Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள மக்கள் தமது பாரம்பரிய காணி உரிமையை மட்டக்களப்பில் இழந்துள்ளனர் – விஜயதாஸ ராஜபக்ஸ

Featured Replies

ஞானசாரர் மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மட்டக்களப்பு விஜயம்

 

 

நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் பொதுபல சேனா அமைப்பின் தலைவர்  ஞானசார தேரர்  மட்டக்களப்பிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

unnamed__1_.jpg

unnamed__2_.jpg

இன்று மேற்கொண்டுள்ள குறித்த விஜயத்தில் நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் ஞானசாரர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்தனர். 

unnamed__3_.jpg

அங்கு, மங்களராம விகாராதிபதியும் கிழக்கு மாகாண பிரதி பிரதம சங்கநாயக்கருமான அம்பிட்டிய சுமனரத்ண தேரருடன்  பேச்சுவார்த்தை நடாத்தினர்.

unnamed__4_.jpg

அங்கு கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர்,  இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் மதங்களுக்கிடையிலான அமைதியையும் உண்டுபண்ணுதல் தொடர்பாகவே ஞானசாரர் குழுவினர் மட்டக்களப்புக்கு வருகை தந்து மதத் தலைவர்களுடன் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

unnamed__5_.jpg

unnamed__6_.jpg

unnamed__7_.jpg

unnamed.jpg

http://www.virakesari.lk/article/14611

  • கருத்துக்கள உறவுகள்

விஜயதாச நக்கீரா,

என்ன பிழை பிடித்தீர் எமது நாவண்மையில்,

இல்லை சாது, உங்கள் தூசணவார்த்தைகள் சிங்களத்தில் மட்டுமே உள்ளதால், தமிழ் பேசும் மக்களுக்கு புரிவதில்லை.

ஆதால் அவர்கள் இந்தக் காதால் வாங்கி, அந்தக்காதால் விட்டுப் போகிறார்கள்.

ஒன்று அவர்கள் சிங்களம் படிக்க வேண்டும். அல்லது உங்கள் தூசணப் பேருரைகள் தமிழில் இருக்க வேண்டும். அப்போது தான் தேனோடு சேர்ந்த திவ்வமுதமாக உங்கள் தூசணங்கள் அவர்கள் காதில் விழும்.

எமக்கு நல்வழிகாட்ட புத்தரை பிராத்திப்போம். :224_monkey:

  • தொடங்கியவர்

நாங்கள் சமாதானத்தை ஏற்படுத்தவே ஆட்சிக்கு வந்தோம் - மட்டக்களப்பில் ராஜபக்ஷ

 

 (பழுலுல்லாஹ் பர்ஹான்)

அனைத்து கட்சியினரதும் ஆதரவுடன் இந்த நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு மக்களுக்கு சிறந்த முறையில் இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் நல்லதோர் ஆட்சியாக இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பில் சிறுபான்மையாக வாழும் சிங்கள மக்களை கவனிப்பதற்கு அவர்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சிங்கள பாராளுமன்ற உறுப்பினரோ,சிங்கள கிழக்கு மாகாண சபை உறுப்பினரோ யாருமே இல்லாமல் கவனிப்பாரற்று வாழ்ந்து வருகின்றனர் என நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன நல்லிணக்கம் தொடர்பில்  நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று 21 புதன்கிழமை மட்டக்களப்பிற்கு  திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு மட்டக்களப்பு மங்களராம விகாரைக்குச் சென்று மத வழிபாட்டில் ஈடுபட்டதுடன் மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் அங்கு வருகைதந்திருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர் போன்றோரை சந்தித்து கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்படி கருத்துத் தெரிவித்தார்.

மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் இன்று என்னிடம் சிங்கள மக்களின் பிரச்சினைகளை மாத்திரம் கூறவில்லை அதற்கு மாறாக தமிழ்,முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும்தான் கூறினார் எல்லோருக்கம் சில பிரச்சினைகள் இருக்கின்றது. 

