Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேலக்ஸி நோட் 7 உற்பத்தியை சாம்சங் தற்காலிக நிறுத்தம்?

Featured Replies

கேலக்ஸி நோட் 7 உற்பத்தியை சாம்சங் தற்காலிக நிறுத்தம்?

 

 
Galaxy_3040433f_3040455f.jpg
 

பேட்டரிகள் தீப்பிடித்து எரியும் சம்பவங்களை அடுத்து சாம்சங் நிறுவனம் தனது கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெயர் வெளியிடாத ஒரு சப்ளையரை மேற்கோள் காட்டி, நுகர்வோர் பாதுகாப்புக்காக எதிர்பாராத இந்த தற்காலிக உற்பத்தி நடவடிக்கை நிறுத்தம் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

சாம்சங் நோட் 7 ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் சாம்சங் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

யோன்ஹாப் செய்தி நிறுவனத்தை இந்த தற்காலிக உற்பத்தி நிறுத்த செய்தி குறித்து அசோசியேட் பிரஸ் நிறுவனம் அணுகிய போது பதில் அளிக்கவில்லை.

http://tamil.thehindu.com/business/கேலக்ஸி-நோட்-7-உற்பத்தியை-சாம்சங்-தற்காலிக-நிறுத்தம்/article9206555.ece?homepage=true

  • தொடங்கியவர்

நெருப்புடா நோட் 7... தொடரும் சாம்சங் சோகம்!

samsung.jpg

நெருப்புடா...நெருங்குடா பார்ப்போம்....இந்த பாட்டு ஹிட் ஆன அளவுக்கு ஹிட் ஆனது சமீபத்தில் வெளியான‌ சாம்சங் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்.  சுமார் 2.5 மில்லியன் எஸ் 7 போன்களைத் தயாரித்த சாம்சங் நிறுவனம் அதில் கிட்டத்தட்ட 1 மில்லியன் மொபைல்போன்களை விற்பனை செய்தது. ஆனால் இந்த சாம்சங் நோட் 7 மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள் இந்த வார வைரல்..

சாம்சங் கேலக்ஸி நோட் 7  சார்ஜில் இருக்கும் வேளையில் தீடீரென தீப்பற்றி எரிகிறது என்பது தான் குற்றச்சாட்டு...மீம்ஸ்கள் வரை சென்று ஆன்லைனில் பரவியது சாம்சங் பிரச்னை.

 சாம்சங் நோட் 7 தீப்பற்றுவது ஏன்?

பொதுவாக ஸ்மார்ட்போன் பேட்டரிகள் லித்தியத்தால் ஆனவை. அவற்றுள் இரண்டு எலக்ட்ரோடுகள் எதிரெதிர் திசையில் வைக்கப்பட்டிருக்கும். சார்ஜ் செய்யும்போது லித்தியம் அணுக்கள்  நகரும். ஆனால் ஒருபோதும் இந்த இரண்டு எலக்ட்ரோடுகளும் ஒன்றை ஒன்று தொட்டுவிடக்கூடாது. அப்படி நடந்துவிடாமல் தடுக்க அதில் செப்பரேட்டர் வைக்கப்படும். நோட் 7-ல் இந்த செப்பரேட்டருக்கான இடைவெளி  மிகவும் சிறியதாக அமைந்ததே அது வெடிப்பதற்கான காரணம். 

சாம்சங் கூறும் காரணம் என்ன?

வாடிக்கையாளர்கள் மொபைலை நீண்ட நேரம் சார்ஜ் செய்வதும், பரிந்துரைக்கப்பட்ட சார்ஜர்களை பயன்படுத்தாததுமே நோட் 7 வெடித்துச் சிதறக் காரணம் என்கிறது சாம்சங் நிறுவனம். 

rtsmk3e_559_090216062229.jpg

சாம்சங்குக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என்ன?

உலகமெங்கும் சாம்சங் கேலக்ஸி நோட் 7  வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு அதற்கான தொகை திருப்பித் தரப்படும் அல்லது அந்த மொபைலைக் கொடுத்து வேறு சாம்சங் மொபைலைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிக்கை விட்டிருந்தது சாம்சங் நிறுவனம். இதனால் இந்த நிறுவனத்துக்கு 18 பில்லியர் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், இதுபோன்ற நஷ்டத்தை ஒரு உலகளாவிய மொபைல் நிறுவனம் ஈடுகட்டுவது மிகமிகக் கடினம் என்றும் வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பிரச்னையால் ஆப்பிளுக்கு லாபமா? 

சாம்சங், ஆப்பிள் என இந்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையேதான் மொபைல் வர்த்தகத்தில் பலத்த போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் சாம்சங் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இந்த இழப்பு, ஆப்பிள் நிறுவனத்துக்கு பெரிதும் சாதகமாக அமைந்துள்ளது.  

