேப்டாப்களிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னரே நீக்கிவிட்டனர். குறைந்து வரும் டிவிடி பயன்பாடு, அதிகரித்து வரும் கிளவுட் கம்ப்யூட்டிங் பயன்பாடு மற்றும் கணினியின் வடிவமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்களுக்காக டிவிடி டிரைவ் நீக்கப்பட்டதாக அப்போது, கூறப்பட்டது.

a1.jpg

இப்போதும் கூட, "ஆப்பிள் எடுக்கும் இதுபோன்ற அதிரடி முடிவுகளால்தான் இன்னும் முன்னணியில் இருக்கிறது. இதுதான் ஆப்பிளின் ஸ்டைலே!" என்கிறது ஒரு க்ரூப். "அப்படி இயர்போன் போர்ட்டை நீக்கும் அளவுக்கு, அப்படி என்ன அதில் குறை இருந்தது?" என்கிறது ஒரு க்ரூப். இது ஆப்பிளின் துணிச்சலா? சறுக்கலா? வழக்கம் போலவே, காலத்தின் கையில்தான் விடை இருக்கிறது!

http://www.vikatan.com/news/information-technology/68211-why-apple-just-eliminated-the-headphone-jack-from-the-iphone-7.art

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

2016, செப்டம்பர் மாத தொடக்கத்தில்,  ஐபோன் 7  மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் ஐ அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வைத்து ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ஐபோன் 7, 32 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி கொள்ளளவில் கிடைக்கின்றது.  இதன் விலை அமெரிக்க டாலரில் $649 இருந்து $849 வரையாகும். இந்திய மதிப்பில் 43 ஆயிரத்திலிருந்து 56 ஆயிரம் ரூபா வாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஐபோன்  7, 4.7” அங்குல ரெட்டினா எச்டி டிஸ்ப்ளேயுடன் 3டி தொடுதிரை கொண்டது. இதன் தடிமன் 7.1 மி.மீ.  இதன் எடை 138 கிராம்.

4 ஜிபி ரேம் நினைவகத்துடன் , ஆப்பிளின் விஷேட A10 பியூசின்  சிப்கள் முதல் முறையாக பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 2.4GHz பிராசஸர் பொருத்தியுள்ளதால் அதிக ஆப்ஸ்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தல் மற்றும் அதிக நேரம் பேட்டரி சார்ஜ் நீடித்தல் போன்றவற்றை அதிக வசதிகளாக தரலாம் என எதிர்பார்க்கின்றனர்.

ஐபோன் 7 12 MP பின்பக்க கேமராவும் 7 MP HD முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது.  3ஜி நெட்ஒர்க்கில் 7எஸ் மாடலில் 14 மணிநேரம் இயங்கும் பேட்டரி உள்ளது 
ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ்-ல் முதல் முறையாக இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.  ஹெட் போன் ஜாக் நீக்கி வயர்லெஸ் ஆடியோவை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள். அதற்காக ஆப்பிள் புதிதாக வயர்லெஸ் “ஏர்பாட்ஸ்” என்னும் ஹெட் போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்டர் ப்ரூப் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட் போன்றவைகளுடன் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் ஐபோன் 7 வெளியாகிய நாட்களுக்கு அண்மையிலேயே சாம்சங்க் இற்கு சோதனைக்காலம் ஆரம்பமானது.  சாம்சங்கின் கேலக்ஸி நோட் 7 தொலைபேசிகள் வெடிக்கத்தொடங்கியதுடன் அவற்றை உடனடியாக மீளப்பெறுவதாக அறிவித்தது சாம்சங்க்.

சாம்சங்க் கேலக்ஸி நோட்7 - ஐ பயன்படுத்த வேண்டாம் - சாம்சங்க் நிறுவனம் அறிவிப்பு

ஹேட்போன் ஜாக் ஐ முழுமையாக நீக்கிய ஆப்பிள் அதற்கு பதிலாக சார்ஜ் செய்யும் இடத்திலேயே பொருத்தக்கூடிய (lightning connector ) ஹெட்போன்களை தருகின்றது. எனினும் தனியாக Lightning to 3.5 mm Headphone Jack Adapter ஐயும் தருகின்றது. இதை தவறவிட்டால் 9 டாலர்களுக்கு வாங்க வேண்டும். எவ்வாறாயினும் சார்ஜ் செய்துகொண்டு இசையையும் கேட்க வேண்டுமென்றால் அதற்காக மேலும் 49 டாலர்கள் செலவு செய்து  iPhone Lightning Dock ஐ வாங்க வேண்டும்.