சிறுபான்மையாக மட்டக்களப்பில் வாழும் சிங்கள மக்களுக்கு கிராம சேவர் அத்தாட்சிப் பத்திரம் வழங்காமை,தேர்தல் வாக்காளர் இடாப்பில் பெயர் உள்வாங்காமை,காணிப் பிரச்சினை,பாரம்பரிய காணிப் பிரச்சினைகள் ,சிங்கள அதிகாரிகள் இல்லாத பிரதேச செயலகங்கள் இல்லாமை, சிங்கள மக்களின் பிரச்சினைகளை கூறுவதற்கு சிங்களம் பேச தெரியாத அதிகாரிகள் பிரதேச செயலகங்களில் இருப்பது போன்ற பிரச்சினைகள் தொடர்பில் மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கதைத்து வருகின்றார்.   

அமைச்சர் அங்கு தொடர்ந்து பேசுகையில், இன நல்லுறவு இன நல்லிணக்கம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நான் இரண்டு தடவைகள் பேசியுள்ளேன். இப் பேச்சின் மூலமாக நான் அதிகம் விமர்சனங்களுக்குள் உள்ளானேன். 

நான் இன மத பேதங்களின்றி நல்லாட்சியில் இருந்துகொண்டு சேவை செய்கின்றேன். என்னைப்பற் நல்லதாகவும் கெட்டதாகவும் விமர்சனங்கள் எழலாம் அதைப்பற்றி பொருட்படுத்தாது மக்களுக்கான பணியை நான் சிறந்தமுறையில் செய்து வருகின்றேன்.

unnamed__7_.jpg

நாங்கள் சமாதானத்தை ஏற்படுத்தவே ஆட்சிக்கு வந்தோம் அந்தப் பணியினை தொடர்ந்து முன்னேற்றகரமாக செய்து வருகின்றோம் அதில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

இப் பிரதேசத்தில் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் சிங்கள மக்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இங்கு உரிமைகள் தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் யாவருக்கும் சமாமாக கிடைக்க வேண்டும்.

இனங்களுக்கிடையே உறவுகள் ஏற்பட வேண்டும் என்பதே எங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்காகும் என மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/14629

பௌத்த பிக்குமார்கள் இனவாத மற்றும் மத வாத ரீதியில் செயற்படுவதால் தான் பிரச்சினைகள் ஏற்படுவதாக நாட்டில் ஒரு வித தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்புக்கு இன்று (21) விஜயம் மேற்கொண்டிருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இது போன்ற கருத்துக்களை முன் வைத்து விமர்சனம் செய்வோர் அதற்கான காரணங்களை கண்டறிந்து அதற்கான தீர்வை காண வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை போருக்கு முன்பு 1982ஆம் ஆண்டு 28 ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். அந்த எண்ணிக்கை தற்போது மிகவும் குறைந்துள்ளது.

அம்மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த அவர்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதி இல்லை. மாகாண சபையிலும் பிரதிநிதித்துவம் இல்லை. அதன் காரணமாகவே அவர்களின் அடிப்படை பிரச்சினைகளை அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பேசுகிறார்.

அவர் சிங்கள மக்களின் பிரச்சினைகளை மட்டும் முன் வைக்கவில்லை. இம்மாவட்டத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் இந்த சந்திப்பின் போது எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

சிங்கள மக்களை பொறுத்தவரை அவர்கள் தங்கள் பாரம்பரிய காணி உரிமையை கூட இழந்துள்ளனர். சிறுபான்மை இனங்களாகவுள்ள கிராமத்தில் கிராம சேவை அதிகாரியிடம் சான்றிதழை கூட பெற முடியாதவர்களாக இருக்கின்றனர்.

வாக்காளர் இடாப்பில் வாக்காளராக பதிவு செய்ய மறுக்கப்படுகின்றது . பிரதேச செயலகங்களில் அதிகாரிகள் வேண்டா வெறுப்பாக நடந்து கொள்கின்றார்கள். சிங்கள மொழியில் ஒப்படைக்கும் கடிதங்கள் குப்பை கூடைகளில் வீசப்படுகின்றன. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.