பொதுவாக ஆப்பிள் நிறுவனம் தனக்கென ஒரு பிராண்டையும் தன் வாடிக்கையாளர்களையும் எப்போதும் தன் கைவசம் வைத்திருக்கும். இப்போது, உலகின் பெருவாரியான வாடிக்கையாளர்களை கைப்பற்றுவதற்கும் விற்பனை விகிதத்தில் முதல் இடத்தைப் பிடிப்பதற்கும் ஆப்பிள், சாம்சங்குக்கு ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்னையை தனக்கான வாய்ப்பாகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளது. ஆப்பிள் சமீபகாலமாக விலைகளை சற்று தளர்த்தி அனைவருக்கும் உள்ள ஆப்பிள் மோகத்தை சரியாக பயன்படுத்தி வருகிறது. 

_91005160_samsung.note.7.g.jpg

சாம்சங் மொபைல்கள் வாங்கிய சிறிது நாட்களில் சரிவர‌ செயல்படாமல் ஹேங் ஆகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே உண்டு. அவை ஆப்பிள் போன்களை காப்பி அடிக்கின்றன என்ற வழக்கும் பிரபலம். இந்நிலையில்  இதுபோன்ற சூழலை சாம்சங் எப்படி சமாளிக்கும்? பெரிய இழப்பை ஈடுகட்ட சாம்சங்கால் முடியுமா? விட்ட இடத்தை மீண்டும் சாம்சங் பிடிக்குமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் சாம்சங் உள்ளது. 

http://www.vikatan.com/news/information-technology/69490-galaxy-note-7-explosions-worries-continues-for-samsung.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

samsung.jpg

காதாவடியிலை ரெலிபோனை வைச்சு கதைக்கவே பயமாய்க்கிடக்கு..:grin:

  • தொடங்கியவர்
Galaxy Note 7 பிரச்சினைகள்: திணறுகிறது சம்சுங்
 
 

article_1476274902-LEAD---Samsung-Struggசம்சுங்கின் Galaxy Note 7 திறன்பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு மாதங்களுக்குள்ளேயே, Galaxy Note 7 தயாரிப்புகளை நிரந்தரமாக நிறுத்துவதாக, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (11), குறுகிய அறிக்கையொன்றில் சம்சுங் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தீப்பற்றாத பெட்டிகளில், Galaxy Note 7கள், சம்சுங் நிறுவனத்துக்குச் செல்லவுள்ள நிலையில், என்ன காரணத்தால், Galaxy Note 7-இல் பிரச்சினை தோன்றியது என்பதற்கு இன்னும் விடைகாணப்படாமலேயே உள்ளது.

Galaxy Note 7கள் தீப்பற்றுகின்றன என்ற அறிக்கைகைகள் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, கடந்த செப்டெம்பர் மாத ஆரம்பத்தில், 2.5 மில்லியன் கணக்கான Galaxy Note 7களை மீளப்பெறுவதாக, சம்சுங் அறிவித்திருந்தது. அந்நேரத்தில், தாங்கள் விசாரணையொன்றை மேற்கொண்டதாகவும், மின்கலப் பிரச்சினையொன்று இருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக சம்சுங் தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே, 882 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியான Galaxy Note 7ஐ முழுமையாக மீளப்பெறுவதாக செவ்வாய்க்கிழமை, சம்சுங் அறிவித்துள்ள நிலையில், தொழில்நுட்ப வரலாற்றில், நிகழ்ந்த, மிகவும் பெறுமதி வாய்ந்த பாதுகாப்புக் குறைபாடாக மாறியுள்ளது.

பதிலீடு செய்யப்பட்ட Galaxy Note 7-களும் தீப்பற்றுவதாக அறிக்கைகள் கிடைக்கப் பெற்ற நிலையில், ஒழுங்குபடுத்துநர்கள், சேவை வழங்குநர்கள், விமான சேவை நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து புதிய எச்சரிக்கைகள் விடப்பட்ட நிலையிலேயே, Galaxy Note 7 தயாரிப்பை நிறுத்தும் முடிவை சம்சுங் எடுத்துள்ளது.

தமது நுகர்வோரின் பாதுகாப்பே முதன்மையானது மற்றும் முக்கியமானது என்பதை கருத்திற் கொண்டு, Galaxy Note 7 தயாரிப்பையும் விற்பனையையும் நிறுத்தத் தீர்மானித்ததாக, சியோல் பங்கு பரிவர்த்தனையில், தென்கொரிய நிறுவனமான சம்சுங் தெரிவித்திருந்தது. எவ்வாறெனினும் என்ன பிரச்சினை என்பது பற்றி ஒரு சொல்லும் தெரிவித்திருக்கவில்லை.

