Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதவாத செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை அவசியம்

Featured Replies

மத­வாத செயற்­பாட்­டிற்கு எதி­ராக நட­வ­டிக்கை அவ­சியம்

 

நாட்டில் பௌத்த மத­வாத நட­வ­டிக்­கைகள் அதி­க­ரித்து வரு­வ­தனால் சிறு­பான்­மை­யின மக்கள் பெரிதும் பாதிப்­புக்­களை சந்­தித்து வரு­கின்­றனர். சில பௌத்த அமைப்­பி­னரும் தேரர்­களும் இன, மத­வா­தத்தை தூண்­டி­வ­ரு­வ­துடன் சிறு­பான்­மை­யின மக்கள் வாழும் பகு­தி­களில் பௌத்த விகா­ரைகள் அமைக்கும் நட­வ­டிக்­கை­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் இன, மத முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளன. 

அண்­மையில் மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சுமணரத்ன தேரர் மற்றும் பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர தேரர் ஆகியோர் மத­வா­தத்தை தூண்டும் வகையில் பல்­வே­று­வி­த­மான கருத்­துக்­களை தெரி­வித்­த­துடன் செயற்­பா­டு­க­ளிலும் ஈடு­பட்­டி­ருந்­தனர். இவர்கள் நீதி­மன்ற தடை உத்­த­ரவைக் கூட மீறி போராட்­டங்­க­ளையும் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் நடத்­தி­யி­ருந்­தனர்.

கடந்த 3 ஆம் திகதி மட்­டக்­க­ளப்­புக்கு பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் அத்­தே ­ஞா­ன­சா­ர ­தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் செல்ல முயன்­ற­போது பொலி­ஸா­ரினால் ரிதி­தென்ன பகு­தியில் வைத்து வழி­ம­றிக்­கப்­பட்­டனர். நீதி­மன்றம் விதித்த தடை உத்­த­ர­வினை பொலிஸார் பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் ஞான­சா­ர ­தே­ர­ரிடம் கைய­ளித்த போது அதனை அவர் பகி­ரங்­க­மா­கவே கிழித்­தெ­றிந்­தி­ருந்தார். கிழித்­தெ­றிந்­தது மட்­டு­மன்றி நீதி­மன்­றத்­திற்கு எதி­ராக ஊட­கங்­க­ளுக்கும் கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்தார்.

இதே­போன்று பொது­ப­ல­சே­னாவின் குழு­வி­னரை பொலிஸார் இடை­ம­றித்­ததைக் கண்­டித்து மட்­டக்­க­ளப்பில் மங்­க­ள­ரா­மய விகா­ர­ாதி­பதி அம்­பிட்­டிய சுமணரத்ன­ தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் ஆர்ப்­பாட்­டத்­தினை மேற்­கொண்­டி­ருந்­தனர். நீதி­மன்ற தடை உத்­த­ரவை மீறி இவர்கள் ஆர்ப்­பாட்­டத்தை மேற்­கொண்­ட­போ­திலும் பொலி­ஸா­ரினால் எந்­த­வித நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

 இந்த இரண்டு தேரர்­களும் நீதி­மன்­றத்தை கடு­மை­யாக அவ­ம­தித்த போதிலும் இவர்கள் மீது பொலிஸார் எந்­த­வித நட­வ­டிக்­கை­யி­னையும் இது­வரை எடுக்­க­வில்லை. இத­னை­விட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அத்­தே­ ஞா­ன­சார தேரர் கடு­மை­யான கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்தார். மத­வா­தத்தை தூண்டும் வகையில் அமைந்த அவ­ரது கருத்­துக்கள் தொடர்பில் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் அமைச்­சரும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வ­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் முறைப்­பாடும் செய்­தி­ருந்தார்.

இவ்­வாறு முறைப்­பாடு செய்­த­போ­திலும் அத்தே ஞான­சார தேரர் மீது பொலிஸார் சாதா­ரணதொரு விசா­ர­ணை­யைக்கூட நடத்­த­வில்லை. இவ்­வாறு நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­த­துடன் மத­வா­தத்தைக் கிளப்பி நாட்டில் இன­மு­ரண்­பா­டு­களை ஏற்­படுத்த முயன்­று­வரும் தேரர்கள் மீது எத்­த­கைய நட­வ­டிக்­கையும் எடுக்­கா­மை­யா­னது சிறு­பான்­மை­யின மக்கள் மத்­தியில் பல்­வே­று­வி­த­மான கேள்­வி­களை எழுப்­பி­யி­ருக்­கி­றது.

நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்­றத்தில் புத்­த­சா­சன அமைச்சு மீதான வர­வு-­–செ­லவுத் திட்ட விவாதம் நடை­பெற்­ற­போது இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம், தமிழ் பிர­தி­நி­திகள் கடும் விசனம் தெரி­வித்­த­துடன் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு கண்­ட­னமும் தெரி­வித்­துள்­ளனர். இந்த விவா­தத்தில் உரை­யாற்­றிய அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் முஸ்லிம், சிங்­கள மக்கள் மத்­தியில் மோதல்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முனைந்­து­கொண்­டி­ருக்கும் பொது­ப­ல ­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை கைது­செய்­யாது அவரை அழைத்துப் பேசு­வது வெட்­கக் ­கேடான செயற்­பா­டாகும். இத்­த­கைய நடை­மு­றை­யா­னது இந்­த­நாட்டில் இரண்டு சட்­டங்கள் காணப்­ப­டு­கின்­றதா என்ற கேள்­வியை எழுப்­பு­கின்­றது. மட்­டக்­க­ளப்­பிலும் தேரர் ஒருவர் கடும்­போக்­குடன் செயற்­ப­டு­கின்றார். தமிழ் சகோ­த­ரர்­களை திட்­டு­கின்றார். இவ்­வாறு தமிழ், முஸ்லிம் சமூ­கங்கள் மீது கடும்­போக்­குடன் செயற்­படும் தேரர்கள் மீது சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதேபோல் இந்த விவா­தத்தில் கருத்து தெரி­வித்த இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் ஜனா­தி­ப­தி­யுடன் நடை­பெற்ற சர்­வ­மத பேச்­சு­வார்த்­தையின் பின்­னரும் கூட ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டை நடத்தி அல்­லாஹ்­வையும் முஸ்­லிம்­க­ளையும் ஞான­சார தேரர் இழி­வாக பேசி­யுள்ளார். இறை­வனை தூற்­று­வ­தா­னது முஸ்­லிம்­களை வேத­னைப்­ப­டுத்தும் செய­லாகும். இவ்­வா­றான செயற்­பாட்டில் ஈடு­பட்­டுள்ள ஞான­சார தேரரை ஏன் இது­வரை கைது­செய்­ய­வில்லை என்று கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

ஐ.எஸ். அமைப்பில் உள்­ளவர்கள் முஸ்­லிம்­களே இல்லை. அவர்கள் மேற்­கு­ல­கத்தின் கூலிப்­ப­டைகள். உயிர் மூச்­சான இஸ்­லாமும் குர்ஆனும் நிந்­திக்­கப்­பட்டால் முஸ்லிம் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்­து­வதை எவ­ராலும் தடுக்க முடி­யாது. கடந்த காலத்தில் தமி­ழர்­களின் உரி­மைகள் மறுக்­கப்­பட்ட போது ஆயுதம் ஏந்­திய தமிழ் இளை­ஞர்கள் முதலில் தமிழ்த் தலை­வர்­க­ளையே படு­கொலை செய்­தனர். அதே­போல முஸ்லிம் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்­தினால் முஸ்லிம் தலை­வர்­க­ளாக இருக்கும் எம்­மையே முதலில் படு­கொலை செய்­வார்கள். முஸ்லிம் இளை­ஞர்கள் ஆயுதம் தூக்­கினால் நாடு மேலும் 60 வரு­டங்­க­ளுக்கு மேலாக மோச­மான நிலைக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ் சபையில் எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார்.

மத­வா­தத்தை கிளப்­பி­வரும் தேரர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்­காத அர­சாங்கம் அவர்­களை அழைத்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­வ­ரு­கின்­றது. ஆனால் அத்­த­கைய தேரர்­களோ தமது நட­வ­டிக்­கை­களை மேலும் அதி­க­ரித்து வரு­கின்­ற­னரே தவிர செயற்­பா­டு­களை கைவி­டு­வ­தாக தெரி­ய­வில்லை.

