Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஏன்ட தெய்மே.. எங்கையா போன...' கிளிநொச்சியில் சோகம் : 9 வருடங்களின் பின் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது மாவீரர் நாள்

Featured Replies

'ஏன்ட தெய்மே.. எங்கையா போன...' கிளிநொச்சியில் சோகம் :  9 வருடங்களின் பின்  உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது மாவீரர் நாள்

maaveerar-naal-2016.jpgஎஸ்.என்.நிபோஜன் 

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று இரவு மாவீரர் நாள் நிகழ்வுகள் பெருமளவு மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டித்தனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு இறுதியாக கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் சிறப்பாக நடத்தப்பட்டது. 

 

அதன் பின்னர் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் இப்பிரதேசங்கள் காணப்பட்ட  போது தமிழ் மக்களின் பிரதேசங்களில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களிலும் காணப்பட்ட கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் படையினரால் இடித்து ஒதுக்கப்பட்டு துயிலுமில்லங்கள்  இருந்த இடம்தெரியாது மாற்றப்பட்டிருந்தன.DSC01562.JPG

அதன் பின்னர் துயிலுமில்லங்களில் படையினர் முகாம்கள் அமைத்து சில வருடங்கள் சில வருடங்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 

தற்போது படையினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்ற மாவீரர்களின் உறவினர்கள், மற்றும் பொது மக்கள் ஆகியோர் பற்றைகளால் சூழப்பட்டு காணப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை துப்பரவு செய்தனர்.DSC01577.JPG

நேற்று கார்த்திகை 27 இல் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி உணர்வுபூர்வமாக  மாவீரர் நாள் நிகழ்வை அனுஸ்டித்தனர்.

மாலை 6.5 மணிக்கு மணியோசை எழுப்பட்டு பொதுச் சுடரேற்றப்பட்டது. கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பொதுச் சுடரை பாராளுமன்ற  உறுப்பினர் சிறிதரன்   ஏற்றி வைக்க தொடர்ந்து  மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.kkk__9_.jpg

அதனைத் தொடர்ந்து சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகள் எனும்  மாவீரர் வணக்கப் பாடல்   ஒலிபரப்பப்பட அப் பாடலில் வருகின்ற வரிகளான  எங்கே எங்கே உங்களின் இருவிழி திறவுங்கள் எனும் வரிகள் ஒலிக்கும் போது  கலந்து கொண்ட அனைவரதும் கண்களில் கண்ணீருடன்  உணர்வு பூர்வமாக காட்சியளித்ததனைக் காணக் கூடியதாக இருந்தது  

கல்லறைகள், நினைவுக் கற்கள் இல்லாத  போதும் எங்கள் பிள்ளைகள் புதைக்கப்பட்ட இந்த  இடத்தில்  நின்று அவர்களை நினைவு கூற கிடைத்த சந்தர்ப்பத்தை என்னால் எவ்வாறு கூறுவது என்று தெரியவில்லை. எனது பிள்ளையை அவனது புதைக்குழியில் நின்று நினைவு கூறுவதற்கு இனி சந்தர்ப்பமே இல்லாது போய்விடுமோ என்று ஏங்கிய எனக்கு இப்பொழுது ஆத்ம திருப்தி ஏற்பட்டுள்ளது. ஏழு ஏட்டு வருடங்களுக்கு பின் இந்த இடத்தில் நின்று  சுடரேற்றி அஞ்சலி செலுத்வேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் இன்று அது நடந்திருக்கிறது. எனவே எனக்கு இப்போதுள்ள ஒரு ஆசை இந்த மாவீரர் துயிலுமில்லம்  கடந்த காலத்தில் இருந்தது போன்று மீண்டும் மாறவேண்டும். அதுவும் ஒருநாள் நடக்கும் என்ற நம்பிக்கை உண்டு என்றார் ஒரு மாவீரரின் தாய்.PICT_20161127_181635.JPG

இவ்வாறு பலர் தங்களினது உணர்வுகளை கண்ணீராகவும் வார்த்தைகளாலும் வெளிப்படுத்தியவாறு மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின் முதல்முதலாக துயிலுமில்லங்களில் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான  பொது மக்கள் மற்றும் அரசியல் தரப்புகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு முழங்காவில் மற்றும் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை  மாவீரர் துயிலும் இல்லங்களிலும்  மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டன. PICT_20161127_181315.JPGPICT_20161127_181354.JPGkkk__16_.jpgkkk__8_.jpgDSC01581.JPGDSC01563.JPG