முன்னதாக, பிரச்சினை தொடர்பில் விசாரணை செய்வதற்கு, ஒழுங்குபடுத்துநர்களுடன் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், Galaxy Note 7-இன் விற்பனையை நிறுத்துமாறும் அசல் Galaxy Note 7 திறன்பேசிகளுக்காக பிரதியீடுகளை வழங்குவதை நிறுத்துமாறும், பூகோளத்திலுள்ள அனைத்து சேவை வழங்குநர்களையும் கேட்டிருந்தது. தற்போது, Galaxy Note 7-க்கு பதிலாக வேறு சாதனங்களை அல்லது பணத்தை மீள, சம்சுங் வழங்குகின்றது.

இந்த நிலையில், Galaxy Note 7 விற்பனையை நிரந்தரமாக நிறுத்துவதால், 17 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்ததுடன், சம்சுங்கின் ஏனைய அலைபேசி தயாரிப்புகள் தொடர்பில், நுகர்வோர் மற்றும் சேவை வழங்குநர்களின் மனங்களில் குழப்பமான நிலையை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே, நூற்றுக்கணக்கான பணியாளர்களை, சம்சுங் பணிக்கமர்த்தியபோதும், பல வாடிக்கையாளர்கள் உணர்ந்தது போன்ற, அதீத வெப்பமுடைய, தீப்பற்றுகின்றவாறான Galaxy Note 7 சோதனையை நிகழ்த்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

முன்னர் மீளப்பெறப்பட்ட Galaxy Note 7களில், சம்சுங்கின் உபநிறுவனமான எஸ்.டி.ஐ-ஆல் தயாரிக்கப்பட்ட மின்கலங்களே கவனம் பெற்ற நிலையில், அவை பிரச்சினையைத் தீர்க்கவில்லை என்ற]துடன், USB-C கேபிள்களோ அல்லது விரைவாக மின்னேற்றுதலோ பிரச்சினையாகக் காணப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவுகின்ற நிலையிலும் என்ன பிரச்சினை என்று இன்னும் தெளிவில்லாமல் உள்ளது.

சம்சுங்கின் அறிவிப்பு, கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகியமையைத் தொடர்ந்து, சம்சுங் நிறுவனத்தின் சந்தை மதிப்பை, ஏறத்தாழ 20 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களால், முதலீட்டாளர்கள் குறைத்த நிலையில், அன்று, சம்சுங்கின் பங்குகள், ஒரேநாளில், எட்டு சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தன. 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஒரே நாளில் இவ்வளவு வீழ்ச்சியடைவது, இதுவே ஆகும்.

http://www.tamilmirror.lk/183806/Galaxy-Note-ப-ரச-ச-ன-கள-த-ணற-க-றத-சம-ச-ங-

4 hours ago, குமாரசாமி said:

samsung.jpg

காதாவடியிலை ரெலிபோனை வைச்சு கதைக்கவே பயமாய்க்கிடக்கு..:grin:

earphone  போட்டு கதையுங்கோ..:grin:

http://d57avc95tvxyg.cloudfront.net/images/detailed/1086/earphone-for-lenovo-vibe-p1m-handsfree-in-ear-headphone-3-5mm-white-maxbhi-7-7-1.jpg?t=1453896488

  • தொடங்கியவர்
Galaxy Note 7 முடிந்தது: பிரதியீடு என்ன?
 
 

article_1476275099-LGv20.jpgகடந்த ஓகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சம்சுங்கின் Galaxy Note 7 திறன்பேசிகள், தீப்பிடித்த அறிக்கைகள் வெளியாகி, கடந்த செப்டெம்பர் மாதம், Galaxy Note 7 மீளப் பெறப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக பிரதியீடுகள் வழங்கப்பட்டன.

தற்போது பிரதியீடுகளும் தீப்பிடித்த அறிக்கைகளைத் தொடர்ந்து, Galaxy Note 7, பூகோள விற்பனைகளை நிறுத்திய சம்சுங், பின்னர், அதன் தயாரிப்புகளையும் முற்றாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், மில்லியன் கணக்கான Galaxy Note 7 பாவனையாளர்கள், தமது திறன்பேசிகளை உடனடியாக, மீளக் கையளிக்கவேண்டியுள்ள நிலையில், அவர்கள், Galaxy Note 7ஐ வாங்கவிருந்தவர்களுக்கு, Galaxy Note 7 திறன்பேசிகளுக்கான என்ன பிரதியீடுகள் இருக்கின்றன என்பதை நோக்குவோம்.

சம்சுங் வணிக நாமத்தையே நீங்கள் விரும்புவராக இருந்தால், பெரும்பலானவர்களுக்கு பொருத்தமான தெரிவாக Galaxy S7 edge இருக்கலாம். இதில், Galaxy Note 7-இல் காணப்படுகின்ற பெரும்பான்மையான அனுபவங்களை வழங்குவதோடு, அதே மென்பொருளினையும் வழங்குகின்றது. இதன் விலை, 770 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.

