Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் ஊடாக இலங்கையில் இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருக் கின்றவர்களுக்கே பாரியவாய்ப்பு கிடைத்திருக்கின்றது என்பதனை தமிழர் பிரச்சினையுடன் சம் பந்தப்பட்ட அனைவரும் உணரவேண்டும்.

Featured Replies

உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் ஊடாக இலங்கையில் இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருக் கின்றவர்களுக்கே பாரியவாய்ப்பு கிடைத்திருக்கின்றது என்பதனை தமிழர் பிரச்சினையுடன் சம் பந்தப்பட்ட அனைவரும் உணரவேண்டும்.
ஒரு நாட்டுக்கான தூதுவர் அல்லது உயர்ஸ்தானிகர் என்பவர் மதிப்புக்குரியவர். அதனால்தான் அவர் ""அதி மேன்மை தாங்கிய"" என்று அழைக்கப்படுகின்றார். அவருக்கு உரிய பாதுகாப்பும் கௌரவமும் அளிக்கப்படவேண்டும்
showImageInStory?imageid=295977:tn
 

 

ஞாயிற்றுக்கிழமை மாலை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மலேஷியாவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் தயாகமகே நாடு திரும்பும் நோக்கில் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தார். அவருடன் மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சாரும் விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது விமான நிலையத்தில் வைத்து யாரும் எதிர்பாராத சம்பவம் இடம்பெற்றது. திடீரென உயர்ஸ்தானிகர் அன்சாரை நெருங்கிய ஒரு குழுவினர் அவரிடம் எதனையோ வினவிவிட்டு அவர் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். உயர்ஸ்தானிகர் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது பாதுகாப்பு பிரிவினர் வந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். திடீரென இடம்பெற்ற சம்பவம் விமான நிலையத்தையும் பரபரப்பாக்கியதுடன் சற்று நேரத்தில் இலங்கையில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

அந்தவகையில் மலேஷியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலானது பாரிய கண்டன அலைகளை உருவாக்கியுள்ளது. தாக்குதல் காரணமாக தலையில் பலத்த காயமடைந்த உயர்ஸ்தானிகர் உடனடியாக கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இத் தாக்குதலில் மலேஷியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் மற்றொரு சிரேஷ்ட அதிகாரியும் காயமடைந்துள்ளார்.

அதாவது மஞ்சள் நிற மேலாடை அணிந்­தி­ருக்கும் உயர்ஸ்­தா­னி­கர் அன்­சாரை துரத்தி வரும் ஐந்துக்கும் மேற்­பட்டோர் அடங்­கிய குழு­வினர் அவரை வழி­ம­றித்து சர­மா­ரி­யாக தாக்­குதல் நடத்தும் காட்சி சீ.சீ.ரி.வி.யில் பதி­வா­­கி­யுள்­ளது. உயர்ஸ்­தா­னிகரை நோக்கி கடு­மை­யான வார்த்­தை­களைப் பிர­யோ­­கித்­த­வாறே அவ­ரது முக­த்­திலும் தலை­யிலும் ஐவர் ஒரே சம­யத்தில் தாக்­குதல் நடத்தும் காட்­சியும் மற்­றொ­ருவர் உயர்ஸ்­தா­னி­கரின் வயிற்றுப் பகு­தியில் கால்­களால் உதைக்கும் காட்­சியும் அதில் பதி­வா­கி­யுள்­ளன.

தாக்குதல் நடத்திய குழுவினர் விமான நிலையத்தில் உயர்ஸ்­தா­னி­கர் அன்சாரிடம் மலேஷியாவில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ''மஹிந்த ராஜபக் ஷ எங்கே?'' என கேள்வியெழுப்பியுள்ளனர்.

அதற்கு அவர் ''அது பற்றி பொலிஸாரிடம் கேளுங்கள்'' என பதிலளித்துள்ளார். இதனையடுத்தே உயர்ஸ்­தா­னி­கர் அன்சார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மஹிந்த ராஜபக் ஷ மீது வெறுப்பு கொண்டவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

தாக்குதல் தொடர்பில் உடனடியாக கண்டனம வெளியிட்டிருந்த வெளிவிவ கார அமைச்சு மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அரசாங்கம் மிகவும் வன்மையான முறையில் கண்டிக்கின்றது என்று குறிப்பிட்டிருந்தது.

