Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தஞ்சமடைந்தாலும் சுட்டுக் கொல்கிறார்கள்!" - கலங்குகிறார் எஸ்.எம்.கோபாலகிருஷ்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சமடைந்தாலும் சுட்டுக் கொல்கிறார்கள்!" - கலங்குகிறார் எஸ்.எம்.கோபாலகிருஷ்ணன்

சமாதானத்துக்கான எல்லா சாத்தியங்களும் அறுந்துவிட, இலங்கையில் யுத்த அரக்கனின் ரத்த தாகம் மீண்டும் தலைவிரித்து ஆட ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், போரின் காரணமாக ஊருக்குப் போக முடியாமல் தமிழகத்தில் தஞ்ச மடைந்திருக்கிறார் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலகிருஷ்ணன். இவர் இந்திய ராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில் இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டவர். அதே காலத்தில் ‘ஈழ மண்ணில் ஒரு இந்தியச் சிறை’ என்கிற தொடரை ஜூனியர் விகடன் இதழில் எழுதியவர்.

‘‘ஈழத்தில் வாழும் தமிழர்களின் நிலைக்கு நானே ஒரு எடுத்துக்காட்டு. ஐம்பதாண்டு காலம் இலங்கையின் மிக முக்கிய பத்திரிகைகளான வீரகேசரி, ஈழநாடு போன்ற இதழ்களில் பணியாற்றினேன். யுத்தம் காரணமாக ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்தபோது என் மகளும் ஜெர்மனிக்குப் போனார். நான் ஈழத்திலேயே இருந்தேன். பத்து ஆண்டுகளாக ஜெர்மனியில் வசிக்கும் என் மகளைப் பார்க்கப் போய்விட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணத்துக்கு செல்லலாம் என்று கொழும்புக்கு வந்தேன். ஆனால், ஒரே இரவுக்குள் நிலை மைகள் தலைகீழாக மாறிவிட்டன. யாழ்ப்பாண நெடுஞ்சாலை மூடப்பட்டதன் விளைவாகக் கொழும்பிலும் அந்தப் பதட்டம் தெரிந்தது. தமிழர்களின் நடமாட்டம் சுத்தமாக இல்லை. ஊருக்குப் போக முடியாத சூழலில் கொழும்பில் நெருங்கிய உறவினர் ஒருவரின் இல்லத்துக்குப் போனேன். என்னைப் பார்த்ததும் அவர்கள் பதட்டமடைந்தார்கள். நம்மால் அவர்களுக்கு ஏன் தொல்லை என்று தமிழகம் வந்து விட்டேன். இங்குள்ள மணப்பாடுதான் காலம் சென்ற என் மனைவியின் சொந்த ஊர்.

யுத்தத்தின் தீராத காயங்களோடு உலகெங்கிலும் ஈழத்தமிழர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சிங்கள பேராதிக்கத்தின் கொடுமைகளை தினம்தினம் சந்தித்துக்கொண்டு ஈழத்திலேயே இருக்கும் மக்களின் நிலை இன்னும் மோசம். இப்போது வாகரையை இலங்கை ராணுவம் ஆக்ரமித்திருக்கிறது. புலிகளின் தத்துவ ஆசான் ஆன்டனின் மறைவுக்குப் பிறகு எப்படியாவது சர்வதேச நாடுகளை சமாதான நடவடிக்கையிலிருந்து வெளியேற்றிவிட்டு வழக்கமான தன் இனவெறி அரசியலை நடத்த இலங்கை அரசு முயலுகிறது. ஒருபக்கம், சமாதான நடவடிக்கைகளை இல்லாமல் செய்வது... இன்னொரு பக்கம் புலிகளைத் தாங்கள் ஒழித்துக்கட்டிவிட்டதாகப் பொய் பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விடுவது என்று நாடகம் ஆடுகிறது. ஆனால், ஈழத்தமிழர்கள் ஆயுதமேந்திய இந்த முப்பதாண்டு காலத்தில் மகிந்தா மாதிரி எத்தனையோ பிரதமர்களை ஈழத்தமிழர்கள் பார்த்துவிட்டார்கள்.

இப்போது வாகரையில் என்ன நடக்கிறது? ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவத்திடம் இருந்து தப்பிக் காட்டு வழியாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் தஞ்சமடைகிறார்கள். அப்படி ஓடும் மக்களையும் சுட்டுக்கொல்கிறது இலங்கை ராணுவம். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல விரும்பும் மக்கள், பாதியிலேயே ராணுவத்தின் குண்டுக்குப் பலியாகின்றனர். மக்கள் நடமாட்டமே இல்லாத வாகரையை ஆக்கிரமித்துவிட்டுப் புலிகளை வென்றுவிட்டதாக சொல்வதன் மூலம் வாகரையில் சிங்கள மக்களைக் கொண்டுவந்து குடியமர்த்துவதுதான் இலங்கை அரசின் திட்டம்.