அடுத்து, உங்களது பிரதியீட்டு திறன்பேசியை வாங்குவதற்கு, நீங்கள் சிறிது காலம் பொறுமையாக இருப்பீர்களானால், எதிர்வரும் 28ஆம் திகதி, சந்தைக்கு வரவுள்ள LG V20 திறன்பேசியை நீங்கள் வாங்கலாம். Galaxy Note 7ஐப் போன்றே 5.7 அங்குல திரையைக் கொண்டிருப்பதுடன், Snapdragon 820 processorஐ கொண்டமைந்துள்ளதுடன், Galaxy Note 7 இல் இல்லாத, அன்ட்ரொயிட்டின் 7.0 பதிப்பான Nougatஐயும் வழங்குகின்றது. இதன் விலை, 830 ஐக்கிய அமெரிக்க டொலர்களாலும்.

இதேவேளை, அன்ட்ரொயிட்டில் சிறந்த வசதிகளுக்காகவே சம்சுங்கை பலர் தெரிவு செய்கையில், Galaxy Note 7-இன் முடிவு, பெரியளவில், அன்ட்ரொயிட் உருவாக்குநரான கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள Pixel XL திறன்பேசிகளுக்கே பாரிய சந்தையை வழங்கியுள்ளது எனக் கருதப்படுகிறது. Galaxy Note 7ஐ போன்ற RAMஐக் கொண்டிருக்கின்ற Pixel XL, அன்ட்ரொயிட்ட Nougat உடன் வரவுள்ளதோடு, Snapdragon 821 processorஐ கொண்டமைகின்றதுடன், தற்போதுள்ள, சிறந்த திறன்பேசிக் கமெராவையும் மேலதிகமாக வழங்குகின்றது. எதிர்வரும் 20ஆம் திகதி சந்தைக்கு வரவுள்ள Pixel XLஇன் விலை, 770 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.

இறுதியாக, நீங்கள், Galaxy Note 7-இன் வசதிகளுக்காகவே, அதை விரும்பியிருந்தால், அன்ட்ரொயிட்டிலிருந்து iOSக்கு மாற நீங்கள் தயாராக இருந்தால், உங்களுக்கான மிகச்சிறந்த தெரிவாக, அப்பிளின் ஐபோன் 7 Plus இருக்கும். சந்தையில் இருக்கும் மிகப்பெரிய திறன்பேசியான இதன் விலை 770 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.

http://www.tamilmirror.lk/183809/Galaxy-Note-ம-ட-ந-தத-ப-ரத-ய-ட-என-ன-

  • தொடங்கியவர்

கேலக்ஸி நோட்7 திறன்பேசியை திரும்பப் பெற்றுக்கொள்ள சாம்சங்கை நிர்பந்தித்த காரணங்கள்

 

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட்7 திறன்பேசியை திரும்பப் பெற்றுக்கொள்ள இரண்டாவது முறையாக செய்த அறிவிப்பு அந்த நிறுவனத்திற்கும் பரந்துபட்ட அளவில் மொபைல் போன் துறைக்கும் முன்னுதாரணமற்ற பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட்7 திறன்பேசி (கோப்புப்படம்)

இதற்கு முன்பு, பெரிய அளவில் பேட்டரியில் உள்ள பிரச்சனைகளுக்காக மொபைல் போன்கள் திரும்பப் பெறப்பட்ட சம்பவங்கள் இருக்கின்றன.

2007ல் நோக்கியா நிறுவனம்,பேட்டரிகள் அதிகமாக சூடாகின்றன என்ற அச்சத்தால் 46 மில்லியன் பேட்டரிகளை திரும்பப் பெற்றது.

ஆனால் அந்த சம்பவங்களில் எல்லாம், பேட்டரிகள் மாற்றப்படக்கூடிய வகையில் இருந்ததால், நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு பிரபலமான போன், சந்தையில் இருந்து அகற்றப்படவேண்டிய நிலை ஏற்படவில்லை.

''உங்கள் செல்பேசியை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். அதில் உள்ள உங்களது தகவல்களை வேறொரு கருவியில் சேமித்து வைத்துவிட்டு, போனை நிறுத்தி வையுங்கள், '' என்று கேலக்ஸி நோட் 7 பயன்பாட்டாளர்களிடம், சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. பேட்டரியில் தீ பிடிப்பதை உறுதி செய்த அடுத்த நாள் சாம்சங் இவ்வாறு தெரிவித்தது. அது மேலும், நோட் 7 தயாரிப்பு பணிகளை நிறுத்தியது.

