Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருமுகன் படத்தின் திரைவிமர்சனம் ...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடின உழைப்பு, தொடர் முயற்சி விக்ரமின் கூடவே பிறந்தது. என்றும் தோல்விகள் கண்டு அஞ்சாது புதுபுது முயற்சிகளை எடுத்துவரும் விக்ரமின் அடுத்தக்கட்ட முயற்சி தான் இந்த இருமுகன். ஐ படத்தை மிஞ்சும் அளவிற்கு அதிக திரையரங்குகளில் இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே இந்தியன் எம்பஸியை ஒருவர் மட்டுமே தாக்குகிறார். அவருக்கு எப்படி இத்தனை பலம் வந்தது என்று பார்த்தால் ஹின்ஹேல்லர் (Inhaler) மூலம் ஒரு கெமிக்கல் எடுத்துக்கொள்கிறார் என்பது தெரிய வருகிறது.

பிறகு தன் மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் விக்ரமை இந்த கேஸில் நியமிக்கின்றனர். அவரும் ஒரு பெயரை கேட்டதும் உடனே ஓகே சொல்கிறார். அவர் பெயர் தான் லவ்.

பிறகு தான் தெரிகிறது இந்த கெமிக்கல் மருந்தை தயாரிப்பது லவ், விக்ரம் மனைவி இறந்ததற்கும் லவ் தான் காரணம் என்று. இதை தொடர்ந்து லவ் யார், விக்ரம் இந்த சதிதிட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதை பரபரப்பான காட்சிகளால் கதையை நகர்த்தியுள்ளார் ஆனந்த் ஷங்கர்.

படத்தை பற்றிய அலசல்

விக்ரம் இன்னும் எத்தனை படத்தை தாங்கி பிடிப்பார் என்று தெரியவில்லை. ஒரே ஆளாக முழுப்படத்தையும் தாங்கி செல்கிறார். ரா (Raw) அதிகாரியாக ஒரு பக்கம் மிரட்ட, லவ்வாக மறுபக்கம் கவர்ந்து இழுக்கிறார். இன்னும் ஸ்பெஷலாக தன் வாய்ஸ் கூட சற்று மாற்றி கலக்கியுள்ளார். லவ்வாக அவர் செய்யும் சேட்டைகள் அப்படியே டார்க் நைட் ஜோக்கரை நினைவுப்படுத்துகின்றது.

நயன்தாரா தான் படத்தின் பெரிய டுவிஸ்ட். இவரை வைத்து தான் படமே அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் என்று நினைக்கும் நேரத்தில், என்னம்மா அவ்வளவு தானா? என கேட்கத்தோன்றுகின்றது. நித்யா மேனன் எல்லாம் கெஸ்ட் ரோல் கதாபாத்திரம் தான்.

படத்தின் முதல் பாதில் பரபரப்பாகவே செல்கின்றது, யார் இந்த லவ் என்று விக்ரம் தேடி செல்லும் காட்சிகள், அதற்கு வரும் இடையூறுகள் என அடுத்து என்ன, அடுத்து என்ன என்று செல்கின்றது. அப்படியிருக்க இரண்டாம் பாதி கொஞ்சம் தடுமாறுகிறது.

அதற்கு முக்கிய காரணம் லாஜிக் மீறல்கள், படத்தை விறுவிறுவென கொண்டு செல்ல வேண்டும் என்று தான் ஆனந்த் ஷங்கர் நினைத்தாரே தவிர, எந்த ஒரு லாஜிக்கையும் பார்க்கவில்லை போல.

எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எதையும் செய்து விடுவார் விக்ரம். மலேசியா கவர்மெண்டில் இருந்து ஏதோ கண்ணாமூச்சி விளையாடுவது போல் ஒளிந்து ஒளிந்து விளையாடுவது லாஜிக் மீறல் கூட இல்லை, அத்துமீறல் சார்.