இன்று மூன்றில் ஒரு பங்கு ஈழத்தமிழர்கள், இந்தியா உட்பட உலகம் முழுக்க அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். ஒரு மில்லியன் மக்கள் இன்றுவரை ஈழத்திலிருந்து வெளியேறி உள்ளனர். ஃபிரான்ஸில் இருந்து வெளிவரும் னீணீக்ஷீவீணீஸீஸீமீ என்கிற இதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளிவந்தது. ‘நீ எங்கிருந்து வருகிறாய் என்பதை சொல். நான் உனது வேலையைச் சொல்கிறேன்’ என்று தலைப்பிட்டு ஃபிரான்ஸில் வாழ்கிற தேசிய இனங்கள் எந்தெந்த தொழிலை செய்கின்றன என்று பட்டியலிட்டிருக்கிறது. அதில், இலங்கையில் இருந்து வருபவர்கள் உணவகங்களில் பணிபுரிவதாக எழுதியிருந்தார்கள். ஏறத்தாழ ஒன்றேகால் லட்சம் தமிழ் பேசும் மக்கள் ஃபிரான்ஸில் வசிக்கிறார்கள். ஹோட்டலிலும், தெருவைச் சுத்தப் படுத்தும் வேலைகளிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள். எந்தத் தொழிலும் இழிவான ஒன்றாக நான் கருத மாட்டேன். ஆனால், ஒப்பீட்டளவில் இப்படி கூலித்தொழிலாளர்களாக ஈழத் தமிழர்கள் வாழ்க்கை ஏன் தள்ளப்பட்டது? அவர்களின் ஒரு தலைமுறைக்கே கல்வி கொடுக்காமல் வஞ்சித்த சிங்கள வெறியர்கள்தான் இதற்குக் காரணம். ஒரு தலைமுறை இப்படி கல்வி இல்லாமல் உதிரி வேலைகளை செய்தபடி ஈழத்துக்காக தங்களால் ஆன உதவிகளை செய்கிறார்கள் என்றால், அடுத்த தலைமுறை தமிழே தெரியாமல் வளர்கிற கொடுமையும் இப்போது நடக்கிறது. இரண்டு ஈழத்தமிழ் குழந்தைகள் சந்தித்துக் கொண்டால் ஃபிரெஞ்சிலோ, டச்சு மொழியிலோ, டேனிஷ் மொழியிலோ பேசிக்கொள்கிற நிலைதான் இன்று நிலவுகிறது.

பாசிசத்தின் கோரத் தாக்குதலுக்குப் பலியாகி யூத இனம் நாடின்றி உலகெங்கிலும் சிதறியபோதும் ஒவ்வொரு யூதனும், தான் ஒரு யூதன் என்பதை மறக்கவில்லை. தங்கள் இனத்தின் பொருளாதார நலம் பேணப்பட வேண்டும் என்று உலக அளவிலான ஒரு வங்கியைத் தோற்றுவித்தார்கள். தாய்மொழியான ஹீப்ரு மொழியை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களின் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். விளைவு, ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையான ஹீப்ரு மொழியும் காப்பாற்றப்பட்டது. யூதர்களுக்கென்று இஸ்ரேல் என்றொரு நாட்டையும் உருவாக்கிக் கொடுத்தார்கள். ஆனால், ஈழத்தமிழருக்கென்று இந்த உலகின் எந்த ஒரு பகுதியிலும் ஒரு நாட்டை உருவாக்க வேண்டாம். எமது ஈழ மக்களுக்கென்று ஏற்கெனவே ஒரு நாடு இருக்கிறது. அதை

எமது இன எதிரிகளிடமிருந்து மீட்டெடுத்தாலே போதுமானது’’ என்று பெருமூச்சு விட்டார் கோபால கிருஷ்ணன்.

- ஜூனியர் விகடன், Jan 31, 2007

கிளிநொச்சியில் போராளி அணிகளின் போர்ப் பயிற்சி நிறைவு நிகழ்வு

நேற்று முன்தினம் கிளிநொச்சியில் குட்டிசிறி மோட்டார் படையணிஇ படைய தொடக்கப் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த போராளி அணிகளின் போர்ப்பயிற்சி நிறைவு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது உரையாற்றிய புலிகளின் குரல்வானொலியின் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றின் முக்கிய காலகட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு நிற்கும் வேளையில்இ போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் பிள்ளைகள் விடுதலையின் பாதையில் உறுதியுடன் பயணிப்பார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களை பட்டினியால் வதைத்தும்இ படுகொலை செய்தும் இளையதலைமுறையினரை கடத்திக் கொன்றும் தமிழிழ மண்ணை ஆக்கிரமிப்பதில் சிறீலங்கா அரசாங்கம் கங்கணம் கட்டிநிற்கும் நிலையில் அதனைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.