ஒரு இழப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பயன்பாட்டாளர்கள் தங்களது பணத்தை முழுவதுமாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது சாம்சங்கின் ''பேப்லட்'' சாதனத்தை, பழைய சிறிய திரை கொண்ட கேலக்ஸி எஸ் 7 அல்லது எஸ் 7 எட்ஜ் போனும் பாதியளவு பணத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்பது அந்தத் திட்டம்.

கேலக்ஸி நோட்7 திறன்பேசி விளமபரம் (கோப்புப்படம்)

 

அலைபேசிகள் வெடிக்கக் காரணம் என்ன ?

கடந்த மாதம் சாம்சங் , இந்த போன்களைத் திரும்பப் பெறத் தொடங்கிய போது, "பேட்டரி செல் பிரச்சினை" காரணம் என்று சுட்டிக்காட்டியது.

அலைபேசித் துறை கட்டுப்பாட்டாளர்களுக்கு, சாம்சங் நிறுவனம் அனுப்பிய ஒரு அறிக்கை அந்தக் குறைபாடு பற்றி மேலும் விவரமளித்தது. அதில், உற்பத்தியின்போது நேர்ந்த தவறால், பேட்டரி சற்று பெரியதாகத் தயாரிக்கப்பட்டது என்றும், இதனால், பேட்டரியை போனில் பொருத்துவதில், சிக்கல் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டிருந்ததாக கசிந்த செய்தியை வெளியிட்டது ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம்.

இந்தப் பிரச்சனைக்கு காரணம், போனின் பாகங்களைத் தயாரிக்கும் 'உற்பத்தியாளர் சாம்சங் எஸ்.டிஐ (Samsung SDI) என்று கூறப்பட்டது. இதனால், ஏ.டி.எல். ( ATL) என்ற மற்றொரு நிறுவனம் தயாரித்துள்ள பேட்டரிகளை பொருத்தி பிரச்சனையைத் தீர்த்தனர் என்று கூறப்பட்டது..

சாம்சங் கேலக்ஸி நோட்7 திறன்பேசி (கோப்புப்படம்) 

தற்போது இரண்டாம் கட்டமாக வெளியிடப்பட்ட போன்கள் பலவும் அதிகமாக சூடாகும் நிலையில், உண்மையான பிரச்சனை, தவறாகக் கண்டறியப்பட்டுள்ளதா என்பது தெளிவாவில்லை.

சாம்சங் பொறியாளர்கள் போன்களில் பிரச்சினையை உருவாக்கி, வெடிக்க வைக்க முயன்ற போது, அவை வெடிக்கவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

''கேலக்ஸி நோட் 7 குறித்து சமீபகாலத்தில் எழுந்துள்ள பிரச்சனைகளை விசாரிக்க, இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒழுங்கு நிறுவனங்களோடு வேலைசெய்து வருகிறோம், '' என்ற இந்தக் கருத்தை மட்டும் தான் தற்போது சாம்சங் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறினார்.

எத்தனை நோட் 7 திறன்பேசிகள் தயாரிக்கப்பட்டன ? எத்தனை வெடித்தன ?

சாம்சங் செவ்வாய்க்கிழமை அன்று இந்த திறன்பேசி தயாரிப்பை நிறுத்துவதாக அறிவிக்குமுன்வரை , எத்தனை கேலக்ஸி நோட் 7 திறன்பேசிகளை அது தயாரித்துள்ளது என்று செய்தியை இதுவரை வெளியிடவில்லை.

செப்டம்பர் 2 ம் தேதி, இந்த தென் கொரிய நிறுவனம் முதல் கட்டமாக 2.5 மில்லியன் சாதனங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தது.

செப்டம்பர் 27ம் தேதியன்று, தென் கொரியா மற்றும் அமெரிக்காவில் விற்கப்பட்டுள்ள கேலக்ஸி நோட் 7 திறன்பேசிகளில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவைக்கு பதிலாக, புதிய சாதனங்கள் தரப்பட்டுள்ளன என்று அது தெரிவித்தது.

சாம்சங் கேலக்ஸி நோட்7 திறன்பேசி (கோப்புப்படம்)

 

இந்த இரு நாடுகளில் தான் அதிக அளவில் கேலக்ஸி நோட் 7 திறன்பேசிகள் விற்பனை செய்யப்பட்டன. வெறும் சுமார் 50,000 சாதனங்கள் தான் ஐரோப்பாவில் விற்கப்பட்டன.

தென் கொரியாவில் , கடந்த வாரம், சிறிது நாட்கள் மட்டும் புதிய வாடிக்கையாளர்களுக்கு நோட் 7 விற்கப்பட்டது.

இவை எல்லாவற்றிலும் சேர்த்து, சுமார், நான்கு மில்லியன் போன்கள் விற்கப்பட்டதாக தோராயமாகக் கணக்கிடமுடிகிறது.

