Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிள்ளையானை பார்ப்பதற்கு சிறைச்சாலை சென்ற மஹிந்த

Featured Replies

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையானை பார்வையிட்டதாக சிறைச்சாலை தகவல்களை சுட்டிக்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி, பிள்ளையானுடன் சுமார் 15 நிமிடங்கள் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் கடந்த ஒரு வருடமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் தனது தலைமையிலான ஆட்சி மலரும் என்ற நம்பிக்கையினை இதன்போது மஹிந்த பிள்ளையானிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

இதேவைளை மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் யுத்த வீரர்களின் நினைவு தூபியை திறந்து வைத்து உரையாற்றும்போது பயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயகத்திற்கு வந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் இந்த அரசாங்கத்தில் மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

http://www.tamilwin.com/politics/01/120821?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

இவற்ற தலைமல ஆட்சியா? எப்படி ?

சுதந்திர கட்சி முமுசா ஆதரவு குடுத்தாலும் 90 க்கு மேல போகாதே...

புரீல்லயே சொக்கா.... :223_speak_no_evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 13.10.2016 at 10:46 AM, போல் said:

விரைவில் தனது தலைமையிலான ஆட்சி மலரும் என்ற நம்பிக்கையினை இதன்போது மஹிந்த பிள்ளையானிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

மகிந்த சொல்லுற மாதிரி ஆட்சி மலரலாம்.....ஏனெண்டால் மைத்திரி உலகம் முழுக்க பல்லைக்காட்டி இளிச்சுக்கொண்டு திரியிறாரே தவிர பெரிசாய் எதையும் கிழிச்சதாய் தெரியேல்லை.....
இவரும் இப்ப நல்ல பளபளப்பாய்த்தான் இருக்கிறார்..

14524495_890788634387896_7836423734508528043_o.jpg

  • தொடங்கியவர்

மஹிந்த பிள்ளையானை சந்தித்தமை எதற்காக..? மறைந்துள்ள உண்மைகள்

இலங்கையானது பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாமியம் என பல்லின் சமூகத்தவரும் வாழும் ஒரு நாடாக இருக்கின்றது.

இலங்கையில் ஒருவர் ஆட்சியமைக்க வேண்டுமாக இருந்தால் அவர் நிச்சயமாக சிறுபான்மையின மக்களின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும். அத்துடன், இலங்கையில் ஒருவர் ஆட்சியில் இருக்க வேண்டுமா..? இல்லையா..? என்பதை தீர்மானிக்கும் சக்தியாகவும் இன்று சிறுபான்மை மக்கள் காணப்படுகின்றனர்.

இதனை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் உரிய வகையில் நிரூபித்து காட்டியுள்ளது என்றுக் கூறிக்கொள்ளலாம். இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, நாட்டின் முதல் குடிமகனாக இருந்த மஹிந்த ராஜபக்ச இன்று அரசியலில் அநாதையாக்கப்பட்டிருப்பது சிறுபான்மை மக்களால் தான்.

இதனை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தனது சொந்த ஊரான ஹம்பாந்தோட்டைக்கு சென்ற அவர் தனது தோல்விக்கு தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களே காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் பலமிக்க ஒருவராக இருந்த மஹிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பல்வேறு அழுத்தங்களுக்கும், அரசியல் சர்ச்சைகளுக்கும் முகம் கொடுத்துள்ளார். அந்த வகையில் இன்று தனது அழுத்தங்களை குறைத்துக் கொண்டு அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தள்ளப்பட்டுள்ளார்.

அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக மஹிந்த ராஜபக்சவை தலைமைத்துவமாக கொண்டுள்ள கூட்டு எதிர்க்கட்சி புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் ஆதரவு இன்று மஹிந்த ராஜபக்சவுக்கு கட்டாயத் தேவையாகவுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே மஹிந்த ராஜபக்ச தற்போது சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழும் மத்திய மாகாணத்துக்கும், வடகிழக்கு மாகாணங்களையும் நோக்கி தனது அரசியல் காய் நகர்தல்களை முன்னெடுத்துள்ளார்.

அந்தவகையில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கடந்த 11ஆம் திகதி முதல் முறையாக மஹிந்த ராஜபக்ச மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் பின்னணியில் பெரும் அரசியல் நோக்கம் இருக்கலாம் என கொழும்பு தகவல்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. ஏனெனில் மஹிந்த ராஜபக்ச இன்று போரை வெற்றிக் கொண்ட தலைவராக சிங்கள மக்கள் போற்றுவதற்கு மட்டக்களப்பு மாவட்டமே காரணமாக இருக்கின்றது.

வல்லரசு நாடுகளே விடுதலைப் புலிகளை வீழ்த்த முடியாமல் விழிபிதுங்கி இருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதிதுவம் செய்யக்கூடிய இருவரை கொண்டே மஹிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளை வீழ்த்தியிருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான பிள்ளையான் மற்றம் கருணா ஆகிய இருவரையும் இணைத்துக்கொண்டு, திருகோணமலை மாவிலாறு பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரை ஆரம்பித்த மஹிந்த ராஜபக்ச முள்ளிவாய்கால் வரை கொண்டு சென்றார்.

விடுதலைப் புலிகளை மஹிந்த வீழ்த்துவதற்கு குறித்த இருவரும் மஹிந்தவுக்கு பெரும் உதவியாக இருந்தமை யாவரும் அறிந்த ஒன்றே.

இந்நிலையில் மீண்டும் கருணா மற்றும் பிள்ளையான் ஆகிய இருவரையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு, இழந்து போன தனது அரசியல் வாழ்க்கையை மீட்கும் முயற்சியில் மஹிந்த ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது மட்டக்களப்பு விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த மஹிந்த ராஜபக்ச பிள்ளையான் கைது செய்யப்பட்டமை விமர்சித்திருந்தார். அத்துடன், அவரை சிறையில் நேரில் சென்று சந்தித்து பேசியும் இருந்தார்.

எனினும், மஹிந்தவின் மட்டக்களப்பு விஜயத்தின் போது பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கருணா மஹிந்தவை சந்திக்காமல் இருந்தமை, அவருக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்திருந்தமையும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

எவ்வாறாயினும், இழந்து போன தனது அரசியல் வாழ்க்கையினை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் அது சிறுபான்மை மக்களிடத்திலே தங்கியுள்ளது என்பதை மஹிந்த ராஜபக்ச தெளிவாக புரிந்துகொண்டுள்ளார் என்பது மட்டும் தெளிவாகின்றது.

http://www.tamilwin.com/politics/01/120933?ref=morenews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.