புகைப்படங்கள் இணைப்பு

maaveerar-naal-2016-2230..jpg

http://www.virakesari.lk/article/13934

  • தொடங்கியவர்

உயிரிழந்தோரை உணர்வுடன் நினைவு கூர்ந்த உறவுகள்

01-f2156961864459dbe6f7a1ef1fcd7d78103f691a.jpg

 

வடக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய மக்கள் 

(எம்.நியூட்டன், ரி.விரூஷன், கரைச்சி, கண்­டா­வளை, ஓமந்தை, தலை­மன்னார், வடமராட்சி நிரு­பர்கள்)

யுத்­தத்தில் உயி­ரி­ழந்த உற­வு­க­ளுக்கு அஞ்­சலி செலுத்தும் நிகழ்­வுகள் வட­பு­லத்தில் பல பாகங்­க­ளிலும் நேற்­றை­ய­தினம் இடம்­பெற்­ற­துடன் உற­வுகள் திரண்­டெ­ழுந்து கண்­ணீர்­மல்க உணர்­வெ­ழுச்­சி­யுடன் உயி­ரி­ழந்­த­வர்­களை நினை­வு­கூர்ந்­தனர்.

நேற்றுக் காலை முதல் மாலை­வரை வடக்கின் பல பாகங்­க­ளி­லுமுள்ள பொது இடங்­களில் ஒன்­று­கூ­டிய மக்கள் உயிர்­நீத்த உற­வு­க­ளுக்கு தமது உணர்­வு­பூர்­வ­மான அஞ்­ச­லி­களைச் செலுத்­தி­யுள்­ளனர். குறிப்­பாக பலர் தமது வீடு­க­ளிலும் கோவில்­க­ளிலும் இறந்த தமது உற­வு­களை நினை­வு­கூர்ந்து அஞ்­சலி செலுத்­தி­யி­ருந்­தனர்.

போர் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலையில் இம்­முறை என்­று­மில்­லா­த­வாறு வட­மா­கா­ணத்­தி­லுள்ள ஐந்து மாவட்­டங்­க­ளி­லு­முள்ள இரா­ணுவக் கட்­டுப்­பாட்டில் இல்­லாத மாவீரர் துயிலும் இல்­லங்­களில் ஒன்­று­கூ­டிய பொது­மக்கள் உணர்­வெ­ழுச்­சி­யுடன் அஞ்­சலி செலுத்­தி­யி­ருந்­தனர்.

யாழ். மாவட்­டத்தில்

அஞ்­சலி நிகழ்­வுகள் நேற்­றைய தினம் யாழ்ப்­பா­ணத்தின் பல்­வேறு இடங்­க­ளிலும் பல்­வேறு தரப்­பி­ன­ராலும் ஒழுங்­க­மைக்­கப்­பட்டு மிகவும் உணர்­வு­பூர்­வ­மாக அனுஷ்­டிக்­கப்­பட்­டது. வடக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்தின் ஏற்­பாட்டில் மூன்று இடங்­களில் நினை­வேந்­தல்கள் யாழில் இடம்­பெற்­றன.

நேற்­றுக்­காலை 9 மணி­ய­ளவில் யாழ்ப்­பாணம் நல்லூர் ஆலய சூழலில் உள்ள விடு­த­லைப்­பு­லி­களின் முத­லா­வது அகிம்சை போரா­ளி­யான திலீபனின் நினை­வுத்­தி­டலில் மாகா­ண­சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம் தலை­மையில் சுட­ரேற்­றியும் மலர் வைத்தும் அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது. 

 வட­மா­காண விவ­சா­யத்­துறை அமைச்சர் பொ.ஜங்­க­ர­நேசன் வட­மா­க­ண­சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் மற்றும் உயி­ரி­ழந்­த­வர்­களின் உற­வி­னர்கள் எனப் பலரும் கலந்­து­கொண்டு அஞ்­ச­லி­யினை செலுத்­தி­யி­ருந்­தனர். இதனை தொடர்ந்து வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் தலை­மையில் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டி­லுள்ள கோப்பாய் மாவீரர் துயி­லு­மில்­லத்தின் வாயி­லிலும் அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்­லத்தில் உள்­ளே­செல்ல எவ­ருக்கும் அனு­ம­தி­யில்லை. அதனால் உட்­செல்ல முடி­யாத நிலையில் துயிலும் இல்ல வாயிலில் தீப­மேற்றி அஞ்­சலி செலுத்­தப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­போன்று வல்­வெட்­டித்­துறை திருவில் மாவீரர் துயி­லு­மில்­லத்தில் வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம் தலை­மையில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது. அத்­துடன் ஜன­நா­யகப் போரா­ளிகள் கட்­சி­யி­னரால் வட­ம­ராட்சி உடுத்­துறை பகு­தியில் உள்ள மாவீரர் துயிலும் இல்­லத்தில் அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது. இந்த அஞ்­சலி நிகழ்வில் ஒரே குடும்­பத்தில் மூன்று பிள்­ளை­களை தியாகம் செய்த தாயா­ரினால் பொது­சுடர் ஏற்றி அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.