ராஜசேகரின் ஒளிப்பதிவு ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உள்ளது. டெக்னிக்கலாக நிறைய விஷயங்கள் படத்தில் இருப்பதால், நிறைய ஒர்க் அவுட் செய்துள்ளது படக்குழு, ஹாரிஸ் ஜெயராஜின் ஹலனா பாடலை தவிர வேறு ஏதும் கவரவில்லை, ஆனால், பின்னணி இசையில் மிரட்டிவிட்டார்.

இயக்குனர் முருகதாஸ் உதவி இயக்குனர் என்பதை இதில் நிரூபித்து விட்டார். கொஞ்சம் போதி தர்மன் கதை போல் தான் உள்ளது, என்ன இந்த படத்தில் ஹிட்லர் கதை வருகிறது.

க்ளாப்ஸ்

விக்ரம் அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு எடுக்கும் முயற்சிகள், சின்ன சின்ன விஷயத்தை கூட சிறப்பாக செய்துள்ளார்.

படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கின்றது. பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு.

லவ் கதாபாத்திரத்தை உருவாக்கிய விதம், மிகவும் ஜாலியான வில்லனாக கவர்கிறார்.

பல்ப்ஸ்

இரண்டாம் பாதி கொஞ்சம் வேகம் குறைகிறது, முதல் பாதியை விட வேகமாக சென்றிருக்கலாம். நித்யா மேனன் போன்ற நல்ல நடிகையை இப்படியா பயன்படுத்துவது?.

லாஜிக் மீறல்கள், அரிமா நம்பியில் பார்த்து பார்த்து கவனித்த இயக்குனர் பெரிய பட்ஜெட் படத்தில் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

மொத்தத்தில் வழக்கம் போல் இந்த இருமுகனையும் விக்ரமே தன் முழுப்பலத்தால் கரை சேர்க்கிறார்

http://www.cineulagam.com/

 

திரை விமர்சனம்: இருமுகன்

 

 
irumuganreview_3006363f.jpg
 

மலேசியத் தலைநகரில் இருக்கும் இந்தியத் தூதரகம் நம்ப முடியாத விதத்தில் அடித்து நொறுக்கப்படுகிறது. இந்திய அரசின் உளவுப் பிரிவான ‘ரா’, தாக்குதலின் காரணத்தைத் துருவத் தொடங்குகிறது. இதை விசாரிக்கும்படி, இடைநீக்கத்தில் இருந்துவரும் ‘ரா’ அதிகாரி அகிலனை (விக்ரம்) கோருகிறது. முதலில் மறுக்கும் அவர், இதில் சம்பந்தப்பட்டது ‘லவ்’ என்பவன் என்றதும் உடனே ஒப்புக்கொள்கிறார். லவ், அகிலனின் மனைவி மீராவின் (நயன்தாரா) மரணத்துக்குக் காரணமானவன். விக்ரமுடன் துணை உளவு அதிகாரியாக செல்கிறார் நித்யா மேனன்.

விசாரணையில் அதிபயங்கர ஊக்க மருந்தின் ஆபத்தான முகம் வெளிப்படுகிறது. அப்படியொரு மருந்தை தயாரித்து தீவிரவாத அமைப்புகளுக்கு உலகம் முழுவதும் விற்க முயலும் இரக்க மற்ற வில்லன்தான் ‘லவ்’. மலேசியாவில் இருக்கும் வில்லனை விக்ரமால் நெருங்க முடிந்ததா? நயன்தாரா என்ன ஆனார்? ‘லவ்’வின் பேரழிவுத் திட்டத்தை தடுக்க முடிந்ததா? இதுதான் இருமுகன்.

விறுவிறுப்பான திரைக்கதை, தரமான மேக்கிங் ஆகியவற்றால் கவனிக்க வைத்த ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர் எழுதி, இயக்கியுள்ள படம். அதிபயங்கர விளைவை உருவாக்கும் ஊக்க மருந்து ஒன்றை முக்கியக் கதாபாத் திரங்களோடு பிணைத்து த்ரில்லர் கதையை எழுதியிருக்கிறார்.

