Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலை 11 மணி முதல் மதியம் 1.30 வரை..! ராம்குமார் பிரேதப் பரிசோதனை நிமிடங்கள்

Featured Replies

காலை 11 மணி முதல் மதியம் 1.30 வரை..! ராம்குமார் பிரேதப் பரிசோதனை நிமிடங்கள்

ramkumar%20600%201.jpg

13 நாட்களுக்கு பிறகு ராம்குமார் உடல் இன்று சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர் குப்தா தலைமையில் இரண்டரை மணி நேரம் இந்த பரிசோதனை நடைபெற்றது.

சென்னையை சேர்ந்த பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24-ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நுங்கம்பாக்கம் போலீஸார், ஜூலை 1-ம் தேதி நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமாரை கைது செய்தனர். அப்போது அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு மேல்சிகிச்சை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டது. இதையடுத்து ராம்குமார், புழல் சிறையில் உயர்பாதுகாப்பு பிளாக் அருகே உள்ள டிஸ்பென்சரி பிளாக்கில் அடைக்கப்பட்டு இருந்தார்.

கடந்த 18-ம் தேதி சிறை அறையிலிருந்து தண்ணீர் குடிப்பதற்கு அனுமதி கேட்டு வெளியே வந்த ராம்குமார், அங்குள்ள சுவிட்ச் பாக்ஸை உடைத்து வயரை கடித்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக ராம்குமார் தரப்பு தெரிவித்தது. இதனால் ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் எழுந்தது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் ராம்குமாரின் உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. ராம்குமாரின் தந்தை பரமசிவன், சென்னை உயர் நீதிமன்றத்தில், பிரேத பரிசோதனையின் போது தங்கள் தரப்பு தனியார் மருத்துவரும் இடம் பெற அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், எய்ம்ஸ் மருத்துவரை நியமித்தது. பிரேத பரிசோதனையை இன்றுக்குள் முடிக்க வேண்டும் என்று காலக்கெடுவும் விதித்தது.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் பரமசிவன், மேல்முறையீடு செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் ராம்குமார் இறந்து 13 நாட்களுக்குப் பிறகு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி முன்னிலையில், 4 அரசு மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர் சுதீர் கே.குப்தா கொண்ட குழு ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்தது. மதியம் 1.30 மணிக்கு பிரேத பரிசோதனை முடிவடைந்தது. பிரேத பரிசோதனை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பிணவறையின் முன்பு சோகத்தில் ராம்குமாரின் பெற்றோர், மற்றும் உறவினர்கள், வழக்கறிஞர்கள் நின்றனர். இந்த நிகழ்வால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. 

http://www.vikatan.com/news/tamilnadu/69044-ramkumar-postmortem-updates.art

  • தொடங்கியவர்

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் சுதிர் குப்தா... யார் இவர்...?

19-1474251834-ramkumar-11-600.jpg



சுவாதி கொலை வழக்கில் போலீஸார் குற்றம்சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ராம்குமார். அவர், கடந்த 18-ம் தேதி மின்கம்பியைக் கடித்து தற்கொலை செய்துகொண்டார் என போலீஸார் தெரிவித்தனர். முதலில், அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் பின்னர், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்த அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்ய முடிவுசெய்யப்பட்டது. ஆனால், ராம்குமாரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், ‘இது போலீஸாரின் திட்டமிட்ட கொலை’ என்று கூறி பிரேதப் பரிசோதனை செய்ய மறுத்தனர். அதுமட்டுமின்றி, ‘தமிழக அரசு சார்பில் உள்ள மருத்துவர்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றால்... உண்மை வெளியே வராது. எனவே, ராம்குமார் தரப்பில் ஒரு தனியார் மருத்துவர் இருக்க வேண்டும்’ என்று கோரினர். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

நீதிமன்றத்தை நாடிய ராம்குமார் தரப்பு!

index.jpgஇதனைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர் ராம்குமார் தரப்பினர். இதனை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. ‘வேண்டும் என்றால் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்யலாம்’ என்று  உத்தரவிட்டார். அதிலும் திருப்தி அடையாத ராம்குமார் தரப்பு, உச்ச நீதிமன்றம் சென்றது. அப்போது, ‘இந்த மனுவை விசாரிக்கத் தேவையில்லை’ என்று அது தள்ளுபடி செய்தது. மேலும், தனியார் மருத்துவரை அனுமதிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரைச் சேர்த்து அக்டோபர் 1-ம் தேதிக்குள் பிரேதப் பரிசோதனையை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணி முதல் ராம்குமார் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பிரேதப் பரிசோதனை, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் சுதிர்குப்தா குழுவுடன்  தொடங்கியுள்ளது. இதில் பாலசுப்ரமணியம், செல்வகுமார் உள்பட 5 மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

யார் இந்த சுதிர் குப்தா?

உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்படி ராம்குமார் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய உள்ள குழுவில் இணைந்துள்ள சுதிர் குமார் குப்தா Dr-Sudhir-Kumar-Gupta.jpgஎய்மஸ் மருத்துவமனையின் மருத்துவர் ஆவார். இவர், எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவராக இருந்தவர். முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. பின்னர் வழக்கில் சுனந்தா உடலை பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர் சுதிர் குப்தா, ‘சுனந்தாவின் கைகள் மற்றும் கன்னத்தில் காயங்கள் இருந்ததாக’ அஞ்சாமல் அறிக்கை கொடுத்து அதிரவைத்தார். சில மாதங்கள் கடந்த நிலையில், ‘சுனந்தாவின் மரணம் இயற்கையானது’ என அறிக்கை அளிக்குமாறு தமக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக சுதிர் குப்தா கூறினார். அதற்காக, ‘தம்மீது எய்ம்ஸ் மருத்துவமனை நடவடிக்கை எடுத்தால் அதைக் கண்டு தாம் அஞ்சப்போவது இல்லை’ என்றும் தெரிவித்தார். சுதிர் குப்தா சொன்ன அறிக்கையைத் தொடர்ந்தே இந்த வழக்கு சூடுபிடித்தது. பின்னர், எய்ம்ஸ் மருத்துவமனை தடயவியல் துறைத் தலைவர் பொறுப்பிலிருந்தும் சுதிர் குப்தா நீக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தர்மபுரியில் மர்மமான முறையில் மரணமடைந்த தர்மபுரி இளவரசன் பிரேதப் பரிசோதனையில் பிரச்னை எழுந்தபோது, உயர் நீதிமன்றம் நியமித்த எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் குழுவிலும் சுதிர் குப்தா இருந்தார்.

‘‘சரவணன் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை!’

Tamil_News_large_1567442_318_219.jpgடெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்துவந்தார் திருப்பூர் மாணவரான சரவணன். அவர், கல்லூரியில் சேர்ந்து 10 நாட்களில் விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். சரவணன்  உயிரிழப்பு தற்கொலை என்று கூறப்பட்டது. ஆனால், பிரேதப் பரிசோதனை செய்த சுதிர் குப்தா  தலைமையிலான மருத்துவர் குழு, ‘‘எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சரவணன் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. சரவணன் உடலில் யாரோ விஷ ஊசியைச் செலுத்தியிருக்க வேண்டும். மருத்துவம் தெரிந்தவராலேயே இந்த ஊசியைச் செலுத்த முடியும்’’ என்று தெரிவித்திருந்தது.

ராம்குமார் உடலை பிரேதப் பரிசோதனை செய்யும் குழுவிலும் குப்தா இணைந்திருப்பது இந்த வழக்கில் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் ஈடுபட்டுள்ள குப்தா என்ன சொல்லப் போகிறார் என்ற  எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மருத்துவக் குழுவினர் மற்றும் மேஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி ஆகியோர் ராம்குமார் பெற்றோரைப் பார்த்து, ‘‘எங்களுடைய பரிசோதனை நேர்மையாக இருக்கும்’’ என்று கூறியதாக ராம்குமார் ஆதரவாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

‘‘ராம்குமார் உடலில் காயங்கள் உள்ளன!’india-thiruma_0.jpg

 

 

’இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ராயப்பேட்டையில் உள்ள  ராம்குமாரின் உடலைப் போய் பார்த்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ‘‘ராம்குமார் உடலில் காயங்கள் இருப்பதாக மேஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வியிடம் புகார் அளித்துள்ளோம். பிரேதப் பரிசோதனை அறிக்கை, வீடியோ பதிவை இன்றே வழங்க வேண்டும். ராம்குமார் மரணம் தொடர்பாக சிறைத் துறை நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது’’ என்றார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால், மட்டுமே இந்த வழக்கின் அடுத்த நகர்வு என்ன என்பது தெரியவரும்.

http://www.vikatan.com/news/coverstory/69041-ram-kumar-autopsy-started-with-a-panel-of-aiims.art

  • தொடங்கியவர்

பிரேதப் பரிசோதனைக்கு பிறகு ராம்குமாரின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு

 

சென்னை புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட ராம்குமார் என்ற இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மருத்துவமனை வளாகத்தில் கூடிய கூட்டம்
மருத்துவமனை வளாகத்தில் கூடிய கூட்டம்

சென்னையைச் சேர்ந்த மென் பொறியாளரான ஸ்வாதி என்ற இளம்பெண், கடந்த ஜூன் 24ஆம் தேதியன்று ரயில் நிலையம் ஒன்றில் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சென்னையை அடுத்துள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், செப்டம்பர் 18 ஆம் தேதியன்று ராம்குமார் சிறையில் உள்ள மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்பட்டது.