 யாழ். பல்­கலை

யாழ்.பல்­க­லை­க­ழ­கத்­திலும் பல்­க­லை­க­ழக சமூகம் இணைந்து 6.05 மணிக்கு வளா­கத்­தி­லுள்ள மாவீரர் நினை­வுத்­தூ­பியில் சுட­ரேற்றி அஞ்­சலி செலுத்­தி­யி­ருந்­த­துடன் யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் விடு­தி­யிலும் சுட­ரேற்றி அஞ்­சலி செலுத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. மேலும் யாழில் அமைந்­துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் அலு­வ­ல­கத்தில் அதன் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யிலும் மாவீரர் தினம் அனுஷ்­டிக்­கப்­பட்­டது.  

தமி­ழ­ரசுக் கட்­சியின் தென்­ம­ராட்சி வலய கிளை அமைப்­பாளர் அருந்­த­வ­பாலன் தலை­மை­யிலும் யாழ்ப்­பாணம் மாட்டின் வீதியில் அமைந்­துள்ள தமி­ழ­ரசுக் கட்சி அலு­வ­ல­கத்தில் வட­மா­கா­ண­சபை அவைத்­த­லைவர் சி.வி.கே சிவ­ஞானம் தலை­மை­யிலும் சுட­ரேற்றி அஞ்­சலி செலுத்­தப்­பட்­டி­ருந்­தது.

வழ­மைக்கு மாறாக அமை­தி­யான சூழல் யாழ்.மாவட்­டத்­தில காணப்­பட்­டுள்­ள­போதும் நேற்­றை­ய­தினம் யாழ்.நக­ரை­யண்­டிய பகு­தி­களில் இடை­யி­டையே விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் நட­மாட்டம் காணப்­பட்­ட­துடன் பொலி­ஸாரின் நட­மாட்­டமும் வழ­மைக்கு மாறாக காண்­ப­பட்­டது..

கிளி­நொச்சி மாவட்­டத்தில்

கிளி­நொச்சி மாவட்­டத்தில் இரா­ணுவக் கட்­டுப்­பாட்டில் இல்­லாத மாவீரர் துயிலும் இல்­லங்­களில் அஞ்­சலி நிகழ்­வுகள் மிகவும் உணர்வு பூர்­வ­மாக பல ஆயி­ரக்­க­ணக்­கான மக்­களின் பங்­கேற்­புடன் அனுஷ்­டிக்­கப்­பட்­டது.

குறிப்­பாக கிளி­நொச்சி கன­க­புரம் மாவீரர் துயிலும் இல்­லத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் தலை­மை­யிலும், முழங்­கா­வி­லுள்ள மாவீரர் துயிலும் இல்­லத்தில் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராசா தலை­மையில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் ஒன்­று­தி­ரண்டு உணர்­வு­பூர்­வ­மாக நேற்று மாலை 6.05 மணி­ய­ளவில் சுட­ரேற்றி அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.

இவ் மாவீரர் துயிலும் இல்­லங்கள் இரண்டு தினங்­க­ளுக்கு முன்பே மக்­க­ளாலும் மக்கள் பிர­தி­நி­தி­க­ளாலும் பற்­றைகள் வெட்டி துப்­ப­ரவு செய்­யப்­பட்­ட­துடன் சிதைக்­கப்­பட்ட எச்­சங்கள் ஒன்­று­கு­விக்­கப்­பட்டு சிதை­வு­களின் அடை­யா­ள­மாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. துயிலும் இல்­லங்­களில் தனித்­த­னியே பந்­தங்கள் நடப்­பட்டு உற­வு­களின் புகைப்­ப­டங்­களை வைத்து மாலை­யிட்டு மல­ரிட்டு மண்­ணினால் உரு­வ­மைத்து கண்­ணீ­ரோடு அஞ்­சலி செலுத்­தப்­பட்­டி­ருந்­தது..