ஊக்க மருந்துக்கு அவர் தரும் முஸ்தீபான சித்தரிப்புகள், அதை எடுத்துக்கொள்பவர்களின் விஸ்வரூபம், அதை வைத்து நாயகனும் வில்லனும் ஆடும் அதிரடி ஆட்டம் என அத்தனையும் படமாக்கப்பட்டுள்ள விதத்தால் கவர்கின்றன.

சஸ்பென்ஸை தக்கவைத்திருக் கும் முன் பாதி வேகமாக நகருகிறது. பாத்திர வார்ப்புகள், தனிப்பட்ட உணர்ச்சிகள், மனித இனத்துக்கு எதிரான குற்றம் ஆகியவை சுவாரஸ்யம் சேர்க்கின்றன. ஆனால் முக்கியமான திருப்பங்களில் நம்பகத்தன்மை இல்லாததால் படம் பார்வையாளர்களின் கவனத்தை தக்கவைக்க தவறுகிறது.

கொடூரமான வில்லனின் கையில் பலமுறை சிக்கும் நாயகன் பத்திரமாக வந்துவிடுவது சிரிப்பை வரவழைக்கிறது. வில்லனை அடைத்து வைத்திருக்கும் மலேசிய ஜெயில் அநியாயத்துக்கும் டம்மியாக இருக்கிறது. அங்கிருந்து வில்லன் ‘லவ்’ தப்பிக்கும் வழிமுறை அபத்தங்களின் அபத்தம். மலேசியக் காவல் துறையின் அம்மாஞ்சித்தனத்துக்கு திரையரங்கில் சிரிப்பலைதான் எழு கிறது.

மருத்துவமனைக்குள் நடக்கும் திருப்பங்களும் காமெடி பஞ்சத்தைப் போக்குகின்றன. ரசாயன வாயு மூலம் நரம்பு மண்டலம் முடக்கப்படும் நாயகன் அடுத்த நிமிடமே மின்னல் வேகத்தில் கார் ஓட்டுகிறார். இப்படி நீளும் கட்டுக்கதைகளால் கிளம்பும் கொட்டாவிகளுக்குப் பொருத்தமான முத்தாய்ப்பு கிளைமாக்ஸ்.

அகிலன், ‘லவ்’ என இரண்டு கதாபாத்திரங்களுக்கான வேறுபாட்டை அனாயாசமாகக் கொண்டு வந்துவிடுகிறார் விக்ரம். அகிலனின் தீவிரம், ‘லவ்’வின் அலட்டிக்கொள் ளாத வில்லத்தனம் இரண்டையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். நயன்தாராவுக்கு காதல், டூயட்டோடு முடிந்துவிடாத வேடம். ஆனால், திரைக்கதையின் ஓட்டைகள் இவரது பாத்திரத்தையும் பாதிக்கின்றன. நயன்தாராவின் திரை ஆளுமை வசீகரிக்கிறது என்றாலும் அவர் பல காட்சிகளிலும் ஒரே மாதிரி நடிக்கிறார். நித்யாமேனனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வேடம் இல்லை. நாசர் விஷயமும் அதே. சிரிக்கவைப்பதில் திரைக்கதையின் திருப்பங்களுடன் தம்பி ராமையாவால் போட்டிபோட முடியவில்லை.

நயன்தாராவின் ஆடைகளும் பாடல் காட்சிகளில் அவரது தோற்றங்களும் கவர்கின்றன. பாதி கலை இயக்கம், மீதி கிராஃபிக் மென்பொருளில் உருவான ‘செட் டிசைன்’ என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

காட்சிகளுக்கும் பாத்திரங்களுக்கும் ஏற்ப உருமாறும் வண்ணங்களில் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரின் கற்பனை பளிச்சிடுகிறது. சேஸிங் காட்சிகள், சண்டைக் காட்சிகளில் கேமரா துடிப்பாகச் செயல்படுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘ஹெலனா’ பாடல் மட்டும் ஈர்க்கிறது. பின்னணி இசையில் பல படங்களின் எதிரொலி கேட்கிறது.

இருமுகனில் ஒப்பனை அதிகம். கற்பனை குறைவு!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-இருமுகன்/article9096443.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.