அத்துடன் மறுதினம் திங்கட்கிழமை இலங்கையில் உள்ள மலேஷிய தூதுவரை நேரடியாக அழைத்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அரசாங்கத்தின் கண்டனத்தை வெளியிட்டிருந்தார். இதேவேளை இப்­ராஹிம் அன்சார் மீது தாக்­குதல் நடத்­திய குற்­றச்­சாட்டின் பேரில் ஐவரைக் கைது செய்­­ததுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அந்­நாட்டு பொலிஸார் தெரி­வித்திருந்தனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள மலேஷிய அரசாங்கம் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் உரிய விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் குற்றவாளிகள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவார்கள். இனிவரும் காலங்களில் இம்மாதிரியான சம்பவங்கள் இடம்பெற வழிவிடாமல் இலங்கையுடனான உறவுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து மேலும் நெருங்கி செயற்பட எதிர்பார்ப் பதாகவும் மலேஷிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே சம்பவம் இடம்பெற்றதுடன் மலேஷியாவில் உள்ள இலங்கை தமிழர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் வெளியிடப்பட்டது. அது தொடர்பில் பாரிய விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இந்த சந்தேகத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முற்றுப்புள்ளி வைத்தார்.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றேன். நாம் தமிழர் கட்சியின் மலேஷிய கிளையினரே இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றனர். இலங்கை தமிழர்கள் எவரும் இச் சம்பவத்தில் தொடர்பு பட்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

அத்துடன் முன்னர் இலங்கையில் இருந்தவர்களோ அல்லது தற்போது இலங்கையில் இருப்பவர்களோ அல்லது இலங்கை பெற்றோரை கொண்டவர்களோ இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. அதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேஷிய தமிழர்களேயாவர்.. அவர்களில் எவரும்ட இலங்கையர் கிடையாது. நாம் தமிழர் கட்சியின் மலேஷிய கிளைக்கு அந் நாட்டின் ஜனநாயக செயல் கட்சியுடன் தொடர்பு இருக்கின்றது என்றும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் நாம் தமிழர் இயக்கமே இந்த தாக்குதலை நடத்தியது என்ற குற்றச்சாட்டை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முழுமையாக மறுத்துள்ளார். அவ்வாறு தமது இயக்கம் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை என்றும் அரசியல் கட்சியான தமது இயக்கம் ஜனநாயக ரீதியிலேயே எதிர்ப்புக்களை வெளியிடும் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் உண்மையில் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. உலகில் ஒருவர் மீது மற்றொருவர் தாக்குதல் நடத்துவதற்கு எவ்விதமான உரிமையும் இல்லை. அவ்வாறு தாக்குதல் நடத்துவது சட்டவிரோதமானதாகும். இது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

தனி மனிதன் மீது தாக்குதல் நடத்தப்பட முடியாது என்பது ஒரு புறமிருக்க ஒரு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி மற்றுமொரு நாட்டில் தூதுவராகவோ அல்லது உயர்ஸ்தானிகராகவோ பதவி வகிப்பவர் மீது தாக்குதல் நடத்துவது என்பது மிகவும் பாரதூரமானதாகும்.

ஒரு நாட்டுக்கான தூதுவர் அல்லது உயர்ஸ்தானிகர் என்பவர் மதிப்புக்குரியவர். அதானால்தான் அவர் ""அதி மேன்மை தாங்கிய"" என்று அழைக்கப்படுகின்றார். அவருக்கு உரிய பாதுகாப்பும் கௌரவமும் அளிக்கப்படவேண்டும்.

உண்மையில் ஏன் இந்த சம்பவம் இடம்பெற்றது என்பதற்கான பின்புல காரணிகளை நாம் ஆராயவேண்டியுள்ளது. அதாவது இலங்கையில் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் கடும் துன்ப துயரங்களை எதிர்கொண்டனர்.. தொடர்ந்தும் எதிர்கொண்டுவருகின்றனர் என்பதற்காக மலேஷிய தமிழர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள் என்பதே இந்த அசம்பாவிதத்தின் மையப்புள்ளியாக காணப்படுகின்றது.

ஆனால் இவ்வாறு தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்பதற்காக மனித பண்புகளுக்கு அப்பாற்பட்டு செயற்படுவது எந்தவகையிலும் பொருத்தமற்றது என்பதனை புரிந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இலங்கையில் இனவாதத்தைக் கக்கிக் கொண்டிருக்கின்றவர்களுக்கே பாரிய வாய்ப்பு கிடைக்கின்றது என்பதனை தமிழர் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் உணரவேண்டும்.

இந்த நாட்டின் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களையும் வடுக்களையும் சர்வதேசத்துக்கு கொண்டு சென்று நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற உந்துதலை மெருகூட்டியவர்கள் புலம்பெயர் தமிழர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

ஆனால் இவ்வாறு வன்முறைச் சம்பவங்களின் ஊடாக வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஒருபோதும் சுமுகமாக தீர்க்க முடியாது என்பதனை அனைத்து தரப்பினரும் புரிந்துகொள்ளவேண்டும். இவ்வாறான சம்பவங்கள் மேலும் பிரச்சினைகளை வளர்க்கும் என்பதுடன் இனங்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிக்கும் என்பதனை மறந்துவிடக்கூடாது.

