Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் என்னத்தைச் சொன்னாலும் எமது விருப்பப்படியே அரசியல்யாப்பு – ரணில்!

Featured Replies

யார் என்னத்தைச் சொன்னாலும் எமது விருப்பப்படியே அரசியல்யாப்பு - ரணில்!

யார் என்ன கூறினாலும் எமது விருப்பப்படியே அரசியல்யாப்பு உருவாக்கப்படும் என சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அரசியல் யாப்பு எவ்வாறு உருவாக்கப்படவேண்டும் என்பதையும் நாமே தீர்மானிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கடந்த 24ஆம் திகதி வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரின் எழுக தமிழ் பேரணி உரை தொடர்பாக கேள்வியெழுப்பியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நான் வடக்கு மாகாண முதலமைச்சரின் கருத்தை முற்றுமுழுதாக மறுக்கின்றேன். அவர் என்னத்தைக் கூறினாலும் நாட்டில் அரசியலமைப்பொன்று உள்ளது எனவும், அதற்குமப்பால் புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு அரசியல் அமைப்பு சபையாலேயே முன்னெடுக்கப்படுவதாகவும் கூறிய அவர், ஒவ்வொருவரும் தமக்கு விரும்பிய கருத்துக்களை முன்வைப்பதற்கு உரிமை இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் தாம் தமக்கு வேண்டியவாறே புதிய அரசியலமைப்பைத் தயாரிப்போம் என்றும் சூளுரைத்துள்ளார்.

அதுவும், நாட்டிலுள்ள பெரும்பான்மை இனமும், அரசியல் கட்சிகளும் இணைந்து எடுக்கும் முடிவே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு முதலமைச்சர் மாத்திரமன்றி வேறு பலரும் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்ட அவர், யார் எதைக் கூறினாலும் அரசியலமைப்பு சபையும், வழிநடத்தல் குழுவின் அறிக்கையுமே அடுத்த அரசியலமைப்பை தீர்மானிக்கும் என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=43874

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Athavan CH said:

தாம் தமக்கு வேண்டியவாறே புதிய அரசியலமைப்பைத் தயாரிப்போம் என்றும் சூளுரைத்துள்ளார்.

அதுவும், நாட்டிலுள்ள பெரும்பான்மை இனமும், அரசியல் கட்சிகளும் இணைந்து எடுக்கும் முடிவே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு முதலமைச்சர் மாத்திரமன்றி வேறு பலரும் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்ட அவர், யார் எதைக் கூறினாலும் அரசியலமைப்பு சபையும், வழிநடத்தல் குழுவின் அறிக்கையுமே அடுத்த அரசியலமைப்பை தீர்மானிக்கும் என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

உலகம் தவறாக விளங்கிக்கொண்டதால் தமிழர் உங்களைத் தீர்மானிப்பது சற்றுத் தவறிவிட்டது. நீங்கள் உங்கள் விருப்பம்போல் தீர்மானம் எடுங்கள். தற்போது உலகம் உண்மைகளை அறிந்து செயல்படும் அறிகுறிகள் தென்படுவதால் உலகமும் தீர்மானம் எடுக்கும்போல் தெரிகிறது.  :rolleyes:

  • தொடங்கியவர்

புதிய அரசியலமைப்பு சுவிஸ் நாட்டை போல இருக்கவேண்டும்  -  இரா.சம்பந்தன்

நாட்டில் தற்போது புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஆனது சுவிஸர்லாந்தில் உள்ள அரசியல்யாப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று சுவிஸர்லாந்தின் சபாநாயகருடனான சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது சுவிஸில் அமுல்படுத்தியுள்ள அரசியல்யாப்பானது அனைத்து சமூகத்தினருக்கும் சம உரிமையை வழங்கும் விதத்தில் அமைந்துள்ளது. இதன் காரணமாகத்தான் அந்த நாடு உலகளாவிய ரீதியில் முன்னோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இதனடிப்படையில்தான் இலங்கையின் புதிய அரசியல்யாப்பு தயாரிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.theevakam.com/2016/10/07/புதிய-அரசியலமைப்பு-சுவிஸ/

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Paanch said:

உலகம் தவறாக விளங்கிக்கொண்டதால் தமிழர் உங்களைத் தீர்மானிப்பது சற்றுத் தவறிவிட்டது. நீங்கள் உங்கள் விருப்பம்போல் தீர்மானம் எடுங்கள். தற்போது உலகம் உண்மைகளை அறிந்து செயல்படும் அறிகுறிகள் தென்படுவதால் உலகமும் தீர்மானம் எடுக்கும்போல் தெரிகிறது.  :rolleyes:

அதே..ஏதாவது ஒன்றை  வையுங்கோ...

அதனைத்தொடர்ந்து

உலக கதவைத்தட்டுவதா?

உங்களையே தட்டுவதா என்று தமிழுலகம் முடிவெடுக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7.10.2016 at 4:42 PM, Athavan CH said:

 

யார் என்னத்தைச் சொன்னாலும் எமது விருப்பப்படியே அரசியல்யாப்பு - ரணில்!

யார் என்ன கூறினாலும் எமது விருப்பப்படியே அரசியல்யாப்பு உருவாக்கப்படும் என சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அரசியல் யாப்பு எவ்வாறு உருவாக்கப்படவேண்டும் என்பதையும் நாமே தீர்மானிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

நல்ல விசயம். தொடருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.