Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாக்கு நீரிணையில் கூட்டுரோந்து நடவடிக்கை

Featured Replies

பாக்கு நீரிணையில் கூட்டுரோந்து நடவடிக்கை

நேற்று முன்தினம் பாரதப்பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும் சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் றோகித பொகொல்லாகம அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து இந்திய பி்.ரி.ஐ செய்தி சேவைக்கு கருத்துரைத்த சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடல்நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு ஏதுவாக கூட்டு கடல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார்.

கடற்பரப்பை பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடு என்ற வகையில் சிறீலங்கா கடற்படையினருடன் சேர்ந்து கூட்டு கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது இன்றியமையாதது என அவர் மேலும் தெரிவித்தார்

  • தொடங்கியவர்

சிங்களப்பத்திரிகைகளில் வெற்றிச் செய்தி எழுதுகிறார்கள்.

கேக் வெட்டிக் கொண்டாடுகிறார்கள்.

அதுக்குப் பிறகும் உதவியா?

ஓகோ கடலில் ஒருதரமும் வெல்லவில்லையோ?

அது முடியுமோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

Friday, 02 February 2007

விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக,இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையிலான கடற்பரப்பில் (பாக்குநீரிணையில்) கடற்படையின் கண்காணிப்பை தீவிரப்படுத்த இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான இரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ரோஹித பொகொல்லாகம, புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்துப் பேச்சுகள் நடத்தியிருந்தார்.

இலங்கையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் மூலம் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட ரோஹித, தனது முதல் விஜயமாக இந்தியா சென்றிருந்தார்.

இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பையடுத்து நேற்று வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே, இலங்கை - இந்திய கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

அமைச்சர் ரோஹித மேலும் கூறுகையில்,

"இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் மிக அதிகளவில் மேற்பார்வையையும் கண்காணிப்பையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்தியா எமது நெருங்கிய அயல் நாடாகவும் இரு நாடுகளையும் கடலே பிரிப்பதாலும் இதில் இந்தியாவின் அதிகரித்த பங்களிப்பை நாம் எதிர்பார்த்துள்ளோம்.

இதனால், இந்தியாவுடன் கடற்கண்காணிப்பு விடயத்தில் நாம் மிகவும் நெருங்கிச் செயற்பட வேண்டியது கட்டாயமாகவுள்ளது.

இதற்கு இந்தியாவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக"வும் தெரிவித்தார்.

இதேநேரம், புதிதாக வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டவுடன் இந்தியாவுக்கு முதலில் விஜயம் செய்ததற்கு ஏதாவது விஷேட காரணமுண்டா என செய்தியாளர்கள் கேட்டதற்கு,

இந்தியாவுக்கு தங்கள் அரசு வழங்கும் மிகுந்த முக்கியத்துவத்துக்கு அமையவே தான் இந்தியாவுக்கு முதலில் விஜயம் செய்ததாகக் கூறினார்.

அத்துடன், இலங்கையின் நிலைமைகள் குறித்து இந்தியாவுக்கு தெளிவுபடுத்துவதுடன் அவர்களுடன் அதிகரித்த ஒத்துழைப்பை இனிவரும் நாட்களில் மேற்கொள்வது குறித்து ஆராயவுமே இங்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றம் குறித்து கூறுகையில்,

அபிவிருத்தி மற்றும் சமாதான முயற்சிகளை நோக்காகக் கொண்டதெனவும், சமாதான முயற்சிகளில் விடுதலைப் புலிகள் இல்லையென்பதை விட அதில் அவர்களுமொரு பங்காளிகளென்ற செய்தி அவர்களுக்கு தெரியப்படுத்தப்படுமெனவும் கூறினார்.

இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையிலான விரிவான பொருளாதார நடவடிக்கைகள் குறித்தும் அதில் வர்த்தகம், ரயில்வே மற்றும் சக்தி என்பன அடங்குமென்றும் தெரிவித்தார்.

இலங்கை - இந்தியக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படை தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ரோஹித கூறியுள்ள போதும், இது குறித்து இந்தியா எதுவித தகவல்களையும் தெரிவிக்கவில்லை.

நெருடல் இணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.