Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காய்கறி விற்று.. ரூ.3 லட்சம் கடன் வாங்கி.. தங்கவேலு தங்கம் வெல்ல உழைத்த தாய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காய்கறி விற்று.. ரூ.3 லட்சம் கடன் வாங்கி.. தங்கவேலு தங்கம் வெல்ல உழைத்த தாய்

10-1473492966-mariappan-thangavelu7.jpg

 

சென்னை: ஒவ்வொரு சாம்பியனுக்கு பின்னாலும் ஒரு தூண்டுதல் கதை இருக்கும். மாரியப்பன் தங்கவேலுவும் அதற்கு விதிவிலக்கானவர் அல்ல. பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ள தமிழகத்தை சேர்ந்த இந்த இந்திய வீரர், சிறு வயதில் படாத கஷ்டங்களை பட்டுதான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். 21 வயதாகும், மாரியப்பன், உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவுக்கான முதலாவது தங்கம் வென்றுள்ளார். 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி பதக்கத்தை பறித்துள்ளார் மாரியப்பன். இதே பிரிவில் இந்தியாவின், விகாஸ் சிங் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். மாரியப்பன் தங்கவேலுவிற்கு குடியரசு தலைவர், பிரதமர் என பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனால் இந்த நிலையை அடைய அவர் பட்டபாடு பெரிது.

1995, ஜூன் 28ம் தேதி பிறந்தவர் மாரியப்பன் தங்கவேலு. இவ்வாண்டு மார்ச் மாதம் துனிஷியாவில் நடந்த ஐபிஎல் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 1.78 மீட்டரை தாண்டி குதித்து ரியோ பாராஒலிம்பிக்கில் பங்கேற்கும் தகுதியை தங்கவேலு பெற்றார்.

குக்கிராமம் தமிழகத்தின் சேலம் நகரிலிருந்து 50 கிமீ தூரத்திலுள்ள குக்கிராமமான பெரியவடக்கம்பட்டியில் பிறந்து வளர்ந்து இவ்வளவு பெரிய உயரத்தை எட்டிப்பிடித்துள்ளார் தங்கவேலு.

பெங்களூரில் பயிற்சி:

பெங்களூவில், சத்யநாராயணா என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றவர் தங்கவேலு. 5 வயதாக இருந்தபோது, பள்ளிக்கு சென்ற வழியில், பஸ் மோதியதால், வலது கால் உடைந்துபோனது. அதன்பிறகு 5 வயதுக்கு உரிய காலாகவே அது மாறிப்போனது. குணமடையவும் இல்லை. வளரவும் இல்லை.

காய்கறி விற்ற தாய்:

தங்கவேலுவின் தாயார் காய்கறி விற்பனை செய்து குடும்பத்தை பார்த்துக்கொள்கிறார். தங்கவேலுவின் மருத்துவ செலவுக்காக ரூ.3 லட்சம் வரை கடன் பெற்றிருந்தார் அவர். இன்னமும், அ

உயரம் தாண்ட ஊக்கம் :

பள்ளி காலத்தில் வாலிபாலில் தங்கவேலு ஆர்வம் காட்டினார். ஆனால், அவரிடம், உயரம் தாண்டுதலுக்கான திறமை ஒளிந்திருந்ததை கவனித்த பள்ளியின் உடல் கல்வி ஆசிரியர், உயரம் தாண்ட ஊக்கம் கொடுத்தார். அவர் கூறியது பலித்தது.

 3 லட்சத்துக்கான, வட்டி, அசலை திருப்பி செலுத்தி வருகிறது தங்கவேலு குடும்பம்.

கண்ணில் தென்பட்ட ஸ்பார்க் பயிற்சியாளர்:

சத்தியநாராயணா கண்களில் தங்கவேலு கடந்த 2013ல் பட்டார். பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க வந்த தங்கவேலுவை பார்த்ததும், சத்தியநாராயணாவுக்கு ஏதோ ஒரு ஸ்பார்க். உடனே பெங்களூரில் வைத்து பயிற்சியை ஆரம்பித்துவிட்டார்.

சிறந்த கோச் :

விளையாட்டு என்பது தொழிலாக மாறிவிட்டாலும், தனது தாயாரின் கஷ்டத்தை போக்க நல்ல வேலை கிடைக்குமா என்று தேடி வந்தார். இப்போது பாரா ஒலிம்பிக்கில் சாதித்துள்ள நிலையில், சன்மானங்கள் அவரது குடும்ப வறுமையை போக்கும் என நம்பலாம். பேட்மின்டனுக்கு ஒரு கோபிச்சந்த் போல, உயரம் தாண்டுதலுக்கு, சத்தியநாராயணா மிகச்சிறந்த கோச்சாக உருவெடுத்து வருகிறார். 2012 லண்டன் பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கிரிஷாவுக்கும் சத்தியநாராயணாதான் பயிற்சியாளர்.

