Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக பந்த் மறியல்... தலைவர்கள் கைது நிலவரம்!

Featured Replies

தமிழக பந்த் மறியல்... தலைவர்கள் கைது நிலவரம்!

u3.jpg

காவிரி பிரச்னை காரணமாக கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் பேரணியாக சென்றனர்.

u1.jpg

அங்கு, ரயில் மறியலில் ஈடுபட சென்ற ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, காவிரி நீர் பிரச்னையில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக அவர்கள் அங்கு கோஷங்கள் எழுப்பினர். அதை தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து அங்கு தயாராக நிறுத்தி வைத்திருந்த பேருந்துகளில் ஏற்றி சென்றனர்.

u2.jpg

ம.சுப்பிரமணியன்...

இதேபோல், முன்னாள் சென்னை மேயர் ம.சுப்பிரமணி தலைமையில் தி.மு.க.வினர் சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

u4.jpg

வைகோ...

திருச்சி ரயில்வே சந்திப்பில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திருமாவளவன்...

சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, அவர்களை மறித்த போலீசார், திருமாவளவன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களை கைது செய்தனர்.

u5.jpg

கனிமொழி...

சென்னை அண்ணாசாலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில் தி.மு.க. மகளிரணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், கனிமொழி உள்ளிட்ட தி.மு.க. மகளிரணியினரை கைது செய்தனர்.

u7.jpg

துரைமுருகன்...

வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் பிருந்தாவன் ரயிலை, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க.வினர் மறிக்க மறியலில் ஈடுபட்டுனர். அப்போது, துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/68434-tn-complete-blockage-of-struggle--updates.art

  • தொடங்கியவர்

அரசு பேருந்து இயக்கம்... ஆட்டோ, லாரிகள் ஓடவில்லை! - பந்த் நிலவரம்!

b1.jpg

சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக ஆட்டோ, தனியார் பேருந்துகள், லாரிகள் ஓடவில்லை, அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

காவிரி பிரச்னையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம்-புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன.

b6.jpg

மேலும், வியாபாரிகள் கடை அடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 4½ லட்சம் லாரிகளும், 4½ லட்சம் மினிவேன்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் என 11½ லட்சம் வாகனங்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓடாது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் ஓடாது என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆம்னி பஸ்களும் பகலில் இயக்கப்படாது என்று அறிவித்து உள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் 4 ஆயிரத்து 800 பெட்ரோல்- டீசல் நிலையங்கள் மூடப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

b10.jpg

ஆட்டோ-டாக்சி ஓட்டுனர்கள் சங்கம் முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆட்டோக்கள் ஓடாது என்று சில சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். ஆட்டோக்கள், தனியார் வேன்கள் போராட்டத்தில் பங்கேற்பதால் தனியார் பள்ளிகள் செயல்படாது என்று தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்து உள்ளது. ஆனால் அரசு பள்ளிகள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என்று கல்வித்துறை அறிவித்து உள்ளது.

b4.jpg

கடை அடைப்பு போராட்டத்தின்போது தமிழகத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல், அமைதியான முறையில் நடைபெறுவதற்காக முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக டி.ஜி.பி. தலைமையிலான போலீசார் எடுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில் மட்டும் சுமார் 20 ஆயிரம் போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கு தயாராக ஏராளமான போலீஸ் வேன்களும், மாநகர பேருந்துகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தின் போர்வையில் கலவரத்தில் ஈடுபட்டால் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

b3.jpg

அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும், குறிப்பாக சென்னை சென்டிரல், எழும்பூர், பெரம்பூர், தாம்பரம் போன்ற ரயில் நிலையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளுக்கோ, ரயில்வேக்கு சொந்தமான பொருட்களுக்கோ சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்து உள்ளனர்.

b9.jpg

இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிர பகுதிகளில் இன்று காலை முதல் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு உள்ளன. ஆட்டோக்கள், தனியார் பேருந்து, லாரிகள் இயக்கப்படவில்லை. கடை அடைப்பு போராட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்ற உத்தரவு இருப்பதால் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படுகின்றன. தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., உள்பட தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துபோதும், அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.

b8.jpg

மின்சார ரயில்களும், எக்ஸ்பிரஸ் ரயில்களும் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டுவதால் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்படுகின்றனர். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற போலீசாரின் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், சாலையில் செல்லும் அனைத்து வாகனங்கள், திறந்திருக்கும் கடைகள், தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், செயல்படும். மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

புதுச்சேரி...

புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டம் காரணமாக தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. அரியாங்குப்பத்தில், புதுச்சேரி-கடலூர் சாலையில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீயை அணைக்க முயன்ற காவலர் அய்யனார் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.

தூத்துக்குடி, ஈரோடு, திண்டுக்கல்...

தூத்துக்குடி மற்றும் ஈரோட்டில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. ஆனால், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல், திண்டுக்கல்லில் அரசு, தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயங்குகின்றன. பள்ளிகளும் திறந்திருக்கின்றன.