குறிப்­பாக கிளி­நொச்­சியில் இடம்­பெற்ற நினை­வேந்­த­லின்­போது "சாவினைத் தழு­விய சந்­தனப் பேழைகள்" எனும் வணக்கப் பாடல் ஒலி­ப­ரப்­பப்­ப­ட­துடன் அப் பாடலில் வரு­கின்ற வரி­க­ளான "எங்கே எங்கே உங்­களின் இரு­விழி திற­வுங்கள்" எனும் வரிகள் ஒலிக்கும் போது கலந்து கொண்ட அனை­வ­ரதும் கண்­களில் கண்­ணீ­ருடன் உணர்வு பூர்­வ­மாக அஞ்­சலி செய்­த­தைக்­காணக் கூடி­ய­தாக இருந்­தது.

இதன்­போது தாயொ­ருவர் கருத்து வெளி யிடு­கையில்  கல்­ல­றைகள், நினைவுக் கற்கள் இல்­லாத போதும் எங்கள் பிள்­ளைகள் புதைக்­கப்­பட்ட இந்த இடத்தில் நின்று அவர்­களை நினைவு கூர கிடைத்த சந்­தர்ப்­பத்தை என்னால் எவ்­வாறு கூறு­வது என்று தெரி­ய­வில்லை. எனது பிள்­ளையை அவ­னது புதைக்­கு­ழியில் நின்று நினைவு கூரு­வ­தற்கு இனி சந்­தர்ப்­பமே இல்­லாது போய்­வி­டுமோ என்று ஏங்­கிய எனக்கு இப்­பொ­ழுது ஆத்ம திருப்தி ஏற்­பட்­டுள்­ளது. ஏழு ஏட்டு வரு­டங்­க­ளுக்கு பின் இந்த இடத்தில் நின்று சுட­ரேற்றி அஞ்­சலி செலுத்வேன் என்று நான் ஒரு­போதும் நினைக்­க­வில்லை. ஆனால் இன்று அது நடந்­தி­ருக்­கி­றது. எனவே எனக்கு இப்­போ­துள்ள ஒரு ஆசை இந்த மாவீரர் துயி­லு­மில்லம் கடந்த காலத்தில் இருந்­தது போன்று மீண்டும் மாற­வேண்டும். அதுவும் ஒருநாள் நடக்கும் என்ற நம்­பிக்கை உண்டு என மாவீ­ரரின் தாய் ஒருவர் கத­றி­ய­ழு­தி­ருந்தார். 

யுத்தம் முடி­வுக்கு வந்த பின் முதல்­மு­த­லாக துயி­லு­மில்­லங்­களில் அனுஸ்­டிக்­கப்­பட்ட மாவீரர் நாள் நிகழ்­வு­க­ளில்­ஆ­யி­ரக்­க­ணக்­கான பொது மக்கள் மற்றும் அர­சியல் தரப்­புகள் உட்­பட வெ ளிமா­வட்­டங்­களில் இருந்து வந்­த­வர்கள் என ஆயி­ரக்­க­ணக்­கனோர் கலந்­து­கொண்­டனர்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்தில்

முல்­லை­தீ­விலும் அஞ்­சலி நிகழ்­வுகள் உணர்­வு­பூர்­வ­மாக அனுஷ்­டிக்­கப்­பட்­டன. இதன்­படி வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் ரவி­க­ரனின் ஏற்­பாட்டில் 2009 ஆம் ஆண்டு இறு­தி­யுத்­த­மா­னது முற்­றுப்­பெற்று பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் கொண்­று­கு­விக்­கப்­பட்ட இட­மான நந்­திக்­கடல் கரை­யோ­ரத்தில் பொதுச்­சு­ர­ரேற்றி மாவீ­ரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது. இதன்­போது உயி­ரி­ழந்­த­வர்­களின் உற­வி­னர்­களும் பொது­மக்­க­ளு­மாக பல­நூறு மக்கள் கலந்­து­கொண்டு தமது அஞ்­ச­லி­களைச் செலுத்­தி­யி­ருந்­தனர்.

  வன்னி விளாங்­குலம் மாவீரர் துயிலும் இல்­லத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாந்தி சிறி­கந்­த­ராசா, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் ஆகி­யோ­ரது தலை­மையில் மாவீ­ரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தப்­பட்­டி­ருந்­தது.

