Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் சுட்டுக்கொலை.

Featured Replies

யாழ் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் சுட்டுக்கொலை.

யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கணநாதன் இன்று அதிகாலை 6.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அரியாலை புன்னம்குளம் சந்திப் பகுதியில் தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றிருந்த போதே இனந்தெரியாத நபர்கள் இவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்கான கணநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நீண்டகாலமாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிவந்த இவர் கடந்த வருடம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசாங்கத்துக்குச் சார்பாகச் செயற்படும் தமிழ் கட்சியொன்றினால் நடத்தப்படும் வானொலிச்சேவையில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கணநாதனின் செயற்பாடுகளைக் கண்டித்து பல கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கணநாதனின் மகள் கடந்த 95ஆம் ஆண்டு கா.பொ.த. உயர்தரப்பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது அரியாலை புன்னம்குளம் பகுதியில் இராணுவத்தினரின் டரக் வாகனம் மோதி உயிரிழந்திருந்தார்.

-Tamilwin-

யாழ்பாணம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் சுட்டுக்கொலை.

யாழ்பாணம் அரியாலை மாம்பழம் சந்தியடியில் அமைந்துள்ள இராணுவமுகாமுக்கு அண்மையில் பலநோக்கு கூட்டுறவுச்சங்க தலைவரும் சமூக சேவையாளருமான 64 அகவையுடைய எஸ்.ரி.கணநாதன் என்பவர் இன்று வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் அவர் தனது வீட்டிற்கு அண்மையில் உள்ள கிணற்றில் நிர் அள்ளுவதற்காக சென்ற போது இனம் தெரியாத இரு ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச் சம்பவமானது மாம்பழம் சந்தியில் அமைந்துள்ள இராணுவமுகாமில் இருந்து 200 மீற்றர் தொலைவிலேயே இடம்பெற்றுள்ளது.

கணநாதன் ஓய்வுபெற்ற பொறியியலாளர் ஆவார். இவர் முன்னைய தலைவர் சொலமன் அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து 2005 டிசம்பர் மாதம் பதவிவிலகியதில் இருந்து பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-Pathivu-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கணநாதனின் மகள் கடந்த 95ஆம் ஆண்டு கா.பொ.த. உயர்தரப்பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது அரியாலை புன்னம்குளம் பகுதியில் இராணுவத்தினரின் டரக் வாகனம் மோதி உயிரிழந்திருந்தார்.

  • தொடங்கியவர்

1996 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அவவின் பெயர் ஞானந்தி (Chundukuli Girls College).

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

the word around the corner is He refused to give food load to EPDP last week.

  • தொடங்கியவர்

கணநாதனின் மகள் ஞானந்தி கடந்த 1996 ஆம் ஆண்டு கா.பொ.த. உயர்தரப்பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் சைக்கிளில் பரீட்சைக்குச் சென்றுகொண்டிருந்தபோது அரியாலை புன்னம்குளம் பகுதியில் இராணுவத்தினரின் டரக் வாகனம் மோதி உயிரிழந்திருந்தார்.

பிரேதப்பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டிருந்த ஞானந்தியின் சடலம் வீட்டுக்கு எடுத்துவரப்படும்வரை ஞானந்தியின் வீட்டில் இருந்த அவரது நண்பி கிருஷாந்தி தனது வீட்டுக்குச் சென்றபோதே செம்மணியில் வைத்து இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Sankathi+Tamilwin)

Edited by யாழ்வினோ

வீணைக்கு வந்ததுபார் கெட்ட காலம்! ஒட்டுக்குழுத் தேசத்துரோகிகள் வீணையைக்கட்சிச்சின்னமாக வைத்திருப்பதால் எமது பிள்ளைகள் இன்று வாசிக்கின்ற வீணையை பார்த்தே பயப்படுகின்றார்கள்.

தமது தேசத்துரோக வானொலியில் விளக்கம் கொடுத்துவிட்டு மறுநாட்காலையே யாழ் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரை சுட்டுக்கொலை செய்திருப்பது ஈ.பீ.டீ.பி கூலிக்குழு பகிரங்கமாகவே ஸிறீ லங்கா அரசாங்கத்தினதும், ஸிறீ லங்கா பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வாவின் ஆசியுடனும் தமிழ் மக்களைக் கொலை செய்ய தொடங்கி விட்டார்கள் என்பதை உலகிற்கு பறை தட்டிச் சொல்கின்றது.

ஒட்டுக்குழுக்களை அடக்கி ஒடுக்கப் போவதாய் யாரோ மக்கள் படை என்ற பேரில் ஆவேசத்துடன் அண்மையில் அறிக்கை விட்டிருந்தார்கள். எல்லாம் வெறும் வாய்ப்பேச்சு வீரம் தானா?

தேசத்துரோக கூலிக்குழுக்களை இப்படியே விட்டால் நாளை யாழ்ப்பாணத்திலிருந்து இதயஒளி என்ற பெயரில் உலகில் வாழும் எல்லா தமிழீழ விரோதிகளையும் ஒன்றிணைக்க சட்டலைட் டீவியும் ஒளிபரப்பு செய்யத்தொடங்கி விடுவார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கூட்டுறவுச்சங்கத் தலைவர் சுட்டுக்கொலை

யாழ் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு.எஸ்.ரி.கணநாதன் (வயது 64) இன்று வியாழக்கிழமை காலை 6:30 மணியளவில், அரியாலை சிறீலங்கா இராணுவ முகாமிற்கு அருகே மாம்பழம் சந்தியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஏ-9 நெடுஞ்சாலையோடு நெருக்கமாக புன்னங்குழத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு அருகேயுள்ள ஒரு கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றுகொண்டிருந்த இவரை, அங்கு வந்த இரு ஆயததாரிகள் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இருநூறு மீற்றருக்குள் சிறீலங்கா இராணுவ முகாம் இருப்பதனால், இந்தப் பகுதியிலிருந்து யாரும் இராணுவத்திற்குத் தெரியாமல் தப்பிச்சென்றிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

ஓய்வுபெற்ற பொறியியலாளரான கணநாதன், 2005 டிசம்பரில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க தலைவராகப் பொறுப்பேற்றார்.

1996ம் ஆண்டு ஓகஸ்ட் 7ம் திகதி, சிறீலங்கா இராணுவ வாகனத்தால் சில மாணவிகள் மோதிக் கொல்லப்பட்டபோது, கணநாதனின் மகள் தயாநந்தி (வயது 19) யும் கொல்லப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக, கணநாதன் தொடர்ச்சியாக இராணுவத்திற்கெதிராக வழக்கைத் தொடர்ந்து வந்தார். அத்துடன், இதே நாளில், சிறீலங்கா இராணுவத்தினர் பலரால் மிலேச்சத்தனமாக உடலியல் பலாத்காரம் செய்தபின்னர் படுகொலை செய்யப்பட்ட கிறிஷாந்தி குமாரசாமி, அவரது தாய் மற்றும் உறவினர் தொடர்பாகவும், வழக்குத் தொடர்ந்து இராணுவ வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார்.

செம்மணி படுகொலைகள் தொடர்பாக தொடர்ச்சியாக மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அரங்கில் குரல் கொடுத்து வந்த கணநாதன், சிறீலங்கா இராணுவத்தினரின் நேரடி உத்தரவுடன், துணைப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது.

-புதினம்

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.