Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெர்லின் தாக்குதல் சந்தேக நபர் இத்தாலியில் சுட்டுக்கொலை

Featured Replies

பெர்லின் தாக்குதல் சந்தேக நபர் இத்தாலியில் சுட்டுக்கொலை

 

பெர்லினில் லாரி மூலம் பலரைக்கொன்ற சந்தேக நபர் இத்தாலியின் மிலன் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக இத்தாலிய உளதுறை அமைச்சர் அறிவிததுள்ளார்

 

BBC

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பெர்லின் தாக்குதல் சந்தேக நபர் இத்தாலியில் சுட்டுக்கொலை

  •  
பெர்லின் சந்தேக நபர் அனிஸ் அம்ரி
 பெர்லின் சந்தேக நபர் அனிஸ் அம்ரி

ஜெர்மனி பெர்லின் நகரில் திங்களன்று கிறிஸ்துமஸ் சந்தையில் லாரியை செலுத்தி 12 பேரைக்கொன்ற சந்தேக நபர் அனிஸ் அம்ரி இத்தாலியின் மிலன் நகரில் காவலரகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இத்தாலிய உளதுறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

அந்த லாரியை செலுத்தும் பாகத்தில் இருந்த கைரேகையும் சுட்டுக்கொல்லப்பட்டவரின் கைரேகையும் ஒத்துப்போவதாகவும் இத்தாலிய உள்துறை அமைச்சர் மார்கோ மின்னிட்டி தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை விடியற்காலை மூன்றுமணிக்கு மிலன் நகர காவல்துறையினருக்கும் அம்ரிக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.

ரோந்த்துக்கு சென்ற மிலன் காவல்துறையினர் அம்ரி சாலையில் நடந்து சென்றதைக்கண்டதாகவும், அவரது அடையாள அட்டையை காட்டும்படி காவலர்கள் கோரியபோது அவர் தனது பையில் இருந்து கைத்துப்பாக்கி எடுத்து இஸ்லாமிய கோஷமிட்டபடி சரமாரியாக சுடத்துவங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.

ஒன்பது மாதமே ஆன பயிற்சி காவல்துறை அதிகாரி பதிலுக்கு அம்ரியை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காவல்துறை அதிகாரிக்கும் காயம் பட்டிருந்தாலும் அவரது காயங்கள் ஆபத்தானவை அல்ல என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பெர்லினில் நடந்த லாரி தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் காயமடைந்தனர்.

http://www.bbc.com/tamil/global-38416226

  • தொடங்கியவர்

ஜேர்மனியில் செய்த பாவத்திற்கு இத்தாலியில் கிடைத்த சன்மானம்

Published by Pradhap on 2016-12-23 19:57:43

 

ஜேர்மனியின் பெர்லின் நகரில் உள்ள கிறிஸ்மஸ் சந்தைப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை தாக்குதல் நடத்தியதாக கருதப்படும் சூத்திரதாரி இத்தாலியின் மிலான் நகரத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

3B97A99E00000578-4061096-Shoot_out_Amri_

சும்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பெர்லின் நகரில் 12 பேரின் உயிரை பறித்த தாக்குதலை நடத்திய சந்தேக நபரான அனிஸ் அம்ரி அங்கிருந்து தப்பித்து செல்லும் நோக்கில் இத்தாலி வந்துள்ளார். 

முலான் நகரத்தில் பயணம் செய்த வாகனத்தை பொலிஸார் இடைநிறுத்தி அடையாள அட்டைகளை பரிசோதிக்க முற்பட்ட நிலையில் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பொலிஸாரை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளார். அத்தோடு அல்லாஹ் வூ அக்பர் என சத்தமிட்டுள்ளார்.

3B97AC5D00000578-4061096-An_Italian_mini

குறித்த சம்பவத்தில் கிறிஸ்டியன் மோவியோ என்ற பொலிஸ் அதிகாரியின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் கயமடைந்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்த மற்றுமாரு பொலிஸ் அதிகாரியான லுகா ஸ்காடா என்ற சேவையில் இணைந்து நான்கு மாதங்களே ஆன பயிற்சி பெற்றுவரும் பொலிஸ் அதிகாரி அம்ரியை சுட்டுக்கொன்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இத்தாலியின் உள்துறை அமைச்சர் மார்க்கோ மின்ஹிட்டி கூறுகையில் 2011 ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்குள் வந்துள்ள குறித்த சந்தேக நபர் தன்னை மூன்று நாட்டு பிரஜையாக அடையாளப்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். சுடப்பட்டவர் நிச்சயமாக பெர்லின் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படுபவரே ஆவார் என்றார்.

3B987B7800000578-4061096-Evidence_The_Tu

இச்சம்பவத்துடன் தொடர்புடைய 24 வயதான அம்ரி இதற்கு முன்பு டூனிஸியாவில் திருட்டு சம்பவத்திற்காக தண்டனைப்பெற்று அதிலிருந்து தப்பிப்பதற்காக இத்தாலி வந்தவராவார் என ஜேர்மனிய ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.

3B9821B600000578-4061096-Amri_pictured_s

அதுமட்டுமன்றி பல்வேறு குற்றங்களுடன் இவர் தொடர்பு பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அத்தோடு பெர்லின் தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில் குறித்த தீவிரவாத சந்தேக நபர் குற்றம் புரிந்த நான்கு நாட்களுக்கு பிறகு கொலைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3B9821B600000578-4061096-Amri_pictured_s

http://www.virakesari.lk/article/14693

  • தொடங்கியவர்

தாக்குதல்தாரி அனிஸ் அம்ரிக்கு துனீசியாவில் தீவிரவாத குழுவுடன் தொடர்பு

 
 

பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றில் கொடூரமான தாக்குதலை நிகழ்த்திய அனிஸ் அம்ரி தீவிரவாத குழுவுடன் தொடர்பில் இருந்ததை கண்டறிந்திருப்பதாக துனீசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெர்லின் தாக்குதல்தாரி அனிஸ் அம்ரி
 பெர்லின் தாக்குதல்தாரி அனிஸ் அம்ரி

இந்த குழுவானது மூன்று நபர்களைக் கொண்டிருந்ததாகவும், அதில் ஒருவர் அனிஸ் அம்ரியின் நெருங்கிய சகோதரர் என்றும் துனீஷில் உள்ள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த குழுவை சேர்ந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனிஸ் அம்ரி அவருடைய சகோதரரை ஊக்குவித்து, தன்னுடைய தீவிரவாத கொள்கைகளை பின்பற்றும்படி தூண்டியதாகவும், ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக உறுதிமொழி எடுக்க வைத்த்தாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெர்லின் சந்தைப்பகுதியில் அம்ரி லாரியை செலுத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர்.

தொடர்ந்து, சம்பவ பகுதியிருந்து தப்பித்த அம்ரி தலைமறைவானார்.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமையன்று மிலனில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

http://www.bbc.com/tamil/global-38427914

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.