எல்லாம் திட்டமிட்டபடி நடந்திருந்தால், இந்த கால கட்டம் வரை , சாம்சங் சுமார் ஆறு மில்லியன் நோட் 7 திறன் பேசிகளைத் தயாரித்திருக்கும் என்று ஐ.எச்.எஸ்(IHS) கணித்திருந்தது. ஆனால் எத்தனை திறன்பேசிகள் அதிகமாக சூடாகின என்பது தெளிவாகவில்லை.

சாம்சங் முதல் முறையாக போன்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்த நேரத்தில், தன்னிடம் ''35 புகார்கள்'' வந்திருந்ததாகக் கூறியது. மற்றும், போன்களுக்கு மாற்றாக அளிக்கப்பட்ட சாதனங்களும் பாதிப்படைந்த ஏழு சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகியது.

சாம்சங் கேலக்ஸி நோட்7 திறன்பேசி (கோப்புப்படம்) 

இப்போது விற்கப்பட்ட கைபேசிகளுக்கு என்ன ஆகும் ?

சாம்சங் இந்த கேலெக்ஸி நோட் 7 போன்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ள ''எல்லா நடவடிக்கைகளையும்'' எடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

தற்போதைக்கு, பதிவு செய்த பயன்பாட்டாளர்களுக்கு ஈமெயில் அனுப்புவது மற்றும் அறிவிப்புகளை அனுப்புவது ஆகியவை இந்த ``நடவடிக்கைகளில்` அடங்கும்.

முதலில் போன்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாக கூறியபோது, சில பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் ஆவதைத் தடுக்கும் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் ஒன்றையும் சாம்சங் அளித்தது. பயனாளர்கள் தாங்கள் வாங்கிய போன்களை திரும்பத் தர மறுக்கும் பட்சத்தில் அந்த போன்களை முடக்குவது போன்ற மற்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என்ற யூகமும் நிலவியது.

இதில் இன்னொரு விஷயம் -- மலை போல திரும்பப் பெறப்பட்ட மொபைல்களை சாம்சங் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி.

இந்த போன்கள் முழுவதுமாக பிரிக்கப்பட்டு, அதில் உள்ள பொருட்கள் மற்ற புதிய கருவிகளில் பயன்படுத்தப்படுமா என்பது பற்றி பேச சாம்சங் நிறுவத்தின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.

ஆனால் ஒரு சுற்றுச்சூழல் குழு, இந்த விவகாரத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது.

சாம்சங் நிறுவனம் (கோப்புப்படம்)

 

மொபைல் போன்களில் மதிப்புமிக்க மற்றும் விலைமதிப்பான பொருட்கள் உள்ளன. இதற்காகத் தோண்டும் போது, அது சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்பை ஏற்படுத்தும். சில நேரங்களில், வளரும் நாடுகளில், மோசமான சூழல்களில் வேலைகள் நடக்கும்,'' என ப்ரென்ஸ் ஆஃப் தெ எர்த் ( Friends of the Earth) என்ற அமைப்பின் கொள்கை இயக்குநர் மைக் சைல்ட்ஸ் கூறியுள்ளார்.

எல்லா போன்களும் 100 சதவீதம் அதனுடைய முழுமையான பயன்பாட்டிற்கு பிறகும் அல்லது குறைபாடுகள் காரணமாக நிறுவனத்திடம் திரும்பத் தரப்படும்போது, மறுசுழற்சி செய்யப்பட வேண்டும்.,'' என்றார் அவர்.

மொபைல் நிறுவனங்களின் தவறுகளுக்காக, இந்தச் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடாது,'' என்றார் அவர்.

மொபைல் போனுடன் , உதிரிக்கருவிகளை வாங்கிவர்களுக்கு இழப்பீடு உண்டா ?

பல வாடிக்கையாளர்கள், இந்த நோட் 7 போனுக்காக, கவர்கள், ப்ளாக்பெரி பாணியிலான தட்டச்சுப்பலகை, வைட் ஆங்கிள் லென்ஸ் இணைப்பு மற்றும் எழுதும் கருவி மற்றும் பவர் பேக் போன்றவற்றை வாங்கியுள்ளனர்.

சாம்சங் செய்தித் தொடர்பாளர், இந்த செலவினங்களை எவ்வாறு ஈடுசெய்வது என விற்பனையாளர்களோடு பேசி வருவதாக கூறியுள்ளார்.

சிலர் இந்த போனை வாங்க முன்பதிவு செய்தபோது, அதோடு பெறப்பட்ட இரண்டாம் தலைமுறை கியர் மெய்நிகர் உலக ஹெட்செட்(second-generation Gear VR virtual reality headset) கருவியை கொடுத்தால், அதிக பணம் கொடுக்கப்படுமா என்றும் கேட்கிறார்கள்..