எனவேதான் மலேஷியாவில் இடம்பெற்ற செயலானது எவ்வாறான பின்புலத்தைக் கொண்டு இடம்பெற்றது என்பதனை ஆராயவேண்டியுள்ளது. காரணம் தற்போதைய நிலைமையில் இவ்வாறு மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கும் என்பதுடன் இனவாதிகளை வலுவூட்டும். இதனைதவிர எந்தவொரு நன்மையும் சர்வதேச அவதானமும் இதுபோன்ற சம்பவங்களினால் கிடைக்கப்போவதில்லை.

புலம்பெயர் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இந்த விடயம் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அவ்வாறு நிலைமையின் தாற்பரியத்தை புரிந்துகொண்டுள்ள புலம்பெயர் அமைப்பினர் இந்த தாக்குதலை செய்திருப்பார்கள் என்றும் கருத முடியாது. ஆகவேதான் இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து தேடிப்பார்க்க வேண்டியுள்ளது.

எது எப்படியிருப்பினும் இந்த சம்பவமானது இனவாதிகளுக்கே தீனிபோடுவதாக அமைந்துள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் முக்கியமான சில விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.

அதாவது மலேஷியாகவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்கள் இலங்கையர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக இலங்கையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

உண்மையில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் இந்த விடயத்தில் மிகவும் யதார்த்தமான முக்கியத்துவமிக்க கருத்தை வெளியிட்டுள்ளார் என்றே கூறவேண்டும். இதன்மூலம் தற்போதைய நிலைமையில் முன்னெடுக்கப்படும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ள நல்லிணக்க முயற்சிகளுக்கு பங்கம் ஏற்படாமல் இருக்க சம்பந்தன் வழி செய்துள்ளார் என்றே கூறவேண்டும்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் நாட்டில் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்துள்ளதுடன் தமிழ்க் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகவும் வந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை மேலோங்கியுள்ளது.

அந்த நம்பிக்கையை சீர்குலைக்காமல் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைப் பெற்றுக்கொள்ள அனைத்து தரப்பினரும் சமயோசிதமாக செயற்படவேண்டியது அவசியமாகும். மாறாக இராஜதந்திர அணுகுமுறைகளில் வெற்றிடம் ஏற்படும் வகையில் யாரும் செயற்படக்கூடாது.

தற்போதைய நிலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தேசிய அரசாங்கத்தின் ஊடாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக வடக்கு மக்கள் விடயத்தில் தேசிய அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் பாரிய விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் தென்னிலங்கையில் இனவாதிகள் முன்வைக்கின்றனர்.

இவ்வாறான பின்னணியில் வெளிநாடுகளில் இடம்பெறும் இதுபோன்ற இராஜதந்திர பார்வையற்ற சம்பவங்கள் ஏற்கனவே ஏற்பட்டுள்ள சிக்கலை மேலும் வலுவூட்டும் என்பதில் சந்தேகமில்லை.

அதனால்தான் இலங்கையில் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கையை தோற்றுவித்துள்ள நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைக்க இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது. நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைப்பதற்கான சதித்திட்டமாக இருக்குமோ என்ற சந்தேகமும் வலுவடைகின்றது.

காரணம் இந்த செயற்பாடுகளின் ஊடாக பெரும்பான்மை சமூகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. மாறாக சிறுபான்மை சமூகத்துக்கே பாதிப்பு ஏற்படும். இதுபோன்ற அசம்பாவிதங்களை காரணம் காட்டி நல்லிணக்க முயற்சிகளை வலுவிழக்கச் செய்ய சில தரப்புக்கள் முயற்சிக்கலாம். அதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.

இனவாதம் எப்பக்கம் இருந்து வந்தாலும் அதற்கு இடமளிக்கக்கூடாது. இராஜதந்திர அணுகுமுறைகளே மிகவும் பொருத்தமானதாக அமையும் என்பதனை மறந்துவிடக்கூடாது.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=10/09/2016

 

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான சொறீலங்கா குடிமக்கள் தமிழர்கள் என்பதற்காக சிங்கள அரசால்.. கொல்லப்பட்ட போது அதனை நியாயப்படுத்திக் கொண்டிருந்த ஒருவருக்கு.. வீரகேசரி வசனம் எழுதுவதன் நோக்கம் என்ன.

சுதந்திரத்திற்கு பின் தமிழர்கள் சிங்கள இனவாதிகளை எப்போதாவது கட்டுப்படுத்த முடிஞ்சதா.. (விடுதலைப்புலிகள் காலத்தில்.. பதிலடி கொடுக்கப்பட முடிந்தது.. கட்டுப்படுத்த முடியவில்லை.). இப்ப புதிசா.. ஏதோ இனவாதம்.. கிளம்பிற மாதிரி.. இந்த மனித இன விரோத ஆளுக்கு.. இத்தனை மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்தி சிங்களவர்களுக்கு கூஜா தூக்கிய இந்த முஸ்லீமுக்கு வீரகேசரி.. பரிந்துருகி.. தமிழ் மக்களுக்கு வகுப்பெடுக்க.. ஒரு அருகதையும் அற்றது. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.