இந்த நிலையில் வடக்கு, கிழக்கில் பௌத்த விகா­ரை­களை அமைக்கும் நட­வ­டிக்­கைகள் தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­கின்­றன. பௌத்­தர்­களே வசிக்­காத பகு­தி­க­ளில விகா­ரை­களை அமைத்து வரு­கின்­றமை தொடர்பில் சிறு­பான்­மை­யின மக்­களின் தலை­வர்கள் தொடர்ந்தும் எதிர்ப்புக் குரல் எழுப்பி வரு­கின்­றனர். அண்­மையில் வடக்கில் பௌத்த விகா­ரைகள் அமைக்­கப்­ப­டு­வது தொடர்பில் வட­மாகாண சபை­யிலும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது.

இந்த விவ­காரம் தொடர்பில் நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜேதாச ராஜ­பக் ஷ நேற்று முன்­தினம் சபையில் தெரி­வித்­தி­ருந்த கருத்­துக்கள் சிறு­பான்­மை­யின மக்கள் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை ஏற்­படுத்­தி­யி­ருக்­கி­றது. வடக்கில் பௌத்த விகா­ரைகள் அமைக்க முடி­யாது என தீர்­மானம் நிறை­வேற்­று­வ­தற்கு வட­மா­காண சபைக்கு அதி­கா­ர­மில்லை; இத்­த­கைய தீர்­மா­னங்கள் குப்­பைக்­கூ­டைக்­குள்­ளேயே செல்லும்.

வட­மா­காண முத­ல­மைச்சர் நீதி­ய­ர­ச­ராவார். இவ்­வா­றான தீர்­மானம் ஒன்றை நிறை­வேற்­று­வ­தற்கு அவ­ருக்கு என்ன அதி­காரம் உள்­ளது. சட்­டப்­ பி­ர­காரம் மாகா­ண­ச­பைக்கு இவ்­வா­றான அதி­காரம் கிடை­யாது என்று நீதி­ய­மைச்சர் விஜே­­தாச ராஜபக் ஷ சபையில் தெரி­வித்­தி­ருந்தார்.

மத­வா­தத்தை ஏற்­ப­டுத்தி இன­மு­று­கலை ஏற்­ப­டுத்த முயலும் தேரர்கள் நீதி­மன்ற உத்­த­ரவை மீறி செயற்­பட்டு வரு­கின்­றனர். அத்­த­கைய செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­காத நீதி­ய­மைச்சர் வடக்கு, கிழக்கில் விகா­ரை­களை நிறு­வ­ுவதனை நியா­யப்­ப­டுத்த முனை­வ­தா­னது எந்­த­வ­கை­யிலும் நீதி­யான செயற்­பா­டல்ல. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கீழ் மத­வாத செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­ற­மை­யா­னது சிறு­பான்­மை­யின மக்கள் மத்­தியில் பெரும் அதிருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் பொது­ப­ல ­சே­னாவின் செயற்­பா­டுகள் எல்­லை­மீறி இருந்­தன. அர­சாங்­கத்தின் ஆத­ர­வுடன் அவர்கள் தமது அடாவடித்தன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் முதல் அளுத்கம வன்முறை வரையான சம்பவங்கள் அவர்களது செயற்பாடுகளினாலேயே இடம்பெற்றிருந்தன. இத்தகைய அடாவடித்தனங்களே சிறுபான்மை யின மக்கள் முற்றுமுழுதாக அன்றைய ஆட்சிக்கு எதிராக தீர்மானம் எடுப்பதற்கு வழிசமைத்தன.

தற்போது முன்னைய ஆட்சியில் இடம்பெற்றதைப் போன்றே பொதுபல சேனா உட்பட மதவாதக்குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நல்லாட்சி அரசாங்கமானது புதிய நடவடிக்கைகளை எடுக்காவிடின் இந்த ஆட்சி மீதும் சிறுபான்மையின மக்கள் வெறுப்படையும் நிலை உருவாகிவிடும்.

எனவே மதவாதத்தை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இதனைவிடுத்து காலம் தாழ்த்தினால் நிலைமைகள் மோசமாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-10#page-4

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாம் மதத்தையோ குரானையோ அவமதித்தால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை யாராலும் தடுக்கமுடியாது 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.