ஐபோன் 7 வெளிவந்ததை அடுத்து ஐபோன் 6 மற்றும் 6 ப்ள்ஸின் விலைகளில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.  இதன்படி இந்தியாவில் ரூபாய் 22000 வரை விலை குறைந்துள்ளதாக தெரியவருகின்றது.

ஐபோன் 7 முதல் பார்வை வீடியோ

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனது ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வர அனுமதியளிக்காததால் சங்கடத்தில் அமெரிக்கா ! அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு : அரசாங்கத்தின் தீர்மானத்தால் கடும் அதிருப்தியில் வொஷிங்டன் அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளதால், அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த ஆய்வுகப்பலில், பல்கலைக்கழக மாணவர்களே வருகைத் தருவதாகவும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவுமே அனுமதி கோரியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை கடல் பரப்புக்குள் ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க கப்பல் வரவில்லை எனவும், எரிபொருள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், அதற்கான அனுமதியை மறுத்துள்ள இலங்கை அரசாங்கம், எந்தவொரு பிற நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கும் இனி இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது. மேலும், எந்தவொரு ஆய்வு கப்பலையும் இலங்கை கடற்பரப்பிற்குள் இனி அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமையவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பதிலளித்துள்ளது. இதேவேளை, சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கும் தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டிய இலங்கை அரசாங்கம், எந்தவொரு நாட்டின் ஆய்வுகளுக்கும் இனி இலங்கைக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த கப்பலின் தேவைகளை, சர்வதேச கற்பரப்பிற்குள் சென்று பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனிடையே குறித்த அமெரிக்க ஆய்வுக் கப்பல், சென்னை துறைமுகத்துக்குள் செல்ல அனுமதி கோரப்பட்டுள்ள போதிலும் அங்கும் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380126
    • நாகப்பட்டினத்திலிருந்து – காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல், மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மே மாதம் 11 ஆம் திகதி நாகை மாவட்டத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடவுள்ளது. அதன்படி, மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவைகள் நாகையிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகையை சென்றடையும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த கப்பல் சேவையில், இரு வழிப் பயணத்துக்காக அண்ணளவாக 34 ஆயிரத்து 200 ரூபா அறவிடப்படவுள்ளதுடன் ஒவ்வொரு பயணியும் தம்முடன் 20 கிலோ வீதம் 3 பொதிகளை எடுத்துச் செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1380121
    • இங்கு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை செய்யும் கோயம்புத்தூர்காரார் ஒருவரை சிலவருடங்களுக்கு முன்பு ஏன் தமிழகத்தில் ஊழல் செய்யும் திமுக அதிமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டேன். திமுக, அதிமுக ஊழல் செய்தாலும் மக்களுக்கு ஓரளவு நலத்திட்டங்கள்செய்கிறார்கள். ஆனால் தேசிய கட்சிகள் தமிழகத்தை கண்டு கொள்வதில்லை என்றார். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் சாதிக்கட்சிகள்.  தேதிமுகவுக்கு கொள்கையே இல்லை என்றார். இன்னுமொருவருடன்  கதைக்கும்போது திமுகவை வேண்டாதபோது அதிமுகவுக்கும் , அதிமுகவை வேண்டாதபோது திமுகவுக்கும் நடுநிலையானவர்கள் சிலர் வாக்களிக்கிறார்கள் என்றார்.  தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் பெரியகட்சிகள் பணம் குடுத்து கவருவார்கள் ( திருமங்கலம், R K நகர் தேர்தல் முடிவுகள்). ஒவ்வொரு தொகுதியிலும் , தொகுதியில் அதிக மக்கள் வாழும் சாதிக்காரரை வேட்பாளராக தேர்வு செய்வார்கள்.  தலித் சாதியினர் வன்னியருக்கு , வன்னியர் தலித்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.  சில தொகுதிகளில் சில வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கு.  திமுக , அதிமுக்வுக்குள்ள நிரந்தரவாக்குகள், கட்சியில் தனக்கு போட்டியாளரை வேட்பாளராக தலைமை தெரிவு செய்ததினால் வேட்பாளரை விழுத்த சதி திட்டம் உட்பட பல காரணங்கள் ஒருவரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.   இப்பொழுது தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை அதிகம். இதனால் அவர்கள் மோடியை தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். எம் ஜீ ஆர், ஜெயலலிதா மாதிரி பிரபல்யமான தலைவராக ஏடப்பாடி இல்லாதது, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்திருப்பது திமுகவுக்கு சாதகம். 
    • ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.   மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.   நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.   உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.   நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள்.  இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.   இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.