இதை தனியாக வாங்க 100 பவுண்ட்கள் செலவாகும்.

அந்த ஹெட்செட் கருவியை ஒரு "பரிசு" பொருளாக எண்ண சாம்சங் கருதியது, ஆனால் கூடுதல் இழப்பீடு கொடுக்கும் சாத்தியக்கூறை அது நிராகரிக்கவில்லை என செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    சாம்சங் கேலக்ஸி நோட்7 திறன்பேசி (கோப்புப்படம்)

அகற்றக்கூடிய பேட்டரிகளை சாம்சங் மீண்டும் அறிமுகப்படுத்துமா?

சாம்சங் கேலக்சி தயாரிப்புகளில், பயன்பாட்டாளர்கள் தங்களது போனின் பின் பகுதியை கழற்றவும் , பேட்டரியை மாற்றவும் வசதி செய்ததன் மூலம், அந்த போன்களை ஆப்பிள் ஐ போன்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்ள சாம்சங்கால் முடிந்தது..

ஆனால்,எஸ் 6 மற்றும் நோட் 5 போன்கள் இந்த நிலையை மாற்றி, மிகவும் கச்சிதமான வடிவமைப்புகள் மற்றும் தண்ணீரில் விழுந்தால் பாதிப்படையாத அம்சங்களை தர சாம்சங்குக்கு உதவின.

சிலர், சாம்சங் இதைச் செய்யாமல், இருந்திருந்தால், அது தற்போது சந்தித்துள்ள பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம் என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.

மேலும், உள்நாட்டு அளவில் அதன் போட்டி நிறுவனமான எல்.ஜி. கழற்றக் கூடிய பேட்டரிகள் உள்ள வசதியைத் தனது இரண்டு உயர் ரக போன்களில் சேர்த்துள்ளது.

இந்த சூழலில் , சாம்சங் அதன் எதிர்கால வடிவமைப்புகளைப் பற்றிய கருத்துக்களை வெளியிடவில்லை என்பதில் பெரிய ஆச்சரியமில்லை.

ஆனால் ஒரு நிபுணர், இந்த சம்பவம் காரணமாக, எல்லா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும், தங்கள் தயாரிப்புத் திட்டங்களை மீளாய்வு செய்து கொண்டிருப்பார்கள் என்று தெரிவித்தார்.

சாம்சங் நிறுவனம் (கோப்புப்படம்)

 

பெரிய அளவிலான திரை, படங்களை மேலும் துல்லியமாகக் காட்டும் திரைகள், வேகமாகச் செயல்படுத்த பரோசெஸர்கள் மற்றும் 4ஜி தகவல் வசதி, ஆகியவற்றைக் கொண்டதாகவும், அதிக ஆற்றல் கொண்டதாகவும் நவீன ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்,''

என ஐ.எச்.எஸ். நிறுவனத்தைச் சேர்ந்த ஐயன் ஃபாக் கூறியுள்ளார். ''அவை ஒன்றுடன் ஒன்று போட்டிபோடும் கோரிக்கைகள்,'' என்றார் அவர்

''எல்லா கைத்தொலைபேசி நிறுவனங்களும் எதிர்வரும் தங்கள் ஸ்மார்ட்போன் அறிமுகங்களுக்காக காத்திருக்கின்றனர். தங்களது, பொறியியல் குழுக்களிடம், பேட்டரிகளை சார்ஜ் செய்வது மற்றும் பேட்டரிகள் வேலை செய்யும் விதம் குறித்து சோதனை செய்யுமாறும், சாம்சங் சந்தித்துள்ள பிரச்சனைகள் போன்ற எதுவும் ஏற்படாமல் இருக்க உறுதிசெய்யுமாறும் கூறியுள்ளனர், '' என்றார் அவர்.

மேலும், சாம்சங் தனது எதிர்வரும் போன்களை இந்த விவகாரத்தைக் குறிப்பாக கவனிப்பார்கள். ஏனென்றால் அந்த புதிய மாடல்களும், நோட்7 கொண்டுள்ள அம்சங்களில் சிலவற்றைக் கொண்டுள்ளதாக இருக்கும் என்ற சாத்தியம் உள்ளது, '' என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/science-37652818

  • தொடங்கியவர்

அமெரிக்க விமானங்களில் சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களுக்குத் தடை