திருச்சி...

முழு கடையடைப்பையொட்டி திருச்சி தில்லைநகர், மெயின்கார்டுகேட் பகுதிகளில் டீக்கடைகள் உள்ளிட்ட 99% கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சில பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் முரணான அறிவிப்பால் பள்ளி செல்லும் குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

கடலூர்...

கடலூர் மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டவில்லை. பண்ருட்டியில் அரசு பேருந்துகள் இயங்குகின்றன. டீக்கடைகள் மற்றும் பெட்டிக்கடைகள் மட்டும் ஒருசில இடங்களில் திறந்துள்ளன. ஆட்டோக்கள், வாடகைக்கார்கள், லாரிகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

வேலூர்...

வேலூர் மாவட்டத்தில், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், ஒருசில தனியார் பள்ளிகள் மற்றும் சில நிறுவனங்கள் இயங்குகின்றன.

திருப்பூர்...

திருப்பூரில் 100 சதவிகிதம் கடைகள் மற்றும் பின்னலாடை நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை, ஓரிரு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும் அதிகம் பயணிகள் இல்லாமல் இயக்கப்படுகின்றன. உடுமலைப்பேட்டை, பல்லடம், தாராபுரம், காங்கேயம் போன்ற நகரங்களிலும் வியாபாரிகளே விரும்பி கடை அடைப்பு செய்து முழு அடைப்புக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை...

 

பவுர்ணமி என்பதால் திருவண்ணாமலையில் பெரும அளவு ஆட்டோக்கள் ஓடிகொண்டு இருக்கின்றன, கடைகள் மட்டுமே முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்..

http://www.vikatan.com/news/tamilnadu/68432-tamil-nadu-bandh-status-government-buses-are-running.art

  • தொடங்கியவர்

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் அமைதியான முழு அடைப்பு

Date: 2016-09-17@ 00:08:15

Daily_News_881878137589.jpg

சென்னை : கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டது, சொத்துக்கள் சூறையாடப்பட்டதை கண்டித்தும்,  நடுவர் மன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் அமைதியாக  நடந்தது. எல்லா மாவட்டங் களிலும் தனியார் பஸ்கள், லாரிகள், டாக்சிகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. தனியார் பள்ளிகள், ஓட்டல்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசு பள்ளிகள், அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கின. முழு அடைப்பு வெற்றி பெற்றுள்ளதாக தலைவர்கள் தெரிவித்தனர்.
காவிரியில் தமிழகத்திற்கு நடுவர் மன்ற தீர்ப்பின்படி இதுவரை 50.52 டிஎம்சி தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடகாவில் உள்ள அணைகளில் 51 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. அது குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. அதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடகா அறிவித்தது. இதனால் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் 10 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கர்நாடகா வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை கடந்த 12ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், தினமும் 12 ஆயிரம் கன அடி வீதம் 20ம் தேதி வரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்தன. தமிழக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களில் செல்பவர்கள் தாக்கப்பட்டனர். பலர் ஆடைகளை கழற்றி அவமானப்படுத்தப்பட்டனர். இதன் உச்சக்கட்டமாக 40 பஸ்கள், ஏராளமான லாரிகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அதன்பின்னர் கர்நாடக அரசு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 2 பேர் பலியாகினர். இதற்கிடையே, தீர்ப்புக்கு எதிராக எப்படி வன்முறைகளை அனுமதித்தீர்கள் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கு திமுக, காங்கிரஸ், பாஜ, பாமக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. வணிகர் சங்கங்கள், லாரி உரிமையாளர்கள் சங்கம், மண் அள்ளும் லாரி உரிமையாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், ஆட்டோ-டாக்சி
ஓட்டுனர்கள் சங்கம் உட்பட 35க்கும் மேற்பட்ட சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன.  நேற்று காலை 6 மணி முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் பள்ளிகள், ஓட்டல்கள், டீ கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தனியார் பஸ்கள், லாரி, வேன், டாக்சிகள் முழுமையாக இயங்கவில்லை.  ஆனால், அரசு பள்ளிகள், அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின.  அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டன.

கோயம்பேடு மார்க்கெட், கொத்தவால்சாவடி மார்க்கெட் இயங்கவில்லை. பர்மா பஜார் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை உட்பட எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சென்னையைப் போல, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் இதே நிலைமை நீடித்தது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலை, மெரினா காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மருத்துவமனைகள், மருந்து கடைகள் மட்டுமே திறந்திருந்தன. முழு அடைப்பிற்கு பெரிய அளவில் ஆதரவு இருக்காது என்று நினைத்து திறக்கப்பட்ட ஒரு சில கடைகளும் சில மணி நேரங்களில் மூடப்பட்டன. இதனால் கடைகள் முழுமையாகவே அடைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநிலம் முழுவதும் 1.18 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தமிழகத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சங்கங்களின் தலைவர்கள் ரயில் மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் அமைதியான முறையில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் முழுமையாக வெற்றி பெற்றதாக பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும், சங்கங்களின் தலைவர்களும் அறிவித்துள்ளனர்.

