Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏறாவூரில் பதற்றம்!! (காணொளி இணைப்பு)

Featured Replies

ஏறாவூரில் பதற்றம்!! (காணொளி இணைப்பு)

 

edit4329188_1444034918957797_2050015852_

ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சற்றுமுன்னர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு பற்றநிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கைது செய்யத நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக முற்றுகையிட்டுள்ளனர்.

இதனால் குறித்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

f0df0dfdf.jpg

http://www.virakesari.lk/article/11443

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டினது தமிழனோ.....இவர்கள் இவ்வளவு வேகத்தோடை னிக்கினம்....

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, alvayan said:

மாட்டினது தமிழனோ.....இவர்கள் இவ்வளவு வேகத்தோடை னிக்கினம்....

உண்மை தெரியாமல் நிக்கினம் போல. தெரின்சபின் வசதிப்படி  கலைவினம், செருகுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இரட்டை கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நால்வர் இன்று 12 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் ஏறாவூரைச் சேர்ந்த மூவரும் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றனர். பணம், நகைகள் கொள்ளையிட வந்தவேளையில், ஆட்கள் அவர்களை அடையாளம் கண்டுகொண்டமையால் கொலை செய்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

 

கொலையாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை யார் என நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தைச் முற்றுகையிட்டுள்ளனர். எனினும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஆகியோர் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பிரசன்னமாகிய பொதுமக்களிடம் பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 

 

கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த விசாரணைகளையடுத்து, சற்று முன்னர் ஏறாவூரின் நகர மத்தியில் மறைந்திருந்த கொலைச் சூத்திரதாரிகள் என சந்தேகிக்கப்படும் நால்வர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனின் சகோதரன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி முதலாவது ஒழுங்கையில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நூர்முஹம்மது சித்தி உசைரா (வயது 56) மற்றும் அவரது மகளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில் பொல்லால் தாக்கப்பட்ட நிலையிலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

 

எனினும், சந்தேகநபர்களை கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவந்தபோது, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/11443

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.