நன்றி தட்ஸ் தமிழ்

டிஸ்கி :

குடித்துவிட்டு வண்டி ஒட்டிய பஸ் டிரைவரின் செய்கையால் தான் தங்கவேலு தன் கால்களில் ஒன்றை இழக்க நேர்ந்தது...!! எவ்வளவு தீர்க்க தரிசனம் !! அம்மா நாமம் வாழ்க !! டாஸ்மார்க்கு வாழ்க.. எல்லார் குடியும் வாழ்க

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் விளையாட்டு போட்டிகளிலும் அரசியல் விளையாட்டு அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்

14233020_1754457631473437_4123773984163004145_n.jpg?oh=dae0b289d688e85c000dbd0bc6104163&oe=58839ACC

ஏழைக் குடும்பத்தில்  விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். 
அப்படி இருந்தும்... அவரின் தாயார் அவரை விளையாட்டில் ஊக்குவித்து, 
உலக அளவில் தங்கப் பரிசை வெல்ல வைத்து..... தமிழனுக்கு பெருமை சேர்த்தமைக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

14305411_167504517022620_1128120903143438472_o.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுத் திறனாளியாக இல்லாமல் போயிருந்தால் இந்த வாய்ப்பும் கிடைத்திருக்காது. வாழ்த்துக்கள் தங்கவேலு மாரியப்பன்..!

மேலும் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்துவுக்கு சில கோடிகள்.. தங்கப்பதக்கம் வென்ற தங்கவேலுவுக்கு 75 லட்சம்.. இதுதான் இந்திய அரசு செய்வது.. மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டி என்றால் அதனை இந்திய அரசே மதிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

மாற்றுத் திறனாளியாக இல்லாமல் போயிருந்தால் இந்த வாய்ப்பும் கிடைத்திருக்காது. வாழ்த்துக்கள் தங்கவேலு மாரியப்பன்..!

மேலும் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்துவுக்கு சில கோடிகள்.. தங்கப்பதக்கம் வென்ற தங்கவேலுவுக்கு 75 லட்சம்.. இதுதான் இந்திய அரசு செய்வது.. மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டி என்றால் அதனை இந்திய அரசே மதிப்பதில்லை.

தமிழக முதல்வர் அவருக்கு..... இரண்டு கோடி ரூபாய் கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது, மகிழ்ச்சியான செய்தி. :)

#########

ரூ.2 கோடி பரிசளித்த முதல்வரை நேரில் சந்திக்க விரும்பும் மாரியப்பன் தங்கவேலு.

சென்னை : பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்றுள்ள மாரியப்பன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அவரிடம் வாழ்த்து பெறுவதை விருப்பமாகக் கொண்டுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

31வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சனிக்கிழமை காலை நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கும் மாரியப்பனுக்கு ரூ2 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தம்முடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு மாரியப்பனின் பெற்றோர் தங்கவேலு-சரோஜா நன்றி தெரிவித்துள்ளனர். பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை பெற்ற எங்களது மகனுக்கு நல்ல வாய்ப்பும், புகழும் கிடைத் துள்ளது.

மாரியப்பன் தமிழகம் திரும்பியதும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்பதையே விருப்பமாக தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் தமிழக முதல்வரை சந்திக்க வேண்டி அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

எப்பொழுதுமே விளையாட்டுத் துறை மீது தனி அக்கறை செலுத்தும் தமிழக முதல்வர், எங்களது மகன் தங்கப் பதக்கம் வென்றதும், உடனடியாக ரூ.2 கோடி பரிசளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக, நாங்கள் முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்கப் பதக்கத்துடன் மாரியப்பன் தாயகம் திரும்பும் போது, ஒரு சில நிமிடங்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பளித்தால், அதனை பெருமையாக கருதுவோம். விளையாட்டுத்துறை வளர்ச்சியில் பெரிதும் அக்கறையும், முக்கியத்துவமும் அளிக்கும் தமிழக முதல்வர், மாரியப்பன் சந்தித்து வாழ்த்து பெற ஒரு வாய்ப்பை அளிப்பார் என நம்புகிறோம்.

விளையாட்டுத்துறை வளர்ச்சியில் பெரிதும் அக்கறையும், முக்கியத்துவமும் அளிக்கும் தமிழக முதல்வர், மாரியப்பன் சந்தித்து வாழ்த்து பெற ஒரு வாய்ப்பை அளிப்பார் என நம்புகிறோம்.

எங்கள் மகன் தங்கம் வெல்ல காரணமாக இருந்த பாராலிம்பிக் வாலிபால் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா தலைவர் சந்திரசேகர், பயிற்சியாளர் சத்யநாராயணன் மற்றும் பள்ளி, கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தொடர்ந்து ஊக்கமளித்த கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி ஆகியோருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்று மாரியப்பனின் பெற்றோர் கூறியுள்ளனர்.

தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

14316920_967209060092661_8251731267986847057_n.jpg?oh=997a7e89f7bc69c6aca55ed91f3ded63&oe=5876AAA6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.