ராம்குமாரின் சாவில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதால், அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்யும் போது தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரும் உடனிருக்கவேண்டும் என்ற ராம்குமாரின் தந்தை பரமசிவத்தின் கோரிக்கையை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை நிராகரித்தன.

இந்த நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் உள்ளிட்ட ஐந்து பேரைக் கொண்ட மருத்துவர் குழு ராம்குமாரின் உடலுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் இன்று பிரேதப் பரிசோதனை செய்தது.

பிரேதப் பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோ, பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை தங்களுக்குத் தர வேண்டும் என ராம்குமாரின் தந்தை பரமசிவம், உடன் வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கோரினார்.

ஆனால், பிரேதப் பரிசோதனையைப் பார்வையிட்ட நீதிபதி தமிழ்செல்வி அதற்கு மறுத்துவிட்டார். அவை நீதிமன்றத்தில் மட்டுமே ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்குப் பிறகு ராம்குமாரின் உடல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்திற்கு இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

ராம்குமாரின் உடல் இன்று பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டதையொட்டி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பாக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

http://www.bbc.com/tamil/india-37531413

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கேவலம் கெட்ட நாடு.
சாதாரண குடிமகனாயிருந்தாலும்....
ஒரு அரசதலைமையாக இருந்தாலும்....

உள்ளதை வெளிப்படையாக தெரிவிக்காமல் மக்களை ஆட்டுமந்தைகளாக நடத்தி செல்லும்  அரசாட்சி.

இவன் எவ்வளவோ மேல் போல் தெரிகின்றது.:cool:

635984715851776795-AFP-551724097.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/2/2016 at 0:12 AM, குமாரசாமி said:

ஒரு கேவலம் கெட்ட நாடு.
சாதாரண குடிமகனாயிருந்தாலும்....
ஒரு அரசதலைமையாக இருந்தாலும்....

உள்ளதை வெளிப்படையாக தெரிவிக்காமல் மக்களை ஆட்டுமந்தைகளாக நடத்தி செல்லும்  அரசாட்சி.

இவன் எவ்வளவோ மேல் போல் தெரிகின்றது.:cool:

 

நீதிமன்றங்கள் கூட நழுவும் அளவுக்கு  நடந்த விஷயங்களை பார்க்கையில், வெளிநாட்டு உளவு அமைப்பிடம் சுவாதி சிக்கி, உள்நாட்டு உளவு அமைப்பினால் கதை முடிக்கப் பட்டு உள்ளார் போல தெரிகிறது.

தேசிய பாதுகாப்பு என்று வரும் போது, இது எல்லாம் சகசம், சாமியார்...tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எப்படி ராம்குமார் வந்து மாட்டினாரோ தெரியவில்லை...பிலால் முஸ்லீம் என்ட படியால் மதப் பிரச்சனை வரும் என்ட காரணத்தால் தப்பிட்டார்.இல்லாட்டில் அவரின் தலையில் போட்டு இருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On 10/3/2016 at 2:19 AM, Nathamuni said:

நீதிமன்றங்கள் கூட நழுவும் அளவுக்கு  நடந்த விஷயங்களை பார்க்கையில், வெளிநாட்டு உளவு அமைப்பிடம் சுவாதி சிக்கி, உள்நாட்டு உளவு அமைப்பினால் கதை முடிக்கப் பட்டு உள்ளார் போல தெரிகிறது.

தேசிய பாதுகாப்பு என்று வரும் போது, இது எல்லாம் சகசம், சாமியார்...tw_angry:

அரசியல்மயமானதால் பேரறிவாளன் ஏதோ ஓரளவுக்கு சமாளிச்சு வாறார். tw_astonished:

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, இசைக்கலைஞன் said:

அரசியல்மயமானதால் பேரறிவாளன் ஏதோ ஓரளவுக்கு சமாளிச்சு வாறார். tw_astonished:

உள்ளே, வெளித் தொடர்பில்லாததால் அவருக்கு பிரச்சனை வராது.

சுவாதியின் IT வேலைகள் காரணமாக உண்டாகி இருக்கக் கூடிய வெளியுலகத் தொடர்பினால், சாதாரண மக்களுக்கு புரியாத பல சிக்கல்கள் வந்து இருக்கலாம். 

அமெரிக்க, பிரிட்டிஸ் உளவு அமைப்புக்கள் பொதுவாக, பின்புலம் ஆய்வு செய்யப்பட்ட, தமது நாட்டு குடிமக்கள் மட்டுமே வேலைக்கு எடுக்கப்படுவர் என்பதில் கறார்.

அதேவேளை, இந்தியாவில், பணம் பாதாளம் வரை பாயும்....

 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.