Samsung%20Galaxy%20Note%207_13245.jpg

அமெரிக்க விமானங்களில் பயணிகளோ, விமான பணியாளர்களோ சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன் பேட்டரிகள் திடீர், திடீரென தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளிலும் இந்த போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. தடையை மீறி இந்த போன்களை யாரேனும் எடுத்துச் சென்றால்  அபராதம் விதிக்கப்படுவதுடன், அந்த போனும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில், அமெரிக்க விமானம் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்ட சாம்சங் கேலக்சி நோட் 7 போனிலிருந்து தீப்பொறிகள் ஏற்பட்டதை அடுத்து, இந்தத் தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/information-technology/69695-samsung-galaxy-note-7-banned-on-all-us-flights.art

  • தொடங்கியவர்
Note 7-இன் அம்சங்களை S7-க்கு கொண்டு வருகிறது சம்சுங்
 
 

article_1476873805-Samsung.jpgபிரச்சினையைச் சந்தித்த, தனது Galaxy Note 7 திறன்பேசியின் சில அம்சங்களை, தனது, S7 மற்றும் S7 Edge சாதனங்களில் கொண்டு வருவதற்கு சம்சுங் பணியாற்றுகின்றது.

சில Galaxy Note 7-கள் தீப்பற்றுவதாகக் கிடைத்த அறிக்கைகளைத் தொடர்ந்து, Galaxy Note 7-களை மீள அழைத்ததுடன், அதன் தயாரிப்பை நிறுத்துவதாக, கடந்த வார ஆரம்பத்தில், சம்சுங் அறிவித்துள்ளது.

இந்நிலையிலேயே, கருத்துத் தெரிவித்துள்ள சம்சுங், தனது, S7 மற்றும் S7 Edgeஐ, புதிய வசதிகளுடன் மேம்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், தமது Galaxy Note 7-ஐ திருப்பி அளிப்பவர்கள், சந்தையிலுள்ள, வேறு போட்டி நிறுவனங்களின் திறன்பேசிகளிடம் செல்லாமல், சம்சுங் திறன்பேசி ஒன்றுடன் தொடர்வார்கள் என எதிர்பார்க்கிறது.

தனது மீச்சிறப்பு திறன்பேசியொன்றை, வருடத்தில் இரண்டு தடவையே, வழமையாக வெளியிடுகின்ற நிலையில், அடுத்த Galaxy S8 திறன்பேசி, அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதியே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகையில், அதுவரைக்கும், சம்சுங்கின் மீச்சிறப்பு திறன்பேசியாக S7 Edge விளங்கவுள்ளது. ஆகையால், தனது புதிய போட்டி வரவுகளான, iPhone 7 மற்றும் Google Pixel ஆகியவனற்றுடன் போட்டியிடுவதற்கு, தன்னால் முடிந்த அனைத்தையும் சம்சுங் செய்ய வேண்டியுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, Galaxy Note 7-இன் செயற்பாடுகளை, மேலும் நெருக்கமாகப் பிரதிபலிக்கும் பொருட்டு, “always-on screen” அம்சத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. “always-on screen” அம்சத்தின் மூலம், செயற்பாடற்ற நிலையில் திறன்பேசி இருக்கும் போதும், திரையில், புகைப்படங்கள், கடிகாரம், அறிவித்தல்களை பார்வையிட முடியும். இந்த வசதிக்காக, ஒரு மணித்தியாலத்தில், ஒரு சதவீதமான மின்னே செலவளியும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/184292/Note-இன-அம-சங-கள-S-க-க-க-ண-ட-வர-க-றத-சம-ச-ங-

  • தொடங்கியவர்

கேலக்சி நோட் 7 க்கு பதிலாக புதிய கேலக்சி நோட் 8!

கேலக்சி நோட் 7 க்கு பதிலாக புதிய கேலக்சி நோட் 8!

 
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் ‘கேலக்சி நோட் 7’ மாடல் செல்போனை அறிமுகப்படுத்தியது. இதை லட்சக்கணக்கான மக்கள் வாங்கினார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனுக்கு போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்பட்ட கேலக்சி நோட் 7 ரீசார்ஜ் செய்யும்போது தீப்பற்றி எரிவதாக புகார் எழுந்தது.

தொடர்ந்து இதுபோன்ற புகார்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து எழுந்ததால் சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாக சமீபத்தில் அந்நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு புதியதொரு சலுகையை வழங்குவதாக சாம்சங் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

அதாவது சாம்சங் கேலக்சி நோட் 7 வாடிக்கையாளர்களுக்கு பாதி விலைக்கு சாம்சங் கேலக்சி நோட் 8 போன் வழங்குவதாக கூறியுள்ளது. இதன் மூலம் சாம்சங் கேலக்சி நோட் 7 மாடலால் வாடிக்கையாளர்களிடம் இழந்த மதிப்பை திரும்பப் பெற சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

சாம்சங் கேலக்சி நோட் 7 போனை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு 88.39 டாலர் இழப்பீட்டுத் தொகையை அந்நிறுவனம் ஏற்கனவே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=84745

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.