மன்னார் மாவட்­டத்தில்

நேற்று மாலை 6.5 மணி­ய­ளவில் மன்னார் ஆட்­காட்­டி­வெளி மாவீரர் துயிலும் இல்­லத்தில் மிகவும் உணர்வு பூர்­வ­மாக மாவீரர் தினம் அனுஸ்­ரிக்­கப்­பட்­டது. மன்னார் மாவட்ட பொது அமைப்­புக்­களின் ஒன்­றிய தலைவர் வி.எஸ்.சிவ­கரன் தலை­மையில் இடம் பெற்ற குறித்த ' நினை­வேந்தல் நிகழ்வில் மன்னார் பிர­ஜைகள் குழுவின் தலைவர் அருட்­தந்தை இ.செப­மாலை அடி­களார்,வட­மா­காண அமைச்சர் பா.டெனிஸ்­வரன்,வட­மா­காண சபை உறுப்­பி­னர்­க­ளான வைத்­திய கலா­நிதி ஜீ.குண­சீலன்,சட்­டத்­தி­ரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,அருட்­தந்­தை­யர்கள், உள்­ளு­ராட்சி மன்­றங்­களின் முன்­னால்­த­லைவர், உப­த­லை­வர்கள், உறுப்­பி­னர்கள், ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட அமைப்­பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், மன்னார் சமா­தான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்­தோனி மார்க் உற்­பட மாவீ­ரர்­களின் பெற்றோர், உற­வி­னர்கள், பொது அமைப்பின் பிர­தி­நி­திகள் என நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் கலந்து கொண்டனர். இதன் போது மாலை 6.5 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பெற்றோர்,உறவினர்கள் உற்பட அனைவரும் தாங்கள்வைத்திருந்து தீப பந்தங்களை ஏற்றியதோடு மலர் மாலை தூவி உணர்வு பூர்வமாக உயிர் நீத்தவர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

வவுனியா மாவட்டத்தில்

வவுனியா பொங்குதமிழ் தூபியில் வவுனியாபிரஜைகள்குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்நாள் நிகழ்வுகள் நேற்று மாலை 6.05 மணிக்கு இடம்பெற்றது.

மாலை 6.05 மணிக்கு மாகாண சபை உறுப்பினர் எம். தியாகராசா மற்றும் காணாமல்போனோரின் உறவுகளின் சங்கத்தலைவி ஆகியோர் தூபிக்கு மலர்மாலை அணிவித்திருந்ததுடுன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் பிரஜைகள் குழுவின் தலைவருமான ராஜ்குமார் ஆகியோர் ஈகைச்சுடரை ஏற்றியிருந்தனர்.

 இதேவெளை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமை அலுவலத்திலும் வட மாகாண சுகாதார அமைச்சரும் அக்கட்சியின் வவுனியா தலைவருமான ப. சத்தியலிங்கம் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-28#page-1

  • தொடங்கியவர்

நந்திக்கடலில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி 

 

 

maaveerar-naal-Nandikadal.jpg(ம .குமணன்)

தமிழ் மக்களின் விடுதலைக்காய்  உயிர்நீத்த மாவீரர்களின் நினைவாக முல்லைத்தீவு நந்திக்கடலில் சுடரேற்றி உறவுகளால் அஞ்சலி செலுத்தப்ட்டது.Nandi05.jpg

 

முல்லை  மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பீற்றர் இளஞ்செழியன்   தலைமையில் நேற்றிரவு முல்லைத்தீவு நந்திக் கடற்கரையில்  மாவீரர்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.Nandi034.jpg

இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற வைத்திய கலாநிதி  சிவமோகன் மாவீரர்களுக்கான பிரதான சுடரினை ஏற்றிவைத்து அகவணக்கம் செலுத்தினார்.Nandi03.jpg

இதன்போது கடலில் காவியமான  மாவீரர்களுக்கு கடலிலும் சுடர் ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வில்  பெருமளவிலான மக்கள் உணர்வெளிச்சியுடன் கலந்து கொண்டனர்.Nandi02.jpgNandi01.jpg

http://www.virakesari.lk/article/13940

  • தொடங்கியவர்
முல்லை கடற்கரையிலும் மாவீரா் தினம் அனுஷ்டிப்பு
 
 
முல்லை கடற்கரையிலும் மாவீரா் தினம் அனுஷ்டிப்பு
தமிழ் மக்களின் விடுதலைக்காக  உயிர்நீத்த மாவீரர்களின் நினைவாக நேற்றையதினம் உலகெங்கிலும் தமிழ் மக்களால் உணர்வு பூர்வமாக மாவீரர்தினம்   அனுஷ்டிக்கப்பட்டது.
 
