Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் விரோதிகளும் தேசவிரோதிகளுமே இன்று அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர் - சோமவன்ச அமரசிங்க

Featured Replies

மக்கள் விரோதிகளும் தேசவிரோதிகளுமே இன்று அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர் - சோமவன்ச அமரசிங்க

[Friday February 02 2007 12:03:16 AM GMT] [யாழ் வாணன்]

நாட்டில் பயங்கரவாதத்தை தோற்கடித்து ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு மக்கள் ஆணை வழங்கினர். அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும் மஹிந்த சிந்தனைக்கு விரோதமாகவும் செயற்பட்டால் அதற்கெதிராக ஜே.வி.பி. போராடும் என்று அக்கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

மக்கள் விரோதிகளும் தேசவிரோதிகளுமே இன்றுஅரசாங்கத்துடன் இணைந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு இணைந்தால் ஜே.வி.பி. நியாயமான எதிர்க்கட்சியாக செயற்படும் என்றும் அவர் மேலும் கூறினார். கொழும்பிலுள்ள இலங்கை மன்ற கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் ஜே வி பி யினர் சிங்கள மக்களின் விடி வெள்ளி கண்டியளோ. நல்லாய் ஓரம் கட்டப்பட்டு விட்டார்கள். இனி யாரோடு கூட்டு சேரப்போகினம் என்று பார்ப்பம்.

எல்லாம் ஒரே இனவாதமென்ற குளத்தில ஊரின மட்டைகள் தானே. விட்டுத்துளைப்பம். இனி இவை ஆட்சியினை கவிழ்த்து ஒரு அட்டகாசம் பண்ணோனும்.

கோமாளித்தனமாக செயற்படும் அரசுடன் இணைந்து செயற்பட ஜே.வி.பி. தயாரில்லை

[02 - February - 2007]

-மக்கள் ஆணையை புதிதாக பெறவேண்டி நேரிடுமென்கிறார் சோமவன்ச

- ப.பன்னீர்செல்வம் -

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை சிங்கள இனவாதியென சர்வதேச ரீதியில் பிரசாரங்களை மேற்கொண்ட ஐ.தே.கட்சியினரை இணைத்துக் கொண்டதன் மூலம் எதிர்காலத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளும் இனவாதமென்றே சர்வதேச சமூகத்தால் நோக்கப்படுமென தெரிவிக்கும் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள முனைந்தால் புதியதொரு மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்வதற்கான நிலைமை உருவாகுமென்றும் எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில் இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே சோமவன்ச அமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

ஜே.வி.பி.யின் உதவியுடனேயே ஜனாதிபதி வெற்றி பெற்றார். எனவே, சிங்கள இனவாதியென்ற பிரசாரத்தை மேற்கொண்டவர்களை இணைத்துக் கொண்டதன் மூலம் எம்மை இனவாதிகளென்று நோக்கும் நிலைமைக்கு ஜனாதிபதி தள்ளிவிட்டுள்ளார்.

ஐ.தே.கட்சியைக் காட்டிக் கொடுத்து அரசாங்கத்திற்கு மாறியவர்கள் ஒற்றையாட்சியின் கீழ் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு என்பதையும் மகிந்த சிந்தனையையும், ஏற்றுக் கொண்டார்களா அல்லது ஜனாதிபதி சமஷ்டித் தீர்வுக்கு மாறிவிட்டாரா என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

நாட்டை மீண்டும் அடிமைத்தனத்திற்கு இழுத்துச் சென்று பிரிவினையை ஏற்படுத்த முனையும் சர்வதேச சதித்திட்டமே இவ் இணைப்பிற்குக் காரணமாகும்.

எங்கு பயணிக்கின்றோமெனத் தெரியாது கோமாளித்தனமாக செயல்படும் அரசாங்கத்துடன் இணைவதென்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத விடயமாகும்.

நாம் முன்வைத்த யோசனைகளை ஏற்றுக்கொண்டுக் கடந்த வருடமே எம்மை இணைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், ஐ.தே.கட்சியுடன் இணையும் தேவை அன்றே ஜனாதிபதிக்கு இருந்தது. எனவேதான், எம்முடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டே ஐ.தே.கட்சியுடனும் பேச்சு நடத்தினார்.

அரசாங்கத்தை ஸ்திரப்படுத்தி பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கே என தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த வரவு - செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாதபோதும் ஆதரவு வழங்கினோம் ஏன்? அரசாங்கத்தை பாதுகாக்கவே. ஆனால், இன்று ஹெல்பிங் அம்பாந்தோட்டை குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர்களையும், நோர்வேயிடம் பணம் பெற்றுக் கொண்டவர்களையும், ஊழல் மோசடிகளை மேற்கொண்டவர்களையும் இணைத்துக் கொண்டது அனைத்தையும் மூடி மறைத்து குழிதோண்டிப் புதைப்பதற்கா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஐ.தே.கட்சியினரை இணைத்துக் கொண்டதால் அக்கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளைப் பெற முடியுமென்பது தப்புக்கணக்காகும். மக்கள் அந்தளவிற்கு மடையர்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்கும் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் ஆதரவு வழங்கும் அது தொடர்பாக `குத்துச் சண்டை' போட்டியில் ஈடுபடமாட்டோம்.

ஆனால், விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளெனக் கூறிக்கொண்டு, நோர்வேயின் தலையீட்டை அதிகரிக்கச் செய்து, தேசவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டால் பாராளுமன்றத்திற்குள்ளும் எதிர்ப்போம், வீதியில் இறங்கிப் போராடுவோம்.

இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி, ஐ.தே.கட்சியல்ல, ஜே.வி.பியே ஆகும். எனவே, எம்மை எதிர்க்கட்சியாக அறிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் பலமான எதிர்க்கட்சியாக உருவெடுப்போம்.

சர்வதேச சமூகமும், இங்குள்ள வெளிநாட்டுத் தூதுவர்களும் நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், கொலைகள் அதிகரித்திருப்பதாகவும் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதோடு அந்த அறிக்கையை ஐ.நா.விடமும் சமர்ப்பிக்கவுள்ளனர். விரைவில் அதன் தலையீடும் அதிகரிக்கும்.

கிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி வடபகுதி மக்களை புலிகளிடமிருந்து மீட்டு ஜனநாயகத்தை வழங்காவிட்டால் அம்மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தும் நிலைமை உருவாகும்.

அதிகாரப்பரவலாக்கல் தொடர்பாக ஆராயும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் இணையமாட்டோம்.

மகிந்த சிந்தனையில் எந்தவொரு இடத்திலும் அதிகாரப் பரவலாக்கல் என்ற சொல் இல்லை. அது மீறப்படுமானால் புதியதொரு மக்கள் ஆணையைப் பெற வேண்டிய நிலைமை உருவாகுமென்றும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

ரில்வின் சில்வா

பயங்கரவாதத்திற்குள் மறைந்து கொண்டும், அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியும் அரசாங்கம் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளையும் ஊடகங்களுக்கு எதிராகவும் செயற்பட்டு வருகிறதென ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அவசரகாலச் சட்டம் பிழையான வகையில் பயன்படுத்தப்பட்டால் பாராளுமன்றத்திற்குள் அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கத் தள்ளப்படுவோமென்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் எம்.பி.க்களான அநுர திஸாநாயக்க, விமல் வீரவன்ஸ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நன்றி : தினக்குரல்

அன்றைய கோமாளிகள் இன்றைய கோமாளிகளைப் பார்த்து குரைக்கின்றன.

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.