இந் நாட்டில் சிறுபான்மை தமிழர் , சிறுபான்மை முஸ்லிம் என்ற வரை விலக்கணம் தவறானது. நகர் , மாவட்டம் மாகாணம் இன விகிதாசாரத்தில் தான் வேறுபாடு காணப்படுகின்றது

குறிப்பாக கொழும்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். ஆனால் கொழும்பு நகரில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள் இது தான் யாதர்த்தம்'' என மேலும் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/politics/01/128968?ref=home

  • தொடங்கியவர்

மட்­டக்­க­ளப்பு சிங்­கள மக்­களின் குர­லாக மங்­க­ள­ரா­மய தேரர்

p12-178152b0ff3c861a9c1b67489753f6e8c0a1ca4d.jpg

 

மக்கள் பிர­தி­நி­தியின் வெற்­றி­டத்தை நிரப்­பு­கிறார் என்­கிறார் நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ  (காங்­கே­ய­னோடை, வவு­ண­தீவு,  புதி­ய­ காத்­தான்­குடி நிரு­பர்கள்) 

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சிறு­பான்மை சமூ­க­மான  சிங்­கள சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்­துவோம். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் சிங்­கள மக்­களின் குர­லா­கவே மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ணரத்­ன தேரர் செயற்­ப­டு­கின்றார் என்று நீதி­ய­மைச்­சரும் புத்­த­சா­சன அமைச்­ச­ரு­மான விஜே­­தாஸ ராஜ­பக் ஷ தெரி­வித்தார். 

நேற்று புதன்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரைக்கு விஜயம் செய்த அமைச்சர் விஜே­ய­தாச ராஜ­பக்ஷ அங்கு பொது பல சேனா அமைப் பின் தலைவர் ஞான­சார தேரர் மற்றும் மட்­டக்­க­ளப்பு

மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ரண ரத்­திண தேரர் ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்ட பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இங்கு தொடர்ந்து அமைச்சர் குறிப்­பி­டு­கையில்

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சிறு­பான்மை சமூ­க­மாக வாழு­கின்ற சிங்­கள சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் மற்றும் கோரிக்­கைகள் தொடர்பில் நாம் கலந்­து­ரை­யா­டினோம்.

அவர்­களின் பிரச்­சி­னை­க­ளையும் கோரிக்­கை­க­ளையும் எனது கவ­னத்­திற்கு பொது பல சேனா அமைப்பின் தலைவர் ஞான­சார தேரர் மற்றும் மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ரண ரத்­தின தேரர் கொண்டு வந்­தனர்.

 அவர்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்து வைப்­பது தொடர்­பாக நட­வ­டிக்கை எடுப்போம். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் சிங்­கள மக்­களின் குர­லா­கவே மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ரண ரத்­திண தேரர் செயற்­ப­டு­கின்றார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சிங்­கள மக்­களின் பிரச்­சி­னை­களை பேசு­வ­தற்கு பாரா­ளு­மன்ற உறப்­பினர் ஒருவர் இல்லை. அந்த வகை­யிலே அவர்­களின் பிரச்­சி­னை­களை வெளியில் கொண்டு வரு­வ­தற்­காக மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ரண ரத்­திண தேரர் குரல் கொடுக்­கின்றார்.

யுத்­தத்­திற்கு முன்னர் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 28000 சிங்­கள குடும்­பங்கள் வசித்­துள்­ளன. ஆனால் இன்று அக்­கு­டும்­பங்கள் இல்லை. அதே போன்று வாக்­க­ளிக்கும் உரி­மையும் இன்று அவர்­க­ளுக்கு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லில்லை.

சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை என கூறு­கின்­றனர். ஆனால் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் பௌத்த மக்கள் சிறு­பான்­மை­யினர். அவர்­களின் பிரச்­சி­னை­களும் தீர்க்­கப்­படல் வேண்டும்.

இந்த நாட்­டி­லுள்ள பல கட்­சி­களின் ஆத­ர­வுடன் இந்த நல்­லாட்சி அர­சாங்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வரும் போது பொருட்­க­ளுக்கு விலை குறைப்போம் என்று கூறி ஆட்­சிக்கு வர­வில்லை. அனைத்து சமூ­கங்­க­ளையும் இன மத வேறு­பா­டின்றி வாழ வைப்போம் என்று கூறியே ஆட்­சிக்கு வந்­தது. அதனை இந்த அர­சாங்கம் நிறை­வேற்றி வருகின்றது.

இன மத பேதமின்றி அனைத்த சமூகங்களையும் ஒரே நோக்கோடு எமது நல்லாட்சி அரசாங்கம் பார்க்கின்றது. இன மத பேதமின்றி அனைத்து சமூகங்களையும் அரவனைத்து இந்த நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது.

நான் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக இரண்டு முறை உரையாற்றினேன். அப்போது பல விமர்சனங்களும் என் மீது முன் வைக்கப்பட்டன என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-22#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.