Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்தரிப்புத்துறை கிராம மக்கள் தொடர்ந்தும் அச்ச நிலையில்

Featured Replies

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடற்படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து அந்த பிரதேச மீனவர்கள் அச்சத்தின் காரணமாக கடற்தொழிலுக்கு செல்லாத நிலை காண்படுவதாக வடமாகாண சபை உறுப்பின ர் சட்டத்தரணி எஸ். பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்துள்ளார்.

குறித்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக திருட்டு சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் கடந்த (18) செவ்வாய்க்கிழமை இரவு குறித்த கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் சிலர் செல்ல முற்பட்ட போது வீட்டில் உள்ளவர்கள் கண்டு சத்தமிட்டுள்ளனர்.

இதன் போது குறித்த நபர்கள் உடனடியாக அருகில் உள்ள பற்றைக்காட்டினுள் மறைந்திருந்த நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேடுதலில் ஒருவர் பிடிப்பட்டதோடு கடும் தாக்குதல்களுக்கு உள்ளான நிலையில் மேலும் ஒரு நபர் தப்பிச் சென்றுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த நபர் கடற்படை சிப்பாய் என பின்னர் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் கடற்படையினர் குறித்த முத்தரிப்புத்துறை கிராம மீனவர்களுக்கு தற்போது பல்வேறு நெருக்குவாதங்களை கொடுத்து வருவதால் கடற்தொழிலுக்குச் செல்ல அஞ்சுவதாக மீனவர்கள் மாகாணசபை உறுப்பினரிடம் முறையிட்டுள்ளனர்.

இதனால் முத்தரிப்புத்துறை கிராமம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை எனவும், அற்கு மக்கள் மத்தியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு அதிகளவான கடற்படை, புலனாய்வுத்துறையினர், மற்றும் காவல் துறையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளமையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதேவேளை கடற்படைச் சிப்பாயை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 10இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் குடும்பத்தலைவர்களை இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடற்படை சிப்பாயி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 10 இற்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை சிலாபத்துறை பொலிஸாரினால் மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையிலே குறித்த நபர்களை இன்று(21) வெள்ளிக்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/121752?ref=morenews

  • தொடங்கியவர்
5 hours ago, போல் said:

குறித்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக திருட்டு சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் கடந்த (18) செவ்வாய்க்கிழமை இரவு குறித்த கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் சிலர் செல்ல முற்பட்ட போது வீட்டில் உள்ளவர்கள் கண்டு சத்தமிட்டுள்ளனர்.

இதன் போது குறித்த நபர்கள் உடனடியாக அருகில் உள்ள பற்றைக்காட்டினுள் மறைந்திருந்த நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேடுதலில் ஒருவர் பிடிப்பட்டதோடு கடும் தாக்குதல்களுக்கு உள்ளான நிலையில் மேலும் ஒரு நபர் தப்பிச் சென்றுள்ளார்.

முத்தரிப்புத்துறை கிராமத்தில் இரவு நேரங்களில் புகுந்து கொள்ளைகளில் ஈடுபட்ட சிங்கள கடற்படைப் பயங்கரவாதிகள் இருவரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்த ஊர் மக்களை சிங்கள போலீஸ் பயங்கரவாதிகள் பொய்க் குற்றச்சாட்டுகளில் கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளனர்.

  • தொடங்கியவர்

கடற்படை சிப்பாய்கள் மீது தாக்குதல்! பொதுமக்கள் ஆறு பேர் விளக்கமறியலில்...

மன்னார், முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கடற்படை சிப்பாய்கள் இருவர் மீது தாக்குதல்களை மேற்கொண்ட சந்தேக நபர்கள் என அதே கிராமத்தைச் சேர்ந்த 6 பேரை சிலாபத்துறை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.

முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீடு ஒன்றினுள் செல்ல முற்பட்ட சந்தேக நபரை துரத்திப்பிடித்த கிராம மக்கள் குறித்த சந்தேக நபர் தாக்கியுள்ளனர்.

குறித்த நபர் கடற்படை சிப்பாய் என தெரிய வந்துள்ள நிலையில் கடற்படையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

முத்தரிப்புத்துறை கிராம மக்களினால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்ட கடற்படை சிப்பாயினை காப்பாற்ற சிவில் உடையில் சென்ற மற்றுமொரு கடற்படை சிப்பாயும் மக்களினால் தாக்கப்பட்டார்.

தாக்குதல்களுக்கு உள்ளான இரு கடற்படை சிப்பாய்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த நிலையில் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் என முத்தரிப்புத்துறை கடற்படையினரினால் சிலாபத்துறை பொலிஸாருக்கு பெயர் விபரங்கள் வழங்கிய நிலையில் சிலாபத்துறை பொலிஸார் அக்கிராமத்தைச் சேர்ந்த 6 பேரை அழைத்து வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும்,அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உற்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் மன்னார் நீதிமன்றத்திற்கு சிலாபத்துறை பெரிஸாரினால் அழைத்து வரப்பட்ட போது அக்கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் மன்னார் நீதிமன்றத்தை சூழ்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/lifestyle/01/121787?ref=home

  • தொடங்கியவர்

முத்தரிப்புத்துறை கடற்படை முகாம் பாரிய அளவில் விஸ்தரிப்பு - அச்சத்தில் மக்கள்

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தில் உள்ள கடற்படை முகாம் நேற்று (20) முதல் பாரிய அளவில் விஸ்தரிக்கப்பட்டு வருவதாக அந்த கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் காணப்பட்ட சிறிய அளவிளான கடற்படை அரன் தற்போது நிரந்தரமான பாரிய அளவிலான கடற்படை முகாமாக விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் குறித்த கடற்படை அரனில் இருந்த கடற்படை வீரர்கள் மாற்றப்பட்டு புதிய கடற்படை வீரர்கள் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிலாபத்துறை பிரதான வீதி மற்றும் நானாட்டான் அருவியாற்று வீதி ஆகிய வீதிகளில் கடற்படையினர் வீதித்தடைகளை போட்டு சோதனைகளை மேற்கொள்ளுவதோடு, அடையாள அட்டைகளையும் பரிசோதிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு கடற்படையினர் தொடர்ச்சியாக பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதினால் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்ல அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படையினரின் அதிவேக படகுகள் முத்தரிப்புத்துறை கடலில் உலாவுவதாகவும், முத்தரிப்புத்துறை மீனவர்கள் என்றால் பல்வேறு கெடுபிடிகளை மேற்கொள்வதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வாவிடம் முறையிட்டுள்ளனர்.

