Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க நீர்முழ்கியை கைப்பற்றிய சீனா

Featured Replies

அமெரிக்க நீர்முழ்கியை கைப்பற்றிய சீனா

 
 

சர்வதேச கடற்கரை பகுதியில் வைத்து சீனா கைப்பற்றி இருக்கும் அமெரிக்காவின் ஆளில்லா நீர்முழ்கி ஆய்வு வாகனத்தை ஒப்படைத்துவிட கோரியிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

 
  அமெரிக்க கப்பல்

வியாழக்கிழமையன்று தென் சீன கடலில் வைத்து அமெரிக்காவின் இந்த ஆளில்லா நீர்முழ்கி வாகனத்தை சீன கடற்படை கைப்பற்றியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

யுஎஸ்என்எஸ் பௌவ்டிச் என்கிற இந்த ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் கடலியல் சார் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது.

"கடல் மிதவை" எனப்படும் இந்த ஆளில்லாத நீழ்மூழ்கி கருவி நீரின் உப்பு தன்மையையும், வெப்பநிலையையும் சோதிக்கப் பயன்படுகிறது.

நீருக்கடியிலுள்ள தடங்களை கண்டறிகின்ற வகைப்படுத்தப்படாத திட்டத்தின் ஒரு பகுதியாக இதனுடைய தரவுகள் அமைவதாக பென்டகனின் செய்தி தொடர்பாளர் கேப்டன் ஜெப் டேவிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

வரைபடம்  

வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தி வெளியீட்டில், இந்த கருவி சீனாவால் எடுதுது செல்லப்பட்டுள்ளதாக கேப்டன் டேவிஸ் தெரிவித்தார்.

தென் சீனக் கடல் பகுதியில் இந்த ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் சட்டப்பூர்வமான முறையில் ராணுவ ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.அமெரிக்காவுக்கு சொந்தமானதாகும்.

நீரில் இருந்து அகற்றப்பட கூடாது என்று தெளிவாக ஆங்கிலத்தில் அதன் மேல் எழுதப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் சுபிக் குடாவிற்கு வட மேற்கே சுமார் 50 கடல் மைல் (80கி.மீ) தொலைவில் வைத்து சீன கடற்படை இந்த கருவியை எடுத்ததாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

தென் சீன கடல் பகுதி 

உடனடியாக சீன கப்பலுக்கு செய்தி அனுப்பி அதனை ஒப்படைக்குமாறு கேட்ட பின்னரும் கண்டுகொள்ளாமல் போய்விட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நீர்முழ்கி வாகனத்தை கைப்பற்றி இருப்பது தென் சீன கடலில் சீனாவின் அதிகரித்து வருகின்ற ராணுவ நடவடிக்கைகளை வெளிகாட்டுவதாக அமைந்துள்ளது.

http://www.bbc.com/tamil/38350521?ocid=socialflow_facebook

  • தொடங்கியவர்

ஆளில்லா நீர்முழ்கி விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

 
 

அமெரிக்காவின் ஆளில்லா நீர்முழ்கி ஆய்வு வாகனத்தை சீனா கைப்பற்றிய விவகாரத்தில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சீன கடல் எல்லை பகுதிக்கு அருகே அமெரிக்கா தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.

அந்த பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த கப்பல்
 அந்த பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த கப்பல்

பிலிப்பின்ஸ் கடற்கரைக்கு அப்பால் சீனா கடற்படை கப்பல் ஒன்று ஆளில்லா நீர்முழ்கி ஆய்வு வாகனத்தை கைப்பற்றியதை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

சர்வதேச கடற்பகுதியிலிருந்து ஆளில்லா நீர்முழ்கி ஆய்வு வாகனத்தை எடுத்ததன் மூலம் சீனா முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையை எடுத்திருப்பதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

டிரம்ப் கருத்து 

இந்த விவகாரத்தை மிகைப்படுத்துவது பொருத்தமற்றது என்றும் தீர்வை எட்டுவதற்கு அது உதவாது என்றும் சீனா தெரிவித்துள்ளது.

http://www.bbc.com/tamil/global-38351525

  • தொடங்கியவர்

கைப்பற்றிய நீர்மூழ்கியை அமெரிக்காவிடம் வழங்க சீனா ஒப்புதல்

  •  
     

தென் சீனக்கடலில் கைப்பற்றிய ஆளில்லா நீர்முழ்கியை சீனா, அமெரிக்காவுக்கு திருப்பியளிப்பதற்கான புரிந்துணர்வு ஒன்று ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியுருக்கிறது.

கப்பல்

அமெரிக்காவின் இந்த நீழ்மூழ்கியை சர்வதேச கடற்பரப்பில் வியாழக்கிழமை சீனா கைப்பற்றியது.

எதற்காக கைப்பற்றியது என்று காரணம் கூறாத சீனா, இந்த சம்பவத்தை ஊதி பெரிதாக்குவதாக அமெரிக்காவை குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் சீனா அதனை திருடியிருப்பதாக கூறிருக்கிறார்.

சீனா திருடிய அந்த நீர்மூழ்கி நமக்கு வேண்டாம். அந்த நாடே வைத்து கொள்ளட்டும் என்று அமெரிக்கா தெரிவித்துவிடலாம் என்று டிரம்ப் தன்னுடைய டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சனை தான் பல தசாப்தங்களுக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையிலான மிக கடுமையான ராணுவ ரீதியில் எதிரெதிராக மோதுகிற சம்பவமாகும்.

நீருக்கடியில் செயல்படும் ஆளில்லா வாகனம் என்று அறியப்படும் இந்த ட்ரோன் கைப்பற்றப்பட்டபோது, அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருந்ததாக கூறியிருக்கும் பென்டகன், அதனை உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.

ஆனால், இது தொடர்பாக புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதாக சனிக்கிழமை மாலையில் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியிருக்கிறார்,

சீன ஆட்சியாளர்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு, இந்த ஆளில்லாத நீருக்கடியில் செயல்படும் வாகனத்தை சீனா திருப்பி கொடுப்பதற்கு புரிதலை உருவாக்கியுள்ளதாக பென்டகன் செய்தி தொடர்பாளர் பீட்டர் குக் தெரிவித்திருக்கிறார்.

இந்த நீர்மூழ்கி "பொருத்தமான முறையில்" திருப்பி வழங்கப்படும் என்று சீன பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால எப்போது வழங்கப்படும் எனத் தெரிவிக்கவில்லை.

http://www.bbc.com/tamil/global-38357205

  • கருத்துக்கள உறவுகள்

திரும்ப கொடுப்பற்குள் அதன் ரகசியம் முழுவதையும் எடுத்துவிட்டுத் தான் கொடுப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.