Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராதா கிருஷ்ணனிடமிருந்து பிரதி அமைச்சுப் பதவி பறிப்பு.

Featured Replies

இராதா கிருஷ்ணனிடமிருந்து பிரதி அமைச்சுப் பதவி பறிப்பு.

மலைய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராதா கிருஷ்ணனின் பிரதி அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. நேற்றைய அமைச்சரவை மாற்றத்தின்போது அவருக்கு அமைச்சுப் பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.

அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பு அவர் தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி பிரதி அமைச்சராகவிருந்தார். தமிழர்கள் கடத்தப்படுவதற்கும் கைதுசெய்யப்படுவதற்கும் எதிராக அரசிற்குள் இருந்துகொண்டுஅவர் பேசிவந்தார்.

இருநாட்களுக்கு முன் பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க்கைதிகள் 33 பேர் விடுவிக்கப்படுவதற்கு இவரது கடும் முயற்சி காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிவிவகாரத்தை இழந்தார் மங்கள!

அதிரடி அமைச்சரவை மாற்றத்தில் முக்கிய அமைச்சுக்களை இழந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இருவர். ஒருவர் அமைச்சர் மங்கள சமரவீர. அண்மைக்காலத்தில் ஜனாதிபதியுடன் முரண்பட்டு நின்ற மங்கள சமரவீரவிடமிருந்து வெளிவிவகாரம் பறிக்கப்பட்டுள்ளது. மற்றவர் அனுரா பண்டார நாயக்க. உல்லாசப் பயணத்துறை அவரிடமிருந்து பறிக்கப்பட்டு, வெறும் தேசிய மரபுரிமை அமைச்சராகப் பெயருக்கு நியமனம் பெற்றுள்ளார்.

இதுவரை காலமும் பிரதி அமைச்சராக இருந்த மலையக மக்கள் முன்னணியின் இராதாகிருஷ்ணன், அண்மைக்காலத்தில் தமிழர்களுக்கு எதிரான கைதுகள், சித்திரவதைகள், கொடூரங்கள் போன்றவை குறித்துக் குரல் எழுப்பியமைக்காக அமைச்சுப் பதவியை இழந்திருக்கிறார். அவருக்கு எந்தப் பதவியும் வழக்கப்படவில்லை.

இதேவேளை அளவுக்கு அதிகமான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய அமைச்சுகளை ஒதுக்குவதில் சிக்கலை எதிர்கொண்ட அரசுத் தலைமை, இக்காரணத்தினால் போலும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் ஐவருக்கு தேசத்தை கட்டி எழுப்புதல் என்ற ஒரே அமைச்சை வழங்கியிருக்கின்றது எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

-Sudaroli-

Edited by யாழ்வினோ

தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு அமைச்சு பின்னர் கட்டிய தேசத்தை குண்டுபோட்டு அழிப்பதற்கு ஒரு அமைச்சு. மகிந்தவுக்கு கை-கால் அமுக்கிவிட ஒரு அமைச்சு பின்னர் ஒட்டுண்ணிகளுக்கு தீனிபோட என்றும் இன்னும் ஒரு அமைச்சு. இப்படியே மகிந்த சிந்தனையில் இது வளர்ந்து கொண்டே போனாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Edited by Norwegian

  • கருத்துக்கள உறவுகள்

நாடு திரும்பினார் இராதாகிருஷ்ணன்

பிரதி அமைச்சர் பதவி கிட்டுமாம்!

அமைச்சரவை மாற்றத்தின்போது இந்தியா சென்றிருந்ததன் காரணமாகவே மலையக மக்கள் முன்னணயின் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனால் அமைச்சுப்பதவியைப் பெறமுடியாமல் போனது என்று தற்போது தெரியவருகின்றது.

இவர் நேற்று நாடு திரும்பியுள்ளார். தனக்குரிய பிரதியமைச்சர் பதவி ஒன்று உள்ளது என்றும் அது தமக்கு வழங்கப்படும் என்றும் இராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர் இந்தியாவில் இருந்த சமயம் அமைச்சுப் பொறுப்பை ஏற்க உடனடியாக வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார் என்றும் அவசர வேலை காரணமாக உடனே அவரால் வரமுடியாமல் போனது என்றும் தெரிய வருகின்றது

- சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.