இதே வேளை கடற்படையினரின் குறித்த நடவடிக்கைகளினால் முத்தரிப்புத்துறை கிராமம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை எனவும்,அங்குள்ள மக்கள் மத்தியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,அங்கு அதிகளவான கடற்படை, புலனாய்வுத்துறையினர், மற்றும் காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளமையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடற்படையினருக்கும் முத்தரிப்புத்துறை கிராம மக்களுக்கும் இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து தற்போது வரை அப்பிரதேசத்து மீனவர்கள் அச்சத்தின் காரணமாக கடற்தொழிலுக்கு செல்லாத நிலை காண்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/121798?ref=home

  • தொடங்கியவர்

மக்கள் பாராளுமன்ற பிரதிநிதிகள் செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன்  எங்கே போய்விட்டார்கள்?
ஊரில் புகுந்த சிங்கள-பௌத்த கடற்படைக்  கொள்ளைக்காரர்களை, சமூக விரோதிகளை  சுற்றிவளைத்து பிடித்த ஊர்மக்களை சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகள் கைது செய்து சிறைகளில் அடைந்துள்ளார்கள்.
சிறைகளில் அடைக்கப்பட்டிருக்க வேண்டிய சிங்கள-பௌத்த கடற்படைக் கொள்ளைக்காரர்கள் சுதந்திரமாக உலாவருகின்றனர்.
மன்னார் மாவட்ட மக்கள் பாராளுமன்ற பிரதிநிதிகள் செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் எங்கே போய்விட்டார்கள்?

  • தொடங்கியவர்

பதற்ற நிலையை தணிக்க, வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மன்னாருக்கு திடீர் விஜயம்!

மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கடற்படை வீரர்கள் குறித்த கிராம மக்களினால் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் நேற்று வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மன்னாருக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

மன்னார், முத்தரிப்புத்துறை கிராமத்திற்கு சென்றிருந்த அவர் செங்கோல் மாதா ஆலய வளாகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.

முத்தரிப்புத்துறை பங்குத்தந்தை அருட்தந்தை டெனி அடிகளார் தலைமையில் இடம்பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன் ஜெயசேகர, வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, சட்டத்தரணி லோகு, அருட்தந்தையர்கள், கிராம அலுவலகர் மற்றும் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கடந்த 18ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு முத்தரிப்புத்துறை பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பாகவும், சம்பவத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் முத்தரிப்புத்துறை கிராமத்தில் உள்ள மக்கள் தற்போது கடற்படையினரின் செயற்பாட்டிற்கு அச்சத்தில் இருப்பதாகவும், மீனவர்கள் மீதான கடற்படையினரின் கெடுபிடிகள், வீதிகளில் சோதனைகள் மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இதன் போது முத்தரிப்புத்துறை கிராம பகுதியில் அச்ச நிலை காணப்படுகின்ற இடங்களுக்கு உடனடியாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், கடற்படையினரின் கெடுபிடிகள் குறித்து கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்து மக்களின் அன்றாட நடவடிக்கை வழமை போன்று செயற்பட உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, இனி வரும் காலங்களில் குறித்த கிராமத்திலோ அல்லது வீடுகளிலோ சந்தேகத்திற்கு இடமான நபர்களின் நடமாட்டம் காணப்பட்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யவும் அல்லது சந்தேக நபர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கவும்.மாறாக அவர்களை பிடித்து தாக்கி காயப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு போதும் ஈடுபட வேண்டாம். அது சட்டத்திற்கு முரணானது.

மேலும் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டிலே இக்கிராமத்தைச் சேர்ந்த 11 பேரின் பெயர் விபரங்கள் எமக்கு வழங்கப்பட்டது.அதன் அடிப்படையில் 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சட்டம் தனது கமையை செய்கின்றது. எனினும் இக்கிராம மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கைகளை நான் மேற்கொள்ளுகின்றேன் என வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.

இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களின் கவனத்திற்கு சில விடயங்களை தெரிவித்தார்.

முத்தரிப்புத்துறை கிராம மக்கள் இதுவரை தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை.இக்கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் எத்தனை பேர் இவ்வாறு கைது செய்யப்படுவார்கள் என மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.எனவே தொடர்ந்தும் இக்கிராமத்தில் உள்ள மக்களை கைது செய்யாது ஏற்கனவே கைது செய்யப்பட்ட 6 பேருடன் குறித்த வழக்கை கடற்படையுடன் பேசி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடற்படையினரின் புலனாய்வுத்துறையினரினால் இன்னும் பலரது பெயர் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.தொடர்ந்தும் கைது செய்கின்ற நடவடிக்கை தொடருமாக இருந்தால் மேலும் மேலும் மக்கள் மத்தியில் அச்ச நிலையும், மனநிலை பாதிப்பும் ஏற்படும்.

எனவே பொலிஸார் கடற்படையுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 6 பேருடன் குறித்த பிரச்சினையை நிறைவுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/security/01/121844?ref=morenews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.