இதன்படி நேற்றையதினம் முல்லைத்தீவில் முல்லை  மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பீற்றர் இளஞ்செழியன்   தலைமையில் மாலை 6.05 மணியளவில் முல்லைத்தீவு கடற்கரையில்  மாவீரர்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
1480311360_download.jpg
இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  வைத்திய கலாநிதி  சிவமோகன் மாவீரர்களுக்கான பிரதான சுடரினை ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தினார்.அத்தோடு கடலில் காவியமான  மாவீரர்களுக்கு கடலிலும் சுடர் ஏற்றப்பட்டது.
 
இந்த நிகழ்வில்  பெருமளவிலான மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.
 
1480311378_download%20%281%29.jpg

http://onlineuthayan.com/news/20741

  • தொடங்கியவர்
தமிழரின் எதிர்காலத்திற்காக மாவீரர்கள் செய்த தியாகங்கள் அளப்பெரியது.யோகேஸ்வரன் எம்பி
தமிழரின் எதிர்காலத்திற்காக மாவீரர்கள் செய்த தியாகங்கள் அளப்பெரியது.யோகேஸ்வரன் எம்பி
தமிழ் மக்களின் விடிவுக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவருக்கும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். 
 
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்கள் மாத்திரமின்றி, 45 முஸ்லிம் மக்களும் மாவீரர்களாக தியாகம் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
மாவீரர் தின நிகழ்வு நேற்று மாலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு காரியாலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இவ்வாறு குறிப்பி ட்டுள்ளார். 
 
இலங்கையில் ஆட்சி புரிந்த அரசாங்கங்கள் தியாகங்களைச் சரியாக மதிக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இரண்டு நாடுகளு க்கு இடையில் நடைபெறுவதே போர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
ஆனால், உள்நாட்டில் உரிமைக்காகப் போராடுவது போராகக் கொள்ளப்படுவதில்லை என்றும் இதனை விளங்கிக் கொள்ளாத நிலையினாலே, தமிழ் போராளிகள் மீதும், தமிழ் மக்கள் மீதும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  
இந்தியாவில் சீக்கியர்களை இந்திய இராணுவம் அழித்துவிட்டு வெற்றிவிழா கொண்டாட நினைத்த தருணத்தில், நம்நாட்டு மக்களை நாமே அழித்துள்ளோம், இதற்கு வெற்றிவிழா வேண்டாம் என அப்போதிருந்த பிரதமர் இந்திராகாந்தி தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  
 
அதேபோன்று, அமெரிக்காவில் எந்த உயிரும் காவுகொள்ள முடியாத நிலையில் யுத்தம் நடைபெற வேண்டும் என அப்போதைய ஜனாதிபதி ஆபிரகாம்லிங்கன் கூறியதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.   
 
நமது நாட்டில் நடைபெற்ற உள்நாட்டுக் கலவரத்தில் பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுத்தப்பட்டிருப்பதாகவும் தமிழ் மக்களின் எதி ர்கால நலன்களை மையமாக வைத்தே மாபெரும் தியாகங்களை மாவீரர்கள் செய்திருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்து ள்ளார். 
 
வீரத் தாய்மார் வீரர்களைப் பெற்று மண்ணுக்கு வித்துடல்களாக ஆக்கியிருப்பதாகவும் வீர மறவர்களைப் பெற்று மாபெரும் தியாக ங்களைச் செய்தமைக்காக வீரத் தாய்மார்களையும் நினைவு கூருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  
 
மாவீரர்களின் கனவு முற்றுமுழுதாக நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகினாலும் தமிழ் மக்கள் மாவீரர்களின் கனவை நிறைவே ற்றுகின்ற பாதைக்கு ஆரோக்கியம் தருவார்கள் தெரிவித்துள்ளார். 
 
மாவீரர்களின் நோக்கத்திற்கு ஏற்ப, தற்கால சூழ்நிலைக்கு அமைவாக வெற்றியடையச் செய்வோம் என்றும் என்றும் சீனித்தம்பி யோகேஸ்வரன்  சூளுரைத்துள்ளார். 

http://onlineuthayan.com/news/20743

  • தொடங்கியவர்

 

மாவீரர்களுக்கு முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.