21 லட்சம் கடைகள் மூடல்: ரூ.15,000 கோடி இழப்பு

போராட்டத்தின் போது விக்கிரமராஜா அளித்த பேட்டியில், “காவிரி பிரச்னையால் பொது சொத்திற்கு சேதம் விளைவிக்கப்படுகிறது. இதனால், வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படு கிறார்கள். ேபாராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் 21 லட்சம் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. கடைகள் அடைப்பால் ரூ.15,000 கோடி அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கோயம்பேடு மார்க்கெட் பழ அங்காடி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரவை தலைவர் த.வெள்ளையன்  தலைமை வகித்தார். இதில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது வெள்ளையன் அளித்த பேட்டியில்,” தமிழகம் முழுவதும் 65 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. ஒட்டு மொத்த போராட்டத்தால் தமிழகம் ஸ்தம்பித்தது. எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

* கோயம்பேடு, கொத்தவால்சாவடி மார்க்கெட் இயங்கவில்லை.
* திறக்கப்பட்ட ஒரு சில கடைகளும் சில மணி நேரங்களில் மூடப்பட்டன.
* அரசு பள்ளிகள், அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின.
* டாஸ்மாக் போலீஸ் பாதுகாப்புடன் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டன.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=246104

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலின், கனி மொழி எல்லாரும்... போராட்டம் செய்து, கைது பண்ணப் பட......
கருணா நிதி...  இன்னும்,  ஒருமுறை.. மெரீனா பீச்சில.... காத்து வாங்கியிருக்கும் காட்சியை,  காட்டியிருக்கலாம்.
அடுத்த... தேர்தலுக்கு, உதவி இருக்கும்.

அடங் கொக்கா..... மக்கா.... உங்களால தானே.... இவ்வளவு பிரச்சினையும்.
"சன் ரிவி"  தமிழகத்தில் தமிழனுக்கு சார்பாக செய்தி வெளியிட.
கர்நாடகத்தில் உள்ள அதே நிர்வாகத்தின்... "உதயா ரிவி"  அவங்களுக்கு சார்பாக, கிண்டி விட்டுட்டு...
இப்ப.. நாடகம் போடுறாங்கள். வெட்கம் கெட்ட  வியாபாரிகள். tw_cry:

  • கருத்துக்கள உறவுகள்

u1.jpg

இந்தப் படத்தில்  மட்டுமல்ல,  பல படங்களில்.... ஸ்ராலினுக்கு காவல் காக்கும்....
இராணுவ சீருடை, கறுப்பு பூனைப் படை,  போலீஸ் உடை அணிந்தவர்கள்..... எல்லாருக்கும், சம்பளம் கொடுக்க....  
அரசாங்கத்துக்கு,  செலவு அதிகம் பிடிக்குமே......

இதிலும் பார்க்க..... இவங்கள் போராடாமல்,  வீட்டில் சும்மா..... படுத்துக் கிடப்பது, நல்லது போல் உள்ளது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலின்.. பார்திமாவோடு மொட்டோடொர் வேனில் போராடினார்.. அக்கா கனிமொழி ராஜா வோடு   அமைதி வழியில்.. திகார் சிறையில் போராடினார்.. இனி பேச்சு வார்த்தை வழி.. அண்டார்டிக்கா வழி .. கிந்திய சனநாய்கம் என்று  வந்தால் .. கழுவி கழுவிதான்  ஊத்தணும்.. ஒரு தள்ளு வண்டி தமிழ் இட்லி கடைக்காரிடம் 2 லட்சம் கொடுத்தால் உன் கடைய உடைக்காம இருப்பன்.. என்று பேசி அது படியாமல் போக அந்த கடையில் கடன் சொல்லி ஏற்கனவே சாப்பிட்ட கன்னட நா .. (வேண்டாம்  அது நன்றியுள்ள பிராணி ) அந்த சாக்கடை இன்று உடைத்து எரியவிட்டு விட்டான்.. எல்லா கமிழரிடம் இன்று இங்கு /// இப்படித்தான்  உடைப்பதற்கு/ காப்பதற்கு உண்டான  பேரம் பேசுகிறார்கள் ..ஏண்டா இது நாடா ? கட்டபஞ்சாயத்து மடமா ?

டிஸ்கி :

என் ஒரு ஒரு வியர்வைக்கும் ஒரு பவுன் தங்க...
கொடுத்தது தமிழல்லவா.....
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு ...

அடுத்தவன் உயர்ந்தா அவன் கோவணத்த அவுறு.....

என் பேரு படையப்பா .....உங்களுகெல்லாம் பட்டையப்பா ...

 

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

14379724_290945567940789_646778439320278578_o.jpg

Edited by தமிழ் சிறி
தலை வந்துட்டுது,

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் அமைதியான முழு அடைப்பு

 

இங்கே அடைத்து எமக்குத்தானே நட்டம்....?
அங்கு அடைக்க வேண்டும் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.